Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப்படை கடும் சமர்: முறியடிக்கப்பட்ட புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாய் எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாய் எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளின் ஊடாக பாரிய முன்னேற்ற தாக்குதல் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த முன்னேற்ற முன்நகர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் முறியடிப்புத் தாக்குதல்களில் இதுவரை 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் படையணிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் மற்றும் வான்குண்டுகள் பல சிறிலங்கா படையினர் மத்தியிலேயே வீழ்ந்து வெடிப்பதாலும் படையினர் தரப்பில் கணிசமான அளவு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், களமுனையில் கடுமையான நெருக்கடிகளை சிறிலங்கா படையினர் எதிர்கொண்டுள்ளனர்.

http://www.puthinam.com/full.php?2aXOsRe0d...d425WW3b02ZSr3e

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக போராடும் புலிகள்-விரக்தியில் ராணுவம்

கொழும்பு: ராணுவத்தின் முன்னேற்றத்ததை தடுத்து விடாப்பிடியுடன் விடுதலைப் புலிகள் கடுமையாக போராடி வருவதால், நகர முடியாமல் விரக்தியில் தள்ளப்பட்டுள்ளது இலங்கை ராணுவம்.

இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும். இலங்கை முழுவதும் சுதந்திர பூமியாகி விடும். பிரபாகரன் அழிக்கப்பட்டு விடுவார். உயிர் தப்ப அவர் சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என அதிபர் ராஜபக்சே முழக்கமிட்டு 2 மாதங்களாகி விட்டது.

ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்தில்தான் இருக்கிறது ராணுவம். காரணம், விடுதலைப் புலிகள் காட்டி வரும் கடும் எதிர்ப்பு.

ஆமையை விட மெதுவாக நகருகின்றனர் ...

இலங்கை ராணுவத்தின் முன்னேற்றம் ஒரு ஆமையின் தினசரி நகர்வை விட மெதுவாக உள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு 0.6 மைல்கள் அளவுக்குத்தான் இலங்கை ராணுவம் முன்னேறி வருகிறதாம். அந்த அளவுக்கு புலிகள் கடும் எதிர் தாக்குதலை தொடுத்து தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர் ராணுவத்தினரை.

விடுதலைப் புலிகள் தற்போது 21 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுருக்கப்பட்டு விட்டதாக ராணுவம் கூறுகிறது. ஆனால் அந்த பரப்பளவுக்குள் ஊடுறுவ முடியாமல் ராணுவம் திணறிக் கொண்டிருக்கிறதாம்.

விடுதலைப் புலிகளிடம் தற்போது 500 வீரர்கள் மட்டுமே இருக்கலாம் என ராணுவம் கூறுகிறது. ஆனால் அந்த ஐநூறு பேரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதை சமாளிக்க முடியவில்லையாம் ராணுவத்திற்கு.

இது விடுதலைப் புலிகளுக்கு வாழ்வா, சாவா போராட்டம். எனவேதான் கடுமையாக அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசியல்வாதியாகி விட்ட தர்மலிங்கம் சித்தாந்தன்.

விடுதலைப் புலிகளுடன் இருக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் அவர்களுக்கு கவசம் போல இருப்பதால் ராணுவத்தால் அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியவிலல்ை.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், நாங்கள் மிக மிக மெதுவாகத்தான் முன்னேற முடிகிறது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த முடியவில்லை.

ஏராளமான மக்கள் விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதிகளில் இருப்பதால் வேகமாக முன்னேற முடியவில்லை. நினைத்தவுடன் தாக்குதல் நடத்தவோ, உள்ளே புகவோ முடியாது என்கிறார்.

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கேகலிய ரம்புகெவல்லா, இறுதிக் கட்டத்தை எட்டி விட்டோம். விரைவில் புலிகளை ஒழித்து விடுவோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ராணுவம் நகருகிற வேகத்தையும், புலிகள் நடத்தி வரும் எதிர் தாக்குதலையும் பார்த்தால் இந்தப் போருக்கு எப்போது முடிவு என்பதை யாராலும் கணிக்க முடியாது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் கடந்த 7 நாட்களில் 1,412 படையினர் பலி! 6,123 படையினர் காயம்!

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிழக்கு மற்றும் ஆனந்தபுரத்தில் சிறீலங்காப் படையினரின் பாரிய முற்றுகை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 7 நாட்களும் நடத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதல்களில் 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அறிவித்துள்ளது.

வன்னியில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மைய நாட்களாக புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மற்றும் ஆனந்தபுரத்தில் இரு தரப்பினர் இடையே கடுமையான சமர் இடம்பெற்று வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் தாக்குதல்கள், எறிகைணத் தாக்குதல்கள், பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், டாங்கித் தாக்குதல்கள், ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதல்கள் மற்றும் கனரக கனோன் ரகத் தூப்பாக்களின் சூட்டாதரவுடன் நாளாந்தம் சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படும் படை நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து வருகின்றனர்.

இரணைப்பாலையில் உள்ள செந்தூரன் சிலையடியை இரு தரப்பினரும் 10 அதிகமான தடவைகள் மாறி மாறி கைப்பற்றியுள்ளனர். இப்பகுதி ''ஸ்ரானின் கிராட்'' மாறியுள்ளதாக விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஒருவர் பதிவு இணையத்திடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

புதுக்குடியிருப்புப் பகுதியில் நாளாந்தம் நூற்றுக்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் பல நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்து வருகின்றனர்.

இப்பகுதியில் யுத்தத்திற்காக களமிறக்கப்பபட்ட சிறீலங்காப் படையினரின் 57-வது படைப்பிரிவும், 58-வது படைப்பிரிவும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவாக 53-வது படைப்பிரிவையும் 55-வது படைப்பிரிவையும் சிறீலங்காப் படை அதிகாரி களமிறக்கியுள்ளனர். 57-வது, 58-வது படைப்பிரிவில் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுவிட்டனர்.

தற்பொழுது படையினருக்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் காரணமாக களத்தில் நிற்கும் படைத் தளபதிகளுக்கும் கட்டளை மையத் தளபதிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று வருக்கின்றது.

படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது நாள் ஒன்றுக்குப் பல தடவைகள் வான்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றது.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்கள் நெருங்கிய நேரடித் துப்பாக்கி மோதல்களாகவே மாறியுள்ளதால், சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் தென்னிலங்கையிலிருந்து சிறீலங்கா ஊர்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு படையினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வன்னிக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தற்போது ஆவேசத்துடன் படையினருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இந்த அடி விழுந்திருக்கு ஒருத்தரையும் இந்தப்பக்கம் காணவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய காங்கிரஸ் கொடுத்த 2 வாரக் கெடு முடிய இன்னும் எத்தனை போகும் என்று கணக்குப் பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இந்த அடி விழுந்திருக்கு ஒருத்தரையும் இந்தப்பக்கம் காணவில்லை?

தமிழர்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் வகை தொகையின்றி பந்தாடப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள்.. இதில் கொசுறு இராணுவத்தினர் மரிப்பது அவ்வளவு பெரிய விஷயமாக தெரிவதில்லை. எல்லாம் இருகோடுகள் தத்துவமே.

அனைவரும் புலிகளின் அதியுன்னத எழுச்சியை எதிர்பார்த்துக் கொண்டிக்கிறார்கள்... ஒரு கட்டுநாயக தாக்குதல் போல...சிங்களனை அடிபணிய வைக்க.. இதுவே யதார்த்தம்.

இந்திய காங்கிரஸ் கொடுத்த 2 வாரக் கெடு முடிய இன்னும் எத்தனை போகும் என்று கணக்குப் பார்க்கிறார்கள்.

இந்திய காங்கிரஸ் போனாலும் இந்திய பி.ஜே.பி வரும்.. வெளியுறவுக் கொள்கையில் ஒன்றும் மாற்றமிருக்காது. சிறிது சமாளிப்புடன் இதே நிலை தொடரவே செய்யும்.

நிதர்சனமான உண்மை.

மக்கள் இழப்புக்கள் முன் இவை எல்லாம் ஒரு தூசுபோன்றதுதான்.

முறியடிப்புக்கள் இடம்பெறுவதும் இராணுவம் முன்னேறுவதும் ஒரு தொடர்கதையாகிவிட்டது. புதுக்குடியிருப்பையும் தாண்டி இராணுவம் சென்றுகொண்டிருக்கின்றது.

எனவே இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட புலம்பெயர்தமிழரின் போராட்டங்களை தொடர்ந்தும் சளைக்காமல் முன்னெடுப்பதே இன்றைய அவசிய தேவையாகவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பல உண்மையான புலிகளின் தாக்குதல்கள் கூட பலரால் "ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை" என்று ஒதுக்கப்பட்டு விடுவது கூட நல்லதற்குத்தான். ஏனென்றால் புலிகளே இத்தாக்குதல் பற்றிய விபரங்களைப் படங்களுடன் வெளியிட்டால் இன்று தமிழர் படும் அவலத்துக்காக உலகெங்கும் போராட்டம் நடத்துகிற எங்கட சனம் எல்லாத்தையும் விட்டுப்போட்டு வீரம் பேச வெளிக்கிட்டிடும்.புலிகள் தெரிந்துதான் பேசாமல் எல்லாவற்றையும் மறைத்திருக்கிறார்கள்.

அண்மையில் சித்திரை முதலாம் நாள் வெளிவந்த 8 கிலோ மீற்றர் கைப்பற்றல் செய்தியும் இப்பிடியே அமுங்கிப் போய்விடும். நடப்பவை நல்லாகவே நடக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.