Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமியில் சனத்தொகை உச்ச அளவை எட்டிவிட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_45620130_000140396.jpg

நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய மனித சனத்தொகை சுமார் 6.8 பில்லியன்களாகும். இவற்றுள் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா முதல் மூன்று சனத்தொகை கூடிய நாடுகளாக உலகில் விளங்குகின்றன.

இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.

அதுமட்டுமன்றி ஒரு நாளைக்கு உலக சனத்தொகை 218,030 ஆல் அதிகரிக்கிறது. 2040ம் ஆண்டளவில் உலக சனத்தொகை 9 பில்லியன்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

மனித இனத்தின் பெருக்கம் பூமியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பையும் அதிகரிக்க வகை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் கொள்ளளவை மிஞ்சி உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்
.

குடும்பக்கட்டுப்பாடு. ஆசைக்கு ஓண்ணு போதும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

குடும்பக்கட்டுப்பாடு. ஆசைக்கு ஓண்ணு போதும்

நீங்க ஆசைக்கு ஒண்ணு என்பீங்க.. அப்புறம்.. அந்த ஒண்ணு.. தங்கச்சி பாப்பாக்கு.. தம்பி பாப்புக்கு ஆசைப்படுகுது என்று அடுத்ததிற்கு காரியமாற்றப் போயிடுவீங்க. இதுதானே நடக்குது உலகத்தில. அப்படி இருக்க.. எப்படி.. சனத்தொகையை கட்டுப்படுத்துறது. :D

ஆசை தான் வாழ்வுக்கும் காரணம்.. அழிவுக்கும் காரணம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில குடும்பக்கட்டுப்பாட்ட கொண்டுவரவேண்டும் (நெடுக்ஸ் நீங்கதான் இதன் தலைவர்) யாழில இருக்கிற பழசு யாரோ 2 கிழமைக்குமுதல் குழந்தைகிடைச்சதா கேள்விப்பட்டன் இது எத்தனையாவதோ தெரியாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தினம் , தினம் ஈழத்தில் பெருந்தொகையான மக்கள் இறந்து கொண்டிப்பதனால் , அதனை ஈடுகட்ட ஈழத்தமிழர்கள் குடும்பக்கட்டுபாடு செய்யாமல் ......

ஆசைக்கு ஒன்று , ஆஸ்திக்கு ஒன்று , நாட்டுக்கு மூன்று என அவர்களால் இயலுமான பிள்ளைகளைப் பெற்று தமிழரின் சனத்தொகையை கூட்டவேண்டும் .

புலம்பெயர் தமிழர்கள் இதனை முக்கிய கடைமையாக செய்வதில் பெரிய சிக்கல் இருக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, இந்தியா, அமரிக்கா, ரஸ்யா எல்லாம் தலைக்குமேல் தொங்கும் கத்தியை( அனுகுண்டு போன்ற பலவிதமானவை) வைத்துக் கொண்டு அல்லாடுகின்றன. இன்றைய சூழலில் எங்காவது ஏதாவதோர் காரணத்திற்காக ஒரு லிங்க் விடுபட்டால் போதும் தங்கட தலையில தாங்களே போட்டுக்கொண்டு பஸ்மமாகிப் போவார்கள்.

ஈழத்தமிழரின் இன்றைய மிகமோசமான நிலையிலும் இனஅழிப்பிலும் சிக்குண்டு இருக்கும் எமக்கு இந்தக் குடும்பக் கட்டுப் பாடெல்லாம் தேவையற்றது. இவ்விடயத்தில்முகம்மதிய குடும்பங்களை முன் மாதிரியாகக் கொண்டு ஆரோக்கியமான நிறையப் பிள்ளைகள் பெற்றெடுக்கப்பட வேண்டும். விதவா திருமணங்களும் ஊக்குவிக்கப் படவேண்டும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினம் , தினம் ஈழத்தில் பெருந்தொகையான மக்கள் இறந்து கொண்டிப்பதனால் , அதனை ஈடுகட்ட ஈழத்தமிழர்கள் குடும்பக்கட்டுபாடு செய்யாமல் ......

ஆசைக்கு ஒன்று , ஆஸ்திக்கு ஒன்று , நாட்டுக்கு மூன்று என அவர்களால் இயலுமான பிள்ளைகளைப் பெற்று தமிழரின் சனத்தொகையை கூட்டவேண்டும் .

புலம்பெயர் தமிழர்கள் இதனை முக்கிய கடைமையாக செய்வதில் பெரிய சிக்கல் இருக்காது .

புலம்பெயர் தமிழர் இதைத்தானே செய்யினம், நாட்டுக்காக செய்யினமோ என்னவோ ஒவ்வொரு குழந்தை பிறந்தாலும் காசு கூடக் கொடுப்பதால் வேலைக்கு போகாமல் குழந்தை பெறுவதே வேலையாக சிலர் இருக்கினம். அவர்களுக்கு இது பிரயோசனமா இருக்கும்.

கோபிக்காதையுன்கப்பா....... :(:)

நீங்க ஆசைக்கு ஒண்ணு என்பீங்க.. அப்புறம்.. அந்த ஒண்ணு.. தங்கச்சி பாப்பாக்கு.. தம்பி பாப்புக்கு ஆசைப்படுகுது என்று அடுத்ததிற்கு காரியமாற்றப் போயிடுவீங்க. இதுதானே நடக்குது உலகத்தில. அப்படி இருக்க.. எப்படி.. சனத்தொகையை கட்டுப்படுத்துறது. :D

அதுதானே....

எப்படியோ வீடு முழுக்க குழந்தைகள் இருந்தால் தான் சும்மா கிளு கிளுப்பா இருக்கும் :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் இதைத்தானே செய்யினம், நாட்டுக்காக செய்யினமோ என்னவோ ஒவ்வொரு குழந்தை பிறந்தாலும் காசு கூடக் கொடுப்பதால் வேலைக்கு போகாமல் குழந்தை பெறுவதே வேலையாக சிலர் இருக்கினம். அவர்களுக்கு இது பிரயோசனமா இருக்கும்.

கோபிக்காதையுன்கப்பா....... :D:)

அதுதானே....

எப்படியோ வீடு முழுக்க குழந்தைகள் இருந்தால் தான் சும்மா கிளு கிளுப்பா இருக்கும் :lol::D

அதைத்தான் சிறீ அண்ண சொல்லுறார்.. புகலிடத்தில ஒரே கல்லில 3 மாங்காய் என்று. பெத்துத்தள்ளிக்கிட்டே இருக்க வேண்டியதுதானே என்று.

எனக்கு விளங்கல்ல எப்படி கன பிள்ளைகள் பெற்றுக்கிட்டா கிளு கிளுப்பா இருக்குமென்று. அநேக வீடுகளில்.. எலிக்குஞ்சு காலுக்கால ஓடுற மாதிரி ஓடுதுகள்.. கீயா.. மாயா என்று கொண்டு.. ஒரு மனிதன் நிம்மதியா ஒரு நிமிடம் ஒருவரோடு கதைக்க முடியாத அளவுக்கு.. பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் இருக்குது... புகலிடத்தில. மெத்தப்படிச்சு குடிபெயர்ந்தவையிட பிள்ளைகளில இருந்து தோட்ட வேலையோட அகதியா வந்தவையிட பிள்ளை வரை அப்படித்தான்.. குட்டி பேட்டிட்டு இருக்குது.

இந்த இலட்சணத்தில.. கிளு கிளுப்பு.. என்ன.. சைல் கிரடிட் அரசாங்கப்பணம் மட்டும் வங்கியில எகிறிக்கிட்டு இருக்கும்..! அதுதான் கிளு கிளுப்பு பலருக்கு. அதுவும் அரைகுறை வேலை செய்யுறவைக்கு.. இன்னும் பல மடங்கு மகிழ்ச்சி..! உதுகளை நிப்பாட்டினா சனத்தொகையை குறைக்கலாம்.. ஆனால் பிரச்சனை சனத்தொகை அதிகரிப்பு என்பது பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளில் தான் அதிகம்.

காரணம்..

1. கல்வி அறிவின்மை.

2. வேலையில்லாததால.. பிள்ளை பெத்துக்கிறதே வேலையா இருத்தல். :D:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே நெடுக்கு கையிலேயும் கால்லேயுமாய் கணக்க புள்ளகுட்டி பொறக்கனும். இந்தப்பிறப்பிலே இல்லாட்டியும் அடுத்த பிறப்பிலாவது நடக்கட்டும் என்பதுதான் என்ஆசை. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் றைபன்னுறன் ஓருபிள்ளையும் பிறக்குதுஇல்ல ஏன் ?

ஒருவேளை கலியாணம் கட்டினாத்தான் பிறக்குமோ

ம்ம்...ஏதோ பூமி பாராமாக என்னாலான பங்குக்கு இதுவரைக்கும் ஒன்றே ஒன்றை (officially) தந்து அடுத்ததை தருவதற்கான அனைத்து விதமான முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்...ஏதோ பூமி பாராமாக என்னாலான பங்குக்கு இதுவரைக்கும் ஒன்றே ஒன்றை (officially) தந்து அடுத்ததை தருவதற்கான அனைத்து விதமான முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்....

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ........உங்கள் முய்ற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

:

.. எலிக்குஞ்சு காலுக்கால ஓடுற மாதிரி ஓடுதுகள்.. கீயா.. மாயா என்று கொண்டு.. ஒரு மனிதன் நிம்மதியா ஒரு நிமிடம் ஒருவரோடு கதைக்க முடியாத அளவுக்கு.. பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் இருக்குது...

1:

இது வேணும் என்றால் உண்மைதான் நெடுக்கு அண்ணா.. மனுசர் நிம்மதியாய் தூங்க கூட முடியாது... அதை நண்டு காலுக்க ஊருற மாதிரி இருக்கும்... இதுதான் சொல்லுறது தனிமையிலே இனிமை காண் முடியுமா என்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே....

எப்படியோ வீடு முழுக்க குழந்தைகள் இருந்தால் தான் சும்மா கிளு கிளுப்பா இருக்கும் :lol::D

அதைத்தான் சிறீ அண்ண சொல்லுறார்.. புகலிடத்தில ஒரே கல்லில 3 மாங்காய் என்று. பெத்துத்தள்ளிக்கிட்டே இருக்க வேண்டியதுதானே என்று.

எனக்கு விளங்கல்ல எப்படி கன பிள்ளைகள் பெற்றுக்கிட்டா கிளு கிளுப்பா இருக்குமென்று. அநேக வீடுகளில்.. எலிக்குஞ்சு காலுக்கால ஓடுற மாதிரி ஓடுதுகள்.. கீயா.. மாயா என்று கொண்டு.. ஒரு மனிதன் நிம்மதியா ஒரு நிமிடம் ஒருவரோடு கதைக்க முடியாத அளவுக்கு.. பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் இருக்குது... புகலிடத்தில. மெத்தப்படிச்சு குடிபெயர்ந்தவையிட பிள்ளைகளில இருந்து தோட்ட வேலையோட அகதியா வந்தவையிட பிள்ளை வரை அப்படித்தான்.. குட்டி பேட்டிட்டு இருக்குது.

இந்த இலட்சணத்தில.. கிளு கிளுப்பு.. என்ன.. சைல் கிரடிட் அரசாங்கப்பணம் மட்டும் வங்கியில எகிறிக்கிட்டு இருக்கும்..! அதுதான் கிளு கிளுப்பு பலருக்கு. அதுவும் அரைகுறை வேலை செய்யுறவைக்கு.. இன்னும் பல மடங்கு மகிழ்ச்சி..! உதுகளை நிப்பாட்டினா சனத்தொகையை குறைக்கலாம்.. ஆனால் பிரச்சனை சனத்தொகை அதிகரிப்பு என்பது பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளில் தான் அதிகம்.

காரணம்..

1. கல்வி அறிவின்மை.

2. வேலையில்லாததால.. பிள்ளை பெத்துக்கிறதே வேலையா இருத்தல். :D:)

அண்ணா நீங்கள் சொன்னது நூறுவீதம் உண்மை.

ஆனால் நிறைய பேர் இருந்தால் எல்லா வேலையையும் தனிய செய்யலாம்(திருமணம்,செத்தவீடு

) இன்னொருத்தர் உதவி தேவை இல்லை.

ஒரு இடத்தில் இருந்தால் கொஞ்ச காலத்துக்கு பிறகு அந்த தெருவே இவர்களால் நிரம்பி வழியும்.

அதை விட நிறைய பிள்ளைகளுடன் நடந்து போகும் போது(இல்லாட்டி வீட்டில் காலுக்குள்ளை கீயா,மாயா என்று திரியும் போது)

எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பாருங்கள். ரண களத்திலையும் ஒரு கிளுகிளுப்பா இருக்குமல்லவா :(:D

இது வேணும் என்றால் உண்மைதான் நெடுக்கு அண்ணா.. மனுசர் நிம்மதியாய் தூங்க கூட முடியாது... அதை நண்டு காலுக்க ஊருற மாதிரி இருக்கும்... இதுதான் சொல்லுறது தனிமையிலே இனிமை காண் முடியுமா என்று...

சுஜி குழந்தை குட்டி ஊருவதிலும் ஒரு சுகம் இருக்கு.

பார்த்து உங்க கணவர் ஓடிட போறார்.

தனிமையிலை இனிமை கண்டால் வேறு ஏதோ மாதிரி நினைப்பாங்க

  • கருத்துக்கள உறவுகள்

தோமஸ் மல்தூசியன் என்பவர் இப்படியான நேரம் என்ன நடக்கும் எண்டு ஒரு தியரி சொல்லிப் போட்டுப் போயிருக்கிறார். தமிழாக்க நேரமில்லை எனக்கு, கீழ உள்ள விக்கிபீடியாவில போய்ப் பாருங்கோ. நெடுக்கு இதையும் ஒருக்கா தமிழாக்கி இணைச்சு விடுங்கோ.

http://en.wikipedia.org/wiki/Malthusian_catastrophe

Edited by Justin

சுஜி குழந்தை குட்டி ஊருவதிலும் ஒரு சுகம் இருக்கு.

பார்த்து உங்க கணவர் ஓடிட போறார்.

தனிமையிலை இனிமை கண்டால் வேறு ஏதோ மாதிரி நினைப்பாங்க

பிரசாந் உங்களுக்கு எத்தினை குழந்தை குட்டி காலுக்கு ஊருது?

என் கண்வர் என்னை விட்டு இட்டு ஒட மட்டார் என்றுதான் நினைக்குறன்... எதுக்கு கேட்டு பார்க்கணும்......வெறு மாதிரி என்ன இப்பவே அப்படித்தான் சொல்லுறார்கள்.. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.