Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமாதானத்தை நோக்கி ஓபாராவை சந்திக்க அமெரிக்க எல்லையைக் கடந்த தமிழ் இளையோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தை நோக்கி ஓபாராவை சந்திக்க அமெரிக்க எல்லையைக் கடந்த தமிழ் இளையோர்

[திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 06:22 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]

அமெரிக்க சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கித் 60 நாட்கள் பயணத்தை தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையனைக் கடந்து அமெரிக்காவுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.09) பிற்பகல் 1:00 மணிக்கு சென்றுள்ளனர்.

இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந்த நடைப்பயணத்தினை கடந்த மாதம் 4 ஆம் நாள் தொடங்கியிருந்தனர்.

"ஒபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். 1,000 கிலோ மீற்றருக்கு மேல் நடந்து வந்த எம்மைச் சந்தித்துக் கதைக்க முடியாது என்று நிச்சயமாகச் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் ஒரு மனிதாபிமானத்தை மிகவும் நேசிக்கும் சிறந்த பெண்மணி. நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார் என்பதில் எமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு" இவ்வாறு சிக்காக்கோவிற்கான நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் கண்ணன் சிறீகாந்தா தெரிவித்தார்.

கடந்த மாதம் 4 ஆம் நாள் ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் ஐந்து மாணவர்களால் தொடங்கப்பட்ட இப் பயணம், ஒன்ராறியோ மாகாணத்தில் கடுங் குளிரையும் தாங்கிக்கொண்டு 33 நாட்களாகத் தொடர்ந்து நடைபெறுகின்றது.

நடைபயணத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளுர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களிற்கு இலங்கைத் தீவின் தற்போதைய நிலை தொடர்பாக தகவல்களை வழங்குகின்றனர். தங்களது பயணம் தொடர்பாக மர்லன் ராஜா விபரிக்கையில்,

நாங்கள் நடக்காது தூங்காது இருக்கும் போதும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. எமது இணையத்தளத்தைத் தொடர்ந்து தகல்களை தரவேற்றிப் பராமரிப்பது, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, அத்துடன் ஹார்ப்போ கலையகத்தில் உள்ள தனிப்பட்டவர்களுடன் தொடர்புகொள்வது போன்று பலவற்றைச் செய்கிறோம் என்று தெரிவித்தார்.

இதுவரை 600 கிலோ மீற்றர்களுக்கு மேல் நடந்துள்ளோம். எமது இலக்கை அடைய இன்னும் கிட்டத்தட்ட 450 கிலோ மீற்றரளவில் நடக்க வேண்டியுள்ளது.

எனினும் இன்றைய ஈழத்தின் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக சிக்காக்கோ நகரிற்குச் செல்ல எண்ணியுள்ளோம். தேவையேற்படும் போது 24 மணிநேரமும் நடப்பதற்குத் தயாராகவுள்ளோம் என்று நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான கிரிஸ் பாலசிங்கம் தெரிவித்தார்.

ஒரு நாளில் 16 மணித்தியாலங்கள் நடப்பதற்குத் திட்டமிட்டுள்ள இம் மாணவர்கள் இதன் மூலம் 60 தொடக்கம் 80 கிலோ மீற்றர்கள் நடப்பதற்கு எண்ணியுள்ளார்கள். ஏற்கனவே அரைவாசிக்கு மேற்பட்ட தூரத்தைக் கடந்துள்ள இவர்கள், மற்றையவர்களைச் சந்தித்துக் கருத்துச் சொல்வதை விடுத்துத் தனியே நடப்பதில் மட்டும் கவனமெடுப்பின் 10 நாட்களில் இலக்கை அடையமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்பயணத்தில் உள்ள கண்ணன் சிறீகாந்தா கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் சமாதானம் பற்றிப் பேசும் போது அது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் அனைத்துலக சமூகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஒபரா வின்ப்ரேயின் நிகழ்வினூக நாம் விடுக்கவுள்ள வேண்டுகோளினை அடிவானில் தெரிவும் நம்பிக்கை நட்சத்திர ஒளியாகக் காண்கின்றனர் என்றார்.

இப் பயணம் வெற்றிபெற உலகெல்லாம் பரந்துவாழும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை இம் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கீழே உள்ள இணைப்பின் ஊடாக உலகு எங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழர்களல்லாத அனைவரையும் ஒபரா வின்ப்ரேயிற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களிடமிருந்து இதுவரை எவ்வித உறுதி மொழியும் கிடைக்காத இந்நிலையில், அனைவரும் மின்னஞ்சல் மூலம் இவர்களது குரல்களின் ஊடாக இலங்கைத் தீவில் நிலவும் மனித அவலத்தை உலகிற்கு கொண்டுவர சந்தர்ப்பம் வழங்க வேண்டும் ஒன்று ஒபரா வின்ப்ரேயிற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அனைவரையும் வேண்டுகின்றனர்.

மின்னஞ்சலில் நடைப்பயணம் மேற்கொள்ளும் பின்வரும் மாணவர்களின் பெயர்களையும் இணைக்கவும்:

கண்ணன் சிறீகாந்தா (Kannan Sreekantha)

கிறிஸ் பாலசிங்கம் (Kris Balasingam)

மார்லன் இராஜா (Marlan Raja)

இறமணன் திருக்கேதீஸ்வரநாதன் (Ramanan Thirukketheeswaranathan)

விஜய் சிவநேஸ்வரன் (Vijay Sivaneswaran)

மின்னஞ்சல் இணைய இணைப்பு: https://www.oprah.com/ord/plugform.jsp?plugId=216

நன்றி ..........புதினம்

இன்று குறிப்பிட்ட இளைஞர்களின் நேர்காணல் ஒன்றை கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் இன்றைய நிலவரம் சம்மந்தமாக அவர்கள் பாடிய அழகான ஓர் பாடலையும் ஒளிபரப்பினார்கள்.

இன்னும் சுமார் 35 நாட்கள் நடைபயணம் இருப்பதாய் அவர்கள் சொல்லி இருந்தார்கள். தங்களது நோக்கம் ஒபராவின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மட்டும் இல்லை என்றும், வீதிவழியாக செல்லும்போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கியஸ்தர்கள், நிறுவனங்களிடம் தாயக அவலம் பற்றி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்வதாகவும் சொன்னார்கள்.

அவர்கள் எம்மிடம் கேட்கும் உதவி. நாம் ஒவ்வொருவரும் கீழ் உள்ள இணைப்பிற்கு சென்று எம்மால் முடியுமான அளவு மின்னஞ்சல்களை ஒபராவுக்கு அனுப்பவேண்டும். அதாவது இந்த இளைஞர்களிற்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு. அதற்கான காரணத்தையும் சொல்லி!

ஒபராவுக்கு கிழமைக்கு சுமார் 20,000 மின்னஞ்சல்களிற்கு மேல் சென்றால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னர்கள். எனவே, ஒருசிலர் மட்டும் அனுப்பாது எல்லோரும் அனுப்ப வேண்டும்.

https://www.oprah.com/ord/plugform.jsp?plugId=216

Spam messages கூடாது. உண்மையான பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்களை கொடுக்கவேண்டும். இந்தவிசயத்தில் உண்மை பேசுதல் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இவ் இளைஞர்களின் பாதுகாப்பு பற்றி யாரும் சொல்லவில்லை. சிங்களம் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள்.

நீங்கள் சொல்கின்ற விசயமும் கவனிக்கப்படவேண்டியது நுணாவிலான். கனயீர்ப்புக்கள் செய்பவர்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சிங்கள காடையர்கள் உண்மைகள் வெளியில் வருவதை மறைக்க எதுவும் செய்யக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சென்று எல்லோரும் yes என்று வாக்களியுங்கள். நாம் முன்னர் 93 % இருந்தோம் இப்போது 53 க்கு வந்துவிட்டோம். எல்லோரும் இதை செய்யுங்கள்

http://www.oprahgiveusavoice.com/

சிங்களவன் ஏற்கனவே இதற்கு எதிரான பரப்புரையை செய்ய துவங்கிட்டான்...இந்த http://www.petitiononline.com/slp2opra/petition.html இல் இதுவரை 3500+ சிங்கள நாய்கள் கையெழுத்து போட்டு இருக்குதுகள்...இதையும் நாங்கள் முறியடிக்க வெண்டும்....எமக்கு சார்பான Online petition உண்டா என்று நண்பர்கள் யாருக்காவது தெரியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சென்று எல்லோரும் yes என்று வாக்களியுங்கள். நாம் முன்னர் 93 % இருந்தோம் இப்போது 53 க்கு வந்துவிட்டோம். எல்லோரும் இதை செய்யுங்கள்

http://www.oprahgiveusavoice.com/

என்னால் இங்கு வாக்களிக்க இயலவில்லை. இத்தளத்தின் வாக்களிக்கும்பகுதி மட்டும் வேலை செய்யவில்லை.எனவே எனது கருத்தை மட்டும் பதிவு செய்துள்ளேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நீண்ட தூரத்தை 60 நாட்களில் கடக்கும் இளையோரின் துணிந்த முயற்சி நிச்சயம் பலனளிக்கும் .

தற்போதைய கருத்து கணிப்பு நிலவரம் .......

Current Results

Yes - 85%

No - 13%

Maybe - 1%

I don't know - 1%

Total Votes: 5894

தயவு செய்து இங்கு Yes என்று வாக்களியுங்கள் உறவுகளே .........

http://www.oprahgiveusavoice.com/

Edited by தமிழ் சிறி

elakiri.com இல் சிங்களவன் இதற்கு எதிராக வாக்களிக்கவும் ஓப்பராவை நேரடியாக தொடர்பு கொண்டு பயங்கரவாதிகளோடு பேசாதீர்கள் என்று சொல்லவும் பரப்புரை செய்கிறான்....பலர் எதிராகவும் வாக்களித்துள்ளார்கள்

தற்போதய நிலவரம்

Current Results

Yes - 72%

No - 26%

Maybe - 1%

I don't know - 1%

Total Votes: 8567

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் இங்கு வாக்களிக்க இயலவில்லை. இத்தளத்தின் வாக்களிக்கும்பகுதி மட்டும் வேலை செய்யவில்லை.எனவே எனது கருத்தை மட்டும் பதிவு செய்துள்ளேன்.

நன்றி.

வாக்களிக்கும் பகுதி முழுவதுமாக வர வெகுநேரம் பிடிக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். உங்கள் கணினியில் ஒருமுறை வாக்களிதுவிட்டால் மறுமுறை அந்த பகுதி வருவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கணனியில் குக்கியை அழித்து, அழித்து, திரும்பவும் வாக்களிக்கவும்.

Current Results

Yes - 84%

No - 15%

Maybe - 0%

I don't know - 0%

Total Votes: 27275

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.