Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது.

இடையில் காங்கிரசுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அரசியல் களத்தை தொடங்கிய நான் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை. நான் நன்றி மறந்தவன் இல்லை.

அங்கு வழியில் சென்ற போராட்டக்காரர்களுக்கும், தோழர்களுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பில் முடிவுற்றது. அது திட்டமிட்ட செயல் அல்ல. சில தீய நிகழ்வுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டன. ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டன.

நான் பழிவாங்கும் நோக்கம் உடையவன் அல்ல. இதுகுறித்து நாங்கள் தவறு செய்யவில்லை என சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனம், தங்கபாலு, வாசன், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்...

தற்போது இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கட்சியான திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். மிகப்பெரிய கூட்டணியில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.

அதிமுக அணியில் நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் நான். உங்களுடன் தான் இருப்பேன் என கருணாநிதியிடம் கூறினேன். ஈழத்தமிழர் பிரச்னைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திசை மாறிப் போய்விடுவான் என எதிர்பார்த்தார்கள். திமுக அணி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம் என்றேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

எங்களுக்கு தேர்தல் அனுபவம் கிடையாது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி முத்துக்குமாரின் உடலை வைத்தே அரசியல் நாடகம் போட்டவர்களுக்கு இப்படி அரசியல் வசனம் பேச சொல்லிக் கொடுக்கவா வேண்டும். ஆனால் திருமாவிடம் இதை எதிர்பார்க்கல்ல. இருந்தாலும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. :):( :(

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி முத்துக்குமாரின் உடலை வைத்தே அரசியல் நாடகம் போட்டவர்களுக்கு இப்படி அரசியல் வசனம் பேச சொல்லிக் கொடுக்கவா வேண்டும். ஆனால் திருமாவிடம் இதை எதிர்பார்க்கல்ல. இருந்தாலும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. :rolleyes::lol: :lol:

திருவை திட்டாதையுங்கோ...........ஏற்கனவே எங்களுக்கு பல எதிரிகள் இருக்கினமாம்..என்று கள உறவுகள் சொல்லினம் ஆனபடியால் இவரை நன்பராகவே வைத்திருப்பம்.......... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவா இப்படி !!

கருணாநிதியே காங்கிரஸிக்கு கழுவிட்டு நாடகம் ஆடும் போது இந்த திருமாவும் எவ்வளவு காலத்திற்கு காங்கிரஸ் காரன் நல்லாத்தான் காய் நகர்த்துகிறான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசே...இந்திய அரசே ...ஈழத்தமிழரைக் காப்பாற்று.....இந்திய அரசே...இந்திய அரசே போரை நிறுத்து....என்றெல்லாம் வாய்கிழியக் கத்திவிட்டூ....கங்கிரஸ்கட்சிக

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கப்படுவது இப்போது சகஜமாகி விட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. என்று தணியும் இந்த இந்திய மோகம்? என்று தணியும் எங்கள் அடிமை மோகம்???

இந்திய மோகம் எங்களுடன் கூடபிறந்தது போல் தெரிகிறது.இன்று புலத்தில் நாம் எமது பிள்ளைகளுக்கு தமிழை கற்றுகொடுப்பதிலும் பார்க்க இந்திய விழுமியங்களை எங்களையும் அறியாமல் புகட்டுகிறோம்.தமிழ்பாடசாலைய

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது.

இடையில் காங்கிரசுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அரசியல் களத்தை தொடங்கிய நான் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை. நான் நன்றி மறந்தவன் இல்லை.

அங்கு வழியில் சென்ற போராட்டக்காரர்களுக்கும், தோழர்களுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பில் முடிவுற்றது. அது திட்டமிட்ட செயல் அல்ல. சில தீய நிகழ்வுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டன. ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டன.

நான் பழிவாங்கும் நோக்கம் உடையவன் அல்ல. இதுகுறித்து நாங்கள் தவறு செய்யவில்லை என சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனம், தங்கபாலு, வாசன், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்...

தற்போது இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கட்சியான திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். மிகப்பெரிய கூட்டணியில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.

அதிமுக அணியில் நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் நான். உங்களுடன் தான் இருப்பேன் என கருணாநிதியிடம் கூறினேன். ஈழத்தமிழர் பிரச்னைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திசை மாறிப் போய்விடுவான் என எதிர்பார்த்தார்கள். திமுக அணி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம் என்றேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

எங்களுக்கு தேர்தல் அனுபவம் கிடையாது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

தேர்தல் வந்தால் அடுத்துக் கைப்பற்ற வேண்டியது பதவிதானே. போகட்டும் விடுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

திருமா?...நம்பவே முடியவில்லை :rolleyes:

உலகம் ஒரு நாடகமேடை

நாமெல்லாம் அதில் நடிகர்கள்

அவரவர் அவரது பாத்திரங்களை நன்றாகவே செய்கின்றனர்

இவர்களில்

யார் யாரை ஆட்டுவிக்கிறார்கள்

யார் யாருடன் ஆடகின்றார்கள்

யார் நடிகன்

யார் தயாரிப்பு

யார் இயக்குனர்......................

புரியாத கேள்விகள்.................

வெளிவராத பதில்கள்............

ஆனால் ஈழத்தமிழன் மட்டும் இவர்களை உண்மையாய் நம்பியபடி...........

எதிர்பார்த்தபடி.................

ஏன் என்றால் அவனுக்கு இவர்களை விட்டால் வேறு வழி...........????

ஜயா திருமா, தாங்கள் ஆயிரம் காரணம் கூறலாம் ஆனால் இந்தனேரத்தில் இந்த இடத்தில் இந்தச்சூழலில் உங்கள்முடிவை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.