Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதலுக்கு சிறிலங்கா படைகள் தயார்: போர் ஊர்திகளும் பீரங்கிகளும் முன்னரங்கிற்கு நகர்த்தப்படுகின்றன

Featured Replies

இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான தயாரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தொடங்குவதற்கான ஒரு முன்னோடியாகத்தான் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வதிவிடங்களை நோக்கி பெருமளவு எறிகணைத் தாக்குதல்கள் படையினரால் நேற்று முன்நாள் இரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் அதேவேளையில், பெருந்தொகையான பேருந்துகள், இராணுவ கவச வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் போன்றன 'மக்கள் பாதுகாப்பு வலயம்' அமைந்திருக்கும் பகுதிகளை நோக்கி நேற்று நகர்த்தப்பட்டிருப்பதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி பெருமெடுப்பிலான தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு அதற்குள் பிரவேசிப்பதற்கு வசதியாகவே இவ்வாறு இராணுவ வாகனங்கள் பெருமளவுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இதனைவிட பெருந்தொகையான படையினரும் இந்தப் பகுதிகளை நோக்கி அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண்கள் மீதான பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு தேவையான தயாரிப்புக்களுக்காகவே இரண்டு நாட்களுக்கு தாக்குதலை மட்டுப்படுத்துவது என்ற அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டதா என்ற கேள்வியை இராணுவ ஆய்வாளர்கள் எழுப்பியிருக்கின்றனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண்கள் மீதான பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு தேவையான தயாரிப்புக்களுக்காகவே இரண்டு நாட்களுக்கு தாக்குதலை மட்டுப்படுத்துவது என்ற அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டதா என்ற கேள்வியை இராணுவ ஆய்வாளர்கள் எழுப்பியிருக்கின்றனர்.

புதினம்

எல்லாத்தையும் பிலான் பண்னித் தான் செய்யிறாங்கள் சிங்களவன் :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகுக்கு தான் போர் தணிப்பு என்ற உபதேசம் ..........உனக்கல்ல தமிழ் மகனே ஏமாந்து விடாதே ..

மிக மிக மோசமானதும் கசப்பானதுமான செய்திகளை கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுக்கப் போகின்றோமா?

கண்களையும் காதுகளையும் பொத்திக் கொண்டு மண்ணுக்கு கீழே எங்காவது கண் காணா ஆழத்திற்குள் புகுந்து கொண்டு இருந்து விட்டு, ஒரு சில மாதங்களின் பின் வெளியே வந்து பார்க்கவா என்கின்றது மனசு. யதார்த்தம் என்பது இத்தனை கொடியது என்பதை இப்போது தான் உணருகின்றேன்

முதுகில் குத்துவதும், ஒரே குழாமிக்குள் இருந்து கொண்டே உளவு சொல்வதும், சிங்களவனினதும் எதிரியினதும் --. இனை நக்கியே உயிர்வாழ்வதுமான அற்ப மனிதர்களுக்குத் தான் இப்போது நல்ல காலம் போல்லுள்ளது

எனது மச்சான் ஒருவன் இருக்கின்றான். இன்றும் புத்தாண்டு வாழ்த்து எனக்கு சொல்ல தொலைபேசி எடுத்தவன் . களத்திலும் வன்னியிலும் என்ன நடந்தாலும் எது பற்றியும் கவலை இல்லாது, global warming பற்றியும் ஒபாமாவின் நாயைப் பற்றியும் அக்கறை கொள்பவன் அவன். .... ஒவ்வொரு முறையும் அவனை பார்க்கும் போது கடும் ஆத்திரமாய் இருக்கும்... இப்போது அவனை பார்க்கும் போது, ஏன் அவனைப் போல் நானும் இருந்திருக்க கூடாது என்று நினைக்க தோன்றுது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

உலகுக்கு புது வருடத்தில் போர் நிறுத்த செய்யப்பட்டதாக காட்டிக்கொண்டு இனச்சங்காரம் செய்ய மகிந்தவின் கொலைஞர்கள் தயாராகின்றார்கள்? உலகே உனக்கு கண்களே இல்லையா? .

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக மோசமானதும் கசப்பானதுமான செய்திகளை கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுக்கப் போகின்றோமா?

கண்களையும் காதுகளையும் பொத்திக் கொண்டு மண்ணுக்கு கீழே எங்காவது கண் காணா ஆழத்திற்குள் புகுந்து கொண்டு இருந்து விட்டு, ஒரு சில மாதங்களின் பின் வெளியே வந்து பார்க்கவா என்கின்றது. யதார்த்தம் என்பது இத்தனை கொடியது என்பதை இப்போது தான் உணருகின்றேன்

20 வீதமான ஈழதழிழர்களே சுதந்திர தமிழுழ விடுதலை போர் சுமையை தமது தலைகளில் சுமந்தவர்கள். 80 வீதமானவர்கள் அவர்களின் நெருப்பில் சூடுகாய்ந்தவர்கள் அதற்கான விலையைதான் அல்லது பலனைத்தான் நாம் அனுபவிக்றிறோமோ என்றுதான் நான் நினைக்கிறேன். புலிகளின் வரி வெட்டு பற்றி வேட்டு வைத்துகொண்டு திரிந்தவர்களே பெரும்பாண்மையினராக நான் சமாதானகாலத்தில் தாயகத்தில் கண்டேன். இப்போதைய இராணுவ வேட்டுகளை பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50 000 இனவெறி படைகள் 12 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட 300 000 மக்களின் இருப்பிடத்தை நோக்கி படை நகர்வை நடத்தவுள்ளது. இது என்னும் ஒரு ஸ்டாலின்கிரால் சமர்க்களம் போல தோற்றம் பெறுகிண்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.