Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்திற்கு ஆதரவு - ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழீழ தனி மாநில அரசு ஏற்படுவதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஜெயலிலிதா தலைமையிலான அ.தி.மு.க அறிவித்துள்ளது.

நேற்று இரவு வெளியிட்பட்ட அந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருமாறு தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் எனினும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்க மறுத்தால் அங்கு தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆரம்பித்துள்ள தேர்தல்களில் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை தீர்மானிக்கும் களமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழக மக்கள் தனித் தமிழீழம் அமைவதற்கு ஆதரவளிக்கும் கட்சியினை இம்முறை தெரிவு செய்வார்கள் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு திமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்து வந்த ஜெயலிதா தனது நிலைப்பாட்டை தேர்தல் வெற்றிகளை நோக்கமாக கொண்டு மாற்றியமைத்துள்ளதாகவும் எனினும் இதனை அவர் தேர்தல் வெற்றியின் பின்னர் நிறைவேற்றுவாரா என்பது சந்தேகத்திற்குரியதே என்றும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கலைக்கப்படுவதன் மூலம் இலங்கை தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவராக தன்னை காட்டிக் கொண்டு தமிழ் மக்களின் மீதான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கு மறைமுக ஆதரவும் அங்கீகாரமும் வழங்கி வரும் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்படுவது சாதகமான முடிவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவின் இந்த அறிவிப்பு தற்போது எங்களுக்கு நல்லதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இந்த அறிவிப்பு தற்போது எங்களுக்கு நல்லதே..

அம்மா சொல்ல மாட்டா சொன்னா செய்து காட்டுவா..

இவா குள்ள நரிய மாரி இல்லை..ரொம்ப நேர்மையானவா.. முந்தி இந்த மனுசி ஒரு மாரி இப்ப ஒக்கே :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தனி அரசு ஏற்படுவதற்கு அ.தி.முக ஆதரவளிக்கும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிப்பு

இலங்கையில் தமிழீழ தனி அரசு ஏற்படுவதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஜெயலிலிதா தலைமையிலான அ.தி.மு.க அறிவித்துள்ளது. நேற்று இரவு வெளியிட்பட்ட அந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருமாறு தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் எனினும் அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்க மறுத்தால் அங்கு தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆரம்பித்துள்ள தேர்தல்களில் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை தீர்மானிக்கும் களமாக தமிழகம் மாறியுள்ளது.

தமிழக மக்கள் தனித் தமிழீழம் அமைவதற்கு ஆதரவளிக்கும் கட்சியினை இம்முறை தெரிவு செய்வார்கள் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு திமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்து வந்த ஜெயலிதா தனது நிலைப்பாட்டை தேர்தல் வெற்றிகளை நோக்கமாக கொண்டு மாற்றியமைத்துள்ளதாகவும் எனினும் இதனை அவர் தேர்தல் வெற்றியின் பின்னர் நிறைவேற்றுவாரா என்பது சந்தேகத்திற்குரியதே என்றும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கலைக்கப்படுவதன் மூலம் இலங்கை தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவராக தன்னை காட்டிக் கொண்டு தமிழ் மக்களின் மீதான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கு மறைமுக ஆதரவும் அங்கீகாரமும் வழங்கி வரும் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்படுவது சாதகமான முடிவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/1387/54/.aspx

Edited by kuddipaiyan26

அம்மா சொல்ல மாட்டா சொன்னா செய்து காட்டுவா..

இவா குள்ள நரிய மாரி இல்லை..ரொம்ப நேர்மையானவா.. முந்தி இந்த மனுசி ஒரு மாரி இப்ப ஒக்கே :lol::lol:

எவ்வளவு நாளைக்கு இந்த மனநிலை இருக்குமென்று பொறுத்திருந்துதான் பார்கவேண்டும்!

கருநா வின்ட கோவணத்தை கிழிக்கிறம் என்டு எல்லா கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிது போல :lol: :lol:

கருநா வின்ட கோவணத்தை கிழிக்கிறம் என்டு எல்லா கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிது போல :wub::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதாவின் தனித்தமிழீழ ஆதரவு தொடரவேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருநா வின்ட கோவணத்தை கிழிக்கிறம் என்டு எல்லா கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிது போல :lol: :lol:

இதே நிலமை மறு படியும் வரும் பாருங்கோ குள்ள நரிக்கு..

இவன்ட பெயர கேட்டாலே கோவம் தான் வருது..அவளவத்துக்கு ஒரு கொடியவன் இவன்..தமிழ் இனத்து தலைவன்னாம் இவன்.. தமிழ் இனத்தை அழிக்க வந்த கொடியவன் இவன்...இந்த உலகத்தில எத்தனையோ கெட்ட மனிதர்களை கண்டு இருக்கிறேன் ஆனால் இவன மாரி ஒரு கொட்டவன பாத்தது இல்லை..

Newmidnightarrest.jpg

ஜயோ என்னை கொல்லுறாங்கள்.. நான் ஈழ தமிழனுக்கு செய்தது பச்சை துரோகம் தான் அதுக்காண்டி என்னை தெரு நாய் மாரி இழுக்காதைங்கோ..நான் இனி சொனியாவோட கட்ச்சி சேர மாட்டேன்.. ஈழ தமிழன்ட பிரச்சனேல நான் சொனியாவோட சேந்து போட்ட நாடகத்துக்கு உங்களிட்டை மன்னிப்பு கேக்கிறேன்..சொனியா எனக்கு காசை கிள்ளி தந்து என்னை நடிக்க சொன்னால் அது தான் நான் அப்படி நடிச்சேன்..அப்ப அப்ப ஈழ தமிழரை தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லி நம்ம வைச்சு கழுத்து அறுத்தேன்..

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும்...........

ஜெயலலிதாவின் தனித்தமிழீழ ஆதரவு என்பது

களமறிந்து..........

வெற்றிக்கான வாய்ப்பறிந்து........

உரிய தருணத்தில்...........

தகுந்தவிடயத்தில்..........

எடுக்கப்பட்ட முடிவு.

ஆனால் அரசியல் சாணக்கியன் என்று பெயெரெடுத்த கலைஞருக்கு மகா தோல்வி என்றே கூறவேண்டும்.

கலைஞரைச்சுற்றி காஞ்கிரசாரும் கஞ்சிக்கு தாளம்போடுவோரும் உள்ளனர் என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா தேர்தல் முடிந்த பின்னும் கொள்கையில் உறுதியாக இருப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுக்காக தேர்தல் நேரத்தில் உளரும் வாக்குறுதிகள் பல தேர்தலின் மை உலரும்முன்பே மாயமாகிவிடுமென்பது கடந்த கால தமிழக வரலாறு. இந்நடிகையின் கூற்று நம்பகத்தன்மையற்றது. யாரும் சிரத்தையுடன் நோக்கத் தேவையில்லை.

ஒன்டுக்கு ஒம்பது வழக்கறிஞரை வைத்து தேர்தல் அறிக்கை எழுதியிருப்பா..

வெளிப்பார்வைக்கு ஆதரவுபோல இருக்கும்..

பிறகு கேட்டா..திருப்பி சொல்லுவா தான் புலிக்கு எதிர்னு...

நடிப்பில வாழுறவை..சாகும் வரை நடிப்பாக..

Edited by மனிதன்

மீண்டும் இந்த அரசியல்வாதிகளை நம்புகின்றோமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா தாயே அப்படி போடம்மா..கருணாநிதி போட்ட நாடகத்தை எல்லாம் அப்படியே சொல்லுறா :wub::lol::lol:

தேர்தல் கால வாகுறிதிகளை வைத்து எதை முடிவாக சொல்ல முடியாது.... தமிழக மக்களின் ஆதரவு இருக்கும் வரை அரசியல்வாதிகளைப்பற்றி அதிகம் அலட்டத்தேவை இல்லை.

காரணம் இது வரை அரசியல் வாதிகளால் என்னதான் புடுங்க முடிந்தது?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.