Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் அடுத்த இலக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்?

Featured Replies

வணக்கம்,

தாயகத்தில் மிகப்பெரிய மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறீ லங்கா பயங்கரவாத அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ்மக்களை கொன்றும், நிரந்தர அங்கவீனர்களாக்கியும், மனநோயாளிகளாக்கியும், தமிழ் சமுதாயத்தை சீரழித்துவரும் விடயம் ஒருபுறம் இருக்க...

வெளிநாடுகளில் வாழும் தாயகத்தில் உள்ள உறவுகளிற்காக குரல் கொடுக்கும் தமிழர்களை குறுகிய மற்றும் நீண்டகால நோக்கில் அழித்து ஒழிப்பதற்கு சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய முஸ்தீபு செய்துவருவதாக அறியமுடிகின்றது.

இதற்காக தமிழ் மக்களிடையே உள்ள அடிவருடிகள், புல்லுருவிகள் பயன்படுத்தப்படுகின்றார்கள் எனத்தெரிகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அந்தரங்க விடயங்கள், தகவல்களை சேமித்தல், வலைத்தளங்களை உளவு பார்த்தல், கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றும் தமிழர்களின் தகவல்களை திரட்டுதல்... இவ்வாறு துரோகிகளின் சேவைகள் மூலம் சிறீ லங்கா பயங்கவாத அரசு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து உள்ளதாக அறியப்படுகின்றது.

வாழ்க ஜனநாயகம்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை வாழவிட மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பாளர் இந்தச் செய்தியை தயவுசெய்து எடுத்து விடவும். இச்செய்தியின் நோக்கம் கவனவீர்ப்பில் பங்குகொள்ளும் புலம்பெயர் தமிழர்களை கிலிகொள்ள வைக்க வெளியிடப்பட்டுள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு அவர்கள் சொல்வதை .......வரவேற்கிறேன்.அது தான் நன்று .

  • தொடங்கியவர்

எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை நாங்கள் அறிந்து இருப்பது நல்லது. உங்களுக்கு கிலியை ஏற்படுத்துவது அல்ல இந்தச்செய்தியின் நோக்கம். நாங்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புக்களில் ஈடுபடும் அதேவேளை எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

தவறிருந்தால் மன்னிக்கவும் எனது சொந்த அனுபவத்தின் மூலமே நான் இதனைக் கூறுகிறேன். எனது உறவு ஒன்று லண்டன் மாநகரில் வாழ்கிறது. வாழகிறது என்பதைவிட அங்கு குபபைகொட்டுகின்றது. அதனிடம் கவனவீர்பிற்க்குப் போகவில்லையா எனக் கேட்டால். அங்கு போனால் பிரச்சனை வரும் படங்கள் எடுப்பாங்கள் பிறகு ஊருக்குப்போகமுடியாது எண்டு சொல்லும் அதைவிட தன்னுடன் சேர்த்து வேறுசிலரையும் நிப்பாட்டிப்போடும் ஆனால் ஒன்றுமட்டும் உறுதி தமிழீழ விடுதலைக்கு எதிரான ஆள் இல்லை. இதுதரவளி விசர்வெங்கிடாந்திகள் புலம்பெயர் தேச்தில் எத்தனை இருக்கின்றது என்பதை சற்றே எண்ணிப்பார்க்கவும் இவர்கள் எப்போதும் ஒரேநிற மூக்குக் கண்ணாடியால்தான் உலகைப்பார்ப்பார்கள். இதில் உள்ள மறுபக்கத்தை யோசிக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு அங்கு மட்டுமல்ல இங்கும் நிறைய சவடால் பேர்வழிகள் உள்ளார்கள். அவர்களும் போகமாட்டார்கள் போகின்ற உறவுகளுக்கும் கிலியை உருவாக்கி குழப்பிவிடுவார்கள். நாங்களும் எத்தனைபேரை கண்டிருக்கிறோம்.

வெளிநாடுகளில் வாழும் தாயகத்தில் உள்ள உறவுகளிற்காக குரல் கொடுக்கும் தமிழர்களை குறுகிய மற்றும் நீண்டகால நோக்கில் அழித்து ஒழிப்பதற்கு சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய முஸ்தீபு செய்துவருவதாக அறியமுடிகின்றது.

கொல்லப்போகினமா? எத்தினை பேரை? கொல்லுவதென்றால் லட்சக்கணக்கான மக்களை கொல்ல வேணும் இந்த நாட்டில் அது முடியுமா?

பதிலுக்கு நாங்கள் சிங்களவனை கொல்லமுடியாதா? தூரநோக்கிலும் நீண்டநோக்கிலும்!

இங்கு சிங்களவனைவிடவுடவும் ஒட்டுக்குழுக்களை விடவும் நாங்கள் தான் அதிகம். எனவே அப்படி ஒரு முயற்சி நடந்தால் முதலில் முடியப்போவது அவைதான். :icon_mrgreen::lol:

பொறுப்பாளர் இந்தச் செய்தியை தயவுசெய்து எடுத்து விடவும். இச்செய்தியின் நோக்கம் கவனவீர்ப்பில் பங்குகொள்ளும் புலம்பெயர் தமிழர்களை கிலிகொள்ள வைக்க வெளியிடப்பட்டுள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது.

கட்டுநாயக்க ஏர்போர்ட் போனல்தனே பிரச்சினை...... கொஞ்ச நாளைக்கு ஸ்ரீலங்காவுக்கு holidays போவதை நிறுத்திக்கொள்ளுங்கள்..... அப்படி தமிழீழம் போக வேண்டுமென்றால் chennai பொய் இறங்கி அங்கிருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறை போய் இறங்கலாம்..... ஏற்ப்பாடு பூர்த்தியாகும் வரை பொறுத்திருங்கள்...... என் படம் தமிழ்நாட்டு தமிழ் பத்திரிகைகளில் London protest செய்யும்போது வந்திருந்தது.....கவலைப்படவில்ல

ை...வருந்தவில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் சிட்னியில் சந்திரகாசன் எனும் கட்டிடக் கலைஞன் ஒருவன் இருக்கிறான். அவனும் அவனது இன்னும் 3 சகாக்களும் மகிந்தவின் பிரபலமான கொழும்புக் கூட்டத்துக்கு சென்றவர்கள். அங்கே மகிந்தவின் செயல்களைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இங்கும் வந்து தான் செய்ததை சரியென்று எழுதியும் வருகிறான். "இங்குள்ள புலிப் பிணாமிகளால் என்னை ஒன்றும் புடுங்க முடியாது, உங்கள் ஈழக்கனவும், போராட்டமும் அழியும்வரை நான் சிங்களத்துக்கு உதவிசெய்வேன்" என்றும் கறுவியிருக்கிறான். அவனுடைய இன்னொரு சகாவான் பாஸ்கரன் என்னும் முன்னாள் புளொட் இயக்க யாழ் மாவட்ட பொறுப்பாளர் என்று தன்னைத்தானெ சொல்லிக்கொள்ளும் இவன், தான் போகுமிடமெல்லாம் "உங்கள் போராட்டம் முடிஞ்சிது, 35 வருஷமா போராடி என்னத்தைக் கண்டியள்?, எல்லாம் அழியப்போகுது, நாளைக்கே உங்கட தலைவரைக் கட்டி இழுத்துக்கொண்டு வரப்போகிறார்களாம்" என்று சொல்லி வருகிறான். இந்த ரெண்டு நாய்களும், இங்குள்ள ஈஸ்ட்வோட் மற்றும் கோம்புஷ் தமிழ் பாடசாலைகளுக்கு சிறிதுகாலம் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.பலமுறை மாவீரர்தினம் பாடசால சார்பாக நடத்தப் பெற்றோரும் ஆசிரியர்களும் கேட்டபோது "பாடசாலைக்குள் அரசியல் கலக்க நாம் அநுமதிக்க மாட்டோம்" என்று தடுத்திருக்கிறார்கள். பாடசால் அதிபராக் வருவதன் மூலம் நியூ சவுத் வேல்ஸ் மாநில தமிழ் பாடசாலைகளின் ஒன்றியத்தின் தலமைப் பொறுப்பை கைப்பற்றுவதுதான் இவர்களின் இலக்காக இருந்திருக்கிறது. அங்கிருந்து தமது தமிழரெதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்வதுதான் இவர்களது நோக்கம்.

இங்கு சிட்னியில் ஒரு கட்டக் கலைஞர் அலுவலகம் வைத்திருக்கும் இந்த சந்திரகாசன் எனும் கோடரிக் காம்பிடம் இன்றும் தமது வீட்டிற்கு வரைபடம் கீறச் செல்லும் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த மந்தைகள் திருந்தாதவரை, இவனைப் போன்ற கோடரிக்காம்புகள் வளருவதையும் தடுக்க முடியாது.

இதே கூட்டங்கள் இங்கும் இருக்கத்தான் செய்கின்றன...... இவர்களுக்கு முடிவு காட்டப்படும்.....

நாசமாப்போக!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

லண்டனில் 300,000 மக்கள் கலந்து கொண்டார்கள், அதேபோல் உலகம் முழுதும் எத்தனை கோடி தமிழர்கள்? கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து எத்தைபேரைப் பிடிப்பினம்????????????????

பொறுப்பாளர் இந்தச் செய்தியை தயவுசெய்து எடுத்து விடவும். இச்செய்தியின் நோக்கம் கவனவீர்ப்பில் பங்குகொள்ளும் புலம்பெயர் தமிழர்களை கிலிகொள்ள வைக்க வெளியிடப்பட்டுள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது.

இத் அச்சமேற்படுத்தும் ஒரு விடயமாக எடுக்க முடியாது. எமக்கேற்படக் கூடிய சவால்களையும் எதிர்ப்புகளையும் முன்னதாகவே இனங்கண்டு அதற்கேற்றாப் போல் எம்மை தயார்படுத்திக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

இதனைப் வாசித்து பார்த்து எவராவது பயம் கொண்டு பின்வாங்குவார்களாயின், அவர்கள் உண்மையிலேயே இத்தகைய போராட்டங்களுக்கு லாயக்காணவர்கள் அல்ல. சும்மா ஒரு சாட்டு கிடைத்து விட்டது என்று போகாமல் விடக்கூடியவர்களாகவே அவர்கள் இருப்பர்

அதைவிட முக்கியமான சில விடயஙள்.

1. புலம்பெயர் நாடுகளில் வதிவைட மற்றும் பிரஜாவுரிமை பெற்றவர்களை மகிந்த கும்பலால் ஒன்றும் செய்ய முடியாது.

2.வேண்டுமானால் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கபட்டு இருப்பவரை வேன்டுமானால் ஊருக்குத் திருப்பி அனுப்பினால் ஏதாவது செய்யலாம்.

3. அதுமடுமல்ல நாம் ஊருக்குப் போகும் போது என்ன பாதுகாப்பு அமைசுக்கு தகவல் கொடுத்து விட்டா போகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.