Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தப்பிவிட்டதாக தகவல்:ராணுவம் அதிர்ச்சி!

Featured Replies

இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது.

பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக்கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரபாகரனும், அவரது இயக்க மூத்த தலைவர்களும் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கை கப்பல் படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை உயர் அதிகாரி ஒருவர்,

பிரபாகரனின் ஆட்டம் முடிந்து விட்டது. அவரும், அவரது கூட்டாளிகளும் தப்பிச் செல்வதை தடுக்க, அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது. 25 கடல் மைல் தூரத்துக்கு கடற்படையின் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் போர்க் கப்பல்கள், அதிவேக தாக்குதல் கப்பல்கள், விரைவு படகுகள், ராடார்கள் ஆகியவை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அந்தப் பகுதியில் பிரபாகரன் ஒரு படகை இயக்கக் கூட அனுமதிக்க மாட்டோம். இன்று (நேற்று) முல்லைத்தீவு கடல் பகுதியில் கடல் புலிகளின் ஒரு படகை மூழ்கடித்து விட்டோம்.

மேலும், தங்கள் பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள், ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காகவும், கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது என்றூ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, போர் பகுதியில் இருந்து பிரபாகரன் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்கள் தெரிவித்ததாக, ஒரு தனியார் டெலிவிஷன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

போர் பகுதியில் பிரபாகரன் தற்போது இருக்க வாய்ப்பு இல்லை என்று விடுதலைப்புலி வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள யாலா காட்டுப்பகுதிக்கு சென்று இருக்கலாம் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்ததாக, அந்த டெலிவிஷன் கூறியுள்ளது. இதனால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கிழக்கு மாகாணம் முழுவதும் தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நக்கீரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு: வன்னி போர் முனையிலிருந்து பிரபாகரனும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரும் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப் புலி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. சிங்கள ராணுவ அதிகாரிகளும் இதையே கூறிவந்தனர்.

ஆனால், நிலைமை கை மீறும்போது, நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல பிரபாகரன் திட்டம் வைத்திருந்ததாக ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் தெரிவித்ததாக ராணுவம் கூறியது.

இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்தார்.

ஆனால், போர் பகுதியில் இருந்து பிரபாகரனும் முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களும் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர் பகுதியில் பிரபாகரன் தற்போது இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள யாலா காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டிருக்கலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது.

இது உண்மையானால், இலங்கை ராணுவத்துக்கு இதை மிகப்பெரிய அதிர்ச்சி வேறு இருக்காது என இலங்கை ஆதரவு இணைய தளங்கள் கூறியுள்ளன. இதனால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கிழக்கு மாகாணம் ஏற்கெனவே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, ராணுவத்தின் கைக்குப் போய்விட்டது. ஆனாலும் அங்கு புலிகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கொரில்லா முறையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

யாலா காட்டுப் பகுதியில் சமீபத்தில் பெரும் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம்.

Tags: srilanka, tamils, vanni war zone, escapes, army, navy, ltte, amparai, yala jungle, இலங்கை, வன்னி, பிரபாகரன், விடுதலைப் புலிகள், தப்பினார்.

http://thatstamil.oneindia.in/news/2009/04...aves-vanni.html

  • தொடங்கியவர்

ஏன் சேகுவாரா நீங்க நம்புறீங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சேகுவாரா நீங்க நம்புறீங்களா?

நான் நம்பவில்லை ஆனால் சொறிலங்காராணுவம் ஏதோ ஓர் இடத்திலஇருந்து அடிவாங்கப்போகுது என்பது உண்மை ஏன் என்றால் அந்தஅளவுக்கு போர்க்களம் விரிந்து கிடக்கு

நம்பினார் கெடுவதில்லை

கெடுவான் கேடு நினைப்பான்

தலைவரை தமிழ்ச்சினிமா ஹீரோ என்றா நினைத்தார்கள். :o

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களம் எப்படி பரந்து கிடக்கின்றது எனில் பத்திரிகையாளர் அமரர் சத்தியமூர்த்தி அவர்கள் கூறியதுபோல் உலகெங்கிலும் பரந்து கிடக்கின்றது. ஒவ்வொரு ஈழத்தமிழனுமே வடுதலைப்போராளிகளாக. இதைவிடப் பரந்துவிரிந்த போர்க்களத்தை எந்தவொரு விடுதலைப்போராட்டமும் கண்டதில்லை. ஆகவே நாம் தலைவரது சிந்தனைக்கேற்றவாறு செயற்படுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்களம் எப்படி பரந்து கிடக்கின்றது எனில் பத்திரிகையாளர் அமரர் சத்தியமூர்த்தி அவர்கள் கூறியதுபோல் உலகெங்கிலும் பரந்து கிடக்கின்றது. ஒவ்வொரு ஈழத்தமிழனுமே வடுதலைப்போராளிகளாக. இதைவிடப் பரந்துவிரிந்த போர்க்களத்தை எந்தவொரு விடுதலைப்போராட்டமும் கண்டதில்லை. ஆகவே நாம் தலைவரது சிந்தனைக்கேற்றவாறு செயற்படுவோம்.

சகோதரா, ஒவ்வொரு தமிழனும் விடுதலைப்போராளிகளாக

பிரபாகரன் தப்பிவிட்டதாக தகவல்:ராணுவம் அதிர்ச்சி!, பிரபாகரன் ஒரு நெருப்பு!

உண்மை அதுவல்ல.....களத்தின் உண்மை தன்மையை நேற்று நடந்த சமரில்தான் சிங்களம் புரிந்து கொண்டுள்ளான்..... நேற்று செப்பலடி வாங்கித் திரும்பியிருக்கிறான் சிங்களம்.....

Edited by mayavan

  • தொடங்கியவர்

போர்க்களம் எப்படி பரந்து கிடக்கின்றது எனில் பத்திரிகையாளர் அமரர் சத்தியமூர்த்தி அவர்கள் கூறியதுபோல் உலகெங்கிலும் பரந்து கிடக்கின்றது. ஒவ்வொரு ஈழத்தமிழனுமே வடுதலைப்போராளிகளாக. இதைவிடப் பரந்துவிரிந்த போர்க்களத்தை எந்தவொரு விடுதலைப்போராட்டமும் கண்டதில்லை. ஆகவே நாம் தலைவரது சிந்தனைக்கேற்றவாறு செயற்படுவோம்.

திருத்தம்: ”ஓவ்வொரு தமிழனும் விடுதலைப் போராளிகளாக” என்று வாசிக்கவும்.

தலைவரை தமிழ்ச்சினிமா ஹீரோ என்றா நினைத்தார்கள். :o

ஸீரோக்கள் அப்படித்தான் நினைப்பார்கள்.

எங்கள் தலைவன்; எப்படிப்பட்டவன் எண்டு இவைக்கு இன்னும்

முழுசா தெரியாது...... அது தான் கொக்கரிக்கினம்........

இவ்வளவு நாளும் இந்த உலகமே நினைச்சது எங்கட பொடியள்

சொறிலங்கா ஆமியோட மட்டும் தான் போர் புரியிற திறன் கொண்டவையள்

எண்டு....... ஆனால் இப்ப ஒண்டை மட்டும் எல்லாரும் நல்லாய் புரிஞ்சு கொண்டிட்டினம்

அது என்ன வெண்டால் சர்வதேசத்தையே எதிர்த்து போராடுற வீரம் எங்கட பொடியளிட்டை இருக்கு எண்டு

(7 சர்வ தேச நாடுகளோடை எங்கட பொடியள் போராடிக் கொண்டிருக்கிறதை யாருமே மறுத்து சொல்லேலாது.......)

விழுந்தவன் மீசையில மண் ஒட்டேல எண்ட கதை தான் சொறிலங்காவின்ர கதை.........

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் எங்கே இருக்கவேண்டும் என்பதை தமிழன்தான் முடிவு செய்யவேண்டும்

இவர்களல்ல....

அந்த முடிவை அவர்களிடம் விடுகின்ற கோழைகளல்ல நாம்.......

  • தொடங்கியவர்

தலைவர் எங்கே இருக்கவேண்டும் என்பதை தமிழன்தான் முடிவு செய்யவேண்டும்

இவர்களல்ல....

அந்த முடிவை அவர்களிடம் விடுகின்ற கோழைகளல்ல நாம்.......

அய்யா தலைவர் நம்முள் நின்றே உலகெங்கும் போராட்டம் நடத்துகிறார்.

கனடா அரசியல் தலைவர்கள் கைவிட்டபின் என்ன செய்வதென்று திகைத்த நமக்கு வழிகாட்டி, மக்கள் போராட்டமாக யூனிவர்சிட்டி அவன்யூவில் நடத்துகின்றாரே!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்போராட்டம் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தொடங்காமல், முடிவில் இருந்து ஆரம்பிக்கப்போகின்றது என்பதுதான் உண்மை.

இராணுவத்திற்கு இப்போது அதிர்ச்சி. அரசாங்கம் இனிமேல் அதிர்ச்சியடையப் போகிறது. உலகமே வரலாறாகப் பதிவுசெய்யும் என யோகி அவர்கள் கூறியுள்ள கருத்து நடக்கும்.

இறைவன்!

இந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு போன 50,000 ஆமியும் யுத்தம் முடிஞ்சுது எண்டு அறிவிச்சாப்பிறகு ஒருவேளை திரும்பி வரேலாமல் போனா? :o

அய்யோ நினைக்கவே பயங்கரமா இருக்கு.... :lol::lol: ஆரை வைச்சு அந்த 50,000 மீட்கிறது? ஆண்டவந்தான் காப்பாற்ற வெணும். :rolleyes:

  • தொடங்கியவர்

ஏன் சூறாவளி அதுல இந்தியன் ஆர்மி எத்தனை?

ஏன்னா ஏற்கனவே சென்னையில மார்ச்சுவரி நிறஞ்சுதுன்னு கேள்வி....வேற எடம் பாக்கோனுமில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் தீர்க்கதரிசனம் நிறைந்தவர் என்பது வெறும் வார்த்தை இல்லை. உண்மையும் கூட..

எல்லோரும் கேள்விப்படுவதை விட செய்திகளில் பார்ப்பதை விட சமர்க்களங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

சில செய்திகள் வெளிவருவதை விட பகிரங்கப் படுத்தப் படாமலே இருப்பது தான் போராட்டத்தின் வெற்றிக்கு வழி சமைக்கும்.

பகிரங்கப் படுத்தப்படாத காணொளிகள் சிலவற்றை நான் பார்க்க நேர்ந்த்த போது வன்னி சமர்க்களத்தின் வீரியம் புரிந்தது.

பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தின் 'மீட்கப் பட்ட பகுதி' MAP ஒரு கண் கட்டு வித்தை,.

எமது பணி சர்வதேசத்தை நம் பக்கம் திருப்புவது.

தலைவர் பணி தாயகம் மீட்டுக் கொடுப்பது

  • தொடங்கியவர்

தலைவர் தீர்க்கதரிசனம் நிறைந்தவர் என்பது வெறும் வார்த்தை இல்லை. உண்மையும் கூட..

எல்லோரும் கேள்விப்படுவதை விட செய்திகளில் பார்ப்பதை விட சமர்க்களங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

சில செய்திகள் வெளிவருவதை விட பகிரங்கப் படுத்தப் படாமலே இருப்பது தான் போராட்டத்தின் வெற்றிக்கு வழி சமைக்கும்.

பகிரங்கப் படுத்தப்படாத காணொளிகள் சிலவற்றை நான் பார்க்க நேர்ந்த்த போது வன்னி சமர்க்களத்தின் வீரியம் புரிந்தது.

பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தின் 'மீட்கப் பட்ட பகுதி' MAP ஒரு கண் கட்டு வித்தை,.

எமது பணி சர்வதேசத்தை நம் பக்கம் திருப்புவது.

தலைவர் பணி தாயகம் மீட்டுக் கொடுப்பது

நிச்சயம் செய்வோம் அது நமது கடமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.