Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிக் சொல்கைமின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வுத்திட்டமாகவுமென நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

“இலங்கைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வுத்திட்டமாக சமஷ்டி முறமையை முன்வைக்கலாம். கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் இந்தத் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்வுமுறை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களின் பெரும்பாலான மக்களும் சர்வதேச சமூகமும் அங்கீகரித்தன. எனவே, சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது” என எரிக் சொல்ஹெய்ம் அல்ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார்.

சமஷ்டிமுறையானது ஐக்கிய இலங்கைக்குள் இடம்பெறவேண்டும் என்பதே சர்வதேசத்தின் விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், அதனையே சர்வதேசம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இலங்கையில் தனியான தமிழ் ஆட்சியொன்று உருவாவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லையெனவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாகத் தடுத்துவைத்துள்ளார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், பொதுமக்களைச் சுதந்திரமாக வெளியேற விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேநேரம், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற உறுதிமொழிக்கமைய அரசாங்கமும் தாக்குதல்களை நடத்தக்கூடாது என எரிக்சொல்ஹெய்ம் வலியுறுத்தியிருந்தார்.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி அப்போதே சந்தேகம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமஷ்டி =?? equal rights?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மக்களைத் தடுத்து வைத்ததாகக் குறிப்பிடும் சூல்கைமுக்கு சிங்கள அரசு அப்பாவி மக்களுக்கெதிராக கனரக ஆயதங்களைப் பயன்படுத்துவதும் களத்தில் நிற்கும் இந்திய கூலிப்படையுடன் சேர்ந்து இரசாயன மற்றும் கொத்தணிக் குண்டுகளை ஏவுவதும் பற்றி எதுவும் தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

child soldiers என்று பறை தட்டும் உலகத்திற்கே திகிலாய் இல்லையா - ரெண்டு வருடமாய் மல்லு கட்டி கன ரக ஆயுதங்களுடன் போராடி, உணவு தடை, மருந்து பொருள் தடை, கொத்த்து குண்டு, கெமிக்கல் குண்டு எண்டு போட்டு தள்ளினாலும் - இன்னும் விழாமல் எதிர் கொண்டு பதிலடி கொடுப்பது இவர்கள் யாரை child soldiers

என்று சொன்னார்களோ அவர்கள் தான் என்று?!

ஒன்று தங்கள் கருத்தை மாற்றி கொள்ள வேண்டும், இல்லை என்றால் விளங்காத வினை ஒன்று என்று பின் வாங்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே பாசையில் ஏதாவது சொல்லணும்போல இருக்கு..

இருந்தாலும்......

நமக்குத்தானே இந்த .... தேவை

என்பதால்............???

  • கருத்துக்கள உறவுகள்

சர்ரதேசம் விரும்பவில்லை என்று சொல்லுவதை தமிழீழமக்களும் விரும்பவில்லை.தமிழீழமக்களின

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் என்றால்...??? சர்வதேசத்தில் நீங்கள் வாக்கெடுப்பு நடத்தீனீர்களா? நாலு கஜவர்கள் கூடி கதைத்து விட்டு உங்களுக்க எது லாபம் என கண்டுபிடிப்பது எப்படி சர்வதேசத்தின் விருப்பாகும்?

என்ன எரிக் அண்ணே மாற்றி மாற்றி பேசுறீங்களே? நடுநிலமை என்று வந்துவிட்டால். மத்தியஸ்தம் மட்டும் பார்த்தால் போதுமே? நீங்கள் இப்போது படிதாண்டுவது இந்திய பத்தினிகளுடன் சாலபிக்கும் ஆசையால்தானே? ஆசை யாரை விட்டது. அது போல் ஈழ ஆசையும் எம்மை விடுவதாய் இல்லையே?

இவர்களை சமாதான தூதுவர்கள் என்று நம்பி உள்ளே விட்டதே தவறாகிப் போய்விட்டது. காற்றடிக்கும் திசையில் சுழன்றடிக்கும தூசுகள்.

ஜானா

வெடிமருந்தை கண்டுபிடித்து .அதை சமாதானத்திற்க்கு பாவியுங்கோ என்று ஆன்டுதோரும�

�� நோபல் பரிசுகொடுக்கும் உத்தமர்கள்...

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

வெடிமருந்தை கண்டுபிடித்து .அதை சமாதானத்திற்க்கு பாவியுங்கோ என்று ஆன்டுதோரும�

�� நோபல் பரிசுகொடுக்கும் உத்தமர்கள்...

கிணறு வெட்ட டைனமைட்டுடன் பூதம் புறப்பட்ட கதைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.