Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா நீ வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா நீ வேண்டும்

கூட்டுக்குள் புறா போல் நானும் வாழ்கின்றேன்

போகும் இடம் தெரியவில்லை போகவும் யாரும் விடவும் இல்லை

அம்மா என்றழைக்க அம்மா இங்கில்லை

உறவு என்று எனை அணைக்க எனக்கு யாருமில்லை

அரிச்சுவடி படிக்கவில்லை அம்மா நடை பழக்கவில்லை

அம்மா முகம் பார்த்து தூங்க ஒரு புகைப்படம் கூட எனக்கில்லை

என்னை ஏனம்மா தனியாக விட்டுசென்றாய்

நான் உன்னை அம்மா என்று அழைக்கமுன்பே அதை கேளாமல் சென்றாயே

உன்னைத்தான் நான் நம்பிவந்தேன் அம்மாவே

என்னை எங்கே விட்டுசென்றாய் அம்மாவே

அன்னம் உண்ண பழக முன் கஞ்சி குடிக்கின்றேன் அம்மா

எனக்கு ஒரு வாய் சோறூட்ட நீ எப்பொழுது வருவாய் அம்மா

தரையில் உறங்குகிறேன் அம்மா உன்மடி உறங்க நீ வருவாயா

அப்பா எங்கே அம்மா உன்னோடு கூட்டி சென்றாயா

என் அக்கா அண்ணனையாவது நீ ஏனம்மா என்னோடுவிடவில்லை

என்னைபோன்ற பல பேர் அம்மாவை தேடுகின்றனர் அம்மா

எல்லா அம்மாவையும் கூட்டிவா அம்மா

ஒரு முத்தம் தந்தாலே சிரித்திருப்பாயே அம்மா உனக்கு

நூறு முத்தம் தாரன் ஒருமுறை இங்கே வந்துவிடு

அப்புசாமிட்டா கேட்டா எல்லாம் தரும் என்று சொன்னாயே

உன்னை தான் கேட்கின்றேன் தரவில்லையே அம்மா

அம்மா நான் இப்ப அழுவதில்லை கண்ணீர் வராதாம் அம்மா

நான் சிரிப்பதும் இல்லை அதுதான் நீ இல்லையே அம்மா

அப்புசாமி என்ர அம்மாவை தந்துவிடு -இல்லை

என்னை அங்கே அழைத்து செல்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு.

அம்மாவின் ஏக்கம் எனக்கும் உண்டு.

அம்மாவை நினைத்தால் கண் கலங்குதே

என் சுப்பண்ணை எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும்

ஒரு உறவு ஆனால் அற்புதமான முற்று முழுதிலும் உண்மையானதுமான

யாராலும் மறுக்க முடியாததுமான ஒரு உணர்வுக் கவிதையை தந்து

எங்களை அழ வைத்துவிட்டார்..............

கல்லையும் கலங்க வைத்த கவிதை.....!!!!!!

நன்றிகள் பல சுப்பண்ணை!!!!!!!!! வாழ்த்துக்களும்!!!!!!! பாராட்டுக்களும்!!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை உங்கள் கவிதை கண்களில் நீரை வரவழைத்து விட்டது .

Aftermath_IDP_TamilNational_04.jpg

படம் ; தேசம் .

நன்றி உங்கள் கவிதைக்கு........அப்பிஞ்சுக் குழந்தைகளின் குமுறல்கள் இக்கவிதையை படிப்போரின் கண்களை குளமாக்கபோவது நிஜம்.

நன்றி சுப்பண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவு என்று எனை அணைக்க எனக்கு யாருமில்லை

அரிச்சுவடி படிக்கவில்லை அம்மா நடை பழக்கவில்லை

அம்மா முகம் பார்த்து தூங்க ஒரு புகைப்படம் கூட எனக்கில்லை

என்னை ஏனம்மா தனியாக விட்டுசென்றாய்

நான் உன்னை அம்மா என்று அழைக்கமுன்பே அதை கேளாமல் சென்றாயே

................................................................................

....................................................

நன்றி சுப்ஸ்.

இப்படி எத்தனை ஆயிரம் குழந்தைகள் அம்மா இன்றி

................................................................................

...

அரைவயிறுக்கு கஞ்சியுடன் அம்மா கேட்டேன்...

அநாதை என்று பட்டம் தந்தது பேரினவாதம்

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கவைக்கும் சுப்பண்ணாவை ......அழவைத்த து காலமா ? ஈழமண்ணின் சோகமா? தமிழ் ஈழ உணர்வில்

எழுந்த வேகமா ?...........நெஞ்சிலே உள்ள பாரமா? இக்குரல்கள் யார் காதில் கேட்கும் ? எப்போது விடியும் ?

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணா

இன்றைய அவல வாழ்வின் உண்மைத் தன்மையை அப்படியே சொல்லி

கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதை அழகு.

அம்மாவின் ஏக்கம் எனக்கும் உண்டு.

அம்மாவை நினைத்தால் கண் கலங்குதே

நன்றி கறுப்பி,அம்மா என்ற உறவுக்கு நிகர் ஏதும் இல்லை அதுவும் அம்மா பாசம் கிடைக்கவேண்டிய வயதில் கிடைக்காமல் போனால் அதைவிட கொடுமை வேறு எதுவும் இல்லை :lol: .

என் சுப்பண்ணை எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும்

ஒரு உறவு ஆனால் அற்புதமான முற்று முழுதிலும் உண்மையானதுமான

யாராலும் மறுக்க முடியாததுமான ஒரு உணர்வுக் கவிதையை தந்து

எங்களை அழ வைத்துவிட்டார்..............

கல்லையும் கலங்க வைத்த கவிதை.....!!!!!!

நன்றிகள் பல சுப்பண்ணை!!!!!!!!! வாழ்த்துக்களும்!!!!!!! பாராட்டுக்களும்!!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

நன்றி தமிழ்மாறன், இப்பொழுது சிரிப்பும் இல்லை அழுகையும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை உங்கள் கவிதை கண்களில் நீரை வரவழைத்து விட்டது .

Aftermath_IDP_TamilNational_04.jpg

படம் ; தேசம் .

மச்சான் இந்த கவிதை எழுதும்போதே கண்ணீருடன் தான் எழுதினேன்

நன்றி உங்கள் கவிதைக்கு........அப்பிஞ்சுக் குழந்தைகளின் குமுறல்கள் இக்கவிதையை படிப்போரின் கண்களை குளமாக்கபோவது நிஜம்.

நன்றி சுப்பண்ணை.

நன்றி ஈழமகள்,இந்த யாருமற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படி வளமாக்கலாம் என்பது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருதமிழரும் தனித்து சிந்திக்கவேண்டியது

உறவு என்று எனை அணைக்க எனக்கு யாருமில்லை

அரிச்சுவடி படிக்கவில்லை அம்மா நடை பழக்கவில்லை

அம்மா முகம் பார்த்து தூங்க ஒரு புகைப்படம் கூட எனக்கில்லை

என்னை ஏனம்மா தனியாக விட்டுசென்றாய்

நான் உன்னை அம்மா என்று அழைக்கமுன்பே அதை கேளாமல் சென்றாயே

................................................................................

....................................................

நன்றி சுப்ஸ்.

இப்படி எத்தனை ஆயிரம் குழந்தைகள் அம்மா இன்றி

................................................................................

...

அரைவயிறுக்கு கஞ்சியுடன் அம்மா கேட்டேன்...

அநாதை என்று பட்டம் தந்தது பேரினவாதம்

நன்றி ஜீவா,இந்த யாருமற்ற குழந்தைகளுக்கு யாருமே இல்லையே என்ற எண்ணத்தை தோன்றவிடாமல் நாம் இருக்கின்றோம் என்று காட்டவேண்டும்,இது எல்லா தமிழ்மக்களினதும் கடமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்கவைக்கும் சுப்பண்ணாவை ......அழவைத்த து காலமா ? ஈழமண்ணின் சோகமா? தமிழ் ஈழ உணர்வில்

எழுந்த வேகமா ?...........நெஞ்சிலே உள்ள பாரமா? இக்குரல்கள் யார் காதில் கேட்கும் ? எப்போது விடியும் ?

அழவைத்துக்கொண்டிருப்பது காலம் எமது விதி எமது மண்ணில் நடந்த மிகப்பெரும் சோகம் இவற்றினால் நெஞ்சில் வந்த பாரமுமே. இந்த குழந்தைகளின் கதறல்கள் எல்லா தமிழ்மக்களின் காதுகளிலும் கேட்கவேண்டும் அவர்கள் எப்பொழுது இந்த குழந்தைகளையும் தமது குழந்தைகளாக நினைக்கிறார்களோ அப்பொழுது விடியும்.

சுப்பண்ணா

இன்றைய அவல வாழ்வின் உண்மைத் தன்மையை அப்படியே சொல்லி

கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்

எம் இனத்தை நாமே காக்கவேண்டும் இது காலத்தின் தேவை

தம் பெற்றோர்களையும் சொந்தங்களையும் இழந்த சிறார்கள் உளரீதியா எவ்வளவு தூரம் பாதிக்கப் பட்டுள்ளர்கள்... :lol: இன்றைய தமிழ் சிறார்களின் பிரதிபலிப்பை உங்கள் கவிதை மனக் கண்ண முன் படமாகிறது. கண்களில் கண்ணீர் ஊற்றேடுத்தலும் அது வழிந்தொடமல் காய்ந்து போகிறதே... :(

சுப்பு! வரிகளில் உணர்வுகளின் அழுத்தம் தாராளமாகத் தெரிகின்றன. உங்களைப் போல,என்னைப் போலவே பெரும்பாலான இதயங்கள் மனத்துக்குள்ளேயே வெந்து புலம்புகின்றார்கள்.

ஆறுதல் தேட வார்த்தைகளைத் தேடியபோது...

உங்களின் கவிதை கண்களில் பட்டது.

நன்றிகளும் , பாராட்டுக்களும்.....

சுப்பு அண்ணா உங்கள் கவிதை படித்து கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்... உண்மை நிலமை அப்படியே கவிதை தந்து இருக்கிறிர்கள்... நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம் பெற்றோர்களையும் சொந்தங்களையும் இழந்த சிறார்கள் உளரீதியா எவ்வளவு தூரம் பாதிக்கப் பட்டுள்ளர்கள்... :( இன்றைய தமிழ் சிறார்களின் பிரதிபலிப்பை உங்கள் கவிதை மனக் கண்ண முன் படமாகிறது. கண்களில் கண்ணீர் ஊற்றேடுத்தலும் அது வழிந்தொடமல் காய்ந்து போகிறதே... :(

நிச்சயமாக இந்தநிலை தமிழர்கள் அனைவருக்கும் மிகப்பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது எம் அடுத்த தலைமுறையை காப்பாற்ற நாம் அனைவரும் கருத்தொன்றுபட்டு எமது கடமையை சரிவர செய்யவேண்டும்

சுப்பு! வரிகளில் உணர்வுகளின் அழுத்தம் தாராளமாகத் தெரிகின்றன. உங்களைப் போல,என்னைப் போலவே பெரும்பாலான இதயங்கள் மனத்துக்குள்ளேயே வெந்து புலம்புகின்றார்கள்.

ஆறுதல் தேட வார்த்தைகளைத் தேடியபோது...

உங்களின் கவிதை கண்களில் பட்டது.

நன்றிகளும் , பாராட்டுக்களும்.....

நன்றி பருத்தி.மனதில் எழும் கவலையை இப்படி எழுதியாவது தற்காலிகமாக ஆறுதல்பட முடிகிறது ஆனால் எம்மால் எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் இருக்கின்றது

சுப்பு அண்ணா உங்கள் கவிதை படித்து கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்... உண்மை நிலமை அப்படியே கவிதை தந்து இருக்கிறிர்கள்... நன்றி

நன்றி சுஜி,தமிழன் நிலையை எழுதும் போது பேனாக்கள் கூட கண்ணீர் சிந்தும் காலம் இது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.