Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிர்ப்பக்கம்

Featured Replies

இரண்டு நண்பர்கள் ஒரே ஊருக்குப் போவதற்காக ஒரு பேருந்தில் ஏறினார்கள். அவரவர்க்கு வேண்டிய பயணச் சீட்டை அவரவர்களே எடுத்தக் கொள்வது வழக்கம். எனவே முதலாமவர் பஸ் நடத்துனரிடம் (கொண்டக்டரிடம்) இரண்டு ரூபாய் தந்தார். நடத்துனரும் இரண்டு ரூபாய்க்கான பயணச்சீட்டு ஒன்றைத் தந்தார். இரண்டாமவரும் நடத்துனரிடம் இரண்டு ரூபாய் தந்தார், ஆனால் நடத்துனரோ அவரைப் பார்த்து எந்த ஊருக்குச் செல்கின்றீர்கள் எனக் கேட்டார். நடத்துனர் ஏன் இரண்டாமவரைப் மட்டும் பார்த்து எந்த ஊர் செல்கின்றீர்கள் என்று கேட்டார்?

  • Replies 305
  • Views 31.6k
  • Created
  • Last Reply

முதலாமவர் சரியாக இரண்டு உரூபாய் வரக்கூடியவாறு சில்லறையாகக் கொடுத்திருப்பார், இரண்டாமவர் இரண்டு உரூபாய் நாணயம் கொடுத்திருப்பார்.

முதலாமவர் சரியாக இரண்டு உரூபாய் வரக்கூடியவாறு சில்லறையாகக் கொடுத்திருப்பார், இரண்டாமவர் இரண்டு உரூபாய் நாணயம் கொடுத்திருப்பார்.

புதிரைச் சரியாக விடுவித்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

ஒரு வள்ளத்தில் 20 தேசிக்காய்களும், 20 தேங்காய்களும் ஒருவனும் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஒரு தேசிக்காய் கூடுதலாக ஏற்றினால் கூட வள்ளம் நீரில் மூழ்கிவிடும். வள்ளத்தில் ஏறி சற்றுத் து}ரம் போன பின்னர் தான் ஒரு தேசிக்காய் கூடுதலாக இருப்பது தெரிய வந்தது. அதனை எறிந்து விட அவனுக்கு மனம் வரவில்லை. ஆனால் வள்ளத்தை நீரில் மூழ்காமல் எப்படியோ கரையைச் சேர்ந்து விட்டான். இது எப்படிச் சாத்தியமாயிற்று?

தேசிக்காயை ஏறிய மனம் இல்லையென்றால் தேங்காயில் ஒன்றை ஏறிய மனம் இருக்கோ அவருக்கு?

தேசிக்காயை ஏறிய மனம் இல்லையென்றால் தேங்காயில் ஒன்றை ஏறிய மனம் இருக்கோ அவருக்கு?

வள்ளத்தில் ஏற்றிய அத்தனை பொருட்களுடனும் அவருடனும் வள்ளம் அக்கரை போய்ச் சேருகின்றது.

வள்ளத்தில் ஏற்றிய அத்தனை பொருட்களுடனும் அவருடனும் வள்ளம் அக்கரை போய்ச் சேருகின்றது.

அப்ப அந்த தேசிக்காயை வெட்டிக் குடிச்சுட்டாரோ :roll:

அப்படி எதுவும் இல்லை, எவ்வித சேதாரமும் இன்றி அனைத்துப் பொருட்களும் அவரும் அக்கரை போய்ச் சேர்கின்றன.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று தேசிக்காய எடுத்து மாறிமாறி மேல எறிஞ்சு விளையாடி இருப்பார். அப்ப எந்த நேரத்திலும் ஒரு தேசிக்காய் வள்ளத்திற்கு மேலயே நிக்கும். :roll:

இதுவும் பிழை எண்டா ஒருக்கா பதிலச் சொல்லிட்டுப் போயிடுங்க. ஒரு கேள்வி தொக்கிநின்று ஒரு மாதமாகப் போகுது :x

பிறேம் சொல்வதுதான் சரியாக இருக்குமோ :wink: :P :arrow:

மூன்று தேசிக்காய எடுத்து மாறிமாறி மேல எறிஞ்சு விளையாடி இருப்பார். அப்ப எந்த நேரத்திலும் ஒரு தேசிக்காய் வள்ளத்திற்கு மேலயே நிக்கும். :roll:

இதுவும் பிழை எண்டா ஒருக்கா பதிலச் சொல்லிட்டுப் போயிடுங்க. ஒரு கேள்வி தொக்கிநின்று ஒரு மாதமாகப் போகுது :x

நிச்சயமாகச் சரியான பதில். பாராட்டுக்கள்.

ஒரு சாப்பாட்டு மேசையில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். P என்பவருக்கு வலது பக்கத்திலும் A என்பவருக்கு இடது பக்கத்திலும் அமர்ந்திருக்கும் R என்பவருக்கு நேர் எதிரே S என்பவர் அமர்ந்துள்ளார். A என்பவர் D என்பவருக்கு இடது பக்கம் அமர்ந்துள்ளார். D என்பவர் தனது ஆசனத்தை Y என்பவருடனும், P என்பவர் R என்பவருடனும் மாற்றிக் கொண்டால் D என்பவருக்கு இடது பக்கமாக அமர்ந்திருப்பவர் யார்?

ஒரு சாப்பாட்டு மேசையில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். P என்பவருக்கு வலது பக்கத்திலும் A என்பவருக்கு இடது பக்கத்திலும் அமர்ந்திருக்கும் R என்பவருக்கு நேர் எதிரே S என்பவர் அமர்ந்துள்ளார். A என்பவர் D என்பவருக்கு இடது பக்கம் அமர்ந்துள்ளார். D என்பவர் தனது ஆசனத்தை Y என்பவருடனும்' date=' P என்பவர் R என்பவருடனும் மாற்றிக் கொண்டால் D என்பவருக்கு இடது பக்கமாக அமர்ந்திருப்பவர் யார்?[/color']

கேழ்வியில் சிறு தவறு உள்ளது போல் தெரிகிறது.

ஒரு சாப்பாட்டு மேசையில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். P என்பவருக்கு வலது பக்கத்திலும் A என்பவருக்கு இடது பக்கத்திலும் அமர்ந்திருக்கும் R என்பவருக்கு நேர் எதிரே S என்பவர் அமர்ந்துள்ளார். A என்பவர் D என்பவருக்கு இடது பக்கம் அமர்ந்துள்ளார். D என்பவர் தனது ஆசனத்தை Y என்பவருடனும்' date=' P என்பவர் R என்பவருடனும் மாற்றிக் கொண்டால் D என்பவருக்கு இடது பக்கமாக அமர்ந்திருப்பவர் யார்?[/color']

முதல் Y எங்கை இருந்தவர்? :?: :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாப்பாட்டு மேசையில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். P என்பவருக்கு வலது பக்கத்திலும் A என்பவருக்கு இடது பக்கத்திலும் அமர்ந்திருக்கும் R என்பவருக்கு நேர் எதிரே S என்பவர் அமர்ந்துள்ளார். A என்பவர் D என்பவருக்கு இடது பக்கம் அமர்ந்துள்ளார். D என்பவர் தனது ஆசனத்தை Y என்பவருடனும்' date=' P என்பவர் R என்பவருடனும் மாற்றிக் கொண்டால் D என்பவருக்கு இடது பக்கமாக அமர்ந்திருப்பவர் யார்?[/color']

:arrow: P ??

  • தொடங்கியவர்

D என்பவருக்கு இடது பக்கமாக அமர்ந்திருப்பவர் யார்?

S :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

S :?:

ஆம் நானும் S என்று கூறுகிறேன்

unbenanntvx7.jpg

சிறீ கூரியதைப் போல், நான் நினைக்கின்றேன் இக் கேள்வியில் முழு விபரமும் இல்லை என்று...

புயலே புயலே... எங்களை குழப்பும் புயலே... வந்து விளக்கம் தாருங்கோ :)

S :?:

சரியான பதில் பாராட்டுக்கள்.

ஆம் நானும் S என்று கூறுகிறேன்

unbenanntvx7.jpg

விளக்கத்துடன் பதில் தந்துள்ள சுரேனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்.

சின்னப்பு காச்சலாக இருந்த சின்னாச்சியை டொக்டருட்டை கூட்டிப் போனார். அப்ப டொக்டர் சின்னப்புவிடம் அவர்கள் இருவரின் வயதையும் கேட்டார்?

"இப்பொழுது என் மனைவியின் வயதோடு, அவள் வயதில் கால்பாகத்தைக் கூட்டினால் என் வயது என்ன என்று நீங்கள் கண்டுகொள்ளலாம். 16 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு திருமணமாகும் போது என் மனைவியின் வயதோடு அவள் வௌஅதில் பாதியை கூட்டினால் என் வயது வந்தது" என்று புதிர் போட்டார். என்ன சின்னப்பு டொக்டரிடமுமா புதிர் கணக்கு?? என்று சிரித்தார்

அருகில் நின்ற நேர்ஸ் இருவர் வயதையும் சின்னா போட்ட புதிரிலிருந்து கண்டுபிடித்து டாக்டரிடம் கூறிவிட்டாள். சரி எங்க நீங்கள் கூறுங்கள் பார்ப்பம் அவர்கள் இருவரது வயதும் என்ன என்று/????

சின்னப்பு = 40

சின்னாச்சி = 32

சின்னப்பு = 40

சின்னாச்சி = 32

ம்ம் விடை சரி வாழ்த்துக்கள். விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும் :lol:

விடை சொல்லப்போய் வில்லங்கத்துல மாட்டிவிட்டுடீங்கள். விளங்கப்படுத்துறது தானே பெரிய தொல்லை. இருந்தாலும் விளங்கப்படுத்த முயற்சிக்கிறேன்.

இப்பொழுது சின்னாச்சிக்கு வயது x என்று வைப்போம்

அப்ப சின்னப்புவுக்கு வயது x + x/4

சின்னாச்சிக்கு 16 வருடங்களுக்கு முன்னுள்ள வயது x-16

அப்பொழுது சின்னப்புவுக்குள்ள வயது x+x/4-16

x + x/4 - 16 = (x-16) + (x-16)/2

4x + x - 64 = 4x - 64 + 2x -32

5x - 64 = 6x - 96

x = 32

எனவே சின்னாச்சியின் வயது = 32

சின்னப்புவின் வயது = 32 + (32ஃ4) = 40

இதிலிருந்து என்ன தெரிகிறது. சின்னப்பு திருமணம் பண்ணுபோது அவருடைய மனைவிக்கு வயது 16. :!:

விளக்கத்துக்கு நன்றி சுஜீந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.