Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வதை முகாமில் ஓர் ஆச்சியின் ஒப்பாரி.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வதை முகாமில் ஓர் ஆச்சியின் ஒப்பாரி

கவிதை - இளங்கவி

ஐந்து சந்தி வீதியிலே

ஆளுயரப் பனையின் கீழ்

பனம்பழம் எடுத்து வந்து

பாதி தந்த மகராசா...!

என்னை பாதியாய் தவிக்கவிட்டு

பாடையிலே சென்றீரோ....

பச்சைப் புல்வெலியில்

பாதணியும் போடாமல்

உன் பங்குக்கும் புல்லுவெட்டி

என் பசுவின் பசிதீர்த்த மகராசா...!

பட்டினியால் உன் உயிரை

பறித்து தான் சென்றனரோ...!

புலியின் ஆட்சியிலே

நாம் பசியை கண்டதில்லை...

கிளி நொச்சி விட்டோடி; கடைசியிலே

வதை முகாமுக்குள் வந்திருந்தோம்....

இங்க என் ராசா நீ

பசிதாங்க மாட்டயென்று

என் பாதிக்கஞ்சி தந்திருந்தேன்

இங்கே பிணிதாங்க முடியாமல்

என்னை பிரிந்துதான் சென்றீரோ...!

பாவியவன் குண்டு போட்ட; நாமும்

படுகையிலே எழுந்து ஓட...

வடக்கிலே வசந்தம் தர

வாவென்று இவன் அழைத்தான்.....

வந்திங்கு பார்த்தால் தான்

வயிற்றுக்கு சோறு இல்லை....

தவிச்ச வாய்க்கு தண்ணியில்லை....

கழிவறையில் இருந்து விட்டு

கழுவக்கூட நீரில்லை......

சுத்தத்திலே நீ சொக்கத்தங்கம்...

சோத்துக்குமா நம் ஊரில் பஞ்சம்...

அத்தனையும் விட்டுவிட்டு

அடிமையாய் வந்திருந்தோம்.....

ஐயா நீ போய்விட்டாய்

மெய்யா நான் வாழமாட்டன்.....

பொய்யாய் நான் சொல்லவில்லை

போய்ப்பாரு நான் அங்க நிற்பன்....

நம் மண்ணிலே நீ செத்திருந்தால்

மணவறை போல் பாடைகட்டி

மகராசனாய் அனுப்பியிருப்போம்.....

முகாமிலே செத்ததனால்

உன் முகம் கூட காட்டவில்லை

முழு பிணமாய் புதைத்துவிட்டார்..

இஞ்ச குஞ்சு குரும்பானெல்லாம்

கொலை களத்துக்கு அனுப்புகிறான்....

கொலைகாரப் பாதகரால்

குமரெல்லாம் நடுங்குறாகள்.....

இந்தக் கொடுமையை பார்த்துத்தான்

என் ஐயா நீ போனாயோ.....

உன் செல்லம்மா வந்திடுவாள்

நீ போய்வா என் ராசாவே...!

உலகத்து அரசரெல்லாம்

ஓடிவாங்கோ எம்மை பாக்க.....

இந்த சிறுசுகளின் நிலமைக்கேனும்

சுணங்காதீர் அவரின் உயிரைக்காக்க......

பட்டமரம் எங்களைத் தான்

பாக்காட்டியும் விட்டிடுங்கோ; பருத்திப்

பஞ்சாய் பறக்கும் அவருயிரை

பாதுகாக்க ஓடி வாங்கோ......

இந்தப் பட்டாளத்து காறனின்ர

படுகொலையை நிறுத்திடுங்கோ; அல்லது

நாங்கள் பாதியாய் சாக முதல்

எங்களை முழுசாக கொண்டிடுங்கோ.......

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஓர் சிறப்பான பதிவு - வாழ்த்துக்கள் உங்கள் எழுத்திற்கு.

எனக்கு மிகவும் வேண்டப்பட்ட முன்னாள் மரபு கவிஞர் சொல்லியது ஒன்று ஞாபகம் வருகிறது- "புதுக்கவிதை என்று எழுத முயலும் இளைஞர் எல்லாம் இப்ப காட்டு தறியை முறித்து போட்டாற்போல எழுதி விட்டு கவிதை" என்கிறார்கள் என்று :rolleyes: ! அன்றில் இருந்து கவிதைகளை வாசிக்கும் போது - நானும் "இது கவிதை", "இது வெட்டி போட்ட விறகு" என்று தான் என்னை அறியாமல் மதிப்பிடுவேன்.

தங்கள் எழுத்து "கவிதை"!!! :rolleyes:

வதை முகாமில் ஓர் ஆச்சியின் ஒப்பாரி

கவிதை - இளங்கவி

...

நம் மண்ணிலே நீ செத்திருந்தால்

மணவறை போல் பாடைகட்டி

மகராசனாய் அனுப்பியிருப்போம்.....

முகாமிலே செத்ததனால்

உன் முகம் கூட காட்டவில்லை

முழு பிணமாய் புதைத்துவிட்டார்..

...

பட்டமரம் எங்களைத் தான்

பாக்காட்டியும் விட்டிடுங்கோ; பருத்திப்

பஞ்சாய் பறக்கும் அவருயிரை

பாதுகாக்க ஓடி வாங்கோ......

இந்தப் பட்டாளத்து காறனின்ர

படுகொலையை நிறுத்திடுங்கோ; அல்லது

நாங்கள் பாதியாய் சாக முதல்

எங்களை முழுசாக கொண்டிடுங்கோ.......

இளங்கவி

எம்மணில் ஒப்பாரியாக வெளிவரும் உள்ளக் குமுறல்களை எழுத்தில் பதித்திருக்கிறீர்கள்... ஒரு ஆச்சியின் ஒப்பாரி உண்மையில் காதில் கேட்பதுபோல உள்ளது...

தொடரட்டும் ஆக்கங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

முதலில் நன்றிகள் என் வரிகளை கவிதை என்று சொன்னதற்கு.....

புதுக்கவிதையோ மரபுக்கவிதையோ எதுவும் மக்கள் மனதில் பதியக்கூடியதாக எழுதப் படவேண்டும், எனவே நான் கவிதை எழுதும் போது மிக அவதானமாக இருப்பேன், முக்கியமாக இலகு தமிழில் எழுதினால் அது எல்லோரையும் கவரும்.

நன்றி உங்கள் கருத்துக்கு......

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி கவி எங்கள் நாட்டு ஒப்பாரியை நினைபடுத்தியமைக்கு.மேலத்தேய நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள் ஒப்பாரியா? அப்பிடி எண்டா என்ன? வென்றுதான் தற்சமயம் கேட்பார்கள்.நான் கடந்தவருடம் கேட்ட ஒப்பாரி இது.

என்ட ராசா பென்சன் எடுத்து தருவாய்-என்று

நான் காசுகணக்கு பார்த்தண்டு இருக்கையிலே......

அதற்கு இடையில் போய்விட்டாயா?

பிரியமுடன்:யாயினி கனா.

இளங்கவி மிக எளிமையான சொற்கள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்கு

மிக்க நன்றிகள், நீங்கள் என் கவிதையின் ரசிகராக இருந்து அதில் நான் சொல்லும் விடயங்களையும் உள்வாங்கிக் கொண்டு மேலும் எழுதுவதற்கு ஆதரவும் தந்துகொண்டிருப்பதற்கு.....

எங்களது கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் அதே நேரம் கடந்த கால / நிகழ்கால சோகங்களையும் தமிழர் நிலமைகலையும் என் வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...

மேலத்தேய நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள் ஒப்பாரியா? அப்பிடி எண்டா என்ன? வென்றுதான் தற்சமயம் கேட்பார்கள்.நான் கடந்தவருடம் கேட்ட ஒப்பாரி இது.

என்ட ராசா பென்சன் எடுத்து தருவாய்-என்று

நான் காசுகணக்கு பார்த்தண்டு இருக்கையிலே......

அதற்கு இடையில் போய்விட்டாயா?

ஆம் நீங்கள் சொன்னதுபோலவும் இருக்கிறார்கள் தான்......

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளங்கவி .............ஆச்சியின் புலம்பல் அவர்கள் வாழ்ந்த வாழ்வின் ஆழத்தில் இருந்து எழும் வலி .......விவாக ரத்து ....

பிரிவு என்று வாழும் காலத்தில் .........உண்மையான் வாழ்வின் அர்த்தம் அக்திநிலையிலும் உணரப்படுகிறது .

பதிவுக்கு நன்றி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sitpi

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, எளிய நடையில் எழுதுவதால் தான் என் கவிதையை பலரும் ரசிக்கிரார்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் நன்றிகள்.....

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்து அரசரெல்லாம்

ஓடிவாங்கோ எம்மை பாக்க.....

இந்த சிறுசுகளின் நிலமைக்கேனும்

சுணங்காதீர் அவரின் உயிரைக்காக்க......

பட்டமரம் எங்களைத் தான்

பாக்காட்டியும் விட்டிடுங்கோ; பருத்திப்

பஞ்சாய் பறக்கும் அவருயிரை

பாதுகாக்க ஓடி வாங்கோ......

இந்தப் பட்டாளத்து காறனின்ர

படுகொலையை நிறுத்திடுங்கோ; அல்லது

நாங்கள் பாதியாய் சாக முதல்

எங்களை முழுசாக கொண்டிடுங்கோ.......

கண்டு கொண்டாலும் பாதுகாக்கினம் இல்லையே.

உங்கள் கவிதை வரிகள் அழகு.

வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

இதுதானே எங்கள் கலாச்சாரம், வாயில் பொக்கை விழுந்து, பேச்சும் நின்ற பின்னரும் பிரியாத அன்பு தானே நம் வாழுவு, அந்த வாழ்வெல்லாம் இப்படி சிதைவடைந்து தெருத்தெருவாய் கிடப்பதையிட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

உங்கள் கவிதைவரிகள் அழகு எளிதில் புரிந்து கொள்ளுற மாதிரி இருக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிக்கு

என் கவிதைவரிகளை அழகு என்றதற்கு மிக்க நன்றி......

மீண்டும் அழகு நிறைந்த அற்புத கவியை அள்ளித் தந்த இளங்கவியே

நன்றிகளும் வாழ்த்துக்களும்!!!!!!

அடிக்கடி நான் எழுதுவது...... சுக வாழ்வுக்கள் தங்களை அடிமையாக்கி

விட்ட புலத்து உறவுகளுக்கு உங்கள் கவிதையின் சில வரிகள் புரிய

முடியாமல் இருக்கும்.......

அதில் ஒன்று கழிவறைக்கு போன பின் கழுவ தண்ணி இல்லை எண்டதை

துடைக்க நிற பேப்பர் இல்லை எண்டு மாற்றி எழுதுங்கோ!!!!!!

அப்பதான் இவை கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுவினம்!!!!!!

என்ன தான் ஆயிரம் நாம் கத்திக் கொண்டிருந்தாலும் இந்த சனம்

கோடைகால கொண்டாட்டங்களுக்குள்ள தங்களை தள்ளிப் போட்டுதுகள்..........

இங்க புலத்தில கலாச்சாரம் விலை போய் கொண்டிருப்பதால்

ஆச்சியின் புலம்பல் இவர்களுக்கு மிகவும் சாதாரணமாகவே

இருக்கும்...........!!!!

தமிழன் தலை விதி......................

அன்புடன்

தமிழ்மாறன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜிக்கு

நன்றிகள் தொடர்ந்து என் வரிகளுக்கு ஆதரவு தந்துகொன்டிருப்பதற்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலபல சொற்களின் கோர்வையெல்லாம் கவியென்றாகி

கவிபடிக்கும் ஆசையெல்லாம் வெறும் பகற்கனவாகும் காலமிதென

ஒப்பாரி வைக்கும் எமக்கெல்லாம் ஆச்சியின் ஒப்பாரி அருமருந்தாகும்.

இளங்கவிஞனே நல்ல கவி தந்ததற்கு நன்றிகளுடன்,

அடுத்த கவிதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Edited by naanal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மாறன்

நீங்கள் மேலே குறிப்பிட்ட அத்தனையும் உண்மை, எனக்கு தெரிய இறுதி யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளைகளில் விடுமுறைக்கு சென்றோரும் உண்டு, இது எங்கள் இனத்துக்கு கிடைத்த ஓர் சாபக்கேடு என்றே சொல்லவேண்டும். எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணி, முகாங்களில் வருந்தும் எங்கள் உயிர்களைப்பற்றி எதுவுமே கவலைப்படாமல் அடிமை வாழ்வுக்கு முந்தியடிக்கும் எங்கள் மக்களைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

naanal

மிக்க நன்றி உங்களுக்கு என் கவிதையைப் பாராட்டியதற்கு.....

என் எழுத்துகளில் எங்களது கலாச்சாரம், வாழ்க்கை முறை, எங்கள் வீரம், எங்கள் தனித்துவம் எல்லாம் பிரதிபலிக்க வேண்டுமென்று எழுத தொடங்கியவன் நான், நான் எழுதிக்கொண்டிருக்கும் வரை என்னால் முடிந்தவறை அந்தந்த காலங்களில் வெளிக்கொணர்ந்தபடி இருப்பேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.