Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடம்பெயர்ந்துள்ள மூன்று லட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமானதாக உள்ளது ‐ யாழ் ஆயர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமானதாக உள்ளது எனவும் அவர்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்ணிவெடிகள் அகற்றப்படல், வீடுகள் மீண்டும் மீளமைக்கப்படுதல்,, சீர்குலைந்துள்ள உட்கட்டமைப்பைச் சீர்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தாலும் இடம்பெயர்ந்தோரை தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் காலக்கெடுவை அரசு தள்ளிப்போடுவதற்குரிய காரணம் புரியவில்லை எனவும் ஆயர் கூறியுள்ளார்.

இந்த இடம்பெயர்ந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு அமைத்துள்ள ஆறு முகாம்களில் வாழ்வதாகவும், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இவர்களை, செஞ்சிலுவைச் சங்கம், காரிட்டாஸ், மற்றும் ஐ.நா. மனிதாபிமானப் பணியாளர்கள் மாத்திரமே மிகுந்த சிரமத்துக்கிடையில் சந்திக்க முடிகின்றது என செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....10690&cat=1

இல்லையே எல்லாரும் நல்ல நலமாய் இருக்கிறீனமாமே. அவையள் அடுத்தகட்ட ஐந்தாம் கட்ட ஈழப்போரிற்கு ஆயத்தமாகி வருவதாய் அல்லோ இஞ்ச சனம் எல்லாம் கதைக்கிதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ ஆயர் இவ்வளவு நாளும் என்ன யாழ்ப்பாணத்துக்கு புதிசா வந்த ஏசியில குளிர் குளிச்சிட்டு இருந்தனீங்களோ..??!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக மீறி கிழக்கில் யுத்தம் செய்த போது மெளனமாக இருந்தீர்கள்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி அரசு யுத்தப் பிரகடனம் செய்த போது மெளனமாக இருந்தீர்கள்.

கிளிநொச்சியை விட்டு வன்னியை விட்டு ஐநா உட்பட்ட அமைப்புக்களை வெளியேற்றிய போது மெளனமாக இருந்தீர்கள்.

50,000 மக்களைக் கொல்லும் வரை மெளனமாக இருந்தீர்கள்.

இவ்வளவு போராளிகளை அழிக்கும் வரை மெளனமாக இருந்தீர்கள்.

அரசு முட்கம்பி போட்டு முகாம்களை நிறுவும் வரை மெளனமாக இருந்தீர்கள்.

அப்போது எழும்ப மறுத்த குரல்...

இப்போதுதான் 3 இலட்சம் மக்களின் துயரமும் கண்ணுக்குத் தெரிகிறதா..??!

ஏன் ஐயா ஆண்டவரின் பெயரால்.. இவ்வளவு பாவங்களையும் செய்கிறீர்கள். தொடர்ந்து மெளனமாகவே இருங்களேன்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

வாங்கோ ஆயர் இவ்வளவு நாளும் என்ன யாழ்ப்பாணத்துக்கு புதிசா வந்த ஏசியில குளிர் குளிச்சிட்டு இருந்தனீங்களோ..??!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக மீறி கிழக்கில் யுத்தம் செய்த போது மெளனமாக இருந்தீர்கள்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி அரசு யுத்தப் பிரகடனம் செய்த போது மெளனமாக இருந்தீர்கள்.

கிளிநொச்சியை விட்டு வன்னியை விட்டு ஐநா உட்பட்ட அமைப்புக்களை வெளியேற்றிய போது மெளனமாக இருந்தீர்கள்.

50,000 மக்களைக் கொல்லும் வரை மெளனமாக இருந்தீர்கள்.

இவ்வளவு போராளிகளை அழிக்கும் வரை மெளனமாக இருந்தீர்கள்.

அரசு முட்கம்பி போட்டு முகாம்களை நிறுவும் வரை மெளனமாக இருந்தீர்கள்.

அப்போது எழும்ப மறுத்த குரல்...

இப்போதுதான் 3 இலட்சம் மக்களின் துயரமும் கண்ணுக்குத் தெரிகிறதா..??!

ஏன் ஐயா ஆண்டவரின் பெயரால்.. இவ்வளவு பாவங்களையும் செய்கிறீர்கள். தொடர்ந்து மெளனமாகவே இருங்களேன்..! :D :D

நீங்கள் மேலே குறிபிட்டத்தை எல்லாம் அரசியலில் உள்ள தமிழர்கள் யாராவது செய்தார்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...

ஆயர், தமிழ் மக்களின் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறன்... அவர் அரசியால்வாதி இல்லையே... பல (ஈனத்) தமிழர்கள் அரசியலில் இருந்தும் அவர்களால் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது??? தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையுமே நினைச்சுப் பார்காதவனேல்லாம், தனது சுயநலத்துக்காக தமிழ் மக்களின் ஆதரவைக் கெஞ்சி நிக்கிறான்...

கத்தோலிக்க மதகுருக்கள் தமிழ் மக்களுக்காகக் குரல் குடுத்து பலபேர் காணமல் போயும், கொலை செய்யப் பட்டு வருவதும் அறிந்ததே... இந்நிலையில், அவர் தமிழ் மக்களின் துயரத்தின் காரணமாக பல அறிக்கைகள், கோரிக்கைகள் விடுத்தும் உள்ளார்... யாழ் ஆயர் வன்னி மக்களின் துயரநிலையை வெளிப்பட்டுத்தியது எந்த விதத்தில் பிழை??

'ஆண்டவரின் பெயரால்.. இவ்வளவு பாவங்களையும் செய்கிறீர்கள். தொடர்ந்து மெளனமாகவே இருங்களேன்..!' ஆண்டவர் பெயாரால் யாழ் ஆயர் செய்த பாவம் என்ன என்று சொன்னால் அறிந்து கொள்ளலாம்.

யாழ் ஆயரால் விடப் பட்ட கோரிக்கைகளில் சிலவற்றை இங்கே இணைகிறேன்...

இவைகள் நீங்கள் ஏற்கனவே படித்து இருப்பீர்கள், இருந்தாலும் மறுபடியும் உங்கள் கவனத்திற்க்கு...

பிச்சைக்காரர்கள்போல் கையேந்தும் மக்கள்-யாழ் ஆயர் கருத்து வீடியோ செய்தி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=57545

முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேலே குறிபிட்டத்தை எல்லாம் அரசியலில் உள்ள தமிழர்கள் யாராவது செய்தார்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...

ஆயர், தமிழ் மக்களின் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறன்... அவர் அரசியால்வாதி இல்லையே... பல (ஈனத்) தமிழர்கள் அரசியலில் இருந்தும் அவர்களால் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது??? தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையுமே நினைச்சுப் பார்காதவனேல்லாம், தனது சுயநலத்துக்காக தமிழ் மக்களின் ஆதரவைக் கெஞ்சி நிக்கிறான்...

கத்தோலிக்க மதகுருக்கள் தமிழ் மக்களுக்காகக் குரல் குடுத்து பலபேர் காணமல் போயும், கொலை செய்யப் பட்டு வருவதும் அறிந்ததே... இந்நிலையில், அவர் தமிழ் மக்களின் துயரத்தின் காரணமாக பல அறிக்கைகள், கோரிக்கைகள் விடுத்தும் உள்ளார்... யாழ் ஆயர் வன்னி மக்களின் துயரநிலையை வெளிப்பட்டுத்தியது எந்த விதத்தில் பிழை??

'ஆண்டவரின் பெயரால்.. இவ்வளவு பாவங்களையும் செய்கிறீர்கள். தொடர்ந்து மெளனமாகவே இருங்களேன்..!' ஆண்டவர் பெயாரால் யாழ் ஆயர் செய்த பாவம் என்ன என்று சொன்னால் அறிந்து கொள்ளலாம்.

யாழ் ஆயரால் விடப் பட்ட கோரிக்கைகளில் சிலவற்றை இங்கே இணைகிறேன்...

இவைகள் நீங்கள் ஏற்கனவே படித்து இருப்பீர்கள், இருந்தாலும் மறுபடியும் உங்கள் கவனத்திற்க்கு...

பிச்சைக்காரர்கள்போல் கையேந்தும் மக்கள்-யாழ் ஆயர் கருத்து வீடியோ செய்தி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=57545

முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுபினர்கள் அதிக காலம் வெளிநாட்டில் தங்கியதால் அவர்களின் பதவி பறிபோக போகிறதாம். இவ்வளவு காலம் வெளிநாட்டில் என்ன வெட்டி விழுத்துகிறார்கள் என்று விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி

இனி இங்கே...

மதமும்

அரசியல் கட்சிகளும் அடிவாங்கப்போகின்றன

தொடரட்டும் தங்கள் எறிகணைகள்

ஒருநிமிடம்

நாம் என்ன செய்தோம் இந்த காலநேரத்தில்...................???????????????

....

ஆயர் நினைத்திருந்தால் பலவற்றை சாதித்திருக்க முடியும்.... :D

கருத்துத் தெரிவிக்கவும், கண்டனங்கள் தெரிவிக்கவும், கோரிக்கைகள் விடவும் அந்த நாட்டில் அனுமதி இருக்கும் பட்சத்தில் ஆயர் கண்டிப்பாக ஏதாவது செய்து மக்களை காப்பாற்றி இருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமானது...

மதத் தலைவர்கள் என்ற முறையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்... அனால் ஸ்ரீலங்காவில் யாருக்கும் எந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவேணும் என்று சொல்வதே மரணத்தை எட்டிப் பார்ப்பது போன்றதாகும்...

மகிந்தாவின் ஆட்சியின் கீழ், அரசியலில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது சிங்கள எதிர் கட்சி அரசியல் வாதிகளோ, பத்திரிகையாளர்களோ யாருமே வாய்திறக்க இயலாத நிலைமை... வாய்திறந்த மத குருமார்களுக்கு என்ன நடந்த்து என்று தெரியும் தானே...?? உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது... போப்பாண்டவர் இவற்றை மீறி என்ன செய்வார் என்று நீங்கள் எதிர்பார்கிரீங்கள்??

விசுகு என்ர படத்தைப் பாருங்கோ.

நான் இப்ப இப்பிடித்தான்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்ர படத்தைப் பாருங்கோ.

நான் இப்ப இப்பிடித்தான்

எப்போதுமே தொங்கிக் கொண்டு இருப்பியள்.

இப்போ :D இங்கேயும் அங்கேயுமாய் எங்கே தாவப்போறியள்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்ர படத்தைப் பாருங்கோ.

நான் இப்ப இப்பிடித்தான்

நீங்கள் மட்டுமல்ல

நாம் எல்லோருமே இப்படி இருந்ததனால்தான்..............

இன்று எமக்கு இந்தநிலை

எப்போதுமே தொங்கிக் கொண்டு இருப்பியள்.

இப்போ :D இங்கேயும் அங்கேயுமாய் எங்கே தாவப்போறியள்

அதான் கறுப்பி யோச்சுக் கொண்டு நிக்கிறன்

சரி ஆயரைவிடுங்கோ. எங்கடை ஐயர்மார் - இந்துகுருமார் சங்கம் எண்டு எல்லாம் இருக்கிது. இவையள் ஏதாச்சும் வாய் திறந்தவையளோ? ஆக ஒருக்கால் வன்னியில இருந்து ஒருத்தர் தங்களுக்கு மரக்கறி இல்லை எண்டு கவலையோட சொல்லி இருந்தார். வேறு ஏதாவது... இந்துமதகுருமார் பக்கம் இருந்து... ஏதாவது தகவல்?

  • கருத்துக்கள உறவுகள்

ஜயர்மார் குரல் கொடுத்தால் ஒருதரும் திரும்பி பார்க்க மாட்டார்கள் ஆனால் ஆயர் அவ்வாறில்லை அவர் குரல் கொடுத்தால் வத்திக்கான் திரும்பி பார்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரையாவது தாக்கினால் சரியென்ற மனநிலை(மனநோய்) ஒன்று தோற்றம் கண்டு வருகிறதோ என்ற ஐயமே எழுகிறது. நியாயபூர்வமான கருத்துகளைப் பகிர்வதூடாக ஆரோக்கியமான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கலாமே. உலகமே சந்தர்ப்பவாதத்தால் கட்டுண்டு கிடக்கிறது. இதிலிருந்து நாம் மீண்டெழ என்ன தேவையென்பதை சிந்திப்போம்.

ஒற்றுமை

அறிவு

திறமை

பொறுமை

விடாமுயற்சி

ஒன்றித்த செயற்பாடு

பொருண்மிய வளம்

புலமைசார் இணைப்பு

இவற்றினூடாக நாம் எமக்கான விடியலை விரைவுபடுத்த உழைப்பதே தேவையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.