Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிஐம்!!!

காற்றும் ஒருகணம் வீசமறந்தது

கடலும் ஒருநொடி அமைதியாய்... போனது...

தேற்றுவாறின்றி நம தேசம் தேம்பி நிற்குது

தேசத்து உறவுகள் எல்லாம் ஊரூராய் அலையுது

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து........

சோடிசேர்ந்த சோடிக் குயில்களின்.......

மகிழ்ச்சிகள் எல்லாம்.

இன்று முட்கம்பி வேலிக்குள்...

முடங்கிக் கிடந்திட

நான்கு சுவற்றுக்குள்

நடப்பவை எல்லாம்

கந்தல் துணியால் கட்டிய முகாமில்.....

வேட்டை நாய்களுக்கு நடுவில்

வேதனையுடன் நடக்குது.......

குளவி முதல் கிளவிவரை....

மாற்ற ஒர் உடையில்லை...

அன்றொரு நாள் நம் இளசுகள்

காத்திருந்து காதல்செய்த

வீதிகள் எல்லாம்

வேதனை தாங்கி

விம்மியே நிற்கின்றன.....

தண்ணீர் ஊற்றி

நாம் வளர்த்த நந்தவன

மரம்,செடி,கொடிகளெல்லாம்...

உறவுகள் இன்றி

சோடைபற்றிப்போய் நிற்கின்றன......

திசைகள் பார்த்துக்

கட்டிய வீடுகள்

அரக்கனின் குண்டுமழையிலே

சின்னா பின்னமாகி

சிதவுற்ற நிலையில்;இன்று

பேய்கள் உலாவும்

வீடாகிப் போனது......

களிவறைமுதல் கொண்டு

உணவறை வரைக்கும்

கூப்பன் கடையிகளின்

வரிசை போல் நிற்குது....

காரிகையே காத்திரு நான்

என் கடமையால் வரும்வரைக்கும்;என்று

முத்தத்தால் திலகமிட்டு

முடிவாக சென்றவனை

பிரியமுடியாத பிரியமான காதலி

கையத்து விடைபெற்று;இன்றும்

கடைசிவரை காணாத

உறவுகள் படும் பாடு

மகிந்தாவே நீ....அறிவாயடா.......?

நாடு,நாடாய் நாங்களெல்லாம்

ஊனுமின்றி உறக்கமின்றி

என்ன செய்தி என் நேரம்

எப்படி வருமென்று தெரியாமல்

நிமிடத்துக்கு ஓர் தடவை

தொலைபேசியப் பார்த்திடுவோம்

அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல்.....

தவிப்பவர்களின் தவிப்புகளை

ஏன் உள்ளத்து குமுறல்களை...

எங்கிருந்து யார் அறிவார்....?

இறுதியாய் தெரிந்துகொண்டோம்

உலகத்தின் சதிகளினால்

இன்று தமிழனின் இறப்பு மட்டும்

தடையேதும் இன்றி

வரிசைக்கு நிற்காமல்

மிகவும் வேகமாய் செல்கிறது

பிரியமுடன் யாயினி கனா.

நன்றி மறப்பது நன்றன்று அவர்நாண நன்நயம் செய்யவேண்டும்.இந்தகவிதை இளங்கவிக்கு சமர்ப்பிக்கின்றேன்.ஏனெனில் அவரின் வளிகாட்டலின் படி உங்கள் மத்தில் இன்று முதல் நான் உங்களில் ஒருத்தியாய் பிரகாசிக்க தொடங்கி உள்ளேன்.

Edited by yagini

  • கருத்துக்கள உறவுகள்

திசைகள் பார்த்துக்

கட்டிய வீடுகள்

அரக்கனின் குண்டுமழையிலே

சின்னா பின்னமாகி

சிதவுற்ற நிலையில்;இன்று

பேய்கள் உலாவும்

வீடாகிப் போனது......

களிவறைமுதல் கொண்டு

உணவறை வரைக்கும்

கூப்பன் கடையிகளின்

வரிசை போல் நிற்குது....

நிசமாய் தந்த உங்கள் கவிதை அழகு.

வாழ்த்துகள்.

தொடருங்க

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தை கவி வரிகளாய் தந்த யாயினிக்கு பாராடுக்கள். தொடருங்கள். படிக்க காத்திருப்போம்

வாழ்த்துக்கள் யாயினி. கவிதை நன்றாக வந்துள்ளது. நல்ல கவிஞர்களை உருவாக்கும் இளங்கவிக்கு என் நன்றிகள். தொடரட்டும் உங்கள் கவிமாலை............

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி அக்கா அற்புதமான கவிதை.. வாழ்த்துக்களும்,பாராட்டுக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

வரி(லி)களால் சொல்லப்பட்ட நிஜம் ஒரு கனமான கவிதை.... வாழ்த்துக்கள் யாயினி. உங்கள் ஆக்கங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.....

Edited by ilankavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி கறுப்பி உங்களின் வாழ்த்துக்களுக்கு.கண்டிப்பா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா உங்களின் வாழ்த்துகளுக்கு.தற்சமயம் எங்களின் நாட்டில் நடக்கின்ற அவலத்தைதான் எடுத்து வந்தேன்.மீண்டும்........மீண்டும் பல உண்மை நிகழ்வுகளை எடுத்து வருவேன். :)

பிரியமுடன்:யாயினி கனா.

Edited by yagini

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள் நிச்சமாக யாழ்கழத்தில் என்பணிதொடரும். :)

பிரியமுடன்:யாயினி கனா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவா உங்களின் வாழ்த்துக்களுக்கு. :)

பிரியமுடன்:யாயினி கனா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளங்கவி உங்களின் வாழ்த்துக்களுக்கு.இந்தக் கவிதையில் சிலவரிகள் எழுதும் போது என் கண்களே குளமாக்கியது.நானா இப்படி எல்லாம் எழுதுகிறேன் என்று எண்ணத்தோன்றியது.தொடர்ந்து எழுதுவேன். :)

பிரியமுடன்:யாயினி கனா.

அற்புதம் யாயினி...............

சோகமான எம் தாய் மண் நிகழ்வுகளை கவி வடிவில் படிக்கும் போதே இவ்வளவு

வலி வருகிறதே...............அதையே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள்

எவ்வளவு துன்பப் படுவார்கள் என எண்ணும் போது வலி இன்னும் அதிகமாகிறது.............

உங்கள் பணி தொடரட்டும்.......வாழ்த்துக்கள்!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வாழ்த்துக்கு நன்றி தமிழ்மாறன்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் தினம்.........தினம் எம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.என்னால் முடிந்தவரை தொடரும் என்பணி.

பிரியமுடன் யாயினி கனா.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:mellow: நன்றி தியா உங்களின் வாழ்த்துக்களுக்கு. :wub:

பிரியமுடன்:யாயனி கனா.

வணக்கம் யாயினி!.

கவிதை அருமை...

உங்கள் தமிழ் உணர்வும் பெருமை....

சிங்களவன் ஒரு எருமை...

இறைவன் தருவான் அருளே...உங்கள் கவிதை தொடர வரமே....

Edited by Nalim

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நலீம் உங்களின் வாழ்த்துகளுக்கு.உண்மைதான் சிங்களவன் ஒரு எருமைதான்.உண்மைகளை தொடர்ந்து எழுதுவேன். :mellow:

பிரியமுடன்:யாயினி கனா.

நன்றி நலீம் உங்களின் வாழ்த்துகளுக்கு.உண்மைதான் சிங்களவன் ஒரு எருமைதான்.உண்மைகளை தொடர்ந்து எழுதுவேன்.

உண்மைகளை எழுத உங்களைப் போன்ற பெண்கள் முன்வருவது மகிழ்ச்சியே....உண்மைகளை எழுத தயங்காதீர்கள்....உங்களிற்கு எனது ஆதரவு எப்பொழுதும் இருக்கும்.

இதோ இன்னொரு பெண்ணின் துணிச்சலான வரவு.....

http://reginidavid.wordpress.com/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாய் தெரிந்துகொண்டோம்

உலகத்தின் சதிகளினால்

இன்று தமிழனின் இறப்பு மட்டும்

தடையேதும் இன்றி

வரிசைக்கு நிற்காமல்

மிகவும் வேகமாய் செல்கிறது

யாயினி அக்காவுக்கு வாழ்த்துக்கள்

உங்களின் வரிகளில் அவர்களின் வலிகள்

எம் இன அழிவில் இந்த உலக்கிற்கும் பங்கு உண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனலைதீவான்,

கண்டிப்பாக எங்கள் உறவுகள் ஒவ்வொருவரின் இறப்பிலும் அவர்களின் துன்பத்திலும் அகில உலகத்தின் பங்கு உண்டு.உங்களின் வாழ்த்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது கண்ணீர் வருகிறது. உண்மைகள் எழுதப் படுவதால்.ஒரு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது எல்லோரும் விடுவதுதான். பொருட்சுவை நன்றாக இருக்கிறது சொற்சுவையும் நன்றாக இருப்பின் இன்னும் நன்றாக இருக்கும்.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது கண்ணீர் வருகிறது. உண்மைகள் எழுதப் படுவதால்.ஒரு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது எல்லோரும் விடுவதுதான். பொருட்சுவை நன்றாக இருக்கிறது சொற்சுவையும் நன்றாக இருப்பின் இன்னும் நன்றாக இருக்கும்.

வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி.

யாயினி.

Edited by yagini

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.