Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் அண்ணாக்கள் அக்காக்கள் எங்கே...???!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

crying_eye1.jpg

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி

வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!

களப்பலியாய் போனவர் போகட்டும்

அவர்களெம் மாவீரச் செல்வங்களாய்

எம்மோடு வாழ்வது உறுதி..!

ஆனால்..

சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்

உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

கவிபாடும் தமிழ் சொல்லாலே

புலியெனப் பாய்ந்த

புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

"ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு" என்ற சொல்லை வகுத்து

ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து

புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன்

பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி

அவன் பொன்னமான் தம்பி

தமிழீழ அரசியல் தத்துவஞானி

எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங்கே..??!

இளம்பிறையாய் யாழ் வீதி எங்கும் ஓடோடி

அரசியல் கருத்துரைத்து

இளைய நெஞ்சங்களில் இடம்பிடித்த

அந்த இளம்பரிதி அண்ணன் எங்கே..??!

தெந்தமிழீழம் தந்த களத்தளபதி

இராணுவப் பேச்சாளன்

உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்

இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!

தமிழீழத் தலைநகராம்

திருமலையின் நிர்வாகி

எழில் மிகு நகரின் தளபதி

எழிலன் அண்ணன் எங்கே...??!

இப்படி எத்தனையோ அண்ணாக்கள்

நேற்று வரை எம்மோடு உறவாடிய

எங்கள் பாச உறவுகள் எங்கே..??!

இனிய தமிழ் பேசி எம் இதயங்களில் வாழ்ந்த

தமிழினிய அக்காக்கள் எங்கே..??!

சிங்களச் சிறை சென்றாரோ

புத்த மைந்தன் மகிந்தவின்

சித்திரவதைக்கு இரையாகிப் போனாரோ..??!

சொந்தங்களை

விலைமதிப்பில்லா அந்தச் செல்வங்களை

தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்

எங்கள் உறவுகள் எங்கே..??!

கண்டவர் சொல்வரோ

காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!

இன்றேல்

மண் வாரி வசை பாடுவரோ

கல் வாரி என் தலை மீது விட்டு எறிவரோ...??!

எனக்குக் கவலை இல்லை..!

என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

காலமே பதில் சொல்

நான் அவர்களை உயிரோடு

காண வேண்டும்

என் சுதந்திர தேசத்தின்

தேச பிதாக்களை

தரிசிக்க வேண்டும்..!

அவர்கள் மூச்சாய் வாழும்

தமிழீழக் காற்றே

தேடி வந்து ஒரு சேதி சொல்

என் சொந்தங்களைக்

கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி

உயிரோடு கண்டதாய் சொல்..!

காத்திருக்கிறேன்..

விழி எங்கும் நீர் நிறைய...!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி

வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!

காத்திருப்புக்களுடன் நாமும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்க்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் நானும் தேடுகின்றேன்.

இந்த அற்புத மனிதர்களை சொற்ப சலுகைகளுக்கு ஆசைப்பட்ட தமிழர்கள் சிறையிலிட்டார்கள்!

இது தான் என் மனதில் தோன்றும் பதில்

மீண்டும் மிளிர்க்கும் ஈழத்தில் புலிக்கொடி பறக்கும் எம் மண்ணை.. பயிற்ச்சி பாசறை தாங்கிய எம் வன்னிக்காடுகளை.. வீதிகள் எங்கும் வீர வாசகங்கள் தாங்கிய எம் தெருக்களை.. ஊரேங்கும் நிறைந்திருக்கும் எம் துயிலுமில்ல கோவில்களை காண ஆசை...

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மூச்சாய் வாழும்

தமிழீழக் காற்றே

தேடி வந்து ஒரு சேதி சொல்

என் சொந்தங்களைக்

கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி

உயிரோடு கண்டதாய் சொல்..!

காத்திருக்கிறேன்..

விழி எங்கும் நீர் நிறைய...!!! ......

..உணர்வுள்ள ஈழத் தமிழர்களது கேள்விகளும் இவை தான் .........எங்கே அவர்கள். ?

வன்னிக் காற்றும் கந்தக மயமாய் போயிற்று ....எப்படி சேதி சொல்லும் ?.....

இந்த அற்புத மனிதர்களை சொற்ப சலுகைகளுக்கு ஆசைப்பட்ட தமிழர்கள் சிறையிலிட்டார்கள்!

தமிழர்கள் சிறையிலிட்டார்களா? சர்வதேசமும், சிங்களவன் எல்லாம்?

  • கருத்துக்கள உறவுகள்

தெந்தமிழீழம் தந்த களத்தளபதி

இராணுவப் பேச்சாளன்

உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்

இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!

இளந்திரையன் கடைசியாக மே மாதமளவில் வானொலி பேட்டி ஒன்று கொடுந்திருந்தாரே. அதன் பின் ஸெல் விழுந்து இறந்ததாக சொல்லப்பட்டது. <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் சிறையிலிட்டார்களா? சர்வதேசமும், சிங்களவன் எல்லாம்?

சர்வதேசம். சிங்களம் என்று மட்டும் சொல்லி தப்பிவிட முடியாது. எமக்குள் இருந்த சிலர் எம் இனத்துக்கு குழி தோண்டி புதைத்ததை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது.. இன்னும் சிங்களவனை சர்வதேசத்தை மன்னித்தாலும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

crying_eye1.jpg

.....

கண்டவர் சொல்வரோ

காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!

இன்றேல்

மண் வாரி வசை பாடுவரோ

கல் வாரி என் தலை மீது விட்டு எறிவரோ...??!

எனக்குக் கவலை இல்லை..!

என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

.....

கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்று சொல்வார்கள் ,

அதனை இந்த தமிழ் இன கயவர்களிடம் எதிர்பார்ப்பது வீண்.

சர்வதேசம். சிங்களம் என்று மட்டும் சொல்லி தப்பிவிட முடியாது. எமக்குள் இருந்த சிலர் எம் இனத்துக்கு குழி தோண்டி புதைத்ததை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது.. இன்னும் சிங்களவனை சர்வதேசத்தை மன்னித்தாலும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

நம்மவர்களை நம்மவர்கள் ஆளாளுக்கு நீ குற்றவாளி நீ குற்றவாளி என்று விரலை மற்றவனை நோக்கி நீட்டித்தானே இவ்வளவு அழிவுகள் எல்லாம் வந்தன நிதர்சன். இனியும் இதே பாணியில் சென்றால் மீதம் உள்ளவர்களும் அழிந்துபோகவேண்டியதுதான். குற்றம்சாட்டப்படுபவர்கள் குற்றம்சாட்டுபவர்களை எம் இனத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் என்று கூறுகின்றார்களே. எல்லோரும் ஒற்றுமையாக இருக்காதவரை அழிவுகளை நிறுத்தவது கடினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மவர்களை நம்மவர்கள் ஆளாளுக்கு நீ குற்றவாளி நீ குற்றவாளி என்று விரலை மற்றவனை நோக்கி நீட்டித்தானே இவ்வளவு அழிவுகள் எல்லாம் வந்தன நிதர்சன். இனியும் இதே பாணியில் சென்றால் மீதம் உள்ளவர்களும் அழிந்துபோகவேண்டியதுதான். குற்றம்சாட்டப்படுபவர்கள் குற்றம்சாட்டுபவர்களை எம் இனத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் என்று கூறுகின்றார்களே. எல்லோரும் ஒற்றுமையாக இருக்காதவரை அழிவுகளை நிறுத்தவது கடினம்.

இப்போது மட்டும் என்ன வாழ்கி்ன்றது மச்சான்,

ஒற்றுமையின் அவசியத்தை மறுக்க வில்லை மாறாய் ஒற்றுமைக்கு குந்தகம் செய்வோரை மன்னிக்க முடியாது. நம்பிக்கைத்துரோகம் செய்வோரை தண்டிக்காமல் விடல் ஆகாது. நம்மவர்களை நோக்கி விரல்கள் நீட்டப்பட்டாலும் அவை கூட சரியான திசை நோக்கி நீட்டப்படுமிடத்து அங்கேயே ஒற்றுமை தழைத்திட வழி பிறக்கும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரின் மன வினவல்களே எழுத்தில் தரப்பட்டுள்ளது.

நேற்று வரை அவர்கள் எம்மதிப்புகுரிய வெற்றிகளைக் குவித்த வீரர்கள். இன்று பலமிக்க கூட்டு எதிரிகளின் முன் அசாத்திய துணிச்சலோடு போராடி வீழ்ந்துவிட்டதற்காக அவர்கள் எமது மதிப்புக்குரியவர்கள் என்ற நிலையை இழக்க முடியாது..! போர்க்களத்தில் மார்பில் குண்டடி பட்டு வீழ்ந்த வீரமகனை போற்றிப் பாடிய பரம்பரை எம் தமிழர் பரம்பரை. இன்று அது எதிரிக்கு சேவகம் செய்தும் பிழைக்கலாம் என்ற எண்ணத்தில் வாழ்வதுதான் கேவலம்..!

நேற்று வரை அவர்கள் எம்மதிப்புகுரிய வெற்றிகளைக் குவித்த வீரர்கள். இன்று பலமிக்க கூட்டு எதிரிகளின் முன் அசாத்திய துணிச்சலோடு போராடி வீழ்ந்துவிட்டதற்காக அவர்கள் எமது மதிப்புக்குரியவர்கள் என்ற நிலையை இழக்க முடியாது..! போர்க்களத்தில் மார்பில் குண்டடி பட்டு வீழ்ந்த வீரமகனை போற்றிப் பாடிய பரம்பரை எம் தமிழர் பரம்பரை. இன்று அது எதிரிக்கு சேவகம் செய்தும் பிழைக்கலாம் என்ற எண்ணத்தில் வாழ்வதுதான் கேவலம்..!

மிகச் சரியான கருத்து. எமக்காய் விழுந்தவரை போற்றுவது நம் கடமை. உலகமே திரண்ட போதும் கலங்காது விடுதலைக்காய் விழுந்த எம் வீரர்களை போற்றுதல் நம் கடன்.

Edited by kssson

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.