Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! :பழ நெடுமாறன் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

"எனக்கு இங்கு வரும் பல பேரைப்பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை"

நான் சில காலம் யாழில் பதில் எழுதுவதை தவிர்த்ததிற்கு இதுவும் ஒரு கரணம், சில நாட்களுக்கு முன்னர், சுகன் எழுதியிருந்தது, உங்களின் தேசியத்துக்கு முன்னால் என்னால் பதில்/ விவாதிக்க முடியாது என்று... சாந்தி கனவில இருக்கிற ஆட்கள் நியத்திற்க்கு வாங்கோ என்று எழுத, அதற்கு ஒருவர் நாங்கள் கனவில தான் இருக்கிறம், நீங்கள் நினைவில இருக்கிற ஆட்கள் இப்ப என்ன நடக்குது என்று கேட்ட, அதையும் ஒருவர் copy பண்ணி சந்தியிட்ட திருப்ப கேள்வி கேள்படுகிறது... எல்லாம் புதுமை....இப்ப என்ன நடக்குது/ நடந்துவிட்டது? என்று கேட்பது ஒரு கெட்டித்தமான கேள்வி ??? ஒராள் கேட்டால், அதையும் திருப்ப கேட்கிற ஆட்களுக்கு?.....

கனக்க சொல்லலாம், அது வடிவில்லை...அதுக்குமேல அதில் என்ன பிரயோசனம்.... யாரும் தங்களை மாற்ற தயாராகவில்லை, இன்னுமொன்று அதில் ஒருவிதமான "அடக்குமுறை" வேறு .."சரியாய் எழுதுவது என்றால் எழுதுங்கோ இல்லாட்டி சமூகத்தை கெடுக்காதீர்கள்"... என்ற பாணி ....

இதை பற்றி முடிக்கிறதுக்கு முன்பு..

நிலாமதி அக்கா, நான் மதித்த, மதிக்கிற??.. ஒருவர் நான் யாழிற்கு வந்த போது வரவேற்றவர்...அவாவினுடைய கதைகளுக்கு பின்னஊட்டல்கள் எழுதவிலையே என்று கவலைபட்டிருக்கிறேன்... ஒரு செய்தி வந்திருந்தது... கிட்டதட்ட இப்படி " ஊடகங்களில் வந்த படம் துவரகவினது அல்ல வேறு ஒரு போராளியினது" அதற்க்கு அவ/நீங்கள் கொடுத்த பதில் ??" இணைத்த செய்திக்கு மிக்க நன்றி " ...என்னை மிகவும் பாதித்தது,, இப்படியும் மனிதர்கள் இருக்கல்லாம என்று?? அதை பார்த்தல் தெரியும் கிட்டதட்ட 1500 views ஆனால் 2 பேர்தான் பதில் எழுதியிருந்தவை ...துவாரக்கவினது, இல்லையென்றால் , நல்ல செய்தியா? அதில் உள்ள ???தமிழ் பெண்போராளிக்கு நடன்தது மிக்க கவலையில்லையா??? இது விதண்ட வாதம் அல்ல ...நீங்கள் மட்டுமல்ல, எனக்கு தெரிந்த சில பேர் என்னிடம் நேரில் பேசியிருக்கிறார்கள் நீங்கள்சொன்னமாதிரியே ...

சரி இந்த செய்திக்கு வருகிறேன்....

பிரபாகரன் இருக்கட்டும், அவரது குடும்பம் இருக்கட்டும், முக்கிய தலைவர்கள் , போராளிகள் இருக்கட்டும், அவர்கள் வருகிற நேரம் வரட்டும், போராடுகிற நேரம் போராடட்டும்... நாங்களும/ நானும் சேர்ந்து போராடுவோம்/போராடுவேன்...

ஆனால் இப்ப ....

கொஞ்சம் அடக்கி வாசிப்பம்...இலங்கையில இருக்க தமிழருக்க, வடக்கு கிழக்கில, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மல்லாவி ..மற்ற மற்ற இடங்களிலும், IDP camp இலும், அரச சிறைகளிலும் , ??? அரசங்கதின்ன்ர புனர்வாழ்வு முகாமிலும், மற்ற மற்ற வதை முகாம்களிலும் இருக்கிற தமிழருக்கு என்ன செய்யல்லாம் என்று முதலில் சிந்தித்து செய்தால் நலம் ..அதை பார்த்திட்டு மிச்ச அலுவல் பார்ப்பம்... கடைசியாய் நடந்த சுவிஸ் பேச்சுவார்த்தை குளும்பிய ஒரு காரணம் மக்களின் அவலங்கள் தீர்க்க A 9 திறக்கவில்லை என்பது தானே ..... எண்டபடியா..முதலில மக்களின் அவலங்கள் தீர்க்க ஒரு குழு அமைப்பம் பிறகு அரசியல் அபிலாசைகள் தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் பற்றி கதைப்பம் ...இல்லாட்டி .."குடல் கூழுக்கு அழ கொண்டை பூவுக்கு அழுகுது" என்றுதான் அங்குள்ளவர்கள் நினைப்பார்கள்/ நினைக்கிறார்கள்...

(கப்பலில வந்தும் நாட்டுக்க வராமல் இருக்கிற எங்கட உறவுகளுக்கையும்)

இங்கு கருத்து எழுதும் ஒருவரும் வன்னியில் இருக்கும் மக்களை கை விட‌ச் சொல்லி எழுதவில்லையே எல்லோரும் தங்களால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.என்ன மே 18 க்குப் பிறகு கொஞ்ச‌ம் குளம்பி போய் உள்ளார்கள் யாரை அனுகுவது,யாரை நம்பி எப்படி பணம் கொடுப்பது,எவ்வாறு உதவுவது எனத் தான் அவர்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன்.

இந்த தலைப்பு தலைவர் இருக்கிறார் என நெடுமாற‌ன் ஜயா சொன்ன‌தை பற்றியது அதை நம்புவதும் நம்பாததும் அவர‌வர் விருப்பம்.நீங்கள் ஏன் வேறு பகுதியில் ச‌க உறுப்பினர் எழுதினதை எல்லாம் இதில வந்து கொட்றீங்கள்..உங்களுக்கு அவர்கள் எழுதினது பிடிக்கா விடின் அதில் போய் பதில் இடுங்கள் அல்லாவிடின் அவர்கள் புள்ளீயை குறைத்து விடுங்கள்.

வன்னியில் இருக்கும் உறவுகள் எல்லாம் எமது இர‌த்த சொந்தம் தான் ஆனாலும் நாம் முதலில் எம் நெருங்கின சொந்தத்திற்கு,நண்பர்களுக்கு

ஏதாவது ஆகி விட்ட‌தோ எனத் தான் முதலில் பதட்ட‌ப்படுவோம் இல்லை என ஆன‌ பிறகு கொஞ்ச‌ம் நிம்மதி அடைவோம் இதைத் தான் நிலா அக்கா நினைத்திருக்க‌லாம்...அதற்காக செத்துப் போன அந்தப் பெண்ணுக்கு ஒருவரும் அஞ்ச‌லி செலுத்தவில்லை என சொல்லுவது சரியில்லை அதற்காக அந்தப் போராளீக்காக கவலைப்படமாலும் இல்லை...கடைசி யுத்தத்தில் இறந்த தீபன் அண்ணா தொட‌க்கம் பொதுமக்கள் வரைக்கும் ஒருத்தருக்கும் தான் அஞ்ச‌லி செலுத்தவில்லை...ஏன் நீங்கள் வந்து அப் பெண் போராளீக்கு அஞ்ச‌லி செலுத்தவில்லை?

கருத்துக்களம் என்றால் எல்லோரும் தங்களுக்கு சரி எனப்பட்ட‌தை தான் எழுதுவார்கள்...சுகன் அந்த பதிவில் வித்தியாச‌மாக எழுதியதால் கேள்வி கேட்டார்கள் அதில் என்ன பிழை...கருத்துகளம் என்பதே எல்லோருடைய கருத்தையும் ஆராய்ந்து கேள்வி கேட்பதற்கு தானே இருக்கிறது.

  • Replies 63
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....இன்னொருத்தர், இருக்கிறார் சொல்லுறவர் விடுறார். சர்வதேச நாடுகள் விடச்சொல்லி கேட்டது பற்றியும் விளாசுறார். யாழ்ப்பாணத்துக்கு வவுனியாமுகாமில இருந்து வந்த சனத்த இவர்போய் சந்திக்கவெணும். தும்புத்தடியோட காத்திருக்கிறதா செய்தியள் பரவலா வருகிது. கூட்டிக்கொண்டுபோன சூரியனுக்கு காப்பாத்த வக்கில்லாட்டி வெளியால விட்டிருக்கவேண்டியதுதானே! அதை விட்டிட்டு எல்லாரும் ஒரேயடியா உயிர்விடுவம் எண்டு செல்லி பேக்காட்டிப்போட்டு தானும் தன்ர குடும்பத்தையும் தப்பவைக்க (சீமான் நெடுமாறன் வைகோ பகுதிதான் சொல்லினம்) பலி குடுக்கிறது நல்லாயில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்....இன்னொருத்தர், இருக்கிறார் சொல்லுறவர் விடுறார். சர்வதேச நாடுகள் விடச்சொல்லி கேட்டது பற்றியும் விளாசுறார். யாழ்ப்பாணத்துக்கு வவுனியாமுகாமில இருந்து வந்த சனத்த இவர்போய் சந்திக்கவெணும். தும்புத்தடியோட காத்திருக்கிறதா செய்தியள் பரவலா வருகிது. கூட்டிக்கொண்டுபோன சூரியனுக்கு காப்பாத்த வக்கில்லாட்டி வெளியால விட்டிருக்கவேண்டியதுதானே! அதை விட்டிட்டு எல்லாரும் ஒரேயடியா உயிர்விடுவம் எண்டு செல்லி பேக்காட்டிப்போட்டு தானும் தன்ர குடும்பத்தையும் தப்பவைக்க (சீமான் நெடுமாறன் வைகோ பகுதிதான் சொல்லினம்) பலி குடுக்கிறது நல்லாயில்லை. :blink:

என்ன பம்மாத்து மாவீரர் நாளுக்கு வரவில்லை எங்கே தலைவர் என்று ஒருக்கால் சொல்வது. பிறகு பல்டி அடித்து

உவ்வளவு சனத்தையும் கொல்லிப்போட்டு எப்படி உயிருடன் இருக்கிறார் என்று தருணத்துக்கு ஏற்றால் போல் பச்சோந்தியாக மாறும் கூட்டம்.

ஒட்டுக்குழு தான் வன்னியில் மறைந்து இருந்து மக்கள் மேல் சரமாரியாக சுட்டார்கள். நான் சொல்லவில்லை வவுனியாவில் எமது மக்கள் தான் சொன்னார்கள். இந்த செய்தி மட்டும் உங்களுக்கு எழுத மனம் பிடிகாதோ??

சித்தார்த்தனின் காம வெறி கூட்டம் தான் தும்பு தடிகளால் வாங்கினவை என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பம்மாத்து மாவீரர் நாளுக்கு வரவில்லை எங்கே தலைவர் என்று ஒருக்கால் சொல்வது. பிறகு பல்டி அடித்து

உவ்வளவு சனத்தையும் கொல்லிப்போட்டு எப்படி உயிருடன் இருக்கிறார் என்று தருணத்துக்கு ஏற்றால் போல் பச்சோந்தியாக மாறும் கூட்டம்.

ஒட்டுக்குழு தான் வன்னியில் மறைந்து இருந்து மக்கள் மேல் சரமாரியாக சுட்டார்கள். நான் சொல்லவில்லை வவுனியாவில் எமது மக்கள் தான் சொன்னார்கள். இந்த செய்தி மட்டும் உங்களுக்கு எழுத மனம் பிடிகாதோ??

சித்தார்த்தனின் காம வெறி கூட்டம் தான் தும்பு தடிகளால் வாங்கினவை என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். :lol:

ஓமண்ணை....மக்களோ மக்களா இருந்த புலிஒட்டுக்குழு, வன்னிக்குள்ள புலிகட்டுப்பாட்டுக்குள்ள சித்தார்த்தனின் ஒட்டுக்குழு இருந்ததெண்டு யாருக்கண்ண பிலிம் சுத்துறியள்? :):blink::(:lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

ஓமண்ணை....மக்களோ மக்களா இருந்த ஒட்டுக்குழு, வன்னிக்குள்ள புலிகட்டுப்பாட்டுக்குள்ள ஒட்டுக்குழு இருந்ததெண்டு யாருக்கண்ண பிலிம் சுத்துறியள்? :):blink::(:lol:

ஆழ ஊடுருவும் படை யாரப்பு. எல்லாம் எமக்கு தெரியும்.ஏன் நாம் சுத்த வேண்டும். வன்னி மக்களையே கேட்டு பாருங்கள்.நீங்கள் ஒராக்கள் என்று உங்களுக்கு சுத்த வேண்டும். அதே மக்களிடம் வாங்கி சாப்பிட்டு விட்டு சிங்களவர்களுகு கழுவிய கழுவும் கூட்டமல்லோ. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ ஊடுருவும் படை யாரப்பு. எல்லாம் எமக்கு தெரியும்.ஏன் நாம் சுத்த வேண்டும். வன்னி மக்களையே கேட்டு பாருங்கள்.நீங்கள் ஒராக்கள் என்று உங்களுக்கு சுத்த வேண்டும். அதே மக்களிடம் வாங்கி சாப்பிட்டு விட்டு சிங்களவர்களுகு கழுவிய கழுவும் கூட்டமல்லோ. :):blink:

அது கருவேப்பில எடுத்து எறியேக்க புலியள் பாவிக்கிற அகப்பை. :(:lol::lol::lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

அது கருவேப்பில எடுத்து எறியேக்க புலியள் பாவிக்கிற அகப்பை. :):blink::(:lol:

உரிய விடை வழங்காமல் மழுப்புவதற்கு முதலாம் வகுப்பு படித்தாலே போதும். :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனன் இது உங்களுக்கு தேவையா :) ..இதை தான் சொல்லுறது பொல்லை கொடுத்து அடி வாங்கிறது என்று... :blink:

  • கருத்துக்கள உறவுகள்

  1. தடைமுகாம்களில் இருந்து வெளியேறியவர்கள் நெடுமாறன் ஐயா அவர்களிடம் அரிசிக்கு உதவி கேட்டதற்கும்,
  2. அந்த உதவியை செய்யமுடியாமல் நெடுமாறன் ஐயா அவர்கள் அல்லாடியதற்கும்

உங்களிடம் உள்ள ஆதாரங்களை தெரிவிப்பீர்களா?

உங்களால் அப்படியான ஆதாரங்களை காட்டமுடியாவிட்டால் நீங்கள் எழுதியது புனைகதையே அன்றி வேறல்ல. நெடுமாறன் ஐயா அவர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்தலைவர்களாலும் அறிவாளிகளாலும், கட்சி, கொள்கை வேறுபாடின்றி மதிக்கப்படும் ஒருவர். அவர் தனக்கு உண்மை என்று தெரியாத, ஆதராமற்ற தகவல்களை வெளிப்படுத்துவது இல்லை.

nedumaran.jpg

யூட்,

ஆதாரங்கள் இருக்கிறது.ஐயாவைப்பற்றி நான் சொன்னது பொய்யில்லை. புனைகதை புனையவில்லை. நாங்கள் ஐயா பற்றி அதிகமாகவே கற்பனையை வளர்த்ததாலேயே சில போராளிகளை ஐயாவிடம் செல்லும்படி அனுப்பினேன். அவர்களுக்கு ஐயா கொடுத்தது பற்றி வெளியிடலாம். அந்தப் போராளிகள் பாதுகாப்பாக ஒரு இடம் வந்தபின்னர். ஆதாரங்கள் வெளிப்படும். அதற்கான தருணம் வரும் போது. சற்று பொறுத்திருங்கள் யூட்.

ஐயா செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியைக்கூட இன்று வா நாளை வாவென்று இழுத்தடித்து இனிமேல் என்னாச்சும் வரட்டுமென்று மனம் சலித்துப் போகும்வரை சில போராளிகள் நொந்துபோயுள்ளார்கள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை பொக்கெட்டுக்கிள்ளைதான் தலைவரை ஒழித்து வைத்திருக்கின்றார் தேவை வரும் போது எடுத்து விடுவார்.

அதுவரை காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் அய்யா பற்றி பேசுவதற்கு கூட தகுதி வேண்டும். கடந்த யூலையில் ஒரு சம்பவம், ஒரு ஈழத்தமிழர் அய்யாவின் அலுவலகத்தில் தங்கியிருக்க அனுமதி கேட்கிறார் தனது பெயராக ஒரு இந்துப்பெயரை சொல்கிறார். இரு தினங்கள் கடந்து அங்கு வந்த ஒரு ஈழத்தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அந்த நபரை கண்டு அடிக்க போகிறார். பின் அவரின் பொருட்களை சோதித்த போது அவரின் இலங்கை கடவுச்சீட்டில் அவரின் பெயராக இசுலாமிய பெயராக இருந்தது.

ஈழத்தமிழர் இறைஞ்சுவதில்லை நானறிந்த வரை அது உணவாலும் "தனி நாடகிலும்".

ஒரு கிலோ அரிசி அது இது என்று வாங்கின காசுக்கும் மேல் குரைக்காதீர்.

நிச்சயமாக தகுதி வேண்டும் ஐயா பற்றி கதைக்க.

தலைவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட 18ம் திகதி இந்த ஐயா வீட்டை ஓடிப்போய் தொலைபேசியையும் கட்பண்ணீட்டு ஒளிச்சதும் தெரியும் ஐயா.

ஈழத்தமிழர் இறைஞ்சுவதில்லை உண்மை. அத்தகைய இனத்தை நாதியற்ற இனமாக்கியதில் உங்கள் ஐயாவுக்கும் பங்குண்டு.

அதுசரிதான் அரசி அது இதுவென்று குரைத்துக் களைத்துப்போனது நம்மினம் வாங்கின காசில்லை நாமாக உழைத்து வாழ்கிறோம். இது தமிழகம் இல்லை.

நெடுமாறன் அய்யாவின் குடும்பத்தில் யாரும் மருத்துவரில்லை. மருத்துவ சீட்டுக்காக யாரிடமும் அவர் கையேந்தவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா போலி அரசியல் செய்கின்றார்!

ஒரு கிலோ அரிசியை பெற்றுகொடுக்க வக்கில்லாதவாராகவா நீங்கள் இருக்கின்றீர்கள்? நீங்கள் போய் கிழிக்கலாமே?

உங்கள் கூடிபிறந்த உறவுகள் பற்றிய அக்கறை உங்களுக்கில்லாதபோது. பக்கத்து நாட்டு அரசியல் வாதிக்கு என்ன வில்லங்கம்?

சரி நாங்கள் வக்கில்லாதவர்கள் மருதங்கேணி. நாங்கள் ஒன்றையும் கிழிக்கவும் முடியாதவர்கள். பக்கத்து நாட்டு அரசியல்வாதி ஏன் யெகோவா போதகர் போல் புலம்புகிறார் ? ஓ....அதுவும் அயல்நாட்டு அரசியலோ தெரியாது.

இதை நான் சொன்னா நம்பவா.... போறீங்க :)

நம்பமாட்டமே ஐயா சொன்னத்தான் நம்புவோம். :D

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அதுவரை காத்திருப்போம்.

நிறைய பேர் நிறைய தான் சொல்கிறீர்கள்.பொதுஅறிவு, உய்த்தறிவு இருந்தாலே போதும்.எப்படியான ஆட் கள் என கண்டு பிடிக்க முடியும்.?

அது சரி சாந்தியக்கா,நெடுமாறன் ஐயா தலைவர் இருக்கிறார்/ இல்லை என்பதால் இவருக்கு என்ன லாபம் என்று சொல்ல முடியுமா?. எனக்கு நிறையவே தமிழ் நாட்டு நண்பர்கள் உள்ளார்கள். யாரும் நெடுமாறன் ஐயாவை குறை கூறியதாக நானறிந்து தெரியவில்லை. உங்களின் தகவல்கள் சிலவேளைகளில் அதிர்ச்சியையும். ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.அதற்காக உங்களின் கூற்று பொய்யென நான் எடுக்கவில்லை நீங்கள் நிரூபணம் ஆக்கும் வரை.

எனது சிறிய அறிவுக்கு எட்டியபடி இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.எனவே சக்தி அற்றவர். இதற்குள் போராளிகளுக்கு உதவுவதால் தன்னை இந்திய உளவு படை சிக்கலில் மாட்டி விடும் என நினைத்து இருக்க கூடும்.ஒரு அனுமானம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய பேர் நிறைய தான் சொல்கிறீர்கள்.பொதுஅறிவு, உய்த்தறிவு இருந்தாலே போதும்.எப்படியான ஆட் கள் என கண்டு பிடிக்க முடியும்.?

அது சரி சாந்தியக்கா,நெடுமாறன் ஐயா தலைவர் இருக்கிறார்/ இல்லை என்பதால் இவருக்கு என்ன லாபம் என்று சொல்ல முடியுமா?. எனக்கு நிறையவே தமிழ் நாட்டு நண்பர்கள் உள்ளார்கள். யாரும் நெடுமாறன் ஐயாவை குறை கூறியதாக நானறிந்து தெரியவில்லை. உங்களின் தகவல்கள் சிலவேளைகளில் அதிர்ச்சியையும். ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.அதற்காக உங்களின் கூற்று பொய்யென நான் எடுக்கவில்லை நீங்கள் நிரூபணம் ஆக்கும் வரை.

எனது சிறிய அறிவுக்கு எட்டியபடி இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.எனவே சக்தி அற்றவர். இதற்குள் போராளிகளுக்கு உதவுவதால் தன்னை இந்திய உளவு படை சிக்கலில் மாட்டி விடும் என நினைத்து இருக்க கூடும்.ஒரு அனுமானம் மட்டுமே.

நுணாவிலான்,

ஐயா பற்றிய பல விடயங்கள் நிச்சயம் வெளிவரவுள்ளது. சற்று காத்திருங்கள்.அவரை குறைகூறும் நோக்கம் இல்லை ஆதங்கம்.

தமிழினம் மீதான அறுபதாண்டு ஆவணம் வெளிவருவதையே இடைப்புகுந்து தடையிட்டுக் குழப்ப முன்னின்ற பெருமைகள் முதல் நிறைய எழுத்திலும் இருக்கிறது.(அவரது எழுத்தில்)

தனிமடலில் விபரங்கள் தருகிறேன் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்,

ஐயா பற்றிய பல விடயங்கள் நிச்சயம் வெளிவரவுள்ளது. சற்று காத்திருங்கள்.அவரை குறைகூறும் நோக்கம் இல்லை ஆதங்கம்.

தமிழினம் மீதான அறுபதாண்டு ஆவணம் வெளிவருவதையே இடைப்புகுந்து தடையிட்டுக் குழப்ப முன்னின்ற பெருமைகள் முதல் நிறைய எழுத்திலும் இருக்கிறது.(அவரது எழுத்தில்)

தனிமடலில் விபரங்கள் தருகிறேன் பாருங்கள்.

நன்றி அக்கா. தனிமடலை விட களத்தில் எல்லோரின் பார்வைக்கு விடுவதையே விரும்புகிறேன். உங்களின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை. என்றாலும் "திறந்த புத்தகமாக" இருப்பதே எனது அவா. :)

எப்போதும் யாராவது எதையாவது சொல்லிவிட்டால் அதை வைச்சே பிழைப்பு நடத்தவென்றே சிலபேர் கிளம்பிட்டாங்கள்.

நெடுமாறன் அய்யாவைப்பற்றி அதிகம் பீற்றுபவர்கள் தாங்கள் என்னத்தை புடுங்கினார்கள் என்று பட்டியளிடுங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுமாறன் ஐயா சுயநலமாக இருக்க விரும்பினால் மற்றவர்கள் போல் கருணாநிதிக்கு துதிபாடலாம்.

நானும் சாந்தியின் கருத்துக்களை பல நாட்களாக அவதானிக்கிறேன். ஏதோ பொட்டம்மான் ரேஞ்சில எல்லா போராளிகளின்ர டீடெயிலும் தன்னிடம் இருப்பது போல் எதற்கெடுத்தாலும் போராளிகளின் கதைகளை எடுத்துவிடுகிறார். எதுவும் புரியவில்லை.

நெடுமாறனை நாங்கள் ஏன் குறை சொல்ல வேண்டும்,எங்களை நாமே தான் குறை பட்டுக்கொள்ளவேண்டும்.எந்த ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும்சரி ஆய்வாளர்களையும் சரி உதவிசெய்தால் நன்றியுடன் முடித்துக்கொள்ள வேண்டும்.எமது போராட்டத்தை அவர்கள் கையில் விடுவதோ,அவர்கள் சொல் கேட்பதோ ஒன்றுக்கும் ஆகாது.தமிழ்நாட்டு அரசியல் வேறு எமது போராட்டம் வேறு.அது கருணாநிதியோ,ஜெயலலிதாவோ,வைகோவோ,நெடுமாறனொ,சீமானோ எவருக்கும் பொருந்தும்.அவர்களுக்கு அவர்கள் அரசியல் தான் முதல் இன்னமும் இதைகூட விளங்காமல் மற்றவனை எமது முதுகில் தயவுசெய்து யாரும் குதிரை ஓடவிட வேண்டாம்,அந்த ஆள் குதிரை ஓடி களைச்சு போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா. தனிமடலை விட களத்தில் எல்லோரின் பார்வைக்கு விடுவதையே விரும்புகிறேன். உங்களின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை. என்றாலும் "திறந்த புத்தகமாக" இருப்பதே எனது அவா. :)

திறந்த புத்தகமாக விடுவதுதான் சரி நுணாவிலான். ஆனால் சிலருடைய உயிர் வாழ்வு இன்னும் தமிழகத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இக்களத்தில் இதுவரை காலம் உங்கள் எழுத்துக்கள் ஊடாக உங்கள் மீதான நம்பிக்கையில் தான் தனிமடலில் தரவிரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா சுயநலமாக இருக்க விரும்பினால் மற்றவர்கள் போல் கருணாநிதிக்கு துதிபாடலாம்.

நானும் சாந்தியின் கருத்துக்களை பல நாட்களாக அவதானிக்கிறேன். ஏதோ பொட்டம்மான் ரேஞ்சில எல்லா போராளிகளின்ர டீடெயிலும் தன்னிடம் இருப்பது போல் எதற்கெடுத்தாலும் போராளிகளின் கதைகளை எடுத்துவிடுகிறார். எதுவும் புரியவில்லை.

உங்கள் கற்பனைக்கு ஒன்றும் என்னால் செய்ய முடியாது காட்டாறு.

பொட்டம்மான் ரேஞ்சிசையும் விட பொட்டம்மானாக ஒருவர் இங்கு பல பெயர்களில் கதைவிடுகிறார்.

போராளி நண்பர்கள் உறவினர்கள் பற்றிப் பேச அவர்களுக்கு நிகழும் அநீதிகள் பற்றிப்பேச பொட்டம்மான் தேவையில்லை. மனிதாபிமானம் போதும் காட்டாறு.

நெடுமாறன் ஐயா சுயநலமாக இருக்கிறார் என்று எங்கும் கூறப்படவில்லை. நீங்கள் கருத்தை தவறாக புரிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.

எங்கள் இனத்து மறு எழுச்சியை தலைவரைச் சொல்லி இந்த ஐயாவும் இந்திய மத்திய அரசும் மழுங்கடிக்கிறது என்ற உண்மையை யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

நாங்கள் உணர்வு என்பதை உணர்ச்சிப்பெருக்காக்கி எழுபவர்கள் என்பதைப் புரிந்தவர்கள். இப்படி உணர்ச்சியின் உச்சத்தில் ஏற்றிவிட்டு அசையாமல் செய்யப் பயன்படுத்தும் சொல்தான் இந்த ஐயாபோன்றோருக்குத் தலைவரின் இருப்பு அல்லது மீள்வருகை பற்றியது.

இதுவரைகால விடுதலைப்போராட்டம் விடுதலைப்புலிகளின் தியாகம் மாவீரர்களின் தற்கொடைகளை உண்மையாக மதிப்பவராக இருந்தால் அப்பப்போ தலைவர் பற்றி அடிக்கடி பேசமாட்டார்.

இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை அறிய புழுவாய் துடிக்கிறது ரோ. அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்யே தமீழீழத்துக்கான இன்னும் ஆதாரமான நம்பிக்கையாகவும் உள்ளது. தலைவர் உரிருடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தி தமிழரின் மனங்களை சிதைத்துவிட ரோ படாத பாடுபடுகின்றது. உண்மையில் தலைவர் உயிருடன் இல்லாமல் கூட இருக்கலாம். இதை நாங்கள் உறுதிபடுத்த நினைப்பது அல்லது முயல்வது அதைக் குறித்து அதிகம் அக்கறை காட்டும் ரோவுக்கு உதவி புரிவதாகவே இருக்கும். இந்தவைகயில் நெடுமாறன் அவர்கள் விமர்சனத்துக்குள் அப்பால் வந்துவிடுகிறார். ஒருவேளை தலைவர் இறந்தது உண்மை என்றால் அதை ரோவுக்கு காட்டிக் கொடுக்க முனையும் நச்சுப் பாம்புகளை முதலில் நாங்கள் இனம் காணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யூட்,

ஆதாரங்கள் இருக்கிறது.ஐயாவைப்பற்றி நான் சொன்னது பொய்யில்லை. புனைகதை புனையவில்லை. நாங்கள் ஐயா பற்றி அதிகமாகவே கற்பனையை வளர்த்ததாலேயே சில போராளிகளை ஐயாவிடம் செல்லும்படி அனுப்பினேன். அவர்களுக்கு ஐயா கொடுத்தது பற்றி வெளியிடலாம். அந்தப் போராளிகள் பாதுகாப்பாக ஒரு இடம் வந்தபின்னர். ஆதாரங்கள் வெளிப்படும். அதற்கான தருணம் வரும் போது. சற்று பொறுத்திருங்கள் யூட்.

ஐயா செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியைக்கூட இன்று வா நாளை வாவென்று இழுத்தடித்து இனிமேல் என்னாச்சும் வரட்டுமென்று மனம் சலித்துப் போகும்வரை சில போராளிகள் நொந்துபோயுள்ளார்கள்.

சாந்தி நீங்கள் சொல்வது உண்மை என வைத்துக் கொண்டாலும் அதற்கும் தலைவர் உயிரோடு இருக்கிறார் என நெடுமாறான் ஜயா சொன்னதற்கும் என்ன சம்மந்தம்...தலைவர் உயிரோடு இருக்கிறார் எனச் சொல்வதனால் அவருக்கு என்ன லாபம்...யாராவது காசு கொடுப்பார்களா அவருக்கு...

திறந்த புத்தகமாக விடுவதுதான் சரி நுணாவிலான்.

இல்லை அக்கா வேண்டாம்.

ஆனால் சிலருடைய உயிர் வாழ்வு இன்னும் தமிழகத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

எனது ரத்த உறவும் ஒருவர் அதில் அடக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை அறிய புழுவாய் துடிக்கிறது ரோ. அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்யே தமீழீழத்துக்கான இன்னும் ஆதாரமான நம்பிக்கையாகவும் உள்ளது. தலைவர் உரிருடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தி தமிழரின் மனங்களை சிதைத்துவிட ரோ படாத பாடுபடுகின்றது. உண்மையில் தலைவர் உயிருடன் இல்லாமல் கூட இருக்கலாம். இதை நாங்கள் உறுதிபடுத்த நினைப்பது அல்லது முயல்வது அதைக் குறித்து அதிகம் அக்கறை காட்டும் ரோவுக்கு உதவி புரிவதாகவே இருக்கும். இந்தவைகயில் நெடுமாறன் அவர்கள் விமர்சனத்துக்குள் அப்பால் வந்துவிடுகிறார். ஒருவேளை தலைவர் இறந்தது உண்மை என்றால் அதை ரோவுக்கு காட்டிக் கொடுக்க முனையும் நச்சுப் பாம்புகளை முதலில் நாங்கள் இனம் காணவேண்டும்.

இந்தியாதான் பிளான்பண்ணி எல்லாம் செய்து முடிச்சதா ஆய்வுக்குமேல ஆய்வா கொட்டுறாங்கள், தலைவர் இருக்குதா இல்லையாண்ணு அறிய துடிக்கிறதா இங்க இப்ப ஆய்வு செய்யிறாங்கள். தலைவா போய் சேந்திட்டார் பிளந்த தலையோட படங்காட்டி பொட்டம்மான் தவிர எல்லாரோட படங்களயும்போட்டு விட்டிருந்தாங்கள். இங்க களத்திலயே தலைவர் போய் சேந்திட்டார் எண்டு பலபேர் எழுதினதுக்கு அப்புறம் இந்த சீமான் நெடுமாறன் வைகோ நோர்வேநெடியவன் போல ஆக்களதான் தலைவர் இன்னும் இருக்கிறார் எண்டு பிரச்சாரம் செய்யிறார்கள். இப்ப திரும்ப ரோ நடத்துறதா பிலிம் சுத்துறார்கள். :):D

  • கருத்துக்கள உறவுகள்

1991 ஆனையிறவுச்சமர் நடைபெற்றபோது இராணுவத்தின் பிரதான முகாம்களின் ஒன்றான குறிஞ்சாதீவு முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர் ஆனால் அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை லெப்டினட் கேணல் சரா,மேஜர் குகதாசன் மற்றும் புலனாய்வுத்துறை தளபதி மேஜர் சோனி உட்பட போராளிகளை புலிகள் இழந்திருந்தனர்,அந்த செய்தியை கேட்ட ஆனையிறவு சமர் ஒருங்கிணைப்பு தளபதி ஒரு கணம் தன்னிலை மறந்து உந்துருளியை எடுத்துக்கொண்டு களம் நோக்கிப்புறப்பட கண நேரத்தில் தனது உயிரையும் மதியாமல் அந்த உந்துருளியின் குறுக்காக் விழ தளபதி உட்னடியாக வண்டியைக்கட்டுப்படுத்த வண்டியிலிருந்து வீசப்பட்டு காயத்திற்குள்ளானார் எல்லாம் ஒரு கணப்பொழுதில் நிகழ்ந்தவை என கேள்விப்பட்டிருக்கின்றேன்.

எமது போராளிகள் நாட்டின் பொக்கிசத்தை அவ்வளவு இலகுவாக இழக்க மாட்டார்கள் அப்பேர்ப்பட்ட போராளிகளை மதிக்காவிட்டாலும் அவமதிகாதீர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.