Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவு?

Featured Replies

இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவு?

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினது நிலைப்பாடுகள் தொடர்பாக குழப்பகரமான சூழல்கள் தொடர்கின்ற நிலையில் அதில் அங்கத்துவம் வகிக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவெடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உயர் மட்ட மகாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற மகாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார். நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பகிஸ்கரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் தற்போதைய சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை அறிவிக்கும் வரை ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களை வெளியிடாது பேணவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தல் தொடர்பான முடிவுகளை வெளிப்படுத்தும் போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிப்பது என்ற கருத்தை முன்வைக்க தீர்மானித்திருப்பதாக தெரிய வருகின்றது

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18978&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில ஒருத்தருக்கும் போட விருப்பமில்லாட்டால் போய் ஓ வோட் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கலாமாம்.

ஓ வோட்டிங் ஸ்ரீலங்கால இல்லையோ?

ஆ ஓ போடு

ஆ.... ஓ.... போடு.

எல்லாருக்கும் தெரியும் சிவாஜிலிங்கம் தேர்தலில் நிச்சயம் தோப்பாரெண்டு

அப்ப அவருக்கு போடுவதும் ஓ போடுவதும் ஒன்றுதானே.

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் தமிழ் காங்கிரசுக்கு இரண்டு சிங்கள வேட்பாளர்களையும் பிடிக்காட்டி

சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவளிக்கலாம்தானே? ஏன் ஈணவும் மாட்டம் நக்கவும் மாட்டம் என்று தள்ளி நிக்கவேண்டும்.

ஒரு கூட்டணிக்குள்ள ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரமுடியாதநீங்கள் ..... சிங்களக் கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வந்து எங்களுக்கு ஒரு தீர்வு தரவேண்டுமென்று மைக்கைப்பிடித்து பீற்றல் வேற.

எக்கேடோ கொட்டுபோங்கோ.... வார நாடாளுமன்ற தேர்தலில உங்களுக்கு சனங்கள் வைக்குங்கள் யயிpர.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினது நிலைப்பாடுகள் தொடர்பாக குழப்பகரமான சூழல்கள் தொடர்கின்ற நிலையில் அதில் அங்கத்துவம் வகிக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவெடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உயர் மட்ட மகாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற மகாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார். நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பகிஸ்கரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் தற்போதைய சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை அறிவிக்கும் வரை ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களை வெளியிடாது பேணவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தல் தொடர்பான முடிவுகளை வெளிப்படுத்தும் போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிப்பது என்ற கருத்தை முன்வைக்க தீர்மானித்திருப்பதாக தெரிய வருகின்றது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18978&cat=1

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் திடமான முடிவுகளில் வளி அவரது கட்ச்சியும் செல்வது வரவேற்க்க தக்கது...

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் புறக்கணிப்பே தமிழர் எடுக்கக்கூடிய சரியான முடிவாக இருந்தாலும் சிறிலங்கா போன்ற நீதியற்ற தேர்தல்கள் நடைபெறும் நாட்டில் புறக்கணிக்கும் வாக்குகள் கள்ளவாக்குகளாக மாறக்கூடிய சந்தரப்;பம் அதிகம்.கள்ள வாக்குகளை தவிர்க்க வேண்டுமாயின் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கலாம். சிவாஜிலிஙகம் என்ன நோக்கத்திற்காக தேர்தலில் நிற்கிறார் என்று பார்க்கத் தேவையில்லை.வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50 வீத்திற்கு மேல் எந்த ஒரு வேட்பாளரும் எடுக்கத்தவறுமிடத்து 2வது விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.2வது வாக்கை வேண்டுமானால் சரத்திற்குப் போட்டு தென்னிலங்கை ஆட்சியாளரைக் குழப்பத்திற்கு உள்ளாக்கலாம்.தென்னிலங்கை அரசியலில் குழப்பம் வருவது நமக்கு நல்லது. ஏனெனில் மகிந்தவிற்கு தங்கள் முதல் விருப்பு வாக்கைப் போட்டவர்களின்; 2வது தெரிவாக சரத் ஒருபோதும் இருக்கமாட்டார்.அதே போல் சரத்திற்கு தன் முதல் விருப்பு வாக்கைப் போட்டவர் தன்னுடைய 2வது தெரிவாக மகிந்தவைத் தெரிவு செய்ய மாட்டார்.ஆகவே 2வது சுற்று எண்ணப்படும் நிலை வரின் அப்போதும் தமிழரின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடியவை.சென்ற தேர்தலில் தமிழர்கள் முற்று முழுதாக புறக்கணித்த நிலையில் 1இலட்சம் வரையான வாக்கு வித்தியாசத்திலேயே மகிந்த வென்றது நினைவிருக்கலாம்.ததேகூட்டமைப்பு சரத்தை ஆதரிக்க முடிவு செய்தால் சிங்களவர் எல்லோரும் ஒரு பக்கமாக மகிந்தை ஆதரிக்க முன் வரலாம்.அப்படியொரு நிலை சரத்தை வெல்ல வைத்து மகிந்தவைப் பழிவாங்கலாம் என்று நினைக்கும் தமிழருக்கோ ஒப்பந்தம் எழுதிவாங்கும் ததேகூட்டமைப்புக்கோ ஆபத்தாக முடியும்.ஆகவே சொல்லாமல் கொள்ளாமல் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்குமாறு சொல்வதே ததேகூட்டமைப்புக்கு நல்லது. அல்லது மக்களே தேர்தலைப் புறக்கணிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் புறக்கணிப்பே தமிழர் எடுக்கக்கூடிய சரியான முடிவாக இருந்தாலும் சிறிலங்கா போன்ற நீதியற்ற தேர்தல்கள் நடைபெறும் நாட்டில் புறக்கணிக்கும் வாக்குகள் கள்ளவாக்குகளாக மாறக்கூடிய சந்தரப்;பம் அதிகம்.கள்ள வாக்குகளை தவிர்க்க வேண்டுமாயின் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கலாம். சிவாஜிலிஙகம் என்ன நோக்கத்திற்காக தேர்தலில் நிற்கிறார் என்று பார்க்கத் தேவையில்லை.வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50 வீத்திற்கு மேல் எந்த ஒரு வேட்பாளரும் எடுக்கத்தவறுமிடத்து 2வது விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.2வது வாக்கை வேண்டுமானால் சரத்திற்குப் போட்டு தென்னிலங்கை ஆட்சியாளரைக் குழப்பத்திற்கு உள்ளாக்கலாம்.தென்னிலங்கை அரசியலில் குழப்பம் வருவது நமக்கு நல்லது. ஏனெனில் மகிந்தவிற்கு தங்கள் முதல் விருப்பு வாக்கைப் போட்டவர்களின்; 2வது தெரிவாக சரத் ஒருபோதும் இருக்கமாட்டார்.அதே போல் சரத்திற்கு தன் முதல் விருப்பு வாக்கைப் போட்டவர் தன்னுடைய 2வது தெரிவாக மகிந்தவைத் தெரிவு செய்ய மாட்டார்.ஆகவே 2வது சுற்று எண்ணப்படும் நிலை வரின் அப்போதும் தமிழரின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடியவை.சென்ற தேர்தலில் தமிழர்கள் முற்று முழுதாக புறக்கணித்த நிலையில் 1இலட்சம் வரையான வாக்கு வித்தியாசத்திலேயே மகிந்த வென்றது நினைவிருக்கலாம்.ததேகூட்டமைப்பு சரத்தை ஆதரிக்க முடிவு செய்தால் சிங்களவர் எல்லோரும் ஒரு பக்கமாக மகிந்தை ஆதரிக்க முன் வரலாம்.அப்படியொரு நிலை சரத்தை வெல்ல வைத்து மகிந்தவைப் பழிவாங்கலாம் என்று நினைக்கும் தமிழருக்கோ ஒப்பந்தம் எழுதிவாங்கும் ததேகூட்டமைப்புக்கோ ஆபத்தாக முடியும்.ஆகவே சொல்லாமல் கொள்ளாமல் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்குமாறு சொல்வதே ததேகூட்டமைப்புக்கு நல்லது. அல்லது மக்களே தேர்தலைப் புறக்கணிப்பார்கள்.

உங்களின் அறிவுரை நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது மகிந்தவை வெல்ல வைக்கவும் உதவும்போல் உள்ளதே?

சிங்கள மக்களின் மகிந்தவுக்கான ஓட்டுகள் உறுதியானவை. சரத்தினுடையதுதான் குழப்பமானவை. ஆக தமிழ் மக்கள் தமது வாக்குகளை வீணடித்தால் மகிந்தவின் வெற்றி உறுதியானது போன்றே எனக்கு படுகின்றது.

எனது தனிபட்ட கருத்து மகிந்த வெல்வதே தமிழர்க்கு உகந்தது. உள்நாட்டு அரசியலில் அது தமிழர் தரப்பை அதிகம் பாதிக்கும் என்பதில் எந்த எதிர் கருத்தும் என்னிடமும் இல்லை. ஆனால் சர்வதேச அரசியலில் ஸ்ரீலங்காவை பல நெருக்கடிக்குள் அது தள்ளும். சீனாவை புறம் தள்ளுவது அல்லது மேற்குலகை புறம்தள்ளுவது இந்த இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் அவர்கள் தள்ளபடுவார்கள். டென்மார்க்கில் தற்போது நடந்த தட்ப்ப வெப்ப கூட்டத்திற்கு சீனாவின் தலைவர் வேண்டுமென்றே போகாது போனார். உடனடியாக கிளரி கிளிண்டன் அவரை நேரடியாக போய் பார்த்திருக்கின்றார். ஆக முறுகல் நிலையென்பது முன்னேறிகொண்டே போகின்றது. இதில் இந்தியாவின் வற்புறுத்தலுக்கு ஸ்ரீலங்காவை பணியவைக்க அமெரிக்கா எத்தணிக்கும். அதற்கு சீனா எல்லாவற்றையும் எழுத்தில் போட்டே ஒப்பந்தங்களை செய்துள்ளது. அக அரசியல் அரங்கத்தை ஆட்ட கூடியதாக புற அரசியல் இருப்பதை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும். எனது பார்வைகள் மேலோட்மானவை ஆனால் ஆது சாத்தியமானதா? என்பதை அதற்குரிய அறிஞர்கள் எடுத்துரைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வென்றால் வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரிக்கும் என்ற கோணத்தில் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் இந்தியாவை மீறி எந்த வெளிநாட்டு அழுத்தங்களும் எடுபடாது.மகிந்தவின் தோல்வி இந்தியாவின் தோல்வியாகும்.இந்தியா வெல்லவேண்டுமா?தோற்;க வேண்டுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.