Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனையிறவுக்கு (அலிமன்கட) ஒரு உல்லாசபயணம். படங்கள்.

Featured Replies

ஆனையிறவுக்கு (அலிமன்கட) ஒரு உல்லாசபயணம். படங்கள்.

resized110.jpg

resized108.jpg

resized107.jpg

resized106.jpg

resized105.jpg

resized104.jpg

resized102.jpg

resized101.jpg

resized100.jpg

resized99.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் இதில் உங்கட ஆட்கள் இருக்கினமோ...

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப போனால்...........

elephantpass1.jpg

elephantpass.jpg

உப்புக் கடலைத் தாண்டி, வாடி வீடு இருந்த இடத்தில் முதலில் உடைந்து போன பீரங்கி வண்டி ஒன்று முன்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது எதுவும் இல்லை. 2000-இல், சிறிலங்கா படைகளிடம் இருந்து ஆனையிறவை விடுதலைப் புலிகள் மீட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் விதத்தில் நினைவிடம் நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருந்த இடத்தில் இப்போது ‘ஆனையிறவு மாடி வீடு’ என்ற மிகப் பிரமாண்டமான நினைவிடம் நின்று கொண்டிருக்கிறது. சிமெந்தினால் போடப்பட்ட அடித்தளத்தின் மேலே செப்புப் படிமங்களால் ஆக்கப்பட்ட பல கைகள் முழு இலங்கையைத் தூக்கிப் பிடித்து நிற்கின்றன. தாமரைப் பூவும் மொட்டும், அந்த இலங்கையின் ஆனையிறவுப் பகுதி வழியாகப் பின்னிருந்து முன்பாகக் கவிழ்ந்து கிடக்கின்றன. பணிகள் இன்னும் நடைபெறுகின்றன. கீழே மலர்ச் செடிகளும் வண்ணத் தாவரங்களும் வளர்ப்பதற்கும் நடைபாதை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், கட்டத்தைச் சுற்றி இருந்த மறைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. யாரும் இதுவரை அதனைத் திறந்து வைக்கவில்லை. ஆனாலும், சிங்களவர்கள் நிறையப் பேர் யாழ்ப்பாணம் வந்து போகிறார்கள்.

Edited by கிருபன்

  • தொடங்கியவர்

பனங்காய் இதில் உங்கட ஆட்கள் இருக்கினமோ...

இது என்ன கேள்வி...? எல்லாம் எங்கட ஆக்கள்தான்.. :rolleyes:

  • தொடங்கியவர்

சிங்களவர்கள் நிறையப் பேர் யாழ்ப்பாணம் வந்து போகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் எங்கயோ ஒரு சாப்பாட்டுகடையில், சில சிங்கள இளைஞர்கள் (பொட்டையளும்.!) சாப்பிட்டுவிட்டு பில் வைக்க பில்லை எடுத்து கடைக்காறரின் முகத்தில் எறிந்து விட்டு சிரித்துக்கொண்டு போனவையாம். கடைக்காறரும் சிரிச்சுகொண்டு நிண்டவராம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் எங்கயோ ஒரு சாப்பாட்டுகடையில், சில சிங்கள இளைஞர்கள் (பொட்டையளும்.!) சாப்பிட்டுவிட்டு பில் வைக்க பில்லை எடுத்து கடைக்காறரின் முகத்தில் எறிந்து விட்டு சிரித்துக்கொண்டு போனவையாம். கடைக்காறரும் சிரிச்சுகொண்டு நிண்டவராம். :rolleyes:

:lol::D:lol:

யாழ்ப்பாணத்தில் எங்கயோ ஒரு சாப்பாட்டுகடையில், சில சிங்கள இளைஞர்கள் (பொட்டையளும்.!) சாப்பிட்டுவிட்டு பில் வைக்க பில்லை எடுத்து கடைக்காறரின் முகத்தில் எறிந்து விட்டு சிரித்துக்கொண்டு போனவையாம். கடைக்காறரும் சிரிச்சுகொண்டு நிண்டவராம். :rolleyes:

சகோதரர்களுக்கை இது எல்லாம் சகஜம் அப்பா... :lol:

எல்லாம் இருக்கட்டும் சிவப்பு ரீ சேட் ஓடை ஒண்டு தெறி கெட்டு திரியுது யாரப்பா அது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும் சிவப்பு ரீ சேட் ஓடை ஒண்டு தெறி கெட்டு திரியுது யாரப்பா அது :rolleyes:

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவன்கோனே தன் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

எமது நிலங்களும் அடையாளங்களும் சிங்களவரின் பொம்மைகளாக்கப்பட்டுவிட்டன. என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த ஆறு மாதத்தில் இவ்வளவு மாற்றம் என்றால்........

ஆறு வருடம் சென்றால் எவ்வளவு மாற்றம் வரும் என நினைக்க பயமாயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனால் மாற்றத்தை தமிழ்மக்களின் மனதில் ஏற்படுத்த முடியாது அவர்களது மூச்சுக்காற்று தமிழீழமே என்பதை முன்பை விட இப்பொழுதான் கடுமையாக இடித்து உரைக்கின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த ஆறு மாதத்தில் இவ்வளவு மாற்றம் என்றால்........

ஆறு வருடம் சென்றால் எவ்வளவு மாற்றம் வரும் என நினைக்க பயமாயிருக்கு.

35 வருட காலம் வந்து போகல்லை எல்லோ அதுதான் கடந்த 6 மாதம் அதிசயமா கழிஞ்சிருக்கும். 6 வருடசத்தில எல்லாம் ஆறின கஞ்சி பழைய கஞ்சி ஆகிடும்..! அதற்குப் பிறகு டி பி விஜேயதுங்கா சொன்ன கருத்தைத்தான் எல்லாச் சிங்களவனும் சொல்லுவான். அந்த உப்புக்காத்துக்க கட்டாந்தரைக்க என்ன இருக்கு.. வடலி பனையைத் தவிர...! இதில பயப்பிட எதுவும் இல்லை. எனக்கிருக்கிற பயம் சிங்களவனை விட தமிழர்கள் தான் தங்கள் சொந்த நிலத்தை அதிகம் வேடிக்கைப் பொருளாக்கிக் காட்டுவரோ என்று.ஏனெனில் இப்பவே புலம்பெயர் தமிழ் குடிமக்கள்.. சமருக்கு ரிக்கட் புக் பண்ணத் தொடங்கிட்டினம். வேலை இடங்களிலும் பலர் விடுமுறை கேட்டு விண்ணப்பிப்பதாக ஒரு வெள்ளையினத்தவர் சொல்லி பெருமூச்செறிந்தார். தன்னால் சமாளிக்க முடியாமல் இருக்கிறது என்று. இந்த நிலைதான் அபாயகரமானது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயம் இந்த சமருக்கு சனம் அள்ளுப்படும், விமான நிலையத்தில் நிர்வாணப்படுத்தி உடற்சோதனை செய்வதாக சொல்லபடுவது உண்மையா?, இமிகிறண்டுக்கும், கேற்றுக்கும் இடையில், புலனாய்வுதுறையும், ஒட்டுகுளுக்களும் அலுவலகம் திறந்து கப்பம் அறவிடுவது, விசாரணை செய்வது் இன்னமும் நடைபெறுகிறதா?

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

-----

எனக்கிருக்கிற பயம் சிங்களவனை விட தமிழர்கள் தான் தங்கள் சொந்த நிலத்தை அதிகம் வேடிக்கைப் பொருளாக்கிக் காட்டுவரோ என்று.ஏனெனில் இப்பவே புலம்பெயர் தமிழ் குடிமக்கள்.. சமருக்கு ரிக்கட் புக் பண்ணத் தொடங்கிட்டினம். வேலை இடங்களிலும் பலர் விடுமுறை கேட்டு விண்ணப்பிப்பதாக ஒரு வெள்ளையினத்தவர் சொல்லி பெருமூச்செறிந்தார். தன்னால் சமாளிக்க முடியாமல் இருக்கிறது என்று. இந்த நிலைதான் அபாயகரமானது..! :huh:

அங்கு நொந்து போய் இருக்கும் மக்களுக்கு, இங்கிருந்து போய் என்ன எடுப்பு எடுத்து காட்டப் போகிறார்களோ.....

சமாதான காலத்திலை இவர்கள் செய்த விளையாட்டுக்களை சனம் என்னும் மறக்கவில்லை.

நிச்சயம் இந்த சமருக்கு சனம் அள்ளுப்படும், விமான நிலையத்தில் நிர்வாணப்படுத்தி உடற்சோதனை செய்வதாக சொல்லபடுவது உண்மையா?, இமிகிறண்டுக்கும், கேற்றுக்கும் இடையில், புலனாய்வுதுறையும், ஒட்டுகுளுக்களும் அலுவலகம் திறந்து கப்பம் அறவிடுவது, விசாரணை செய்வது் இன்னமும் நடைபெறுகிறதா?

சித்தன் சொல்வது மாதிரி போறதிலை எத்தினை , என்னத்தை பறிகுடுத்துட்டு வரப்போகுதுகளோ.....

அல்லது நேரே...... நாலாம் மாடியோ.... யார்கண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு நொந்து போய் இருக்கும் மக்களுக்கு, இங்கிருந்து போய் என்ன எடுப்பு எடுத்து காட்டப் போகிறார்களோ.....

சமாதான காலத்திலை இவர்கள் செய்த விளையாட்டுக்களை சனம் என்னும் மறக்கவில்லை.

உந்த அனியாயத்தை நான் நேரில் பாத்தனான்.கொடுமையிலும் கொடுமை. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அனியாயத்தை நான் நேரில் பாத்தனான்.கொடுமையிலும் கொடுமை. :huh:

நானும் நேரில் பார்த்தனான் சஜீவன். அங்கு பண வசதி அற்ற மக்களுக்கு முன்னால் இவர்கள் நடக்கும் முறைகள் பலரை முகம் சுழிக்க வைக்கும்.

இவ்வளவிற்கும் இவர்கள் புலம் பெயர் நாடுகளில் பெரிய உத்தியோகமோ, படிப்பறிவோ இல்லாதவர்கள்.

அங்கு இவர்கள் அவிழ்த்து விடும் பொய்களை கேட்க இரத்தக் கொதிப்புத்தான் வரும். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் இந்த சமருக்கு சனம் அள்ளுப்படும், விமான நிலையத்தில் நிர்வாணப்படுத்தி உடற்சோதனை செய்வதாக சொல்லபடுவது உண்மையா?, இமிகிறண்டுக்கும், கேற்றுக்கும் இடையில், புலனாய்வுதுறையும், ஒட்டுகுளுக்களும் அலுவலகம் திறந்து கப்பம் அறவிடுவது, விசாரணை செய்வது் இன்னமும் நடைபெறுகிறதா?

இப்படி எல்லாம் வெருட்டினால் போகாமல் இருந்துவிடுவம் என்று நினைப்புப் போல. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.