Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமநாதபுரம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள சீனக்குடில்களால், அந்நாட்டின் இந்தியா மீதான அச்சுறுத்தல் அம்பலமாகி உள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமநாதபுரம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள சீனக்குடில்களால், அந்நாட்டின் இந்தியா மீதான அச்சுறுத்தல் அம்பலமாகி உள்ளது.

05 March 10 04:23 pm (BST)

கச்சத்தீவு செல்லும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், விரட்டியடிப்பு, எல்லையை நெருங்கவிடாத இலங்கை கடற்படை, கச்சத்தீவில் கண்காணிப்பு கோபுரம், இந்தியாவை குறிவைக்கும் சீனா, என, பல்வேறு குற்றச்சாட்டுகள், தமிழக மீனவர்களிடமிருந்து எழுந்தது. மற்ற குற்றசாட்டுகள் எல்லாம், வழக்கமானதாக இருந்த போதும், கச்சத்தீவில் சீனாவின் கண்காணிப்பு கோபுரம், என்ற, தகவல் இந்தியாவை சற்று கலங்க வைத்தது. சீனா கடற்படையினர் யாரும் கச்சத்தீவில் இல்லை, என, இலங்கை தரப்பிலும் காரசாரமாக பதில் தெரிவிக்கப்பட்டது. இருநாட்டு பிரதிநிதிகளும் கச்சத் தீவு சென்று ஆய்வு மேற் கொண்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என, அனைத்து தரப்பினரும் கருதினர். இருந்தும், அதற்கு இலங்கை அரசு முன்வரவில்லை. இந்நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு அனுமதியளிக்கப் பட்டது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கவும் அழைப்புவிடுக் கப்பட்டது. பல்வேறு மர்மங்கள் சூழ்ந்திருந்த கச்சத்தீவில், அதன் முடிச்சுகளை அவிழ்க்கும் நோக்கில், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.

கச்சத்தீவு தங்கள் சொத்து, என்பதை போலவே, இலங்கை அரசு தனது ஏற்பாடுகளை செய்திருந்தது. தீவு முழுக்க இலங்கை அரசின் கொடிகள் ஆக்கிரமித்திருந்த நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் தமிழர்கள் நுழைய வாய்ப்பளிக்கவில்லை. தீவை சுற்றிய பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட குடில்கள் இருந்தன.

சீனா எழுத்துகள் பொறிக்கப்பட்ட இந்த குடில்களில், ஆட்கள் நடமாட்டம் இல்லை. இருந்தாலும், அங்கு ஆட்கள் வசித்த, வசித்து வருவதற்கான சுவடுகள் தென்பட்டன. அந்த குடில்களையும், கடலோர பகுதிகளையும் பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

தீவிலிருந்த இலங்கை கடற்படையினர், இலங்கையினர் சிலரிடம் விசாரித்த வகையில், சீனர்கள் கச்சத்தீவில் தங்கியிருப்பதை உறுதிபடுத்தினர். கச்சத்தீவு திருவிழாவிற்காக அவர் களை தற்காலிகமாக இடம் பெயர செய்துள்ளதாகவும், இங்கு கூட்டு ரோந்து பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்தனர். இங்கு சீனா வீரர்களை அனுமதிப்பது சரியா? என கேட்டால், அப்படி யாரையும் அனுமதிக்கவில்லை. இது எங்கள் நாடாக இருக்கும் போது, அப்படியே அனுமதித்தாலும் என்ன தவறு?, என, கேட்டனர், இலங்கை கடற்படையினர் சிலர். மனிதர்களுக்கு இடமில்லாத கச்சத்தீவில், சீனா குடில்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளது, இது முன் எழுந்த சந்தேகங்களை எல்லாம் ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. நன்றி தினமலர்:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

இதெல்லாம் இந்தியாவிற்குத் தெரியாத செய்திகளாக இருக்குமென நினைக்கிறீர்களா? தெரிந்திருந்தும் வாலாட்ட முடியாதிருக்கும் செய்தியாகத்தானிருக்கும். ஆளில்லாத வேவு விமானம் விடலாம். சட்டலைற் மூலம் அவதானிக்கலாம். அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்கலாம். வேறென்ன செய்யலாம்.

அதென்ன சீன ராணுவ முகாமா? கொட்டில் போட்டதற்கு ஏனையா கலக்கம். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சீனன் கொட்டில் போலத்தான் இருப்பான்

என்பது மோதிப்பார்த்த இந்தியாவுக்கு தெரியாதா..?

அதைவிட

சோறு சாப்பிடுபவனுக்கும் இலை குளை ஊர்வன என எல்லாவற்றையும் சாப்பிடுபவனுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்காதா நம்ப அயலாருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

.

அடுத்த கச்சதீவு திருவிழாவுக்கு இந்தக் குடில்கள் உள்ள இடத்தில், சீனாவின் இராணுவ முகாம்கள் அமைக்கப் படும் என நம்பலாம்.

பெரிய கட்டடங்கள் கட்டும் போது , முதலில் கட்டிடம் கட்டுபவர்கள் தங்குவதற்கு சிறிய குடிகள் அமைப்பது தான் வழமை.

நண்றி தினமலரா...???

  • கருத்துக்கள உறவுகள்

நண்றி தினமலரா...???

ஓம் தயா,

தினமலர் எமது ஈழப்போராட்டத்தை கொச்சைப் படுத்தி, ஸ்ரீ லங்கா அரசாங்கத்துக்கு சார்பான செய்திகளையே பெரும்பாலும் வெளியிட்டு வந்தது.

இப்போ... பிரச்சினை அவர்களின் வீட்டு வாசலின் முன் வந்து, நின்ற பின் தான் ஓடி முழிக்கிறார்கள்.

எமக்கு இழைத்த அநீதிக்கு, இவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கச்சதீவில திருவிழாஎண்டு ரெண்டு மூண்டு நாளைக்கு முதல்தானே சொன்னார்கள். அப்போ சீனாக்காரன் எங்க போனவன்?

புதுசு புதுசா கதை சொல்லுறினம்.

கச்சதீவில திருவிழாஎண்டு ரெண்டு மூண்டு நாளைக்கு முதல்தானே சொன்னார்கள். அப்போ சீனாக்காரன் எங்க போனவன்?

புதுசு புதுசா கதை சொல்லுறினம்.

ஏன் பக்கத்து காணி நெடுந்தீவு இருக்கே...?? அங்கை உங்கட பெரியண்ணை டங்குதானே நொங்கு பொறுக்கிறார்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பக்கத்து காணி நெடுந்தீவு இருக்கே...?? அங்கை உங்கட பெரியண்ணை டங்குதானே நொங்கு பொறுக்கிறார்...

நெடுந்தீவில நொங்கு எண்டத்தான் நினைவுக்கு வருது......தமிழர் பகுதிகளில ஊர்காவற்துறை ஒரு இடத்திலதான் மகிந்தா வெண்டதா செல்லுறாங்கள் உவங்கள் சீனாக்காரர் போய் வோட்டு போட்டிருப்பாங்களோ? :D

நெடுந்தீவில நொங்கு எண்டத்தான் நினைவுக்கு வருது......தமிழர் பகுதிகளில ஊர்காவற்துறை ஒரு இடத்திலதான் மகிந்தா வெண்டதா செல்லுறாங்கள் உவங்கள் சீனாக்காரர் போய் வோட்டு போட்டிருப்பாங்களோ? :D

உங்கை வாக்கு பதிவுக்கு 2005 வாக்கு பதிவு நிலையத்துக்கு வேலைக்கு போன ஒருதர் சொன்னார்... போன எல்லாரையும் கூட்டிக்கொண்டு போய் ஒரு வீட்டிலை விட்டு நல்ல உபசாரமாம்... பிரியாணி எல்லாம் குடுத்துச்சினமாம்... மாலை நேரம் வரும் போது வாக்கு பெட்டிகளை மட்டும் கொண்டு வந்து சாவடி வேலைக்கு எண்டு போய் விருந்து சாப்பிட்டவையிட்ட குடுத்து சீல் வைச்சு போட்டு கொண்டு போங்கோ எண்டு அன்பா கேட்டு கொண்டிச்சினமாம்... :D

இதுதான் வெற்றியின் ரகசியம்...

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில நொங்கு எண்டத்தான் நினைவுக்கு வருது......தமிழர் பகுதிகளில ஊர்காவற்துறை ஒரு இடத்திலதான் மகிந்தா வெண்டதா செல்லுறாங்கள் உவங்கள் சீனாக்காரர் போய் வோட்டு போட்டிருப்பாங்களோ? :D

டங்கு மாமாவின் பிணம் தின்னிகள் தானே அங்கு இருக்கினம். அவை தான் கள்ள வேட்டு போடும் ஆட்கள். இதென்ன உங்கள் உள்வீட்டு விவகாரம் எங்களுக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கிறீங்கள் போல மதிவதனங். :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இந்தியாவிற்குத் தெரியாத செய்திகளாக இருக்குமென நினைக்கிறீர்களா? தெரிந்திருந்தும் வாலாட்ட முடியாதிருக்கும் செய்தியாகத்தானிருக்கும். ஆளில்லாத வேவு விமானம் விடலாம். சட்டலைற் மூலம் அவதானிக்கலாம். அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்கலாம். வேறென்ன செய்யலாம்.

அதென்ன சீன ராணுவ முகாமா? கொட்டில் போட்டதற்கு ஏனையா கலக்கம். :D:D

புதிய உலக கட்டமைப்பில் வணிக போட்டியே முக்கியமானது. இந்த வணிக போட்டியில் சீனாவும் இந்தியாவும் நெருங்கிய தோழமையான நாடுகள். இவை ஐரோப்பிய, அமெரிக்க கூட்டமைப்புக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுகின்றன. இந்திய எல்லையில் இராணுவ முகாம்கள் அமைக்கும் தேவையோ, நோக்கமோ சீனாவுக்கு இருப்பதாக தெரியவில்லை.

பத்திரிகை விற்பனைக்காக எழுதும் செய்திகளைப் பார்த்துப் போட்டு சி. ஐ.எ கே.ஜி.பி மொசாட் லெவலுக்கு யோசிக்கத் தேவையில்லை.

அது உண்மையாக இருந்தாலும், ராமேஸ்வரத்திலிருந்து காஸ்மீர் வரை தப்பியோட நிறையத் தூரம் இருப்பதால் இந்திய பயங்கரவாதிகள் கவலைப்பட மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.