Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாவினால் சுட்ட வடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாவினால் சுட்ட வடு..

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக் கெட்ட பெயர்தான். இதன் காரணமாக அவனும் எப்பொழுது பார்த்தாலும் வருத்தத்தில் இருந்தான். கோபமும் துயரமுமான மனநிலையிலேயே அவன் இருந்ததால் அவனால் சரிவரப்படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை, விளையாட்டுக்களிலும் அவனைச் சேர்த்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை.

ஒருநாள் அவன் தந்தை அவனுக்கு கோபப்படாமல் இருப்பதன் அவசியத்தினையும் பிறரைப் புண்படுத்தாமல் இருப்பதன் தேவையையும் உணர்த்த நினைத்தார். அவர் ஒரு சிறிய பெட்டி நிறைய ஆணிகளையும், ஒரு சுத்தியலையும் அவனிடம் கொடுத்தார். "இளங்கோ! உனக்குக் கோபம் வந்து யாரையாவது திட்ட வேண்டுமென்று தோன்றுகையில், அவர்களைத் திட்டுவதற்குப் பதிலாக இந்த வேலிச்சுவரில் ஒரு ஆணியை அடி. எப்பொழுது நீ ஒரு ஆணியைக் கூட அடிக்கவில்லையோ அன்று என்னிடம் சொல்" என்று சொன்னார்.

மறுநாள் இளங்கோ முப்பத்து ஐந்து ஆணிகளை அடிக்க நேர்ந்தது. அடுத்தநாள் அது முப்பதாகக் குறைந்தது. தொடர்ந்து வந்த சில நாட்களில் இளங்கோவின் முன்கோபமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. ஒரு மாதம் கழித்து தன் தந்தையிடம் வந்த இளங்கோ, "அப்பா! இன்று நான் ஒரு ஆணியைக்கூட அடிக்கவில்லை. " என்று சொன்னான்.

"மிகவும் நல்லது இளங்கோ! நீ நல்ல சிறுவனாகிவிட்டாய். இனிமேல் ஒரு நாள் முழுவதும் நீ கோபப்படாமல் இருந்தால், அன்று ஒரு ஆணியைப் பிடுங்கு." என்று கூறினார் தந்தை. அன்று முதல் தான் கோபமே படாத நாட்களில் எல்லாம் ஆணிகளைப்பிடுங்கி எடுக்கத் தொடங்கினான் இளங்கோ.

சில மாதங்கள் சென்றன. "அப்பா! நான் எல்லா ஆணிகளையும் பிடுங்கிவிட்டேன். இப்பொழுதெல்லாம் நான் யாரிடமும் சினமடைந்து திட்டுவதில்லை. ஆனாலும், இன்னும் யாரும் என்னிடம் பழக மறுக்கிறார்கள் அப்பா." என்றவாறே தந்தையிடம் வந்தான் அவன். தந்தை அவனை அழைத்துக்கொண்டு அவன் ஆணியடித்த வேலிச் சுவரின் அருகில் சென்றார். "பார் மகனே! நீ அடித்த ஆணிகளை எல்லாம் நீயே பிடுங்கிவிட்டாய். ஆனால், நீ ஆணி அடித்ததன் அடையாளம் இன்னும் நிலைத்திருக்கிறது பார். இந்தச் சுவர் இனி பழைய நிலையை அடையவே முடியாது. அதுபோலத்தான், நீ ஒருவர் மீது சுடுசொல்லைப் பயன்படுத்துவதும். நீ அதன் பிறகு என்ன பிராயச்சித்தம் செய்தாலும், எவ்வளவு அன்பாக நடந்து கொண்டாலும், அவர்கள் மனதில் உன் சுடுசொல்லால் உண்டான வடு மறையவே மறையாது. இனியாவது அனைவரிடமும் இனிமையாகப் பேசி பண்புடன் நடந்துகொள்." என்று அறிவுரை சொன்னார் அவன் தந்தை.

ஆமாம். இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்,

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு." என்று.

தீயால் சுட்ட புண்ணானது ஆறிவிடக்கூடியது, அதன் தழும்புகூட மறைந்து விடக்கூடும். ஆனால், ஒருவரை நாம் கோபத்தால், வெறுப்பால், அலட்சியத்தால் அல்லது அகந்தையால் நாவடக்கமின்றிப் பேசுவதால் அவர்கள் மனத்தில் உண்டாகும் காயம் ஆறவே ஆறாது. இதனை வலியுறுத்தவே

"யாகாவாராயினும் நாகாக்க" என்றும் கூறுகிறார் அவர். நாம் அடக்கத்துடன் இருப்பது அவசியம். புலனடக்கம் என்பது ஐம்புலனுக்கும் உரியதுதான். அவற்றில் மற்றவற்றைக் காக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. பேச்சில் அடக்கத்தைக் கடைப்பிடியுங்கள் என அறிவுறுத்துகிறார் அவர்.

இனிமையாகப்பேசவேண்டியதன் இன்றியமையாமையை விளக்க ஒரு அதிகாரம் முழுவதையும் ஒதுக்கிய அவர் அதில் முத்தாய்ப்பாக

" இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று." என்கிறார்.

நமக்கு எதிரில் புளிக்கும் மாங்காய் ஒன்றும், தித்திக்கும் மாங்கனி ஒன்றும் வைக்கப்பட்டால் நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்? பெரும்பாலானவர்கள் 'கனி'யினைத்தானே தேர்ந்தெடுப்போம்? ஆனால் இனிமையான சொற்கள் எண்ணற்றவை இருக்கையில், நாம் ஏன் பிறர்மீது கடுஞ்சொற்களைப் பயன்படுத்துகிறோம்? அதனால் யாருக்கும் மகிழ்ச்சியோ அமைதியோ கிடைக்கப்போகிறதா? அப்படியிருக்கையில் இனிய சொல்லே இன்பத்தை விளைவிக்கக்கூடியது என்று தெரிந்தபின்பும் ஒருவர் ஏன் கடுமையான சொல்லைப் பயன்படுத்தவேண்டும் என்று வியக்கிறார் வள்ளுவர்.

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது."

என்னும் குறள் அவரது ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் காண்பிக்கிறது.

"Please", "Sorry", "Thank you" இந்த மூன்றையும் மந்திரச்சொல் என்பது வழக்கம். இவற்றை தாராளமாகப் பேச்சினூடே பயன்படுத்துங்கள். கூடியவரை சுடுசொற்களைத் தவிர்த்துவிடுங்கள். கோபத்தாலும் ஆத்திரத்தாலும் வெளிப்படும் சொற்கள் காயப்படுத்துவதை விட, ஏளனமாக, அலட்சியப்படுத்திப் பேசும் வார்த்தைகளே அதிக வலியினைத் தரும். ஒவ்வொருவரிடம் ஒரு நல்ல குணம், ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. அதைப் பாராட்டி ஊக்குவியுங்கள். ஒருவரைப் புண்படுத்துவது, பூவால் வருடுவது இரண்டையும் செய்யும் வல்லமை படைத்தது நம் நாக்கு.ஒருவர் கூறும் நல்ல இனிமையான சொல், விரக்தியின் விளிம்பில் இருப்பவரைக்கூட மலர்ச்சியடையச் செய்கிறது. ஒருவர் வீசும் கடுஞ்சொல்லோ நல்ல மனநிலையில் இருப்பவரைக்கூட வேதனைப்பட வைக்கிறது.

இனிய கனியைத்தேர்ந்தெடுப்பதா, புளிக்கும் காயைத்தேர்ந்தெடுப்பதா - இரண்டும் நம் கையில்தான்.... அல்ல.அல்ல. நம் நாவில்தான் இருக்கிறது. வாக்கினிலே இனிமை சேர்ந்தால் வாழ்வினிலும் இனிமையே கூடும்தானே?

http://www.eelanation.com

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் பயங்கர ஆயுதம் நாக்கு ...என்பார்கள் இந்த நாக்கு தான் இனிய சொற்களையும் தீய சொற்களையும் மனம் புண்படும்படி சொல்கிறது இதை அழகாக உணர்த்துகிறது மேலுள்ள் பதிவு.....நீங்களும் வாசித்து எங்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.............

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பினையான கதை. இணைப்புக்கு நன்றி யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

அடடே நாக்குக்கு இவளவு பவரோ?

  • கருத்துக்கள உறவுகள்

அச்சாக் கதை, இணைத்ததுக்கு நன்றி யாயினி. :D

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை...நான் சின்னனில் கேட்டு இருக்கிறேன் திரும்பவும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல அர்த்தமுள்ள கதை, நன்றி யாயினி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.