Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கான இறுதிப்போரில் இந்தியாவின் உதவியை மறக்க முடியாது: பீரிஸ்

Featured Replies

தமிழர்களுக்கான இறுதிப்போரில் இந்தியாவின் உதவியை மறக்க முடியாது: பீரிஸ்

விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இறுதிக்கட்டப் போரை நிறுத் தக்கோரி இந்தியாவின் மத்திய அரசுக்கு உள் நாட்டில் பாரிய அழுத்தம் பிரயோகிக் கப்பட்ட போதும் அதற்கு மசியாத இந்தியா, இலங்கையின் போருக்கு ஆதரவளித்ததை என்றென்றும் பெருமையுடன் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,

இறுதிக்கட்டப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் அந்த போரை நிறுத்துமாறு இந்தியாவின் மத்திய அரசுக்கு உள்நாட்டில் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி அப்போது அங்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இலங்கையில் போரை நிறுத்தும்படி பாரிய அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு போதிய காரணங்கள் இருந்தன.

அக்காலக்கட்டத்தில் ஒரு முறை இலங்கைக்கு வந்த இந்தியக் குழுவினர் தமக்கு உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அழுத்தம் தொடர்பாக எடுத்துக் கூறினர். அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதன் மூலம் பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து இலங்கையின் இறுதிப் போர் குறித்து இந்தியா தான் செய்ய வேண்டிய சரியான பணி குறித்து உணர்ந்து அதனை முன்னெடுத்தது. போரை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் வழங்கவில்லை. இந்தியாவின் அந்த அளப்பெரிய பணியை இலங்கை என்றென்றும் நன்றியுடன் நினைவு கூரும்.

http://www.pathivu.com/news/7114/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை ஒப்புதல் வாக்கு மூலங்கள், சாட்சியங்கள்....ஆனால் எமக்கு இன்னும் இந்தியா மீது நம்பிக்கையிருக்கிறது.

புலிகளை அழித்தீர்கள் சரி, இனியாவது எங்களுக்குத் தீர்வொன்றைத் தரமுடியுமா?? அல்லது இவ்வளவு காலமும் ஏமாற்றியதைப் போல சம்பந்தரின்ர தலையில் மிளகாய் அரைக்கப்போகிறீர்களா??

இரண்டு தேசிய இனங்கள் இணக்கமாக வாழ முடியாத போது அவர்கள் பிரிந்து போவதே உலக வழமை.

வரலாற்றில் எத்தனை உதாரணங்கள் உண்டு இதற்கு.

இப்படி எத்தனை ஒப்புதல் வாக்கு மூலங்கள், சாட்சியங்கள்....ஆனால் எமக்கு இன்னும் இந்தியா மீது நம்பிக்கையிருக்கிறது.

புலிகளை அழித்தீர்கள் சரி, இனியாவது எங்களுக்குத் தீர்வொன்றைத் தரமுடியுமா?? அல்லது இவ்வளவு காலமும் ஏமாற்றியதைப் போல சம்பந்தரின்ர தலையில் மிளகாய் அரைக்கப்போகிறீர்களா??

என்னைபோல பலர் மனதில் உள்ளதை எழுதி இருக்கிறீர் . அப்படி உண்மையில் மிளகாய் அரைக்கும் அரைக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தால் கொஞ்சம் காலம் ஆனாலும் சரி / சுய லாப நோக்கு ஆனாலும் சரி திமுகவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பும் . அப்போது பிற ஈழ ஆதரவு கட்சிகளும் திமுகவுடன் சேர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கு சங்குதான்.

இரண்டு தேசிய இனங்கள் இணக்கமாக வாழ முடியாத போது அவர்கள் பிரிந்து போவதே உலக வழமை.

வரலாற்றில் எத்தனை உதாரணங்கள் உண்டு இதற்கு.

ஆமென்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விடயங்களும் ஏற்கனவே மக்களுக்குத் தெரிந்த விடயங்கள்.

பீரிஸ் எதற்காக இப்போது ஊதுகின்றார்.

அதுவும் மகிந்த இந்தியாவில் நிற்கும் போது

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விடயங்களும் ஏற்கனவே மக்களுக்குத் தெரிந்த விடயங்கள்.

பீரிஸ் எதற்காக இப்போது ஊதுகின்றார்.

அதுவும் மகிந்த இந்தியாவில் நிற்கும் போது

வாத்தியார்

..............

இந்தியாவினால் மகிந்த குழுவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது இப்போது இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு 75% காரணம் இந்திய அரசு. அந்த ஆதரவை விலக்கிக் கொள்ளுமாக இருந்தால் இலங்கையின் பாடு திண்டாட்டம்தான். ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் மகிந்த அசந்துவிடுவானா? :wub:

அதனால்தான் போரில் இந்தியாவுக்கு பங்குண்டு என்று சொல்கிறான் பீரிஸ். அதாவது நாங்கள் உள்ளே போனால் மவனே நீங்களும் உள்ளதான்டா என்று சொல்வதுமாதிரி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே சொன்ன அழுத்தங்களை தமிழருக்கான ஒரு தீர்வை வழங்கிவிடுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தம் என யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ஏர்டெல் நிறுவனத்தை உள்ளே விடு, டாடாவை உள்ளே விடு, ரிலையன்சை உள்ளேவிடு போன்றவை மாதிரியான அழுத்தங்களே இந்தியாவினால் மகிந்தமீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் என்பதை இங்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை..! :wub:

இந்தியாவினால் மகிந்த குழுவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது இப்போது இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு 75% காரணம் இந்திய அரசு. அந்த ஆதரவை விலக்கிக் கொள்ளுமாக இருந்தால் இலங்கையின் பாடு திண்டாட்டம்தான். ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் மகிந்த அசந்துவிடுவானா? :wub:

அதனால்தான் போரில் இந்தியாவுக்கு பங்குண்டு என்று சொல்கிறான் பீரிஸ். அதாவது நாங்கள் உள்ளே போனால் மவனே நீங்களும் உள்ளதான்டா என்று சொல்வதுமாதிரி..! :lol:

அது தவறு போர் குற்ற விசாரணை என்ன சிறீலங்காவை இயக்குவதே இந்தியா தான், அதானால் உங்க்களுடைய 75% ஏற்க முடியாது, எனவே 100% மாற்றி கூற வேண்டும். அதைவிட மகிந்த மிரட்டி இந்தியா அடிபணிய இந்தியா என்ன சுண்டங்காய் நாடா???

தமிழர்களுக்கான இறுதிப்போரில் இந்தியாவின் உதவியை மறக்க முடியாது: பீரிஸ்

தமிழர்களாலும் மறக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

குள்ள நரி கருணாநிதியின் நாடகத்தையும் மறக்க முடியாது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அது தவறு போர் குற்ற விசாரணை என்ன சிறீலங்காவை இயக்குவதே இந்தியா தான், அதானால் உங்க்களுடைய 75% ஏற்க முடியாது, எனவே 100% மாற்றி கூற வேண்டும். அதைவிட மகிந்த மிரட்டி இந்தியா அடிபணிய இந்தியா என்ன சுண்டங்காய் நாடா???

நீங்கள் அறுபதுகளில் இருந்து பார்த்தீர்களானால் இதே இலங்கைதான் சீனப்போரின்போது இந்தியாவை மிரட்டி, இந்திய வம்சாவழித் தமிழர்களை இலட்சக்கணக்கில் நாடு கடத்தியதுடன், இன்னும் ஒரு தொகைப் பேருக்கு குடியுரிமை வழங்காமல் ஏமாற்ரியது.

இதே இலங்கைதான் பாகிஸ்தான் போரின்போது இந்தியாவை மிரட்டி (பாகிஸ்தான் போர்விமானங்களை தரையிறங்க அனுமதிப்பதன் மூலம்) கச்சைதீவை வாங்கிக் கொண்டது.

இதையெல்லாம் செய்தவர்களுக்கு மன்மோகன்சிங், சோனியா காந்தியை கையாள்வது மட்டும் என்ன கடினமாக இருக்கப் போகிறதா? இம்முறையும் ஏமாறப் போவது இந்தியாவே..! :wub:

தமிழினத்தை அழித்துவரும் இந்திய, சிங்கள பயங்கரவாதிகளை நாமும் மறக்க மாட்டோம். ஈழத் தமிழரால் பயங்கரவாதிகளுக்கு உரிய நேரத்தில் உரிய பாடம் படிப்பிக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.