Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவேக் ஓபராய்க்கு மன்னிப்பு - சீமான் பல்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் ஓபராய்க்கு மன்னிப்பு - சீமான் பல்டி

seeman-preview.jpg

கா‌ரியவாதி அரசியல்வாதிகளுக்கு நடுவில் தமிழ் உணர்வை காட்டுவதில் கறாராக இருக்கிறாரே சீமான் என்று மகிழாத தமிழ் மனம் இல்லை. ஆனால் இந்த‌க் கறார் உணர்வாளர் தனது கொள்கையிலிருந்து திடீரென கவிழ்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இலங்கையில் நடந்த பட விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களின் படங்களையும் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னகத்திலுள்ள ஐந்து மாநிலங்களிலும் அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. பட விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை சென்னை திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என திரையரங்க உ‌ரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்து, இந்த‌ச் செயல் திட்டத்தை தொடங்கி வைத்தவர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சியினர். (அதே நேரம் இலங்கை படவிழாவில் கலந்து கொண்ட கத்‌ரினா கைஃபின் ரா‌ஜ்நீதி திரைப்படம் இன்னும் சென்னையில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது).

இந்த இனத்துரோக படவிழாவில் பங்கேற்றதுடன் தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தி ராஜபக்சேயின் முதல்தர அடிவருடி என்ற பெயரை தட்டிச் சென்றவர் விவேக் ஓபராய். படவிழா முடிந்த பிறகும் கொலைகாரன் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் தங்கியிருந்ததுடன் அவன் ஏற்பாடு செய்த கண் துடைப்பு திருமண விழாவுக்கு சீஃப் கெஸ்டாக சென்று தமிழர்களின் உணர்வை காலில் போட்டு மிதித்த நடிகர் விவேக் ஓபராய்.

இந்த விவேக் ஓபராயை சீமான் மன்னித்துவிட்டாராம். ஏதற்கு?

விவேக் ஓபராய் நடித்த ரத்த ச‌ரித்திரம் ஆகஸ்டில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு எதிராக சீமான் போராட்டம் நடத்த மாட்டாராம். ரத்த ச‌ரித்திரத்தில் சூர்யா நடித்திருப்பதால் விவேக் ஓபராயை மன்னித்து படத்தை வெளியிட அனுமதிப்பாராம். ரத்த ச‌ரித்திரத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது சூர்யாவுக்கு எதிரான போராட்டமாகிவிடுமாம்.

பத்து கோடி தமிழர்கள் சம்பந்தப்பட்ட உணர்வுமிக்க விஷயத்தில் தன்னிச்சையாக பொது மன்னிப்பு வழங்க சீமான் யா‌ர்? எப்போது அவர் பாவமன்னிப்பு வழங்கும் பாதி‌ரியானார்?

சொந்த பிள்ளைகளுக்காகவும், உடன்பிறவா சொந்தங்களுக்காகவும் கொள்கையை பறக்கவிடும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் சீமானுக்கும் என்ன வித்தியாசம்? கட்சி தொடங்கி இரண்டு மாதம்கூட பூர்த்தியாகாத நிலையில், எதற்காக கட்சி தொடங்கினாரோ அந்த‌க் கொள்கையையே ஏதோ ஒரு தம்பிக்காக விட்டுத் தருகிறார் என்றால் நாளை இன்னொரு தம்பிக்காக தமிழர்களையே கை கழுவ மாட்டார் என்று எப்படி நம்புவது?

மற்றவர்கள் ஒரு சயனைடு குப்பியை கழுத்தில் தொங்கவிட்ட போது தனது குடும்பத்தின‌ரின் கழுத்தில் இரு சயனைடு குப்பிகளை தொங்கவிட்ட தமி‌ழீழ தேசிய‌த் தலைவ‌ரின் தம்பி என்று சொல்லிக் கொள்கிற தகுதி தனக்கிருக்கிறதா என்று சீமான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நன்றி: தமிழ் வெப்துனியா..

நல்லவேளையாக சிதம்பரம் சோனியா காந்தியுடன் உள்ளார் என மன்னித்துவிட்டதாக கூறாமல் இருந்தால் சரி....

சீமான் சொல்வது சரி எண்றே எனக்கு படுகிறது... விவேக் ஓபராய் எண்டவர் யார் எண்டதே தமிழ் இரசிகர்களுக்கு தெரியாது... தமிழகத்தில் அந்த படம் ஓடுவதாக இருந்தால் அது சூரியாவினாலாக மட்டுமே இருக்கும்...

சூரியாவை தண்டிப்பது சரியாக இருக்குமா...??? தவறு செய்யாதவன் தண்டிக்க படுவதும் தவறுதான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்வது சரி எண்றே எனக்கு படுகிறது... விவேக் ஓபராய் எண்டவர் யார் எண்டதே தமிழ் இரசிகர்களுக்கு தெரியாது... தமிழகத்தில் அந்த படம் ஓடுவதாக இருந்தால் அது சூரியாவினாலாக மட்டுமே இருக்கும்...

சூரியாவை தண்டிப்பது சரியாக இருக்குமா...??? தவறு செய்யாதவன் தண்டிக்க படுவதும் தவறுதான்..

ஒரு படம் தோல்வி என சூர்யா நினைத்து கொள்ளலாமே தோழர் தயா? அவருக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு தெரியும் தானே... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யார் செய்தாலும் தவறு தவறுதான் அது சீமானாகவிருந்தால் எந்தக் கொம்பாகவிருந்தாலும் பிரச்சனையில்லை சீமான் வெறும் தமிழநாட்டு அரசியலை மையமாகவைத்து நாம் தமிழர் அமைப்பைத் தொடங்கவில்லை அதில் ஈழப்பிரச்சனையே முதன்மைபெறுகின்றது. அவரது கருத்துப்படி ஈழத்தமிழரது விடுதலையை, தமிழ்நாட்டுத்தமிழர்களது தலைநிமிர்வாகவே கருதுகிறார் ஆகவே அரர் ஆடுகின்ற அரசியல் கபடியாட்டத்தில் இன்னலறும் ஈழத்தமிழனே முன்னிலைப்படுத்தப்படுகிறான். கடந்த காலத்தில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்த நாடுகளின் அங்கத்தவர்கள் இடம்பெறக்கூடாதென அதனால் வரும் பெரும் விளைவகளைக் கருத்தில் கொள்ளாதே தேசியத்தலைவர் கூறியிருந்தார் மேற்கலக நாடுகளது தீவிரமான ஆத்திரத்திற்க அதுவே வழிகோலியது இந்த அவலம் நிறைவேறக் காரணமாகவிருந்தவைளில் இதுவம் ஒன்றாகவே இருந்தது. எனினும் சீமானின் இப்படியான தளம்பல் போக்கு தவறாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

:) சீமான் அண்ணாவைக் கேள்வி கேக்கிறது இருக்கட்டும், இங்க எத்தினை பேற்றை வீட்டில இன்னும் சண் டீ.வீ ஓடிக்கொண்டிருக்குது ??

:lol: சூர்யாவும் அவரது தம்பியும் தமிழர் சார்பானவர்கள். மனிதச் சங்கிலிப் போராட்டத்திலு கலந்து கொண்டவர்கள். விஜய் போல அரசியலுக்கு வர ஆலாய்ப் பறக்கும் எச்சக்கலை இல்லை சூர்யா. அவரின் படத்தை தண்டிப்பது அவரைத் தண்டிப்பதற்குச் சமம். வேண்டுமென்றால் விவேக் ஓபரோய் என்கிற நாயின் சொந்தப்படத்தைத் தண்டியுங்கள்.

போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் தான்தோன்றித்தனமாக நடக்காமல் உறுதியான கொள்கைகளுடன் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளவுகளையும், பின்னடைவுகளையும் மட்டுமே சந்திக்க முடியும். மக்கள் ஆதரவும் இல்லாமல் போய்விடும்.

போலித் திராவிட கட்சிகள் முதல் சினிமா பைத்தியங்கள் வரை ஈழமக்கள் ஆதரவு போராட்டங்களுடன் தமது சுயநலங்களையும் இறுக பின்னி வைத்திருந்ததால் தான் நீண்ட கால அடிப்படையில் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போனது.

ஆகக் குறைந்தது குறைந்த பட்சம் இலங்கைப் பொருட்களைக் கூட புறக்கணிக்க முடியாத ஒரு கேடு கெட்ட இனம் மற்றவனைப் பார்த்து "நீ நஷ்டமடை... " என்று சொல்வது கேலிக்கூத்து... எல்லராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு படு மோசமான இனத்திற்காக குரல் கொடுப்பவர்களைக் கூட முற்றாக அழிக்கவே இந்த போலிப் புரட்சி கோசம் உதவும். உளவாளிகளை விட இந்த விசைப் பலகை வீரர்களே ஆபத்தானவர்கள்...

ஆகக் குறைந்தது குறைந்த பட்சம் இலங்கைப் பொருட்களைக் கூட புறக்கணிக்க முடியாத ஒரு கேடு கெட்ட இனம் மற்றவனைப் பார்த்து "நீ நஷ்டமடை... " என்று சொல்வது கேலிக்கூத்து... எல்லராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு படு மோசமான இனத்திற்காக குரல் கொடுப்பவர்களைக் கூட முற்றாக அழிக்கவே இந்த போலிப் புரட்சி கோசம் உதவும். உளவாளிகளை விட இந்த விசைப் பலகை வீரர்களே ஆபத்தானவர்கள்...

என்ன இவ்வளவு சூடா எழுதியிருக்கிறீர்கள். ஏதாவது சூடா சாப்பிட்டு விட்டீர்களா??? வேணும்னா யானை மார்க் சோடா குடிச்சு சூட்டை தனித்துகொள்ளுங்கள். பொறுப்பானவருக்கு இவ்வளவு கோபம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்ன ஆயிற்று உங்களுக்கு ???????????????

ஓஹோ. புரட்சிகர தமிழ் தேசியனின் கட்டுரையா இது ??? கொஞ்சம் சூடு பறக்கத்தான் செய்யும் .

ஆமாம் . இலங்கைக்கு சுற்றுலா அழைத்து செல்வதில் இந்தியாவில் உள்ள மற்ற சுற்றுலா முகவர்களை விட தமிழ் சுற்றுலா முகவர்கள் தான் முதலிடத்தில் உள்ளார்களாமே???? இது பற்றி ஏதும் தெரியுமா உமக்கு ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாத்திரத்தை பார்த்து அடுப்பு சொன்னதாம் நீ என்ன விட கருப்பு என்று....அங்கே தாய் நாட்டுக்காக சென்று போராடாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவந்துவிட்டு இங்கே நமக்கு பாடம் நடத்து கின்றனர்..

289wgaa.jpg

அங்கே உறவுகள் வெயிலிலும் மழையிலும் வாடி கொண்டிருக்க... நிழலில் இருப்பவர்க்ள் வீண் வக்கனை பேசுகின்றனர்.. வார்டு கவுன்சிலராக கூட வர நாள் எடுக்கும்... தமிழக சிக்கலுக்குள் ஒன்றில் கூட மூக்கை நுழைக்காத கட்சிக்கு... சிலர் இங்கு வக்காலத்து வாங்குகின்ற்னர்... ஒருவேளை கட்சிக்கு பணம் அனுப்பி இருக்கலாம்... வழக்கம் போல தங்கதட்டில் தமிழீழம் வருது அதுவும் தமிழ்நாட்டில் இருந்து என்று .. யார் கண்டது??? எவ்வாறு இருப்பினும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆதரவு கைத்தடிகள் விசைபலகை வீரர்களை காட்டிலும் படுமோசமானவர்கள்... மைக்குக்கு அலையும் இவர்கள் நடத்தும் இலக்கிய கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் சந்தி சிரிக்கும்.. வருவது என்னவோ 30.. 40 பேர்தான் இதில் இவர்கள் நடத்தும் அக்கபோர் ச் ப்பா....படுகேவலமானவர்கள்...ஈழ தோழர்கள் இவ்வாறான போலிகளை.. .. ஊடக பொறுப்பு மற்றும் எந்த பொறுப்பில் இருந்தாலும்.. இனம் கண்டு ஒதுக்க வேண்டும் . :(

21.gif21.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

போட்டுத்தாக்கு............................போட்டுத்தாக்கு......................போட்டுத்தாக்கு........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.