Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

PKK ஆயுதக் களைவுக்கு முன்வந்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_48431827_92623791.jpg

ஈழத்தில் தமிழினத்தின் விடுதலை போல துருக்கியில் குர்திஸ் இனத்தின் விடுதலைக்காக பல ஆண்டுகளாக கெரில்லா போர்முறையில் போராடி வரும் PKK அமைப்பு மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டால் ஆயுதக் களைவுக்கு முன்வந்துள்ளது. இந்த அமைப்பும் உலகின் பலமிக்க நாடுகளால் பயங்கரவாதிகள் பட்டியலில் இடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.bbc.co.uk/news/world-europe-10707935

Edited by nedukkalapoovan

காலத்திற்குகேற்ற சரியான முடிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மைப் போலவே 26 ஆண்டுகளாக நீண்ட ஒரு போராட்டத்தை இந்த அமைப்பு தமது மக்களின் விடிவுக்காக நடத்தி வருகின்றது. எங்களைப் போலவே அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பிடம் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விடுதலைப்புலிகள் பெற்றுக் கொண்டதாக முன்னர் ஒரு தடவை அமெரிக்கா குற்றம் சுமத்தி இருக்கிறது.

இன்றைய நவீன இராணுவ தொழில்நுட்ப வளங்களோடு இயங்கும் பலமான எதிரிகளோடு மரபுவழிச் சமர் செய்வது என்பது ஒரு போராளி அமைப்புக்குச் சாத்தியமில்லை. ஏனோ விடுதலைப்புலிகள் இறுதிவரை மரபுவழிச் சமரில் ஈடுபட்டு தமது முழுப் பலத்தையும் இழந்தனரோ தெரியாது. இந்த அமைப்பு அப்படி அன்றி அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பை அடுத்து அதன் இரட்டை நிலைப்பாட்டை தமக்கும் சாதமாக்கி தமது இலக்கை அடைய இப்போது புதிய மார்க்கத்தை தெரிவு செய்கின்றனர் போலவே தெரிகிறது.

நீண்ட ஆயுதப் போராட்டம் என்பது பலமான எதிரிகளுக்கு சாதகமாகவும் பலவீனமான இனங்களுக்கு பாதகமாகவுமே அமையும் என்பதால்.. சரியான நேரத்தில் இராஜதந்திர முடிவுகளுடன் கூடிய தீர்க்கமான வழியில் சிந்திப்பது அவசியம்.

நாம் இந்த வகைக்குக் கூட பேரம் பேசும் வலுவை மரபு வழிச் சமரை நம்பி இழந்து நிற்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனினும் தேசிய தலைவர் எடுத்த இறுதி முடிவின் படி அவரால் பல ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிரை காக்க முடிந்திருக்கிறது. நாம் அவர்களின் விடுதலையை உறுதி செய்து கொண்டுதான் அடுத்த அரசியல் நகர்வு நோக்கிச் செல்ல வேண்டும்.

பலமான எதிரியோடு பலவீனமான நிலையில் பெரும் எதிர்சமரை தொடங்கி போராளிகளை அழிப்பதை தவிர்க்கவே தலைவர் முயன்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். உண்மையில் அந்த நிலையில் அது சாதுரியமான ஒரு முடிவென்றே கருத வேண்டும். இருப்பினும் அந்தப் போராளிகளின் விடுதலையை இன்னும் சாத்தியமாக்காமல் இருக்கும் சர்வதேசமும்.. அதனை இதைச் செய்ய வற்புறுத்தாதிருக்கும் மக்களும் தான் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா நிகழ்த்திய போர்க்குற்றங்களை வெளிக்கொண்டு வந்தாலே நாம் பாதி வெற்றியை எட்டிப் பிடித்து விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஆடு நனையுது என்ற ஒநாய்களின் கவலையே தவிர.

இராஜதந்திர முடிவுகளோ நகர்வுகளோ கிடையாது..............

துருக்கியின் சந்தையை யார் கைப்பற்றுவது?

சீனா? அமெரிக்கா? ஐரோப்பா?

இந்த கேள்விக்கான விடையை தேடினால் பிகேகே யின் தற்போதைய முடிவுக்கான காரணம் தெரியும்.

தவிர என்னதான் அமெரிக்கா படம் காட்டினாலும் ஈராக்கில் உள்ள சன்னி சியாத் இரு பகுதி முஸ்லிகளும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு உண்மையாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறியானது என்பது அமெரிக்காவிற்கு தெளிவாக தெரிந்த ஒன்று. தனது கைபொம்மைகளை வைத்து அரசியல் சித்து விளையாட்டை இன்னும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கே செய்ய முடியும். ஈராக்கில் உண்மையிலேயே ஒரு ஜனநாயக அரசியல் நடக்க கூடிய சாத்தியமான நாடகளில் இந்த கைபொம்மைகளை ஈராக் மக்கள் நிராகரிப்பார்கள் என்பது திண்ணம். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு புணரமைப்பு பணிகளே அங்கு இருக்கிறதே தவிர பணம் பார்க்க கூடிய சந்தை இல்லை. ஆக ஒரு சர்வதேச சந்தை உருவாகும் காலத்தில் ஈராக் தனது கைகளை விலகிவிடும் என்ற பயம் தற்போதைய அமெரிக்க அதிகாரிகள் பலருக்கும் உண்டு.

இப்போது எடுத்தோம் கவுட்டோம் என்ற நிலையிலேயே அமெரிக்க அதிகாரிகளும்......... இராஜதந்திர ரீதியாக விஷயங்களை வெல்ல கூடியவர்கள் இல்லாதிருப்பதாகவே தெரிகின்றது. ஈரானிய விடயம் எனிலும் வடகொரிய விடயம் எனிலும் இரஜதந்திர நகர்வு என்று ஏதையும் காணவில்லை. ஏதோ பல கோடி செலவில் இயங்கும் சி.அய். ஏ மட்டும் ஏதோ சில கோடிக்கு என்றாலும் ஏதாவது படம் காட்ட வேண்டும் என்பதால். சிலரை சிறைபிடிக்க வைப்பதும் சிலரை சிறைபிடிப்பதும்........ என்று போய் இப்ப ஒரு தென்கொரிய கப்பலை தகார்த்துவிட்ட அளவில் இருக்கு.

தனது ஈராக்கிய உறவை ஈராக் குர்திஸ் இன மக்களை வைத்து தக்கவைக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. ஆதே நேரம் துருக்கியின் தற்போதைய தலைவரின் இஸ்ரேலுக்கு எதிரான நிலைபாடு என்பதும் குர்திஸ் இன மக்களை ஒரு காயக நகர்த்த அமெரிக்காவிற்கு தேவைபடுகின்றார்கள்.

ஐயோ நீங்கள் இவ்வளவு காலமும் போராடுகின்றீர்கள் துருக்கி காணவே இல்லையா? என்ற மாதிரி மறைமுகமாக துருக்கியோடு இணைந்து போர் செய்தவர்கள் போயிருக்கிறார்கள்.

அதிலும் முக்கியமான விடயம்....... உள்நாட்டில் போரை தொடராமல் ஒரு சமரசமான நிலையை தோற்றுவித்து ஏற்றுமதியில் ஒரு கணிசமான இடத்தையும் உல்லாச பயணிகளின் nhகையிலும் ஒரு ஏற்றத்தையுமு; காணவேண்டும் என்ற நிலை தற்போதைய துருக்கி அரசியடமு; உள்ளது. ஆக அவர்கள் நேரடியாக பேசி ஒரு முடிவை எட்டினால்.

தமக்கு ஒரு லாபமும் இல்லை என்ற எண்ணமே....... ஓர பகுதிக்கு மறைமுக ஆதரவும் மற்றையவருக்கு வெளிபுற ஆதரவும் என்று.

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் வேலை நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயூதக்களைவுகளுக்குப் பின்பு சிலவேளை குர்திஸ் போராளிகள் கொல்லப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.