Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம்.

karunas1.jpg

இலங்கை அரசு வானொலியில் நிகழ்ச்சி நடத்த இன்று காலை செல்லவிருந்த நிலையில் தமிழகம் முழுக்க இருந்து மர்ம மனிதர்கள் கருணாஸை கண்டித்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து செய்தியாளர்களிடையே பேசிய காமெடி நடிகர் கருணாஸ். “இலங்கை செல்ல முடிவு செய்துள்ளதால் தன்னை நாம்தமிழர் இயக்கத்தினர் செல்போனில் மிரட்டு வதாகவும், தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இழிவுபடுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கருணாஸின் புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். இன்று காலை விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து விட்டேன். நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரில் நான் இலங்கை செல்வதை கண்டித்து எனது செல்போனுக்கு 150 க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.க்கள் வந்துள்ளன. சிங்களன் நடத்தும் வானொலி நிகழ்ச்சியில் ரூ.10 லட்சம் பணத்துக்காக குடும்பத்தோடு செல்கிறார். அம்பாசமுத்திரம் அம்பானி இலங்கை செல்லும் இந்த துரோகிக்கு வழி அனுப்புங்கள் என்று எஸ்.எம்.எஸ்.சில் குறிப்பிடப்பட்டு உள்ளது. போன் செய்தும் மிரட்டுகிறார்கள்.இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். 1985ம் ஆண்டிலேயே கொடி விற்று ஈழத்தமிழர்களுக்காக பணம் கொடுத்தவன் நான். இலங்கை அகதி முகாமில் உள்ள 25 மாணவர்களை படிக்க வைக்கிறேன்.

என்னை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. என் சம்பளத்தில் 40 சதவீதம் தொகையை ஈழத் தமிழர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளேன். நான் நிச்சயம் இலங்கை செல்வேன்.உலகத்தில் இருக்கக் கூடிய ஈழத்தமிழர்களுக்காக வருத்தப்படுகிறவர்கள் எங்களைப்போன்ற பலகோடி பேர் இருக்கிறார்கள். நீங்கள் மட்டும்தான் அவர்களுக்காக இருப்தைப்போன்ற அரசியலை இனிமேல் செய்யாதீர்கள் என்றார். கருணாஸ் இலங்கை அரசு அழைப்பின் பெயரில் செல்கிற நிகழ்வை மறுத்திருக்கிறார்.கருணாஸ்சின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில் கருணாசை தமிழக போலீசார் பத்திரமாக இலங்கைக்கு வழியனுப்பி வைத்தார்கள்.

http://inioru.com/?p=15403

யாரையும் அடாவடித்தனமாக அணுகாமல் நிதானமாக சினேகபூர்வமாக

அணுகி இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனங்களை விபரமாக எடுத்துக்கூறி

நம்வழிக்குக் கொண்டுவருவதே தற்போதைய நிலையில் சிறந்த வழி

http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/07/25-actor-karunaas-srilanka-tamils-naam-tamilar.html

நாம் தமிழர் இயக்கத்தின் உணர்வுகளுக்கு தலை வனங்கும் அதேவேளை ... உணர்ச்சி வசப்பட்ட சில நடவடிக்கைகள் ... மீண்டும் தமிழகத்தில் எமக்கெதிரான சக்திகளுக்கே வாய்ப்பளிக்கப் போகிறது!

http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/07/25-actor-karunaas-srilanka-tamils-naam-tamilar.html

நாம் தமிழர் இயக்கத்தின் உணர்வுகளுக்கு தலை வனங்கும் அதேவேளை ... உணர்ச்சி வசப்பட்ட சில நடவடிக்கைகள் ... மீண்டும் தமிழகத்தில் எமக்கெதிரான சக்திகளுக்கே வாய்ப்பளிக்கப் போகிறது!

`

இப்பிடி உணர்ச்சியே இல்லாமல் ஒதுங்கி நிண்டு போட்டு தான் இப்ப புலிகளை விமர்சிக்கிறீர்கள்... அது போல நாம் தமிழரையும் விமசிக்கலாம்... காய்க்கிற மரம் தானே கல்லடி படுகிறதிலை தவறு இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/07/25-actor-karunaas-srilanka-tamils-naam-tamilar.html

நாம் தமிழர் இயக்கத்தின் உணர்வுகளுக்கு தலை வனங்கும் அதேவேளை ... உணர்ச்சி வசப்பட்ட சில நடவடிக்கைகள் ... மீண்டும் தமிழகத்தில் எமக்கெதிரான சக்திகளுக்கே வாய்ப்பளிக்கப் போகிறது!

நீங்கள் தர்க்கரீதியாக இந்தகாலத்தில் வாழ்ந்தாலும்............. மனரீதிhயாக கி.மு வில் வாழ்கின்றீர்கள் அதுதான் இப்படி சிந்திக்க வேண்டிய வருகின்றது.

தற்பொழுது அடவடித்தனங்களையும் அநியாயங்களையும் அரசுகளே செய்கின்றன.

சதாம் உசைன் 3000பேரை கொன்றதற்கு தூக்கு. 3லட்சம் மக்களை மூன்று நாட்கிளில் கொன்ற ஜோர்ஜ்புஸிற்கு வாழ்த்து. இதுதான் உலகம்.

அமைதியாக போராடுபவன் பயங்கரவாதி............

அநியாயங்களை கேட்கவே கூடாது................

கருநாணநிதியை பற்றி கவிதை எழுதி பாடவேண்டும் அதுவே தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டும் உங்களை தமிழன் என்று நீங்கள் பறைசாற்ற கூடிய வழியும்.

அதை செய்யாதவர்கள் தமிழின தோரோகிகள். அதுவே தற்போதைய தமிழநாடு.

கருணாஸ் என்ன கொம்பனா இலங்கைசெல்ல இந்த நாய் எதற்கு அங்கு செல்ல வேண்டும்?

சிங்களவன் பணம்போடுகிறான் இவன் போகிறான்............. இதில் இவனோடு பேச என்ன இருக்கிறது?

நாம் தமிழர் இயக்கத்தை தடைசெய்ய வேண்டும் பழி போடவேண்டும். அவர்கள் நடந்துபோனாலும் இனி குற்றமே!

குந்தி இருந்தாலும் குற்றமே............

தற்போதைய சன் ரீவியில் வருவதுதான் செய்தியும் நடந்ததும் என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால்.............

நீங்கள் சொல்வது சரிதான். கருணாசோடு குந்தியிருந்து பேசி அவருக்கு சில உண்மைகளை சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம்.

-------

செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். இன்று காலை விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து விட்டேன்.

karunas.jpg28r012h.jpgNice%20Smiley%20Hair%20Cut_t.jpg

பஸ்ஸிலை டிக்கற் எடுத்து திருப்பதியிலோ, பழனியிலோ போய் மொட்டை அடிப்பதற்கு......

பதிலாக விமானத்திலை போய் மொட்டை அடிக்க வேணும் என்று கருணாஸுக்கு அப்படி என்ன தலைக்கு மேலை பிரச்சினையோ........ :lol::lol:

.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் இயக்கத்திற்கு நன்றி சொல்ல வேணும். இன்னொண்டையும் கவனிக்க வேணும். இப்ப யார் எவர் எண்டு வெளியில பிரபலமாகாத "அல்லக்கையள்" எல்லாத்துக்கும் இலகுவா பேப்பரில பெயர் வாறதுக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு: அது தான் சிறி லங்கா போறது, அந்தச் செய்திய தாங்களே கசிய விடுறது. போற வாற செலவைக் கூட சிங்களவன் குடுப்பான், எனவே இலவச விளம்பரம் தான் இது. இந்த அல்லக் கையளிட்ட எங்கட நேரத்தை வீணாக்காம வேற எதுவும் செய்தால் நல்லம். ஆனா சமயம் கிடைக்கும் போது "தீட்டிப் போட்டுத் தான்" விட வேணும். உ+ம்: இங்காலப் பக்கம் வந்தால் எங்கட ஈழத் தமிழர் இதுகளிட நிகழ்ச்சியத் திரும்பியும் பார்க்கக் கூடாது. அதிக பட்சம் ஒரு செருப்பு முட்டை ஏதாவது எறிஞ்செண்டாலும் துரத்தலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் இயக்கத்திற்கு நன்றி சொல்ல வேணும். இன்னொண்டையும் கவனிக்க வேணும். இப்ப யார் எவர் எண்டு வெளியில பிரபலமாகாத "அல்லக்கையள்" எல்லாத்துக்கும் இலகுவா பேப்பரில பெயர் வாறதுக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு: அது தான் சிறி லங்கா போறது, அந்தச் செய்திய தாங்களே கசிய விடுறது. போற வாற செலவைக் கூட சிங்களவன் குடுப்பான், எனவே இலவச விளம்பரம் தான் இது. இந்த அல்லக் கையளிட்ட எங்கட நேரத்தை வீணாக்காம வேற எதுவும் செய்தால் நல்லம். ஆனா சமயம் கிடைக்கும் போது "தீட்டிப் போட்டுத் தான்" விட வேணும். உ+ம்: இங்காலப் பக்கம் வந்தால் எங்கட ஈழத் தமிழர் இதுகளிட நிகழ்ச்சியத் திரும்பியும் பார்க்கக் கூடாது. அதிக பட்சம் ஒரு செருப்பு முட்டை ஏதாவது எறிஞ்செண்டாலும் துரத்தலாம்!

தமிழக கலீஞ்சர்களை பற்றி புரிந்து கொண்டதற்கு நன்றிகள் பல நண்பரே... இவர்கள் மணவீட்டில் மணமகனாகவும் எழவுவீட்டில் பிணமாகவும் நடிக்க ஆசைபடுபவர்கள்... உதாரணம்... பாலசந்தரின் பின்னகை மன்னன் படம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.