Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி. மாறியது ஏன்? பிரதமர் உருத்திரகுமாரன் பிரத்தியேகப் பேட்டி

Featured Replies

நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முதல் பிரதமராக உருத்திரகுமாரன்

தேர்ந்தெடுக்கப்பட்டு இருக் கிறார். அடியோடு வீழ்த்தப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் இப்போதைய நம்பிக்கை, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுதான்! அதேசமயம், 'இந்த முயற்சியெல்லாம் சாத்தியமா?' என்ற கேள்விகளும் இருக்கவே செய் கின்றன.

அமெரிக்காவில் இருக்கும் உருத்திரகுமாரனிடம் பேசினோம். புதிய 'அரசின்' பிரதமரான பிறகு முதன் முறை யாக அவர் நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி இது...

'' நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?''

''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப் படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறை வேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்றை சட்டங்களாக என்றுமே ஏற்கவில்லை. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் அவர்களின் சட்டங்களுக்கு முரணாக இருப்பதாகச் சொல்வதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எமது அரசாங்கம் அனைத்து நாடுகளின் சட்டங்களுக்கும், குறிப்பாக அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கும் பொருந்துவதாகவே அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டங்களை ஓர் ஆயுதமாக ஏந்திய வண்ணம், தமிழ் ஈழ மக்களுக்கான சுதந்திரத் தமிழ் ஈழ அரசினை அமைப்பதற்காக எமது அரசாங்கம் அயராது உழைக்கும்!''

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இன்று இலங்கை அரசுக்கு ஆதரவாகிவிட்ட கே.பி-யின் சிந்தனையில்தான் முதலில் உருவெடுத்ததாகப் பரபரப்பு கிளம்பி வருகிறதே?''

''மே மாதம் 19-ம் தேதிக்குப் பின்னர் தோற்றம் பெற்ற புதிய சூழலில், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்த நகர்வுகளை முன்னெடுப்பதற்கு தாயகத்திலும் புலத்திலும் உள்ள அரசியலாளர்கள், அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்தே இந்த 'அரசாங்கம்' என்ற அரசியல் அமைப்பை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்தோம். இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகள் பொறுப்பாளர் என்ற பொறுப்பு நிலையில் இருந்து, கே.பி. களம் அமைத்துத் தந்தார். அதே வேளை, இந்த அமைப்பு உருவாக்கப்படும் முறையிலும், செயற்படும் முறையிலும் சுயாதீனமாகவே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவர் ஏற்றுக்கொண்டார். அந்த அடிப்படையில், இதை உருவாக்கும் முயற்சிக்குத் தலைமை தாங்க, நான் உடன்பட்டேன். மலேசியாவில் கே.பி. கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்ட பின்னர் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங் கம் தொடர்பாக அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

எமது அரசாங்கம் வெளிப்படையாக... தனது அமர்வுகளில் மக்களும் அவதானிப் பாளர்களாகப் பங்கு பெறக்கூடிய வகையில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மக்களால் நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் முடிவுக்கு ஏற்பவே இது தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது!''

''கே.பி-க்கு மிக நெருக்கமானவராக உங்களைச் சொல்கிறார்கள். சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி அவர் பரப்பும் கருத்துகளை எப்படிப் பார்க் கிறீர்கள்?''

''நான் போராட்டத்துக்குத்தான் நெருக்கமானவன். உண்மையில் கே.பி. அனைத்துலக உறவுகள் பொறுப் பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், மிகக் குறுகிய காலமே அவருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவருடன் மட்டுமல்ல... அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், அனைத்துலகத் தொடர் பகப் பொறுப்பாளர் காஸ்ட்ரோ ஆகியோருடன் இதே காலப் பகுதியில் தொடர்புகள் இருந்தன. மக்கள் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த இனப் படுகொலையை, எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என்பதே இந்தத் தொடர்புகளுக்குக்காரணமாக இருந்தன.

சிங்களத்தின் பிடியில் உள்ள கே.பி-யால் சுதந்திரமாக இயங்க முடியாது. ஸ்ரீலங்காவின் சிறைகளுக்குள் இருக்கும் எவராலும் தமிழ்த் தேசியத்துக்குப் பங்காற்ற முடியாது!''

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக எப்போது தமிழகத்துக்கு வரப்போகிறீர்கள்?''

''அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சக்தி தமிழக மக்களுக்கு உண்டு என்றே நான் கருதுகிறேன்!''

''விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் - இந்நாள் தலைவர்கள், நாடு கடந்த தமிழ் ஈழ அரசை ஆதரித்து உங்களிடம் பேசினார்களா?''

''தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை... நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் ஊடாக அடுத்த கட்டம் நோக்கி முன்னெடுக்க விரும்பும் அனைவரும் எங்களின் முயற்சியை ஆதரிக்கிறார்கள். உங்கள் கேள்வியின் நோக்கத்தை இந்த வார்த்தைகள் பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்!''

''புலித் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா...?''

''எதிர்காலம் இதற்கு பதில் சொல்லும்!''

- இரா.சரவணன்

நன்றி ஜூனியர் விகடன்

மிகவும் ஆரோக்கியமான நம்பிக்கை தரக்கூடிய பதில்கள். அதிலும் ஒரு அரசியல் வாதிக்கு ஏற்ற பதில்கள்.

எல்லாவற்றிலும் உண்மையான எல்லாருக்குமே தெரிந்த கூற்று: "சிங்களத்தின் பிடியில் உள்ள கே.பி-யால் சுதந்திரமாக இயங்க முடியாது. ஸ்ரீலங்காவின் சிறைகளுக்குள் இருக்கும் எவராலும் தமிழ்த் தேசியத்துக்குப் பங்காற்ற முடியாது!''

மிகவும் ஆரோக்கியமான நம்பிக்கை தரக்கூடிய பதில்கள். அதிலும் ஒரு அரசியல் வாதிக்கு ஏற்ற பதில்கள்.

அவசரம் வேண்டாம்! இன்று பகல்தானே இப்பேட்டி வெளியாகியிருக்கிறது!! .. அனேகம் இந்நேரம் "நெடியமான்களும், அதியமான்களும்" விசப்பலகையில் குப்பைகளை கொட்ட தொடங்கியிருப்பார்கள்! ... அதை இங்கும் "ஆதிரைகளும், கலைவாணிகளும்" இங்கும் கொண்டு வந்து கொட்டுவார்கள்! ..... ஈழத்தமிழன் தலை நிமிர்வதா?????????????

.. அதேநேரம் "கறுப்புகளும், தரவுகளும்" குரல்களை வெட்டி ஒட்டி கூத்தாட வெளிக்கிடுவார்கள்! .... தரித்திரம் பிடித்த இனம் .... விடிவு கிட்டடியிலை?????????

.. அதேநேரம் "கறுப்புகளும், தரவுகளும்" குரல்களை வெட்டி ஒட்டி கூத்தாட வெளிக்கிடுவார்கள்! .... தரித்திரம் பிடித்த இனம் .... விடிவு கிட்டடியிலை?????????

எது எப்படிருப்பினும் புலம் பெயர் தமிழர் ஒற்றுமையாக இருங்கள்.

சிங்கள்வன் 2006-9 எப்படி ஒற்றுமையாக நம்மை அழிக்க சேர்ந்தானொ அதுபோல் தமிழன் இருக்க வேண்டும். இல்லையே விடிவேது.

ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

புலம்பெயர் சிங்களம் சார்பான தமிழர் விரோத கும்பல்களே நீங்கள் நினைப்பது போல் சிங்களவன் உங்களுக்கு பட்டுக்குஞ்சம் சார்த போவதில்லை.

சரத்துக்கு நடந்தது தெரியும். அதுதான் உங்களுக்கும். ஒரு சிற்றின்ப வெறி உங்களுக்கு கிடைக்கும். ஆனால் உங்கள் ச்கோதர்ர்கள் சகோதரிகள், மனைவி,அம்மா, அப்பா......... எல்லோரையும் சிங்களவன் தமிழன் என்று பார்த்து கொல்வான். அப்போ உங்கள் நிலை என்ன என்று யோசிபீர்களா???

அவசரம் வேண்டாம்! இன்று பகல்தானே இப்பேட்டி வெளியாகியிருக்கிறது!! .. அனேகம் இந்நேரம் "நெடியமான்களும்இ அதியமான்களும்" விசப்பலகையில் குப்பைகளை கொட்ட தொடங்கியிருப்பார்கள்! ... அதை இங்கும் "ஆதிரைகளும்இ கலைவாணிகளும்" இங்கும் கொண்டு வந்து கொட்டுவார்கள்! ..... ஈழத்தமிழன் தலை நிமிர்வதா?????????????

நன்றி

நெல்லையான்.

உங்கள் மதிப்பீடு தவறு.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்களுக்கு கேபியோ அதியமான்களோ தேவையில்லை.தமிழ்மக்களின் இக்கட்டான நிலையில் தமிழர்களின் அரசியல் உயிர்ப்பு நிலையில் இருப்பதற்கு ஒரு அமைப்பு அவசியம். நாடு கடந்த அரசே அதற்குப் பொருத்தமானதும் சர்வதேச நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கு பொருத்தமான அமைப்பாக இருக்கிறது.கேபி முன் மொழிந்தார் என்பதற்காக தமிழ்மக்கள் அதை வெறுக்கவில்லை.வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களித்த மக்களே நா.க. அரசுக்கும் வாக்களித்தார்கள்.மக்கள் போராட்டத்துக்கு தயாராகத்தான் இருக்கிறார்கள்.வழி நடத்துபவர்கள்தான் தங்களுக்குள் அடிபடுகிறார்கள்.இப்படியே போனால் புலம்பெயர் மக்கள் வெறுப்படைந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு தாங்கள் தங்கள் வேலை குடும்பம் என்று இருந்து விடுவரர்கள். அவர்களின் போராட்டக் குணம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு விடும்.அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் அதற்கு இப்போது தலைமைப் பொறுப்புக்காக அடிபடுபவர்களே அதற்குப்; பொறுப்பாளர்கள் ஆவர். நா.க.அரசை எதிர்ப்பவர்கள் அதன் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது விசித்திரமாக இருக்கிறது.உருத்திரகுமாரன் அதற்கு தலைமை ஏற்கப் பொருத்தமானவரே.நா.க.அரசுக்கு உயிர் கொடுத்து அதை இந்த அளவுக்கு கொண்டு வந்தவர் உருத்திரகுமாரனே.அவர் தலைமையில் கொஞ்சக் காலம் இயங்க விடுங்களேன். அவர் அரசியல் வேலைகளைக் கவனிப்பதா?அல்லது எதிராளிகளின் பிரச்சாரத்துக்கு பதிலளிப்பதா? தேவை தமிழ் மக்களின் ஒற்றுமை.அதனை அழிக்க முற்படும் ஊடகங்களை புறந்தள்ளுவோம்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படிருப்பினும் புலம் பெயர் தமிழர் ஒற்றுமையாக இருங்கள்.

சிங்கள்வன் 2006-9 எப்படி ஒற்றுமையாக நம்மை அழிக்க சேர்ந்தானொ அதுபோல் தமிழன் இருக்க வேண்டும். இல்லையே விடிவேது.

ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

புலம்பெயர் சிங்களம் சார்பான தமிழர் விரோத கும்பல்களே நீங்கள் நினைப்பது போல் சிங்களவன் உங்களுக்கு பட்டுக்குஞ்சம் சார்த போவதில்லை.

சரத்துக்கு நடந்தது தெரியும். அதுதான் உங்களுக்கும். ஒரு சிற்றின்ப வெறி உங்களுக்கு கிடைக்கும். ஆனால் உங்கள் ச்கோதர்ர்கள் சகோதரிகள், மனைவி,அம்மா, அப்பா......... எல்லோரையும் சிங்களவன் தமிழன் என்று பார்த்து கொல்வான். அப்போ உங்கள் நிலை என்ன என்று யோசிபீர்களா???

நன்றி சுனாமி தங்கள் கருத்துக்கும் நேரத்துக்கும்

கொஞ்சப்பேர் தடுமாறித்திரியினமே தவிர....

புலம் பெயர் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறம்

புலம் பெயர்ந்தவர்கள் தான் அடுத்த கட்டத்தை நகர்த்தவேணும் என்ற பொறுப்புடன் செயற்படும்வரை

புலம்பெயர் சமூகம் இங்கு தடுமாறுபவர்களுக்கு இடம் தராது

எங்க சுற்றியும் எம்மிடமிருந்து நீராகமம் போகாது விடில் இவர்கள் பூச்சியம்

எனவே ............

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுனாமி தங்கள் கருத்துக்கும் நேரத்துக்கும்

கொஞ்சப்பேர் தடுமாறித்திரியினமே தவிர....

புலம் பெயர் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறம்

புலம் பெயர்ந்தவர்கள் தான் அடுத்த கட்டத்தை நகர்த்தவேணும் என்ற பொறுப்புடன் செயற்படும்வரை

புலம்பெயர் சமூகம் இங்கு தடுமாறுபவர்களுக்கு இடம் தராது

எங்க சுற்றியும் எம்மிடமிருந்து நீராகமம் போகாது விடில் இவர்கள் பூச்சியம்

எனவே ............

சரியாகச் சொன்னீர்கள் விசுகு.

கொஞ்சப்பேர் தடுமாறித்திரியினமே தவிர....

புலம் பெயர் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறம்

எனவே ............

... பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிக்கேக்கை நினைக்குமாம் ... பூலோகம் இருண்டு கிடக்குதென்று!! ... விசுகு இதைப்போலத்தான் உங்கள் கருத்தும் .... நிஜ உலகில் நீங்கள் இல்லை என்பது மட்டும் தெரிகிறது!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்களுக்கு கேபியோ அதியமான்களோ தேவையில்லை.தமிழ்மக்களின் இக்கட்டான நிலையில் தமிழர்களின் அரசியல் உயிர்ப்பு நிலையில் இருப்பதற்கு ஒரு அமைப்பு அவசியம். நாடு கடந்த அரசே அதற்குப் பொருத்தமானதும் சர்வதேச நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கு பொருத்தமான அமைப்பாக இருக்கிறது.கேபி முன் மொழிந்தார் என்பதற்காக தமிழ்மக்கள் அதை வெறுக்கவில்லை.வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களித்த மக்களே நா.க. அரசுக்கும் வாக்களித்தார்கள்.மக்கள் போராட்டத்துக்கு தயாராகத்தான் இருக்கிறார்கள்.வழி நடத்துபவர்கள்தான் தங்களுக்குள் அடிபடுகிறார்கள்.இப்படியே போனால் புலம்பெயர் மக்கள் வெறுப்படைந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு தாங்கள் தங்கள் வேலை குடும்பம் என்று இருந்து விடுவரர்கள். அவர்களின் போராட்டக் குணம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு விடும்.அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் அதற்கு இப்போது தலைமைப் பொறுப்புக்காக அடிபடுபவர்களே அதற்குப்; பொறுப்பாளர்கள் ஆவர். நா.க.அரசை எதிர்ப்பவர்கள் அதன் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது விசித்திரமாக இருக்கிறது.உருத்திரகுமாரன் அதற்கு தலைமை ஏற்கப் பொருத்தமானவரே.நா.க.அரசுக்கு உயிர் கொடுத்து அதை இந்த அளவுக்கு கொண்டு வந்தவர் உருத்திரகுமாரனே.அவர் தலைமையில் கொஞ்சக் காலம் இயங்க விடுங்களேன். அவர் அரசியல் வேலைகளைக் கவனிப்பதா?அல்லது எதிராளிகளின் பிரச்சாரத்துக்கு பதிலளிப்பதா? தேவை தமிழ் மக்களின் ஒற்றுமை.அதனை அழிக்க முற்படும் ஊடகங்களை புறந்தள்ளுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

... பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிக்கேக்கை நினைக்குமாம் ... பூலோகம் இருண்டு கிடக்குதென்று!! ... விசுகு இதைப்போலத்தான் உங்கள் கருத்தும் .... நிஜ உலகில் நீங்கள் இல்லை என்பது மட்டும் தெரிகிறது!!

ஐயா

மற்றவர்களை நோக்கி கல் எறியும் முன் தங்களை தெளிவாக்குங்கள்

நீங்கள் யாழில் எழுதும் அத்தனை வரிகளும் தமிழனை வெறுப்படைய வைக்குமே தவிர தெளிவடைய வைக்காது.

எவன் எவன் அடிபடுகிறான் என்பதை இங்கு எழுத நாம் வரவில்லை.

அப்படி இருந்தால் அவர்களிடம் நேரே சொல்லவும்

எனக்கு

அவர்களால் எம்மை மீறி எதுவுமே செய்துவிட முடியாது என்று தெரியும்.

வெளியே நின்று தூசிப்பதை நிறுத்தி உள்ளே வாருங்கள்.

தங்களுக்கும் அது புரியும்

யார் எதைச் சொன்னாலும் அதை நம்ப ஒரு கூட்டம்.

இது எனது தனிப்பட்ட கருத்து நாடு கடந்த அரசிற்கு ஆயுள் 5 வருடத்திகுள்ளேதான்.இப்படியே கரைந்துபோய் விடுவார்கள்.

பச்சை புள்ளிக்கு கருத்து எழுத நான் தயாரில்லை.

முன்னர் புலிகள் பற்றியும் இதே கருத்தை பல தடவை பல இடத்தில் வைத்திருந்தேன்.

இன்றும் எமது உலகம் நெடுமாறனும்,சீமானும்,அசினும்,நக்கீரனும் ,ஜூனியர் விகடனும் ,.

புலிகளும் சரி நாடுகடந்த அரசும் சரி போராட்டம் நடத்துவது எங்களுக்குள்ளதான்

30 வருடப் போராட்டம் ஒரு உலகநாடு ஆதரவுஇல்லை. இவர்களை கண்டால் கனேடிய எம்.பீ மார் பின் கதவால் போகின்றார்கள்.

வெக்கக் கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் சரி நாடுகடந்த அரசும் சரி போராட்டம் நடத்துவது எங்களுக்குள்ளதான்

இப்படி தாங்கள் குறிப்பிடுவது தங்களைத்தானே...

உங்களைப்போல் 4 தமிழர்கள் நா.க. அரசை மதிக்காவிட்டால்....

கனடா எம்பி மார் மதிப்பினமோ..?

மதிக்கத்தான் தாங்கள் விட்டுவிடுவீர்களோ...???

இதற்குள் நான் சொன்னந்தானே நடந்திட்டு பார் என்று மாறுப்பு வேற...............

Edited by விசுகு

ஐயா

மற்றவர்களை நோக்கி கல் எறியும் முன் தங்களை தெளிவாக்குங்கள்

நீங்கள் யாழில் எழுதும் அத்தனை வரிகளும் தமிழனை வெறுப்படைய வைக்குமே தவிர தெளிவடைய வைக்காது.

எவன் எவன் அடிபடுகிறான் என்பதை இங்கு எழுத நாம் வரவில்லை.

அப்படி இருந்தால் அவர்களிடம் நேரே சொல்லவும்

எனக்கு

அவர்களால் எம்மை மீறி எதுவுமே செய்துவிட முடியாது என்று தெரியும்.

வெளியே நின்று தூசிப்பதை நிறுத்தி உள்ளே வாருங்கள்.

தங்களுக்கும் அது புரியும்

விசுகு அண்ணா, ... நீங்கள் தான் மேல் எழுதியிருந்தீர்கள், மக்கள் தெளிவாக இருக்கிரார்கள் என்று!!!!!! .. இத்தெளிவான மக்களை நெல்லையானின் சிலதுகள் குழப்பப்போகிறதா???? ... தயவு செய்து வெளியே நாலு மக்களுடன் கதையுங்கள் ... அவர்களின் தெளிவை பின்பு வந்து எழுதுங்கள்!!

... நெடியமான்களும், அதியமான்களும் ஒன்றும் செய்ய முடியாது என்ற உங்கள் கருத்துகளுக்கு மேல் ... யார் இந்த நெடியமான்களும், அதியமான்களும்????? இவர்களின் குப்பைகளை கொட்டும் "பதிவு, ஈழநாடு, ஈழமுரசு, கறுப்பு, தரவு..." என்பவைகள் யாரின் கைகளில்?????

நேற்றைய தினம் கூட இங்கு யாழிலும் உருத்திரகுமாரின் குரலென்று ஒரு குப்பையை தரவேற்றியிருந்தார்கள்!! அதற்கு சில தினங்களுக்கு முன்னும் உருத்திரகுமாரின் வெட்டி ஒட்டல்கள் கறுப்பு தொழில்நுட்பவல்லுனர்களால்!!!!!!! யாரப்பா இவர்கள், சிங்கள அரசா? அல்லது ஒட்டுக்கும்பல்களா??? ... உவைகளை விட கேவலமான ஜடங்கள்!!! கேட்டால் தமிழ்த்தேசியவாதிகளாம்!!!!!!??????

எல்லாவற்ருக்கும் விசிலடிக்காமல், மே18 அழிவுடன் சரி/பிழைகளை பகிரங்கமாக விவாதித்து ... தெளிவான எதிர்காலம் நோக்கிய செயற்பாட்டுக்கான அடித்தளத்தை மீண்டும் இட்டிருந்தால் ... இன்றைய கேவலங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்!!!

உண்மையை பேசுவோமாயின், புலத்தில் கூட தமிழ்த்தேசியம் விரைவாக சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!!! யாரால்????

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் நான் சொல்வது.....

எல்லாம் சரியாக இருக்கிறது என்று நான் எங்கு எழுதினேன்

தாயகத்திலுள்ளவர்கள் பயப்படவேண்டாம்

மக்கள் தெளிவாக உள்ளனர்

சிலர்தான் குளப்புகின்றனர்.

மக்களிடம் வரும்போது அடங்கிவிடுவர் என்று தானே எழுதினேன்.

நல்லதை வெளியில் சொல்

கெட்டதை அவனிடம் சொல்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுனாமி தங்கள் கருத்துக்கும் நேரத்துக்கும்

கொஞ்சப்பேர் தடுமாறித்திரியினமே தவிர....

புலம் பெயர் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறம்

புலம் பெயர்ந்தவர்கள் தான் அடுத்த கட்டத்தை நகர்த்தவேணும் என்ற பொறுப்புடன் செயற்படும்வரை

புலம்பெயர் சமூகம் இங்கு தடுமாறுபவர்களுக்கு இடம் தராது

எங்க சுற்றியும் எம்மிடமிருந்து நீராகமம் போகாது விடில் இவர்கள் பூச்சியம்

எனவே ...........

இதில் என்ன பிழையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. மக்கள் ஆதரவு இல்லாதவர்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது என்பதே இதன் தொனிப் பொருளாக உள்ளது.தேவையில்லாத அர்த்தங்களை எடுத்து குழப்பங்களை ஏற்படுத்துவது தமிழர்களை ஓற்றுமைப்படுத்த உதவாது மாறாக மேலும் பிளவுகளையே உருவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைப்புலவர்

சிலர் இங்கே பச்சை வேண்டும் பச்சை வேண்டும் என்று எழுதுகிறார்கள்

மேலே எழுதிய கருத்தை வாசிக்காமலே சிலர் பச்சை குத்தியுள்ளனர்.

அதிலிருந்து தெரிவது தாங்களே வேறு பெயரில் வந்து குத்துகிறார்கள் என்று

நடக்கட்டும் நடக்கட்டும்

விசுகு அண்ணா, இப்பக்கத்தில் உள்ள உங்கள் கருத்துகளுக்கு இயலுமான மட்டும் பச்சை போட்டுள்ளேன்! இனி உங்கள் கருத்து எங்கிருந்தாலும் என் பச்சை உங்களுக்கே! சந்தோசம்தானே???

யார் எதைச் சொன்னாலும் அதை நம்ப ஒரு கூட்டம்.

இது எனது தனிப்பட்ட கருத்து நாடு கடந்த அரசிற்கு ஆயுள் 5 வருடத்திகுள்ளேதான்.இப்படியே கரைந்துபோய் விடுவார்கள்.

பச்சை புள்ளிக்கு கருத்து எழுத நான் தயாரில்லை.

முன்னர் புலிகள் பற்றியும் இதே கருத்தை பல தடவை பல இடத்தில் வைத்திருந்தேன்.

இன்றும் எமது உலகம் நெடுமாறனும்,சீமானும்,அசினும்,நக்கீரனும் ,ஜூனியர் விகடனும் ,.

புலிகளும் சரி நாடுகடந்த அரசும் சரி போராட்டம் நடத்துவது எங்களுக்குள்ளதான்

30 வருடப் போராட்டம் ஒரு உலகநாடு ஆதரவுஇல்லை. இவர்களை கண்டால் கனேடிய எம்.பீ மார் பின் கதவால் போகின்றார்கள்.

வெக்கக் கேடு.

சரி அர்ஜுன், உங்களுக்கு இந்த அரசியல்களால் பெரும் வெட்கக்கேடு!! ... எல்லாம் சரி, என்ன இனி செய்யலாமென்றதை சொல்லுங்கோ????? எங்கே உங்கள் மாற்றுக்கருத்தை பார்ப்போம்!!! நீங்கள் உதை வெட்கப்படாமல்/தலை குனியாமல் சொல்லலாம்! ... இங்கு பல பக்கங்களில் வந்து துணிந்து கருத்தெழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள், கருத்து சுதந்திரம்! ஆனால் யாரும் திரும்ப உங்கள் பதிலை கேட்டால் ... எஸ்கேப்பாகி விடுகிற்ர்ரிகள்!? :wub:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன், ஏன் தமிழ்நெட் இணையத்தளத்தினை குற்றம் சாட்டவில்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழ்நெட்டும் அதன் இயக்குநர்களாக இருக்கக்கூடிய, நோர்வேயில் இருந்து இயங்கும் ஜெயா என்று அழைக்கப்படும் ஜெயச்சந்திரன் மற்றும் அமெரிக்காவில் இருந்து இயங்கும் சிறீ என்று அழைக்கப்படும் சிறீதரன். (இவர்கள்தானாம் எல்லாவற்றுக்கும் கிங்க் மேக்கர்களாக இருக்கின்றார்களாம்)

இப்படி எல்லாம் எழுதுவதால் மற்றவர்கள் நினைக்கக்கூடாது நாம் இங்கே காட்டிக்கொடுக்கின்றோம் என்று. அந்த வேலையை தொடங்கியதே அனைத்துலகத் தொடர்பகமும் அதன் வால்பிடிப் புலிகளும்தான். (இதனைப் பல தடவை இதே களத்தில் கூறிவிட்டேன்)

என்னவோ, இங்கே மாறி, மாறி வெட்டி குத்துப்படுங்கள். சிறிலங்கா அரசாங்கமானது மிக, மிகத் தெளிவாக இருக்கின்றது.

களத்தில் பல்வேறு படைக்கட்டுமானங்களோடும் நவீரக ஆயுதங்களோடு நின்ற விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் அழித்து வென்றவர்கள் சிறிலங்கா அரசு. ஆகையால் புலத்தில் இருந்து ஊளையிடும் காகிதப் புலிகளை அழிப்பதற்கு அதிக காலம் எடுக்காது.

ஏனெனில், சிறிலங்கா அரசானது சத்தம் இல்லாது இஸ்ரேலிய மொசாட் பாணியில் பல விடயங்களை செய்து வருகின்றனர். இதனைப் புரிந்து கொள்ளாமல் பல நாக்கிளிப் பூச்சிக்கள் எம்மத்தியில் இருப்பது சோகமான விடயம்தான்.

வருடங்கள் நீள்வதால் புலத்தில் ஏதோ இன்னும் செயற்பாடுகள் உயிர்ப்போடு இருப்பதாக இப்படி அறிக்கைகளையும் ஒலிப்பதிவுகளையும் மாறி, மாறி வெளியுலகம் தெரியாத ஐரோப்பா வாழ் முழுத் தமிழர்களையும் லண்டன், கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள சிலரை ஏமாற்றலாம். இவை எல்லாம் எத்தனை காலத்துக்குத்தான் என்பதே இங்கே எழும் கேள்வி.

இப்போதே பல இடங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பாகவோ அல்லது சிறிலங்கா அரசியல் தொடர்பாகவோ தமிழர்கள் கூடும் இடங்களில் உரையாடப்படுவது தவிர்க்கப்பட்டு வருகின்றன. இது எதனைக் காட்டுகின்றது என்பதனை இங்கே சிந்திக்கக்கூடியவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

நாடு கடந்த அரசு கூட இங்கே தொடர்ந்து அறிக்கைகளையும் தாம் கூடி கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனரே தவிர, சிறைக்குள் இருக்கின்ற போராளிகள் மற்றும் மக்களின் விடுதலைக்கு எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது இருப்பது வேதனையானது. இங்கே நாம் எழுதிவிட்டு மறைவது போன்றுதான் மற்றவர்களின் செயற்பாடுகளும்.

அதாவது, நாடு கடந்த அரசு குழுவினரும் சரி தமிழ்த் தேசியத்தினை குத்தகைக்கு எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளும் சரி இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை போருக்குப் பின்னைய காலத்தில் செய்யவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.

சென்ற வார இறுதியில் கேபியான பாண்டரை அதிஸ்டவசமாக சந்தித்தேன்! ... பேச்சுக்கள் அரசியலாகி போக பாண்டர் கேட்டார் "ஏன், இந்த கூட்டமைப்பினர், அரசியல் அரங்கத்தை ஆதரிக்கவில்லை/" என்று, நானோ "உந்த அரங்கத்தில் இருக்கிற டக்லஸ், 18வது திருத்தச்சட்டத்துக்கே ஆதரவாக வாக்களிக்கிறான்! இவனா, அட்லீஸ் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வர வாக்களிக்கப்போகிறான்?" என்றேன். பாண்டரோ பெருங்கெக்கட்டை விட்டு, "ராஜபக்ச 13வதில் உள்ளதையும் பிடுங்கி எடுக்கப் போகிறான், இனி என்ன செய்யப்போகிறீர்கள்?" என்றார்!!! ... இதை கெக்கட்டைச்சிரிப்புடன் சொன்னவர் தமிழ் மக்களின் விடிவிற்காக புதிய தேசியத்தலைவராக தனக்கு தானே முடி சூட்டிய கேபியின் லண்டன் வலதுகரம்!!!!!

மேலும் கதைக்கும்போது சொன்னார் .. கேபி சொன்னார் என்று ... யாழில் வரதராஜப்பெருமாளுகள் வந்திட்டாங்களாம், வந்தவுடன் மக்களுக்கு ஏதும் செய்வதென்று ஒன்றுமில்லாமல் கப்பம் கேட்க வெளிக்கிட்டுட்டாங்கள் என்று! தமிழ் மக்களின் பிரட்சனைக்கு தீர்வு கப்பம் பெறுவதோடு முடுந்து விடும்?!

இன்னுமொருவர், முன்பு "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்றவர், மத்திக்கே எல்லாவாட்சியாக்கி விட்டுட்டார். புலி அழிவோடு இப்போவெல்லாம் தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள அரசியல் பிரட்சனை தொடர்பாக அவர்கள் மூச்சே இப்போது விடுவதில்லை!!!

இங்கு இன்னும் கொஞ்சம் முன்னல் ரெலோகளாம், சந்திப்பாம்!! என்ன ... தமிழ் மக்களுக்கு இப்போ தேவை அபிவிருத்தியாம்!!!

சகோதர யுத்தம் என்று எம்மை நாம் அழித்ததை வெறுத்தாலும், அதனையும் மீறி பல தடவைகள் எண்னத்தோன்றுகிறது .... இந்த எச்ச சொச்ச ஒட்டுக்குழுக்களையும் ஏன் பிரபாகரன் போட்டுத்தள்ளாமல் விட்டு விட்டார் என்று!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வார இறுதியில் கேபியான பாண்டரை அதிஸ்டவசமாக சந்தித்தேன்! ... பேச்சுக்கள் அரசியலாகி போக பாண்டர் கேட்டார் "ஏன், இந்த கூட்டமைப்பினர், அரசியல் அரங்கத்தை ஆதரிக்கவில்லை/" என்று, நானோ "உந்த அரங்கத்தில் இருக்கிற டக்லஸ், 18வது திருத்தச்சட்டத்துக்கே ஆதரவாக வாக்களிக்கிறான்! இவனா, அட்லீஸ் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வர வாக்களிக்கப்போகிறான்?" என்றேன். பாண்டரோ பெருங்கெக்கட்டை விட்டு, "ராஜபக்ச 13வதில் உள்ளதையும் பிடுங்கி எடுக்கப் போகிறான், இனி என்ன செய்யப்போகிறீர்கள்?" என்றார்!!! ... இதை கெக்கட்டைச்சிரிப்புடன் சொன்னவர் தமிழ் மக்களின் விடிவிற்காக புதிய தேசியத்தலைவராக தனக்கு தானே முடி சூட்டிய கேபியின் லண்டன் வலதுகரம்!!!!மேலும் கதைக்கும்போது சொன்னார் .. கேபி சொன்னார் என்று ... யாழில் வரதராஜப்பெருமாளுகள் வந்திட்டாங்களாம், வந்தவுடன் மக்களுக்கு ஏதும் செய்வதென்று ஒன்றுமில்லாமல் கப்பம் கேட்க வெளிக்கிட்டுட்டாங்கள் என்று! தமிழ் மக்களின் பிரட்சனைக்கு தீர்வு கப்பம் பெறுவதோடு முடுந்து விடும்?! இன்னுமொருவர், முன்பு "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்றவர், மத்திக்கே எல்லாவாட்சியாக்கி விட்டுட்டார் புலி அழிவோடு இப்போவெல்லாம் தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள அரசியல் பிரட்சனை தொடர்பாக அவர்கள் மூச்சே இப்போது விடுவதில்லை!!!

சகோதர யுத்தம் என்று எம்மை நாம் அழித்ததை வெறுத்தாலும், அதனையும் மீறி பல தடவைகள் எண்னத்தோன்றுகிறது .... இந்த எச்ச சொச்ச ஒட்டுக்குழுக்களையும் ஏன் பிரபாகரன் போட்டுத்தள்ளாமல் விட்டு விட்டார் என்று!!!!!!![/i]

ஐயா

இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்கின்றோம்

இதை புரிந்து கொண்டதால் தான் நாம் இவ்வாறு தொடர்ந்து எழுதுகின்றோம்

சிங்களவன் எதுவும் தரமாட்டான் என்பதையும் இவர்களால் எதுவும் முடியாது என்பதும் எமக்கு நன்கு தெரியும்

அத்துடன் அவனிடம் வேறு மொழியில் பேசமுடியாது மட்டுமல்ல இவர்களும் வாயால் பேசி திருந்தமாட்டார்கள் என்பதையும் அறிவோம்

அப்போ தங்களையும் யாரும் ஏற்கவில்லையே என்ன செய்யப்போகின்றீர்கள் என்று கேட்டால்.....

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாது அவர்களுக்காக போராடி மடிந்து போகின்றோம்

அதைத்தான் நாம் செய்யக்கூடியது ஐயா.

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

வேறு வழியில்லை.

கடைசிவரை உண்மைக்காக, சத்தியத்துக்காக, தர்மத்துக்காக போராடினார்கள்.

அது மக்களுக்கு தெரியும்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.