Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்கமின்மையால் மனோநிலை பாதிக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கமின்மையால் மனோநிலை பாதிக்கும்?

பொதுவாக பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும். திரவ உணவு மாறி, இட்லி, பருப்பு சாதம், பிஸ்கட் போன்ற திட உணவுப் பொருட்களை குழந்தைகள் சாப்பிடத் தொடங்குகின்றன.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளானால், மதியம் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். மேலும் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும்.

5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட்டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

35 வயதைக் கடந்தவர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு. உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் மருந்து, தூக்கத்திற்கானதே.

போதிய அளவு தூக்கம் இல்லாததே பல நேரங்களில் மனோரீதியாகப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும்.

மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புவர்களுக்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும். எனவே தூக்கத்திற்கான மருந்துகளை, மனோதத்துவ நிபுணர்கள் அளிப்பர்.

அதன் பின்னரே அவர்களுக்கு கவுன்சலிங் எனப்படும் கலந்தாய்வை மேற்கொள்வர்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதும் என்று எண்ணாதீர்கள். தவிர, சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும். அதுபோன்றவர்கள் காலையில் அதிக நேரம் தூங்குவார்கள்.

பின்னர் அவசரமாக எழுந்து, அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்வதையும் பார்க்கிறோம்.

முதலில் இரவில் வெகுநேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

காலையில் தாமதமாக எழுந்திருப்பதால், சரிவர உணவருந்த முடியாமல் போகலாம். அதுவே அசிடிட்டி போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாக அமைந்து விடுகிறது.

வேலைக்கு அவசரமாகவும், ஒரு டென்ஷனோடும் புறப்பட்டுச் செல்வதால், அன்றைய தினம் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளை மறந்து விட நேரிடுகிறது. அலுவலகத்திற்குச் சென்றாலும் டென்ஷனே நீடிக்கும். இதனால் உடல் பாதிப்படைகிறது.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரணமாகிறது.

இரவில் போதிய அளவு தூங்குங்கள்! உடல் ஆரோக்கியமாக இருங்கள் !

நன்றி...... வெப் துனியா !

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இரண்டு மூன்று வேலை செய்பவர்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நிலாமதி அக்கா

அப்ப இரண்டு மூன்று வேலை செய்பவர்கள் :D

அவர்கள்தான் வேலை செய்யும் இடத்தில் நன்றாகத் தூங்குகின்றார்களே.. :D

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொஞ்சநாளா இரவில தூக்கம் சரியில்லை..! அப்ப நான் மென்டல் ஆயிட்டனா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலை நிறைய யோசினை இருந்தாலும் நித்திரை வராதாம்.

எல்லாம் "அவன் "சித்தம் என்று இருக்கணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு சகோதரி இந்த தேர்வுக்கு கடைசி நேரத்தில் சங்கரா சங்கரா என படிக்கும் கோஸ்டிகள் தான் நினைவுக்கு வருது :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள்தான் வேலை செய்யும் இடத்தில் நன்றாகத் தூங்குகின்றார்களே.. :D

வாத்தியார்

**********

அந்தக்கொடுப்பனைக்கு லாய்கு இல்லாதவர்கள் தான் இங்குள்ள பெருண்பான்மையான தொழில்லாளார்கள். :D

எனக்கு கொஞ்சநாளா இரவில தூக்கம் சரியில்லை..! அப்ப நான் மென்டல் ஆயிட்டனா? :D

இல்லை உங்களுக்கு காதல் வந்திருக்கு. :lol::D கிட்டதட்ட அதுவம் மென்டல்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை உங்களுக்கு காதல் வந்திருக்கு. :lol::lol: கிட்டதட்ட அதுவம் மென்டல்தான் :D

எப்பிடி.. இது மாதிரியா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை லவ் பண்ணேக்கையும் நித்திரையில்லை(அங்கை நடுச்சாமத்திலைதான் வேலிபாயலாம்)

இஞ்சை வந்து வெள்ளத்தோலுகளை பாத்தாப்பிறகும் நித்திரையில்லை

அதுக்குப்பிறகு......இவள்பாவியை கூப்பிட்டாப்பிறகும் நித்திரையில்லை

மூத்தது பிறந்தப்பிறகும் நித்திரையில்லை

இப்பவும் நித்திரையில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.