Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒழுக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வைக்கும் போது தான் யோசிக்க வைக்கிறது.

உயர்ந்த அந்தஸ்தில் வைக்கிறார்கள் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள்..! பணம் இருந்தால், அதை சில அமைப்புகளுக்கு வீசி எறிந்தால் முதல்வரிசையில் உட்காரத்தான் வைப்பார்கள்..! பணம் செய்யும் வித்தைகள் அப்படி..! :wub:

ஆனால் அதுக்காக சனம் அவர்களை மதிக்கிறது என்று சொல்ல முடியாது. வீட்டுக்கு வீடு அல்லது முதுகுக்குப் பின்னால் இளக்காரமாகப் பேசியபடிதான் இருப்பார்கள்..! இதுதான் நமது சமுகம்..! :D<_<

  • கருத்துக்கள உறவுகள்

இவை தப்பான கருத்துக்கள்

வாழ்வில் அடிபடாத அனுபவப்படாத எழுத்துக்கள்

நீங்கள் எழுதுவதன்படி பார்த்தால் கடவுள் என்பது எதற்காக கொண்டு வரப்பட்டது.

சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது.

தண்டனை எதற்காக எந்த அளவுகளில் கொடுக்கப்படுகிறது.

ஒரு நாட்டுக்கு சட்டம் ஒழுங்கு போல் ஒரு சமுதாயத்துக்கு ஒரு குடும்பத்துக்கும் சில ஒழுங்கு முறைகள் உண்டு. அதற்கு கட்டுப்படாதவர்கள் தண்டிக்கப்படுவர். அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் தப்பு செய்யாது தவிர்ப்பர். அதையும் தாண்டி ஒழித்து தப்பு செய்வோர் பயந்து பயந்தே சாவர்.

ஆனால் அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வைக்கும் போது தான் யோசிக்க வைக்கிறது.

நீங்கள் என்ன கூறவருகின்றீர்கள் என்று புரிந்துகொள்வதற்கு ஓர் உதாரணம் கூறுங்கள். உயர்ந்த அந்தஸ்து என்று நீங்கள் இங்கு கூற விளைவது என்ன அல்லது எவை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன கூறவருகின்றீர்கள் என்று புரிந்துகொள்வதற்கு ஓர் உதாரணம் கூறுங்கள். உயர்ந்த அந்தஸ்து என்று நீங்கள் இங்கு கூற விளைவது என்ன அல்லது எவை?

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வைத்துள்ளார்கள் என்டால் அவர்கள் எவ்வளவு பெரிய தப்பு செய்திருந்தாலும் அவர்களிடம் பணமோ அல்லது பதவியோ இருந்தால் கோயில் தொடங்கி விழாக்கள்,பொது வைபவங்கள் வரை அவர்களுக்கே முதல் மரியாதை வழங்கப்படுகிறது.அவர்கள் தப்பு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை...வசதியான வீட்டுப் பெண் பிள்ளை கல்யாணத்தின் முன் கெட்டுப் போனாலும் அவர்களால் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடிகிறது. இந்த சமுகத்தில் ஒழுக்கத்திலும் பார்க்க முக்கியமானது பணம்.பணம் இருந்தால் அம்மாவைத் தவிர மற்றதெல்லாம் வாங்கலாம்.

தனிப்பட்டவர்கள் அதிகார மிகுதியை கொண்டுள்ளபோது நீங்கள் கூறும்வகையில் அவர்கள் சமூகத்தில் உயர்தட்டில் தொடந்து தமது நிலையை தக்கவைத்திருப்பது சாத்தியமே. மற்றும்படி.. அப்பாவி என்றாலே அவனை அடிமட்டத்திற்கு தள்ளி வீழ்த்துவதில் நம்மவர் கைதேராதவர்களா என்ன.. :icon_idea:

பணம் பாதாளம் வரை பாயும். இதுதான் எப்போதுமான யதார்த்தம். ஊரில் நாம் சிறுவட்டத்திற்குள்ளேயே வாழ்ந்ததால், ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல் தெரிந்திருக்கலாம். ஆனால், அங்கும் யதார்த்தம் இதுவாகத்தான் இருந்தது. ஆனால், நாம்தான் கிணற்றுத் தவளைகளாக நிர்ப்பந்திகப்பட்டிருந்தோம். நேற்றைய நாகரீகம் இன்றைய ஒழுக்கம். இன்றைய நாகரிகம் நாளைய ஒழுக்கம். இதுதான் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியப் பிரதமர் சில்வியோ பேர்லஸ்கோனி மாதிரி தமிழர்களிலும் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்கள் "ஒழுக்கமாக" இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் பல கிடைத்தும் பிழை விடாதவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தான் உண்மையில் ஒழுக்கமானவர்கள் ஆனால் அவர்களுக்கு இச் சமுதாயத்தில் மதிப்பு இல்லை என்பது என் கருத்து.

சந்தர்ப்பம் கிடைத்தும் பிழை விடாதவர்கள் ஏராளமானோர் இருக்கின்றார்கள். ஆனால் அது ஒரு செய்தியல்ல! அவர்களை அவர்கள் சூழ இருக்கும் சமூகம் தனது உண்மையான அன்பையும், மரியாதையையும் அவர்கள் மீது காட்டத்தான் செய்கிறது!!

வர்த்தக உரிமையாளர் ஒருவர் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஏற்படுத்திய ஈனச் சம்பவங்கள் இன்றும் தமிழ் சமூகத்தில் அரங்கேறுகிறது. ஏற்கெனவே திருமணமான பிள்ளைகள் இருக்கும் பெண்ணுடன் தொடர்ப்பு ஏற்படுத்தி தனது வர்த்தக நிலையத்தில் வேலையும் கொடுத்து, முதல் மனைவியின் எதிர் வீட்டிலே குடியமர்த்தியுள்ளார். கண்டித்த கணவரை விவாகரத்து செய்துள்ளார். இதில் பெண்களை ஒழுக்கம் குறைவென்பதா? ஆண்களை சொல்வதா? வீதிகளில் அடிபடுவது அவர்களின் வழக்கம். இதனால் மன நிலை மிகவும் பாதிக்கப் படுவது பிள்ளைகளே என்பது அவர்களுக்கு ஏன் புரிவதில்லை? ஆனால் அவரோ ஏதும் ஒரு ஒன்று கூடல் வைத்தால் முதல் ஆளாக முன்வரிசையில் இருப்பார். தன்னை மறவர்கள் ஏளனமாகப் பார்கிறார்கள் என்று தெரிந்தும் சிலர் வெட்டி பந்தா காட்டுவார்கள் அதில் ஒருவர் தான் இவரும்.

மனிதன் பிழை விட்டுத்தான் திருந்துகிறான். 'பிழையே செய்யாமல் நான் இருக்கிறேன்' என்று சொல்பவர்கள் தங்களைத் தாங்களே முட்டாள்கள் ஆக்குபவர்கள். உங்கட மனசாட்சிக்கு எது சரி என்று படுகுதோ, அது அடுத்தவரை எந்த வித்திதிலும் பாதிக்காத வரையில் உங்கள் எதிர் கால சந்ததியினரை பார்திக்காத வகையில் இருந்தால் செய்வதில் பிழை இல்லை என்றே நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் பல கிடைத்தும் பிழை விடாதவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தான் உண்மையில் ஒழுக்கமானவர்கள் ஆனால் அவர்களுக்கு இச் சமுதாயத்தில் மதிப்பு இல்லை என்பது என் கருத்து.

இது என்னமோ உண்மைதான்..! :D:rolleyes:

ஆக எல்லோரும் மதிப்பை எதிர்பார்த்துத்தான் ஒழுக்கமாக இருக்கிறீர்கள்? ஒழுக்கம் என்பது எங்களுக்கானதாக இருக்கவேண்டுமேயொழிய மற்றவர்களுக்காக இருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக எல்லோரும் மதிப்பை எதிர்பார்த்துத்தான் ஒழுக்கமாக இருக்கிறீர்கள்? ஒழுக்கம் என்பது எங்களுக்கானதாக இருக்கவேண்டுமேயொழிய மற்றவர்களுக்காக இருக்கக்கூடாது.

பெண்களுக்கு இந்தக் கூற்று பொருந்தலாம்..! ஆனால் ஆண்களுக்கு சரிவராது..! :wub:

சட்டம், சமுதாயம்.. இந்த இரண்டும்தான் ஆண்களை "ஒருநிலையில்" வைத்திருக்க உதவும்..! :rolleyes::D

அதென்னவோ உண்மைதான். ஆண்களுக்கு ஒரு கடிவாளம் கட்டாயம் தேவைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

டன்! நீங்கள் பெட்டிக்குள் போட்டது ரதி அவர்களின் கருத்து ! (எனக்கு அந்தப் பெட்டி வருகுது இல்லை).

கீழுள்ளதுதான் எமது கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

டன்! நீங்கள் பெட்டிக்குள் போட்டது ரதி அவர்களின் கருத்து ! (எனக்கு அந்தப் பெட்டி வருகுது இல்லை).

கீழுள்ளதுதான் எமது கருத்து!

ஓ.. சரி சரி.. :wub:

ஓரளவு வயது போனால்பிறகு சமுதாயம் மதிக்குமோ என்னமோ??!! :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு வயது போனால்..

இதில் எது சரி? :rolleyes:

* வயது போனால்

* வயது வந்தால்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எது சரி? :rolleyes:

* வயது போனால்

* வயது வந்தால்

கிழபோல்ட் ஆகும்வரை ஒழுக்கத்தை மெயின்டெயின் பண்ணினால் அப்போது சமுதாயம் மதிக்க ஆரம்பிக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.