Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் குறித்த அமெரிக்காவின் அபிப்பிராயம் விக்கிலீக்ஸில்!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்கிற அமைப்பின் ஊடாக பணம் கறந்தனர் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தபோது ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து இது தெரிய வந்து உள்ளது.

யூனிசெப், யூ.என்.எச்.சி.ஆர், உலக உணவு திட்டம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்களின் பிரதிநிகளுடன் இத்தூதரகத்தினர் நடத்திய பேச்சுக்களின்போது வன்னியில் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டி உள்ளது என உறுதியாக கூறி இருந்தனர் என்று இவ்வாவணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழான உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாகவே இத்திட்டங்களுக்கான நிதி கையாளப்பட வேண்டும் என்று புலிகள் உத்தரவிட்டு இருந்தனர் என்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பணத்தைப் பெற்று இப்பேர்ப்பட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்றும் இதில் விளங்கப்படுத்தப்பட்டு உள்ளது.

மேற்சொன்ன உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புக்களின் பணிப்பாளராகவும், உறுப்பினர்களாகவும் பெரும்பாலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது புலிகளே இருந்தனர் என்றும் இவர்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியில் ஒரு தொகையை எடுத்து இயக்கத்துக்கு கொடுத்து வந்தனர் என்றும் ஆவணத்தில் எழுதப்பட்டு உள்ளது.

அத்துடன் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர் என்றும் இவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குடும்பத்துக்கு ஒருவர் என்கிற கொள்கையை கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் புலிகள் முன்னெடுத்தனர் என்றும் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடையிலானோரை சேர்க்கின்றமையில் ஆர்வம் காட்டினர் என்றும் குறைந்தது 18 வயது உடையவரை இயக்கத்தில் சேர்க்கின்றமை மூலம் சர்வதேச சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணி இருந்தனர் என்றும் இவ்வாவணத்தில் உள்ளது.

இராணுவ அலுவலகம் ஒன்றுக்கு வர வேண்டும் என்று எழுத்துமூலம் அறிவிப்பார்கள் என்றும் செல்லாவிட்டால் இரவோடு இரவாக பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்றும் இதில் கூறப்பட்டு உள்ளது. 17 வயதுக்கு முன் வன்னியை விட்டு வெளியேறாதவர்கள் இயக்கத்தில் கட்டாயமாக சேர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இடம்பெற்ற இக்கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை கண்டும் காணாத மாதிரி இருந்தது என்று இதில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

இயக்கத்துக்கு இருவரைத் தர வேண்டும் என்று சில குடும்பங்களிடம் புலிகள் நிர்ப்பந்தித்து இருந்தனர் என்றும் வன்னியை அல்லது வேறு இடங்களைச் சேர்ந்த தமிழ் குடும்பத்து பிள்ளைகள் வளைகுடா நாடுகள் போன்றவற்றில் வேலை பார்க்கின்றனர் என்று அறிந்தால் இப்பிள்ளைகள் திரும்பி வந்து ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று அக்குடும்பத்தினரை புலிகள் மிரட்டி இருந்தனர் என்றும் ஆவணத்தில் விபரிக்கப்பட்டு உள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15833:2010-12-17-05-13-42&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

முதல் முதல் விக்கிலீக்ஸும் பொய் சொல்லுது ம்ம் :lol: ( அப்பாட நான் தமிழ்த்தேசியவாதி என்பதை காட்ட்டிவிட்டேன்)

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சொல்லித்தான் இவற்றை அறியும் நிலையில் வடிவேலு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் கட்டமைப்புக்கள் தற்போது

எல்லோரும் மிதிக்கும்

எல்லோரும் காறி உமிழும்

எல்லோரும் சலம் கழிக்கும்

..............

................ மாறி விருகின்றன :lol:

அதை மாற்றி எல்லோரும் சங்கமிக்கும் எத்தனையோ வேலைகள் நடக்கின்றன. இவற்றில் பார்வையாளர்களாக இல்லாது பங்குதாரர்களாக மாறுவது எப்போது..........??? :lol:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்கிற அமைப்பின் ஊடாக பணம் கறந்தனர் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தபோது ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

பல இலட்சம் மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஒரு அங்கீகரிக்கப்படாத அரசு அங்கு நடந்தது. இதை சர்வதேசமும் ஏற்று உதவிகளை வழங்கியது மனிதாபிமான அடிப்படியில். முன்னால் அமெரிக்கா தலைவர் கிளிண்டன் கூட புன்ரர் வாழ்வு கழக தலைவருடன் கை குலுக்கியது. மேலும், அவர்களை அவர்களின் செயல்திறனை பாராட்டினார்கள்.

சிங்களம் பல கோடிகளை சுருட்டிக்கொண்டதும் சர்வதேசத்தால் சொல்லப்பட்டது.

விக்கி லீக்ஸ் ஒரு துரோகி !! :lol:

விக்கிலீக்சிற்கும் துரோகிப்பட்டமா.....

விக்கிலீக்ஸ் துரோகி அல்ல, ஒரு சுப்பண்ணா.

( சுப்பண்ணா சொன்னரண்ணா சுதந்திரம் வந்தது என்று, எப்பண்ணா வந்தது என்றேன்? எனக்கும் தெரியவில்லை என்றார். அப்பண்ணா நாங்கள் இன்னும் அடிமைகள் தானா அண்ணா? )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி விக்கிலீக்ஸ் இணையத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லையே....... link இருந்தால் போடுங்கள் நானும் விக்கி என்னதான் சொல்லுதுன்னு பார்க்கிறேன்.....

Edited by ilamparithi

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி விக்கிலீக்ஸ் இணையத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லையே....... link இருந்தால் போடுங்கள் நானும் விக்கி என்னதான் சொல்லுதுன்னு பார்க்கிறேன்.....

இளம்பருதி ஒரு வருடமாக யாழ் களத்தில் இணைந்திருந்தும்,

பத்துப் பதிவுகளையே இட்டிருந்தும்......

மேலே... கேட்ட கேள்வி ஆயிரம் பதிவுகளுக்குச் சமன்.

Smiley-big_super.gif

இந்த செய்தி விக்கிலீக்ஸ் இணையத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லையே....... link இருந்தால் போடுங்கள் நானும் விக்கி என்னதான் சொல்லுதுன்னு பார்க்கிறேன்.....

விக்கிலீக்ஸு சொல்லுதோ இல்லையோ. தகவல் நெஜம் சார். தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டிருக்கும் முன்னைய புலிப்போராளிகளை கேட்டுபாருங்க.

சில பதிவுகள் சந்தர்பவாதிகளை இனம் காட்டியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.