Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியும்... பின்னணியில் நடப்பவையும்...?

செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2010 19:09

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்களா? என இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளால் இந்திய தலைவர்களுக்கு ஆபத்து என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி வெளிவிடப்பட்டதன் உள்நோக்கத்தை மக்களுக்கு சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டதன் விளைவால் அச்செய்தி வெளியிட்டோரின் நோக்கம் நிறைவேறாமல் போகும் நிலையில் அடுத்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அதற்கு பாவிக்கப்பட்டிருக்கும் பெயர்தான் தாவூத் இப்ராகிம் குழுவினர்.

தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையான ஆயுதங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும் அக்கால கட்டத்தில் புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த தாவூத் இப்ராஹிம் குழுவினர் இந்தியப் புலனாய்வு விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க் இடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்தே மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன.

யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மிர்சா பெக்கிடமிருந்து பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை இந்தியப் புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்பாக அவர் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளதாக மும்பைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என அச்செய்தி தொடர்ந்து செல்கின்றது.

தற்போது இந்தியாவில் இருந்து வெளிவிடப்பட்டிருக்கும் இச்செய்தியின் உள்நோக்கம் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய அவசியம் பொறுப்புள்ள ஊடகங்களுக்கு இருக்கின்றது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்தன் பின்னர் நெடுநாட்களாக யார் யார் உயிருடன் இருக்கின்றார்கள் எங்கெங்கு இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் பெறமுடியாமல் தமிழ் மக்களும் எதிரிகளும் திக்குமுக்காடியிருப்பது என்னவோ உண்மைதான்.

ஆனால் அதன் நோக்கங்களையும் ஆழ அகல பரிமாணங்களைம் ஆத்மார்த்தமாக உணர்ந்திருக்கும் தமிழினம் தனது அரசியல் இராஐதந்திர ஐனநாயக வழிப்போராட்டங்களை தீவிரப்படுத்தி முன்னகர்ந்து செல்கின்றது. ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மௌனத்திலும் கால இடைவெளியிலும் ஒரு துப்பாக்கி ரவைகூட பாவிக்கப்படக்கூடாது என்பதில் தமிழர் தரப்பு தெளிவாகவே இருக்கின்றது.

இதுவே இன்று சிங்களத்திற்கும் எதிரிகளிற்கும் பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பும் அதில் கைநனைத்தவர்களும் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் தமிழ் மக்களிற்கான தார்மீக ஆதரவு சர்வதேச ரீதியாக பெருகிவரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டு தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுவிடுவார்கள் என்ற ஐயம் இலங்கை அரசிற்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

இதனை முறியடிக்கும் தமது வேலையை வழமைபோல அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் அண்மையில் வந்திருக்கும் கீழ்க்குறிப்பிட்ட இரு செய்திகளும்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச்சென்றாதால் அவர்கள் எந்நேரமும் ஆயுதத்தாக்குதலில் ஈடுபடலாம். அவர்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பிருப்பதால்? அவர்களை பயங்கரவாதிகளாக மேலும் சித்தரிக்கலாம். படிப்படியாக இந்திய பல்லின சமூகத்தின் ஆதரவை தமிழர்கள் பெறுவதற்கான தேவை உணரப்பட்டு அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் வாழும் அனைத்து மக்களாலும் அச்சத்துடன் நோக்கப்படும் தாவூத் இப்ராஹிம் குழுவினருடன் தொடர்புபடுத்தி தமிழர்களின் நோக்கத்தை சிதறடித்தல்" என பல்நோக்கம் கொண்டு திட்டம் தீட்டப்பட்டு காட்சிகள் அரங்கேற ஆயத்தமாகின்றது.

இதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் இந்தியாவிலும் சில அல்லது பல குண்டுகளும் வெடிக்கலாம். சில முக்கியஸ்தர்கள் கூட கொள்ளப்படலாம். அவற்றை விடுதலைப்புலிகளே செய்தார்கள் என தங்களால் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் சாட்சிகள் கொண்டு ஆதாரப்படுத்தக் கூட முனையலாம். எதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காட்சிகள் காலத்திற்கேற்றவாறு மெருகூட்டப்படுவது வழமையே. நீளும் காட்சியில் இப்போது தாவூத் இப்ராஹிம் குழுவினர் சாட்சிகளாக...

மக்களை உசுப்பேத்தும் தலையங்கங்களை போட்டு எதிரிகளின் வலையில் நாங்கள் விழுவதுடன் மக்களையும் விழவைத்து விடாமல் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் நாம் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தாரக மந்திரங்களில் முக்கியமானது “ சொல்லுக்கு முன் செயல்” . செயல் எது என மானமுள்ள மானசீகமான தமிழன் ஒவ்வொருவனுக்கும் தெரியும். பொது எதிரியையும் அவன் திட்டங்களையும் முறியடிப்போம். மௌனங்களிற்கும் ஆத்மார்த்தமான கேள்விகளுக்கும் காலம் தமிழர் பெருமைகொள்ளத்தக்க பதிலை நிச்சயம் சொல்லும்.

sangamam.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதியுத்தத்தின் போது புலிகள் ஆயுதங்களுடன் தப்பித்தனர்: பொட்டு அம்மானும் அதில் அடங்குவாரா???:

[ பிரசுரித்த திகதி : 2010-12-21 11:59:56 AM GMT ]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையான ஆயுதங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும் அக்கால கட்டத்தில் புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த தாவூத் இப்ராஹிம் குழுவினர் இந்தியப் புலனாய்வு விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க் இடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்தே மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன. அது மாத்திரமன்றி யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மிர்சா பெக்கிடமிருந்து பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை இந்தியப் புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதுமட்டுமன்றி தற்போதும் கூட கொழும்பில் இருந்து செயற்படும் தாவூத் இப்ராஹிம் கோஷ்டியின் முக்கியஸ்தர் ஒருவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்பாக அவர் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளதாக மும்பைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

www.tamilulakam.com

இந்திய சதிவலைக்குள் அகப்படாமல் எமது போராட்டத்தை, சர்வதேச அரசியல் ஊடாக சாதுர்யமாக நடாத்தப்ப்டல் வேண்டும். இதில் எமது ஊடகங்களின் பங்கும் முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்காக சொன்னாலும்

தாங்கள் சொல்வது உண்மையாக இருக்கணும்

அது நடந்திருந்தால்

எல்லோருக்கும் பொதுவான கடவுளுக்கு நன்றி :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எதுவும் நடக்கச் சாத்தியம் இல்லை. இலங்கை இந்தியக் கூட்டுச்சதிக்கு யாரும் பலியாகிவிடாதீர்கள். விடுதலைப்புலிகளது தடையை நீடிக்கவும், சர்வதேச நெருக்கடிகளைத் தளர்த்தவும,; தமிழர்களை மேலும் இனவழிப்புக்குள்ளாக்கவும் இவர்கள் செய்யும் சதி. நம்பாதே தமிழா நம்பாதே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது

உயிர் தப்பியது சம்பந்தமாக மட்டுமே

அந்த நிலையிலும் ஆயுதங்களுடன் போனார்கள் என்பதை யாரும் நம்பப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மந்தைகளாக இருக்கவேண்டும் என்று வந்து கொண்டிருக்கும் செய்திகள்.. பரபரப்பு ரிஷியையும் மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கு..

தமிழர்கள் மந்தைகளாக இருக்கவேண்டும் என்று வந்து கொண்டிருக்கும் செய்திகள்.. பரபரப்பு ரிஷியையும் மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கு..

இந்தியா மற்றும் சிங்களம் முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் எத்தனையோ சதித்திட்டங்களை தீட்டி செய்ய முயற்சித்தது. ஆனால் விடுதலைப்புலிகளும், மக்களும் அதனை தெளிவாக சிந்தித்து முறியடித்து வருகின்றனர். இனியும் அப்படித்தான் செய்யவேண்டும்.

நாம் போர் வெறியர்கள் இல்லை.. அதே நேரம் எம் உரிமையினை மீட்க எல்லா வகை முயற்சிகளையும் செய்வோம் என்பதனையும் காட்டவேண்டும்.

சினிமா ஒன்றைத் தயாரிப்பதற்கான கருவைக் கொடுத்துள்ளார்கள். யார் தயாரிக்கப்போகிறார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா ஒன்றைத் தயாரிப்பதற்கான கருவைக் கொடுத்துள்ளார்கள். யார் தயாரிக்கப்போகிறார்களோ தெரியாது.

நம்மட கப்டன் பிரபாகரன் விஜயகாந்த் தான் தயாரிப்பாளர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மறைமுகமாகவோ, நேரடியாகவோ எம்மக்களை கொல்ல காரணமானர்கள் என்பதை ஆதாரத்துடன் உலகுக்கு நிரூபிப்போமானால் இவர்களின் வாயையும் அடைத்து விடலாம்.

... இறுதி யுத்த காலங்களில் ... கேபி, தனது கைக்கூலிகள் பலரை(கிழக்கு மாகாணம் உட்பட) வெளிநாடுகளுக்கு தப்ப வைத்தாராம்???? ... இங்கு புலத்திலும் கேபிக்களில் பல முன்னால் போராளிகள் தானாம் இருக்கிறார்கள்!!

... அதனை விட கேபிக்கும், தாவூத் கும்பலுக்கும் நீண்ட காலமாக இறுக்கமான தொடர்புகள்!! ... இது இந்திய உளவுத்துறைக்கு தெரியாததல்ல!!

.... ஆனால் கேபிக்கும், தாவூத்துக்கும் இடையே இருந்த தொடர்புகள், மறைக்கப்பட்டு வேறு யார் மீதும் போடப்படலாம்???

இந்திய பயங்கரவாதிகளின் திட்டங்கள் தவிடு பொடியாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.