Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!

Featured Replies

சர்வதேச நகர்வுக்கு அமைவாக நட்ப்பது என்றால் நாம் போராடியதே தவறு.ஏனெனில் சர்வதேசத்தைப் பொறுத்தவரை அதாவது அமெரிக்கத் தலமையிலான மேற்குலகக் கூட்டணியியைப் பொறுத்தவரை இந்தியாவை ஆள்பவர்கள் எதனைச் சொல்கிறார்களோ அது தான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.இந்திய ஆளும் வர்க்கம் அன்றில் இருந்து இன்று வரை தமிழர்களின் சுயனிர்ணயத்தை அங்கீகரிக்கவில்லை.அதனால் நான் சொல்வது புலிகள் அழிந்தற்க்கு முழுமுதற்காரணம் சர்வதேசம் எனும் மாயமானின் பின்னால் இருந்து செயற்பட்ட இந்திய நரிகளை நம்பியதே.இந்திய இராணுவத்துடன் போரிட்ட பிரபாகரன் ஏன் நம்பிக் கெட்டார் என்று தான் எனக்கு விளங்கவில்லை.உண்மைகள் ஓர் நாள் வெளிவரும் அதுவரை பொறுதிருப்போம்.தமிழரின் பாதுகாப்பு தமீழழத்தால் தான் என்பதிலும் அதனை சிங்கள அரசோ இந்திய அரசோ ஒரு நாளும் பேச்சுவார்த்தைகளினூடாக வழங்க்கப் போவய்தில்லை என்பதும் மிகத் தெளிவானது.அதே போல் சிங்களம் தமிழர்கள் வேன்டுகின்ற எந்தத் தீர்வையும் வழங்க்கப் போவதில்லை என்பதும் உண்மையானது.

  • Replies 109
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ அண்ணாமரே !! உங்களிண்ட காலில விழுந்து கும்பிடுகிறேன் , இந்த திரிய மூடி விடுங்கோ.

குறை நினைக்க கூடாது பாருங்கோ, தலைமைய தலையில வைச்சு ஆடுற அண்ணாமாரிடம் ஒரு கேள்வி, உங்கட பிள்ளைகளை வலுகட்டாயமாக பிடிச்சுகொண்டுபோய் அடிபட விட்டு அதுகள் செத்தால், கை கால்களை இழந்தால், சரணடைஞ்சு காணமல் போனால் அப்பவும் உங்கட தலைமைய தலையில வைச்சு ஆடுவீங்கள் தானே?

பிள்ளைகளை வலுகட்டாயமாக பிடிச்சுக்கொண்டு போறது எண்டு எத்தின பெற்றோர் தங்கட பிள்ளைகளை வயதில 16, 17 கலியாணம் பண்ணி கொடுத்திருகிறார்கள், அப்படி இருந்தும் அதுகளிண்ட கணவன் மார வலுகட்டாயமாக பிடிச்சுக்கொண்டு போனார்கள். இப்ப அதுகள் பிள்ளைகளோட கணவன் மார் இல்லாமல் சிறுவயதில் பிள்ளைகளோடு படுகிற பாடு சொல்லமுடியாது.

முந்தி ENTLF வலுகட்டாயமாக பிடிச்சுக்கொண்டு போனபோது, புலிகள் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்தது ஞாபகம் இருக்கும். எந்த இயக்கமும் வலுகட்டாயமாக பிடிச்சுக்கொண்டு போய் தனது போராட்டத்தில் வெற்றி கொண்டது உலகவரலாற்றில் இல்லை.

கடந்த ஆண்டு டொரோண்டோ தேவாலயத்தில் நடந்த திருப்பலி ஒன்றில் வன்னியில் இருந்து வந்த ஒரு பாதிரியார் புலிகளின் வலுகட்டாய ஆள் பிடிப்புக்கு பயந்து தன்னிடம் அடைக்கலம் புகுந்த இளைஞர்களை பற்றி கூறி இருந்தார். வலுகட்டாய ஆள் பிடிப்பினால் வன்னி மக்கள் வேதனைகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

சீலன், துணிச்சலான உங்கள் கருத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள்.

தயா, அன்டன் பாலசிங்கம் பேச்சுக்களில் கலந்துகொண்ட போதே விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பேச்சு மேடையில் நாங்கள்தான் அண்ணை வெட்டி வீழ்த்தினோம் என்று கூறினாரே தவிர- பேச்சு மேடையில் பகிரப்பட்ட விடயம் எதனையும் உங்கள் தலைவருக்கு சரியான முறையில் தெரியப்படுத்தவில்லை.

இந்த இடத்தில் முக்கியமாக உங்களுக்கு ஒரு தகவலையும் கூறுகின்றேன்.

பேச்சு மேடையில் எதிர்த்தரப்பு என்ன கூறியது என்பதனை பிரபாகரனுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் சரியான முறையில் கூறாதிருக்க- பேச்சு மேடையில் பகிரப்பட்ட விடயத்தினை அன்டன் பாலசிங்கம் உதயனின் பிரதம ஆசிரியரிடம் கூற- அதனைத் தனது பத்திரிகையில் வெளியிட்டபோது உங்கள் தலைவர் படித்து அறிந்த கொடுமையும் நடந்திருக்கின்றது.

நான் இங்கே பொய்-புனை கதை கூறவில்லை. பேச்சு இடம்பெற்ற காலகட்டத்தில் கலந்துகொண்ட பெரியவர்கள், சிறியவர்கள் உட்பட பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்களேன்.

வரலாற்றை எழுதக் கிளம்பினால் எழுதலாம். பிரச்சினை அதுவல்ல. விடுதலைப் புலிகளின் தலைவரும் அதன் அமைப்பும் விட்ட தவறுகள்தான் இன்று அனைத்து தமிழர்களும் நிர்க்கதியாக இருக்கின்றனர்.

பிற இயக்கங்களை அழித்த நீங்கள்- அவர்களுக்கு மாற்றீடாக இருந்து போராட்டத்தினை நடத்தியிருக்க வேண்டும். அவர்களையும் போராட விடவில்லை. நீங்களும் போராடவில்லை. சரி, போராடினீர்கள். அரசியல் சாணக்கியமற்ற போராட்டமாகத்தானே நடத்தினீர்கள்.

அறிவுசார் தளத்தில் இருந்து போராட்டம் நடத்தியிருந்தால் போராட்டம் தப்பியிருக்கும். காஸ்ட்ரோ கும்பல் பணம் சேகரித்தாலே போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்றல்லவா கணித்தனர்.

ரணில் - பிரபாகரன் பேச்சு இடம்பெற்ற காலத்தில் உலகில் எத்தனை நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை இருந்தது?

காஸ்ட்ரோ கும்பல் முறைகேடாக பணம் சேகரிப்பில் ஈடுபட்டு அது வெளிச்சத்துக்கு வந்தபோது எத்தனை நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது?

நீங்கள் மூவருமே இங்கு பிழை விடுகின்றீர்கள்.

சர்வதேசத்தை அனுசரித்துத்தான் நடக்கவேண்டுமெனில் நாம் போராட்டமே தொடங்கியிருக்ககூடாது.-நாரதர்

செப்டம்பர் 11 இன் பின்னாலான சர்வதேசத்தின் போக்கு,-நிர்மலன்

எது செய்தாலும் புலி சரி -தயா,தேவன்.

அண்ணமார்களே ஆரம்பத்திலிருந்தே எங்களையும் அறியாமல் ரோ வின் உள்வாங்களிலே தான் எமது போராட்டம் மையப்படுத்தப்பட்டது.புலிகள் ஓரளவிற்கு தமது போராட்டத்தை கையிலெடுத்தது போலிருந்தாலும் இந்தியாவை மிஞ்சி எதுவும் செய்ய முடியாது என்ற உண்மையை எவரும் உணராமல இல்லை.2009 மட்டும் கூட சில தேவைகளை ரோ புலிக்காக செய்துகொண்டேயிருந்தது.இந்தியாவில் இருந்து டீசல் பெற்றோல் போன்ற பொருட்களை கொண்டுவருவதற்கு.

ரோ இன்னாருடன் தான் நிற்கின்றது என கணக்கு போட்ட எங்களில் தான் அந்தபிழை.அவர்கள் எல்லோர்க்குள்ளும் இருக்கின்றர்கள்.இவ்வளவு நடந்தபின்பு இன்று ஈ.என்,டீ.எல்.f டெல்கி நோக்கி நடை பயணி,கூட்டமைப்புக்குள் சிவாஜிலிங்கம் வேண்டாம் அரசியலை விளங்கிக்கொள்ளுங்கோ.இலங்கை என்ற ஒரு சிறுதீவில் நாம் சிறுபான்மை.

84 இலேயே ஒரு புண்ணியவான் எழுதினான்"வங்கம் தந்த பாடம்".டெல்கியில் எத்தனையோ பத்திரிகையாளார்கள் சொன்னார்கள் உங்களை இந்தியா தான் அழிக்கும் எட்ட நில்லுங்களென்று,

பீ.பீ சீ 'மார்க் டல்லீ" எழுதிய பஞ்சாப் என்றபுத்தகத்தை படிக்கவும் என்னாமாதிரி அவர்கள் போராட்டத்தை இவர்களே ஆக்கி அழித்தார்களென்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீலன், துணிச்சலான உங்கள் கருத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள்.

தயா, அன்டன் பாலசிங்கம் பேச்சுக்களில் கலந்துகொண்ட போதே விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பேச்சு மேடையில் நாங்கள்தான் அண்ணை வெட்டி வீழ்த்தினோம் என்று கூறினாரே தவிர- பேச்சு மேடையில் பகிரப்பட்ட விடயம் எதனையும் உங்கள் தலைவருக்கு சரியான முறையில் தெரியப்படுத்தவில்லை.

இந்த இடத்தில் முக்கியமாக உங்களுக்கு ஒரு தகவலையும் கூறுகின்றேன்.

பேச்சு மேடையில் எதிர்த்தரப்பு என்ன கூறியது என்பதனை பிரபாகரனுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் சரியான முறையில் கூறாதிருக்க- பேச்சு மேடையில் பகிரப்பட்ட விடயத்தினை அன்டன் பாலசிங்கம் உதயனின் பிரதம ஆசிரியரிடம் கூற- அதனைத் தனது பத்திரிகையில் வெளியிட்டபோது உங்கள் தலைவர் படித்து அறிந்த கொடுமையும் நடந்திருக்கின்றது.

நான் இங்கே பொய்-புனை கதை கூறவில்லை. பேச்சு இடம்பெற்ற காலகட்டத்தில் கலந்துகொண்ட பெரியவர்கள், சிறியவர்கள் உட்பட பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்களேன்.

வரலாற்றை எழுதக் கிளம்பினால் எழுதலாம். பிரச்சினை அதுவல்ல. விடுதலைப் புலிகளின் தலைவரும் அதன் அமைப்பும் விட்ட தவறுகள்தான் இன்று அனைத்து தமிழர்களும் நிர்க்கதியாக இருக்கின்றனர்.

பிற இயக்கங்களை அழித்த நீங்கள்- அவர்களுக்கு மாற்றீடாக இருந்து போராட்டத்தினை நடத்தியிருக்க வேண்டும். அவர்களையும் போராட விடவில்லை. நீங்களும் போராடவில்லை. சரி, போராடினீர்கள். அரசியல் சாணக்கியமற்ற போராட்டமாகத்தானே நடத்தினீர்கள்.

அறிவுசார் தளத்தில் இருந்து போராட்டம் நடத்தியிருந்தால் போராட்டம் தப்பியிருக்கும். காஸ்ட்ரோ கும்பல் பணம் சேகரித்தாலே போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்றல்லவா கணித்தனர்.

ரணில் - பிரபாகரன் பேச்சு இடம்பெற்ற காலத்தில் உலகில் எத்தனை நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை இருந்தது?

காஸ்ட்ரோ கும்பல் முறைகேடாக பணம் சேகரிப்பில் ஈடுபட்டு அது வெளிச்சத்துக்கு வந்தபோது எத்தனை நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது?

நிர்மலா!

விவாதம் என்றால் உம் அருள்வாக்கு தகவல்கள் இங்கே முன்வக்காதீர்.

கொல்ல உடன் நின்றவனின் பாவம் புரிய மறுகின்ற உமக்கு, புலிகளின் பாவம் மட்டும் புரிவதுதான் எமக்கு புதிரனது.

போராட்டம் தோற்றதனால் அதற்கான நீதி செத்துவிடும் என்றோ, இல்லை அது எதிரி காலடித் தொண்டு என்று மாறிவிடுவதோ இல்லை.

எதோ புலிகளை உலகம் ஆதரிக்காதமை மாற்றுக்குழுக்களை அழித்தமைதான் என்ற வகையில் கருத்துப் பகிர்வது ஒரு புறம் இருக்க. உமது புலிமீதான வெறுப்பின் கனமான காரணமும் அதுவாகவே உள்ளது போல் அல்லவா இருக்கின்றது.

விடுதலைக்காக உருவான அமைப்பு கடவுளே தடையானாலும் ஒருபோதும் காட்டிக் கொடுப்பு அதன் பாதையாகாது.

விடுதலையின் பேரில் உருவான அமைப்பு எதுவுமே அதன் பாதையாகும், சொத்து சுகம் சேர்க்கும் நோக்கமே அதன் அடிப்படைக் கொள்கையானால்.

காட்டிக் கொடுத்தவனுக்கு கால் பிடித்து விடுபவன் கூட, தோற்றுப் போனவனுக்கு நீதி பகருகின்றான்.

எதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமோ நிர்மலா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் மூவருமே இங்கு பிழை விடுகின்றீர்கள்.

சர்வதேசத்தை அனுசரித்துத்தான் நடக்கவேண்டுமெனில் நாம் போராட்டமே தொடங்கியிருக்ககூடாது.-நாரதர்

செப்டம்பர் 11 இன் பின்னாலான சர்வதேசத்தின் போக்கு,-நிர்மலன்

எது செய்தாலும் புலி சரி -தயா,தேவன்.

அண்ணமார்களே ஆரம்பத்திலிருந்தே எங்களையும் அறியாமல் ரோ வின் உள்வாங்களிலே தான் எமது போராட்டம் மையப்படுத்தப்பட்டது.புலிகள் ஓரளவிற்கு தமது போராட்டத்தை கையிலெடுத்தது போலிருந்தாலும் இந்தியாவை மிஞ்சி எதுவும் செய்ய முடியாது என்ற உண்மையை எவரும் உணராமல இல்லை.2009 மட்டும் கூட சில தேவைகளை ரோ புலிக்காக செய்துகொண்டேயிருந்தது.இந்தியாவில் இருந்து டீசல் பெற்றோல் போன்ற பொருட்களை கொண்டுவருவதற்கு.

ரோ இன்னாருடன் தான் நிற்கின்றது என கணக்கு போட்ட எங்களில் தான் அந்தபிழை.அவர்கள் எல்லோர்க்குள்ளும் இருக்கின்றர்கள்.இவ்வளவு நடந்தபின்பு இன்று ஈ.என்,டீ.எல்.f டெல்கி நோக்கி நடை பயணி,கூட்டமைப்புக்குள் சிவாஜிலிங்கம் வேண்டாம் அரசியலை விளங்கிக்கொள்ளுங்கோ.இலங்கை என்ற ஒரு சிறுதீவில் நாம் சிறுபான்மை.

84 இலேயே ஒரு புண்ணியவான் எழுதினான்"வங்கம் தந்த பாடம்".டெல்கியில் எத்தனையோ பத்திரிகையாளார்கள் சொன்னார்கள் உங்களை இந்தியா தான் அழிக்கும் எட்ட நில்லுங்களென்று,

பீ.பீ சீ 'மார்க் டல்லீ" எழுதிய பஞ்சாப் என்றபுத்தகத்தை படிக்கவும் என்னாமாதிரி அவர்கள் போராட்டத்தை இவர்களே ஆக்கி அழித்தார்களென்று.

அர்யுன், வைரமுத்து கவிகளை படிப்பவர்க்கு, தமிழ் சங்க இலக்கியம் மட்டும் அல்ல உலக பிறமொழி இலக்கியங்கள் கூட அந்த வரிகளினூடு தெறிப்பதை உணர்வார்கள். இதுதான் வைரமுத்துவின் வாசிப்பின் பலன், தவிர இவை படித்தேன் என்ற வசனம் கவிதை முகவுரையில் சேராது.

உம்மிடம் இருக்கும் புலிஎதிர்ப்பை நாம் ஏன் சட்டை செய்ய வில்லை? மாற்றுக் குழு மீதில் உம்மிடம் இருக்கும் பிடிப்பில் ஒரு துளி நியாயத்தை அதில் காணமுடியாதிருப்பதே! "டக்ளஸ்" புலி ஏன் தோற்றது என்னும் நூல் எழுதினால், கடைத் தோல்வி காரணமாக புலியை வெறுப்பவன் அந்த நூலில் உண்மை உள்ளது என்று நம்புவானா? அதே போல்த்தான் உம்முடைய வாசகங்களும் என்பது, அதே சூழ்நிலைகளைக் கொண்டதே என்பதை மீண்டும், மீண்டும் மறக்கின்றீர்!

நிர்மலன் உமது புனை கதைகளுக்கு நீர் எப்போதும் எந்த ஆதாரத்தையும் முன் வைத்ததில்லை,அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று உமக்கு எல்லோரும் வந்து சொன்னதைப் போல் எழுதி வருகிறீர்.உமது நோக்கம் நேர்மையாகக் கருத்துச் சொல்வது அன்றுக், புனை கதைகளை விதைத்பவர்,குழப்பத்தை உண்டு பண்ணுவதே.அதனையே டிபிஎஸ் ஜெயராச் என்பவர் நீண்ட நெடுங்காலமாகச் செய்து வருகிறார்.பிரபாகரன் சாதி வெறியர் அதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு, என்று சொல்லி விட்டு, ஆதாரத்தை முன் வையும் என்றால் அய்யோ என்னை அடையாளம் கண்டு விடுவர் என்று சொல்கிறீர்.யார் உம்மை அடையாளம் காணுவார்கள்? கனடாவில் இருக்கும் உம்மை அடையாளம் காண்பதாலே யார் உமக்கு தீங்கிழைக்கப் போகிறார்கள்? கனடாவில் தானே எதினையோ சிறிலங்கா அரசின் கையாள்டகள் வெளிபடையாகவே வேலை செய்கிறார்கள்.உமது உண்மையான கவலை நீர் மக்களிடம் அம்பலப்பட்டுப் போவீர் என்பதே.இனியாவது இப்படியான புனை கதைகளை ஆதாரம் எதுவும் இன்றி பரப்ப வேண்டாம்.தமிழர்கள் உம்மைப் போன்றவர்களால் பட்ட துன்பம் காணும்.

சீலன் ,

புலிகள் மக்களிடம் இருந்தே வந்தனர்.எல்லா இயக்கங்களும் மற்றையவற்றை அழிக்கவே முயற்ச்சித்தன.இபிஆரெல்வெ புலிகளை அழித்தது.ப்லொட்டே முதல் முதல் சகோதரப் படுகொலைகளை, ஆரம்பித்து வைத்தது.படுகொலைகொளை உள்ளேயும் வெளியேயும் மிகக் கொடுரமாக நாடாத்தியது அருஜுன் என்பவர் இருந்த ப்லொட் இயக்கம்.உருப்படியாக எதையுமே சாதிக்காமல் விடுதலைப் போராட்டத்துக்காக வந்த ஆயிரம் ஆயிரம் இளஞர்களைக் கொன்று குவித்தது பிலொட்டின் தலமை.மக்களின் பெயரால் பேசுவதற்க்கு உங்கள் எவருக்குமே தகுதி கிடையாது.புலிகள் பலவந்தமாக ஆட்ச்சேர்த்தனர் அதனால் நாங்கள் புலிகளை ஆதரிக்க மாட்டோம் என் மக்கள் முடிவெடுக்கட்டும்.

நீங்கள் என்ன தான் கதைகளைப் புனைந்தாலும் உங்கள் கருத்தாடல்கள் புனை கதைகள் என்பனவற்றில் துருத்திக் கொண்டு தெரிவது புலிகள் மீதான உங்களின் தனைப்பட்ட வெறுப்பே அன்றி மக்கள் மீதான கரிசனை அன்று.புலிகள் போராட்டம் பிழை என்றால் உங்களின் போராட்டம் என்ன? ஏன் அதனை இப்போது செய்யாமல் புலாருத்தில் இருந்து அழிந்து போன புலிகளைப் பற்றி இரண்டு வடங்களாகப் புலம்பிக் கொண்டிருக்கிரீர்கள்? புலி அழிந்து விட்டது ஊர் சென்று நீங்கள் இனி உங்கள் சரியான போராட்டத்தை மக்கள் ஆதரவுடன் நிகழ்த்தலாம் தானே?

தயா, அன்டன் பாலசிங்கம் பேச்சுக்களில் கலந்துகொண்ட போதே விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பேச்சு மேடையில் நாங்கள்தான் அண்ணை வெட்டி வீழ்த்தினோம் என்று கூறினாரே தவிர- பேச்சு மேடையில் பகிரப்பட்ட விடயம் எதனையும் உங்கள் தலைவருக்கு சரியான முறையில் தெரியப்படுத்தவில்லை.

தலைவரோடை கூட நீர் இருந்து பாத்தனீர் ஆக்கும்.... வெளியுலகமே தெரியாமல் தலைவர் இருந்தார் ... அவருக்கு இயக்கத்துக்குள் நடந்தவைகள் கூட தெரியாது எண்டு சொல்ல சரியா கஸ்ரப்படுகிறீர் போல கிடக்கு...

இது புலிகளை நன்கு தெரிஞ்சவைக்கு சொல்லி விளங்கப்படுத்த வேண்டியதில்லை எண்டதாலை உமக்கு பதில் அழிக்க இல்லை....

அறிவுசார் தளத்தில் இருந்து போராட்டம் நடத்தியிருந்தால் போராட்டம் தப்பியிருக்கும். காஸ்ட்ரோ கும்பல் பணம் சேகரித்தாலே போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்றல்லவா கணித்தனர்.

உமக்கு ஐரோப்பாவிலையும் கனடாவிலையும் , அவுஸ்ரேலியாவிலையும் இருந்து காசு சேத்த ஆக்களை தான் புலிகளாக தெரிஞ்சு இருக்கு... ஆனால் உண்மை அதையும் தாண்டி வேறையானதாக இருக்கு...

உமக்கு தகவலை சொல்லுறன்... சிங்கள உளவுத்துறைக்கு தெரிஞ்ச தகவல் தான்.... புலிகளின் இரண்டாவது தலைமையகமாக ஐரோப்பாவோ அமெரிக்காவோ, ஐவுஸ்ரேலியாவோ எப்போதும் இருந்தது இல்லை... தென் ஆசியாதான் இருந்தது இருக்கிறது... ! அதனால் தான் சிங்களவனின் புலநாய்வு ஆய்வு மையம் ஆசியாவின் சிங்கப்பூரிலுல் இருந்து இயங்கு கிறது... !

இதை உமக்கு நம்பிக்கையான KP அண்ணையிட்டையும் கேட்டு தெரிஞ்சு கொள்ளலாம்.... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு முன்னாலை ஆயிரம் கேள்விகள் இருக்கு அதுகளுக்கு பதில் சொல்ல பதிலே இல்லாத நீங்கள் மற்றவைக்கு அறிவுரை சொல்லாதீர்கள்... உங்கட தோல்விகளில் இருந்து முதலிலை வெளியிலை வந்து வெற்றியின் படிகளிலை ஏறுங்கோ பிறகு நாங்கள் தோத்தமா நிமிர்ந்தமா எண்டு புசத்தலாம்...

முதலில் படி எங்கிருக்கு

அதில் புலி படுத்திருக்கு

......................

...................??????????????

என்பார்கள்

ஆடத்தெரியாதவளுக்குத்தான் மேடை கோணல்

இங்கு மூளையே கோணல்.....

இந்தக் கட்டுரை வெறுமென புலி எதிர்ப்பை மையமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது, இதில் தமிழ் ஈழ விடுதலையின் ஆதரவாளர் பலர் இதன் உண்மைத்தனமையை கவனிக்காமல் கருத்து எழுதி உள்ளது கலைக்குரியது, இதை நான் ஏன்குறிப்பிடுகிறேன் என்றால்

1. செவ்வி வழங்கியவ்ர் கூறுகிறார் புலிகள் தரப்பில் பல பிழைகள் நடந்திருக்கின்றவாம், ஆனால் அவை என்ன என்று கூற மாட்டாவாம்

2.புலிகளும் அதன் த்லைமையும் அரசாங்கத்திடம் அகப்பட்டு விட்டது என்ற கருத்து சூசகமாக ஆனால் ஆணித்த்ரமாக முன் வைக்கப்படுகிறது.

3.அதைவிட புனர்வாழ்வு அழிக்கப் பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுதாம் 1நல்ல எதிர் காலம் உண்டாம் அதாவத் சிறீலங்கா அரசங்கத்திடம்.

கவனிதீர்களா எப்படி இந்த செவ்வி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எம்மை எமது விடுதலை போராட்டதிற்கும், விடுதலை இயக்கதிற்கும் எதிராக திருப்ப முயற்சிக்கிறது என்று,

அதை விட இந்த செவ்வி வழங்கியது யார்,என்ன என்ற எந்த விடயமும் குறிப்பிடவில்லை, இதை கணனியில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர் எவரும் செய்யலாம்,

ஐயோ அண்ணாமரே !! உங்களிண்ட காலில விழுந்து கும்பிடுகிறேன் , இந்த திரிய மூடி விடுங்கோ.

குறை நினைக்க கூடாது பாருங்கோ, தலைமைய தலையில வைச்சு ஆடுற அண்ணாமாரிடம் ஒரு கேள்வி, உங்கட பிள்ளைகளை வலுகட்டாயமாக பிடிச்சுகொண்டுபோய் அடிபட விட்டு அதுகள் செத்தால், கை கால்களை இழந்தால், சரணடைஞ்சு காணமல் போனால் அப்பவும் உங்கட தலைமைய தலையில வைச்சு ஆடுவீங்கள் தானே?

பிள்ளைகளை வலுகட்டாயமாக பிடிச்சுக்கொண்டு போறது எண்டு எத்தின பெற்றோர் தங்கட பிள்ளைகளை வயதில 16, 17 கலியாணம் பண்ணி கொடுத்திருகிறார்கள், அப்படி இருந்தும் அதுகளிண்ட கணவன் மார வலுகட்டாயமாக பிடிச்சுக்கொண்டு போனார்கள். இப்ப அதுகள் பிள்ளைகளோட கணவன் மார் இல்லாமல் சிறுவயதில் பிள்ளைகளோடு படுகிற பாடு சொல்லமுடியாது.

முந்தி ENTLF வலுகட்டாயமாக பிடிச்சுக்கொண்டு போனபோது, புலிகள் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்தது ஞாபகம் இருக்கும். எந்த இயக்கமும் வலுகட்டாயமாக பிடிச்சுக்கொண்டு போய் தனது போராட்டத்தில் வெற்றி கொண்டது உலகவரலாற்றில் இல்லை.

கடந்த ஆண்டு டொரோண்டோ தேவாலயத்தில் நடந்த திருப்பலி ஒன்றில் வன்னியில் இருந்து வந்த ஒரு பாதிரியார் புலிகளின் வலுகட்டாய ஆள் பிடிப்புக்கு பயந்து தன்னிடம் அடைக்கலம் புகுந்த இளைஞர்களை பற்றி கூறி இருந்தார். வலுகட்டாய ஆள் பிடிப்பினால் வன்னி மக்கள் வேதனைகள் பல.

அற்புதமான கருத்து ஆனால் ஒன்றை மட்டும் மறந்து போகாதெங்கோ பல நாடுகளில் கட்டாய இராணுவ சேவை என்று ஒண்டு தெரியுமோ உங்களுக்கு,

அது சரி புலியையும், பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதனையும் பழி வாங்க முழு இனத்தையும் பலி கொடுத்துவிட்டு புலி அழிஞ்சு போச்சு என்று குதூகலித்தவர்களுக்கு இதெல்லாம் புரியாது

அண்ணமார்களே ஆரம்பத்திலிருந்தே எங்களையும் அறியாமல் ரோ வின் உள்வாங்களிலே தான் எமது போராட்டம் மையப்படுத்தப்பட்டது.புலிகள் ஓரளவிற்கு தமது போராட்டத்தை கையிலெடுத்தது போலிருந்தாலும் இந்தியாவை மிஞ்சி எதுவும் செய்ய முடியாது என்ற உண்மையை எவரும் உணராமல இல்லை.2009 மட்டும் கூட சில தேவைகளை ரோ புலிக்காக செய்துகொண்டேயிருந்தது.இந்தியாவில் இருந்து டீசல் பெற்றோல் போன்ற பொருட்களை கொண்டுவருவதற்கு.

பொய்களை விட்டு போட்டு ஓரளவுக்கு இப்ப உண்மை நிலைக்கு வாறியள்... !

முதலிலை ஒருவிசயத்தை விளங்கிக்கொள்ளுங்கோ.. நீங்கள் சொல்லும் பொய்களை தான் எதிர்க்கிறேனே அண்றி நியாயப்படுத்தல்கள் இல்லை... நாங்கள் பிழை விட்டவர்கள் தான்.... ஆனால் சரவ்தேசத்தை புரிந்து கொள்ளாமல் விட்ட தவறுகள் அல்ல....!

இந்தியாவையும் அனுசரித்து போக வெளிக்கிட்டதினால் ஏற்ப்பட்ட நிலை இது... பேச்சுவார்த்தைக்கு முன்பு இருந்ததை விட அதன் பின்னர் சர்வதேசம் எவ்வளவோ நெருக்கமாக வந்து கொண்டு இருந்தது... மக்களுக்கு தேவையான உதவிகளை புலிகளூடு கொடுக்கப்பட்டதோடு புலிகளுக்கும் சரவதேச நாடுகளின் நிறுவனங்கள் கொடுத்தமை, அந்த நாடுகளில் பேசுவதுக்கு கூட துணிந்து வந்தமை எல்லாம் நடந்தது , எண்று பல இருந்தாலும் ஆயுத பலத்தை புலிகள் கைவிட வேண்டும் எனும் சர்வதேச நாடுகள் நிலைப்பாட்டில் இருந்தன...

ஆனால் பாலா அண்ணாவுடன் லண்டனில் பேசிய இந்திய பிரதிநிதி அதை இல்லை எண்டு அடியோடு மறுத்த இந்திய தூதரகம் எண்டு எல்லாம் கூத்துக்கள் நடந்தன...

மேற்க்கு நாடுகளுடன் நல்ல உறவை முழுமையாக கொள்வதுக்கு முன்னர் இந்தியாவை பகைக்காமல் இருக்க செய்த நடவடிக்கைகள் வேகமாக மேற்க்கு நாடுகளுடன் நெருங்க முடியவில்லை.... இதுதான் உண்மை...

புலிகளால் இரண்டு வலிந்த தாக்குதல்கள் போர் நிறுத்த காலத்தில் நடத்தப்பட்டது... 1 சம்பூர் மீதான தாக்குதல் , 2 அனுராத புரம் வான்படை தள தாக்குதல்.... இரண்டும் சர்வதேசங்களால் புலிகளிடம் தனிப்பட கடுமையாக விமர்சிக்க பட்டவை... !

அதிலையும் அனுராதபுர வான்படை தள தாக்குதலின் பின்னர் தான் என்னாமே தலை கீழாக மாறிப்போனது.... அது விமான தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு தாக்குதல் மட்டுமே எண்று சொல்லப்பட்டாலும்.... அதன் பின்னர் இலங்கையே எதிர்ப்பார்க்காத உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன... அனேக நாசகார ஆயுதங்களும் அதன் பின்னரே இரஸ்யாவினூடாக இலங்கை வந்து சேர்ந்தது... அப்போது இராணுவம் மடுவை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது...

Edited by தயா

பொய்களை விட்டு போட்டு ஓரளவுக்கு இப்ப உண்மை நிலைக்கு வாறியள்... !

முதலிலை ஒருவிசயத்தை விளங்கிக்கொள்ளுங்கோ.. நீங்கள் சொல்லும் பொய்களை தான் எதிர்க்கிறேனே அண்றி நியாயப்படுத்தல்கள் இல்லை... நாங்கள் பிழை விட்டவர்கள் தான்.... ஆனால் சரவ்தேசத்தை புரிந்து கொள்ளாமல் விட்ட தவறுகள் அல்ல....!

இந்தியாவையும் அனுசரித்து போக வெளிக்கிட்டதினால் ஏற்ப்பட்ட நிலை இது... பேச்சுவார்த்தைக்கு முன்பு இருந்ததை விட அதன் பின்னர் சர்வதேசம் எவ்வளவோ நெருக்கமாக வந்து கொண்டு இருந்தது... மக்களுக்கு தேவையான உதவிகளை புலிகளூடு கொடுக்கப்பட்டதோடு புலிகளுக்கும் சரவதேச நாடுகளின் நிறுவனங்கள் கொடுத்தமை, அந்த நாடுகளில் பேசுவதுக்கு கூட துணிந்து வந்தமை எல்லாம் நடந்தது , எண்று பல இருந்தாலும் ஆயுத பலத்தை புலிகள் கைவிட வேண்டும் எனும் சர்வதேச நாடுகள் நிலைப்பாட்டில் இருந்தன...

ஆனால் பாலா அண்ணாவுடன் லண்டனில் பேசிய இந்திய பிரதிநிதி அதை இல்லை எண்டு அடியோடு மறுத்த இந்திய தூதரகம் எண்டு எல்லாம் கூத்துக்கள் நடந்தன...

மேற்க்கு நாடுகளுடன் நல்ல உறவை முழுமையாக கொள்வதுக்கு முன்னர் இந்தியாவை பகைக்காமல் இருக்க செய்த நடவடிக்கைகள் வேகமாக மேற்க்கு நாடுகளுடன் நெருங்க முடியவில்லை.... இதுதான் உண்மை...

புலிகளால் இரண்டு வலிந்த தாக்குதல்கள் போர் நிறுத்த காலத்தில் நடத்தப்பட்டது... 1 சம்பூர் மீதான தாக்குதல் , 2 அனுராத புரம் வான்படை தள தாக்குதல்.... இரண்டும் சர்வதேசங்களால் புலிகளிடம் தனிப்பட கடுமையாக விமர்சிக்க பட்டவை... !

அதிலையும் அனுராதபுர வான்படை தள தாக்குதலின் பின்னர் தான் என்னாமே தலை கீழாக மாறிப்போனது.... அது விமான தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு தாக்குதல் மட்டுமே எண்று சொல்லப்பட்டாலும்.... அதன் பின்னர் இலங்கையே எதிர்ப்பார்க்காத உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன... அனேக நாசகார ஆயுதங்களும் அதன் பின்னரே இரஸ்யாவினூடாக இலங்கை வந்து சேர்ந்தது... அப்போது இராணுவம் மடுவை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது...

புலிகள் அனுராதபுரத் தாக்குதலைச் செய்த போது அமெரிக்கா இதன் விழைவுகள் பாதகமாக இருக்கும் என்று எச்சரித்தது,ஏன்னில் அங்கு நிர்மூலமாக்கப்பட்டது அமெரிக்கா கொடுத்த கடற் கண்காணிப்பு விமானம்.அதன் பின்னர் புலிகள் ஏன் தொடர்ச்சியான தாக்குதல்களைச் செய்து சிறிலங்கா அரச இராணுவத்தை பலமூட்டும் அமெரிக்க இந்திய கூட்டுச் சதியை முறையடிக்க முயலவில்லை.?புலிகள் தொடர்ச்சியான ஊடுருவித் தாக்கும் தாக்குதல்களை ஏன் செய்ய முடியாமல் போனது? எதற்காக எல்லாமும் தாமதிக்கப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

தயா..

சர்வதேசத்தை அனுசரிக்கிறேன் பேர்வழி என்று சம்பூர் அனுராதபுரம் தாக்குதல்களையும் நடத்தியிராவிட்டால் மே 2009 என்பது தை 2009 ஆக வரலாறில் இடம்பிடித்திருக்கும் எண்டு நினைக்கிறன்..! :unsure:

புலிகள் அனுராதபுரத் தாக்குதலைச் செய்த போது அமெரிக்கா இதன் விழைவுகள் பாதகமாக இருக்கும் என்று எச்சரித்தது,ஏன்னில் அங்கு நிர்மூலமாக்கப்பட்டது அமெரிக்கா கொடுத்த கடற் கண்காணிப்பு விமானம்.அதன் பின்னர் புலிகள் ஏன் தொடர்ச்சியான தாக்குதல்களைச் செய்து சிறிலங்கா அரச இராணுவத்தை பலமூட்டும் அமெரிக்க இந்திய கூட்டுச் சதியை முறையடிக்க முயலவில்லை.?புலிகள் தொடர்ச்சியான ஊடுருவித் தாக்கும் தாக்குதல்களை ஏன் செய்ய முடியாமல் போனது? எதற்காக எல்லாமும் தாமதிக்கப்பட்டது?

தற்காப்பு தாக்குதலை செய்து இலங்கை படைகளை ஒரு நிலையில் வைத்து இடை மறிக்க முடியும் எண்டு தலைவர் நம்பினார் எண்டு நீண்ட காலத்துக்கு முன்னம் தென்னாசிய நாடு ஒண்டில் சந்திக்க முடிந்த ஒருவர் சொன்னார்... ( அவர்கள் இருந்த நிலையில் விளக்கமாகவும் விபரமாகவும் கேக்க முடியவில்லை.. ) நான் நினைக்கிறன் பூநகரி இராணிவத்திடம் வீழ்ந்த பின்னர் தான் இந்தியாவின் நேரடி தலையீடு தெளிவாக உணரப்பட்டது எண்டு..

கிளிநெச்சியில் சண்டை நடந்த போது தென்னாசியாவில் இராஜதந்திர உறவில் இருந்த ஒருவர் தலைவருடன் பேசி இந்தியவுடன் பேசும் அவசியத்தை விளங்கப்படுத்தி இந்தியா KP யுடன் பேச அனுமதி குடுங்கள் எண்று KP மீது இருந்த நம்பிக்கையில் கேட்டு இருக்கிறார்... முதலில் மறுத்த தலைவர் பிறகு ஒரு கடித்தத்தை அவருக்கு குடுத்தார்.. அதுவே இன்னும் பொரிய அளவான பாதிப்பை கொண்டு வந்தது எண்றார் ( நான் சந்திச்சவர்)....

இண்டைக்கு இங்கையும் அங்கையும் பிரிந்து நிக்கிறதுக்கு அந்த கடிதம் தான் காரணமாக இருக்கு... இங்கை இருக்கிறவை அங்கை இருக்கிறவையை நம்ப தயங்குகிறார்கள்...

தயா..

சர்வதேசத்தை அனுசரிக்கிறேன் பேர்வழி என்று சம்பூர் அனுராதபுரம் தாக்குதல்களையும் நடத்தியிராவிட்டால் மே 2009 என்பது தை 2009 ஆக வரலாறில் இடம்பிடித்திருக்கும் எண்டு நினைக்கிறன்..! :unsure:

நாங்கள் சரவதேசத்தை அனுசரிக்க போய் இதுகள் நடந்ததாக நான் நம்பவில்லை... இந்தியாவை என்பதுதான் சரியாக இருக்கும் எண்டு நினைக்கிறன்....

இண்டைய நிலையை பாருங்கள்... முழு சர்வதேசமா இலங்கைக்கு நெருக்கமாக இருக்கிறது... இந்தியாவும் சீனாவும் தானே.... காரணம் கூட அதுதான்.... பயனை பெற்ற பின் கழட்டிவிட நிக்கிறது சிங்களம்... விடாமல் ஒட்டிக்கொண்டு நிக்கிறது இந்தியா ...

அனுராத புரம் வான் தாக்குதலின் பின்னர் MIG 29 விமானங்கள் வாங்க காசுக்கு பிணை நிண்டது இந்தியா... இரசாயண ஆயுதங்கள், கொத்துக்குண்டுகள் எல்லாம் இரஸ்யாவில் இருந்து தருவித்து கொடுத்தது... பின்ன 100 வரையான T-72 வகை அர்ஜுண் டாங்கிகள் என்பன இந்தியா கொடுத்தது உங்களுக்கு தெரியும்...

அதே வேளை மேற்க்கு நாடுகள் புலிகளை காப்பாத்த முயல்கிறார்கள் எண்டு கோத்தபாய முதல் பொன்சேகா வரைக்கும் கோபப்டடர்கள்...

அதோடை இந்த போர் முடிவதால் மேற்க்கு நாடுகளுக்கு இருந்த நலனைவிட ஒரு தீர்வை திணித்து பெறக்கூடியவை அதிகமாக இருந்தது என்பதுதான் உண்மை.... அதுக்கு இண்றைய நிலையே சாட்ச்சி..

இதுக்கும் மேலை இதை பற்றி கதைக்க வெளிக்கிட்டால் கனக்க சொல்ல வேண்டி வரும்... அதலால் இதைபற்றி பேசாமல் விலகி விடுகிறன்....

Edited by தயா

நானும் இந்தியாவே இந்தச் சதியில் பிரதான பாத்திரமாக இருந்தது என்று நம்புகிறேன்.புலிகளை அழித்து ஒழிப்பதே பிரதானமான நோக்கமாக இருந்தது.எனது கேள்வி ஏன் இதனைத் தலமையோ அல்லது புலிகளின் புலனாய்வுப் பிரிவோ உணரவில்லை? கேபி தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறார்.இதன் பின்னணியில் இந்தியா இருந்தது.பின்னர் லண்டனில் இருக்கும் முன்னாள் இர்ரொசுக்கள் ரோவிற்க்கு நெருக்கமான குடும்பி ரவி கொங்கொங் குகன் ஆகியோர் மலேசியா சென்றனர்.அங்கே இவர்கள் கேபியுடன் ரோவின் திட்டத்தைப் பற்றிக் கதைக்கின்றனர்.அதில் பிரபாகரனும் தலமைப் பொறுப்பில் இருந்து விலகினால் புலிகளை இந்தியா ஆதரிக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.இவை எல்லாவுமே கதைகள் தான்.ஆனால் உண்மை என்னவென்றால் இந்தக் கதைகளின் மூலம் இந்தியா புலிகளுக்குள் ஊடுரிவியது.பின்னர் கேபி தான் தான் தலைவர் என்று அறிவித்ததும் பின்னர் சிறிலன்கிகா சென்றது என்பதுவும், இந்தச் சதி அம்பலத்திற்க்கு வந்துவிடும் என்று பயந்தே.என்றோ ஒரு நாள் உண்மைகள் வெளிப்படும்.

ஆனால் புலிகள் ஏன் இந்தியாவை நம்பிப் பலியானர்கள் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது.இந்தியாவின் காலம் காலமான துரோகத்தை அறிந்த பிரபாகரன் எங்கனம் இதனை நம்பினார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தத் துரோகம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆரியப் பின்புலம் கொண்டது.இதனை மிக நுணுக்கமாக இந்திய ஆளும் வர்க்கம் பற்றிய பார்வை இன்றி இனம் காண முடியாது.அந்தப் புரிதல் பிரபாககரனிடம் இருந்தது.அதற்க்கு என்ன நடந்ததௌ என்பதுவே என்னால் புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கிறது.

Edited by narathar

இதுக்கு எனக்கு பதில் உண்மயில் தெரியாது.... ஆனால் காரணம் இந்தியாவே ... வேறு நாடுகள் கூட தலையிட முடியாதவாறு இந்தியா நகர்வுகளை மேற்கொண்டது என்பதும் உண்மை... !

புலிகள் எப்படி பலியானார்கள் எண்டு தெரியவே தெரியாது... ஆனால் ஊகம் எண்டு ஒண்டு இருக்கு...

Edited by தயா

நானும் இந்தியாவே இந்தச் சதியில் பிரதான பாத்திரமாக இருந்தது என்று நம்புகிறேன்.புலிகளை அழித்து ஒழிப்பதே பிரதானமான நோக்கமாக இருந்தது.எனது கேள்வி ஏன் இதனைத் தலமையோ அல்லது புலிகளின் புலனாய்வுப் பிரிவோ உணரவில்லை? கேபி தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறார்.இதன் பின்னணியில் இந்தியா இருந்தது.பின்னர் லண்டனில் இருக்கும் முன்னாள் இர்ரொசுக்கள் ரோவிற்க்கு நெருக்கமான குடும்பி ரவி கொங்கொங் குகன் ஆகியோர் மலேசியா சென்றனர்.அங்கே இவர்கள் கேபியுடன் ரோவின் திட்டத்தைப் பற்றிக் கதைக்கின்றனர்.அதில் பிரபாகரனும் தலமைப் பொறுப்பில் இருந்து விலகினால் புலிகளை இந்தியா ஆதரிக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.இவை எல்லாவுமே கதைகள் தான்.ஆனால் உண்மை என்னவென்றால் இந்தக் கதைகளின் மூலம் இந்தியா புலிகளுக்குள் ஊடுரிவியது.பின்னர் கேபி தான் தான் தலைவர் என்று அறிவித்ததும் பின்னர் சிறிலன்கிகா சென்றது என்பதுவும், இந்தச் சதி அம்பலத்திற்க்கு வந்துவிடும் என்று பயந்தே.என்றோ ஒரு நாள் உண்மைகள் வெளிப்படும்.

ஆனால் புலிகள் ஏன் இந்தியாவை நம்பிப் பலியானர்கள் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது.இந்தியாவின் காலம் காலமான துரோகத்தை அறிந்த பிரபாகரன் எங்கனம் இதனை நம்பினார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தத் துரோகம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆரியப் பின்புலம் கொண்டது.இதனை மிக நுணுக்கமாக இந்திய ஆளும் வர்க்கம் பற்றிய பார்வை இன்றி இனம் காண முடியாது.அந்தப் புரிதல் பிரபாககரனிடம் இருந்தது.அதற்க்கு என்ன நடந்ததௌ என்பதுவே என்னால் புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கிறது.

நீங்கள் ஊகத்தின் அடிப்படையில் எழுதினாலும் இது தான் நடந்துஇருக்க சந்தர்பம் இருக்கு ஆனால் கேபியின் ஆதிக்கத்தை விருப்பாத ஒரு பகுதி தலைவர் கூட ஒட்டிகொண்டு இருந்தது.

சமாதான காலங்களில் தலைமை புலம்பெயர்ந்த தமிழர்களை அதிகம் நம்பியதால் ஏற்பட்ட தோல்வி என்பது எனது ஊகம்.

கருணா பிரிவு......, சுனாமி.... என இழப்புகளில் இருந்தவர்களை நம்பவைத்து அழித்துள்ளார்கள். புலத்தில் இருந்து யார் யார் போய் சதிவலைக்குள் சிக்க வைத்தார்களோ தெரியாது? மிகவும் பலகீனமான நிலையை சாதகமாக பாவித்துள்ளார்கள்.

மற்றும்படி தலைமை தன் நிழலையும் நம்புவதில்லை.

நிழலையும் நம்பாத தலமை எங்கனம் நம்பிக் கெட்டது? பலவீனமான நிலை ஏன் ஏற்பட்டது? இராணுவச் சம நிலை மாறி வருவதை ஏன் அவதானிக்கவில்லை? காலம் தாழ்த்தியது எதற்காக? ஒரு பலமான சர்வதேச பின் புலத்தில் போரிடும் அரசிற்க்கு அவகாசம் என்பது நிச்சயமான வெற்றியைத் தரும் என்று தெரிந்தும் காலம் தாழ்த்தியது யாரின் தவறு?

கேபி புலிகளின் இராணுவ கட்டமைப்புகிள் ஊடுருவவில்லை ஆனால் சர்வதேச கட்டமைப்பில் கேபிக்கு என்று ஒரு கூட்டம் இருந்தது அது புதிதாக பொறுப்பு எடுத்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது அதை விட கேபிக்கு தலைவருடன் நேரடி தொடர்புகள் இருந்தாலும் கேபிக்காக தலைவருடன் கதைப்பதுக்கு யாரும் பக்கதில் அப்போது இல்லை ஆனால் மற்ற அணி தலைவர் கூட ஒட்டி கொண்டு இருந்து சிலதை தவறாக வழி நடத்தினார்கள்( கேபி சம்ந்தமான விடையங்கள்) அதை விட எனக்கும் முக்கியமான ஒருவர் சொன்னார், தலைவர் கருணாவில் கைவைத்து கஷ்டப்பட்டவர் புலத்து நிர்வாகத்திலும் கைவைக்க விரும்ப்பவில்லைஎன்று ஆனால் பொட்டு அம்மானிடம் சில பொறுப்புகள் கொடுத்து அவரும் கனடாவில் சில மாற்றங்கள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டு இருக்கும் போது நாட்டில் நிலமைகள் மோசம் ஆகிவிட்டது.

இது நான் கேள்விப்பட்டது ஆனால் சொன்னவர் ஒரு மாணில நிதி சேகரிப்புக்கு பொறுப்பானவர் அவர் எவளவு முக்கியம் என்று எனக்கு தெரியாது, அல்லது அந்த அவசர நிதியாக 1000 க்கு சொன்ன கதையோ தெரியாது.

[ஃஉஒடெ நமெ='ஈ.V.ஸசி' டிமெச்டம்ப்='1295789931' பொச்ட்='635467']

நீங்கள் ஊகத்தின் அடிப்படையில் எழுதினாலும் இது தான் நடந்துஇருக்க சந்தர்பம் இருக்கு ஆனால் கேபியின் ஆதிக்கத்தை விருப்பாத ஒரு பகுதி தலைவர் கூட ஒட்டிகொண்டு இருந்தது.

[/ஃஉஒடெ]

எல்லாருக்கும் ஒரு நோக்கம் இருக்கும் போது ஆதிக்கப் போட்டிகள் நிலவி இருக்க வேண்டியதில்லை.கேபி ஒரு ஆயுத முகவரே அவர் ஒரு போராளியாகப் போரிடவில்லை.அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட படியால் தான் அவர் ஒதிக்கி இருக்க வைக்கப்பட்டார்.கேபியினூடாகவே இந்தியா வேலை செய்தது.இந்தியா மாத்தையாவையும் அவ்வாறு தான் பாவிக்க எத்தனித்தது.கேபி தாய்லாந்தில் எவர் தயவில் சுதந்திரமாக இயங்கினார்? அவரால் எலோரையும் ஒருங்கிணைக்க முடியாமல் போன போதே அவர் சிறிலங்காவிற்க்குச் சென்றார்.கேப்பி தாய்லாந்தில் இருந்து வெளியிட்ட அறிக்கைகள் எல்லாவற்றிலும் இந்தியாவின் தயவைக் கோரி நின்றார்.இந்தியாவுடன் தான் நடாத்திய பேச்சுக்கள் பற்றியோ அதில் இந்தியா தெருவித்த கருதுக்கள் பற்றியோ சரணடைவு நாடகத்தில் இந்தியா ஆற்றிய பங்கு பற்றியோ பின்னர் அமெரிக்கப் படை வருகையை இந்தியா தடுத்தது பற்றியோ கேப்பி எதுவும் கூறவில்லை ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.