Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா நிதி, ராஜாத்தி அம்மாள் இருவரிற்கும் இது மூன்றாவது

Featured Replies

60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார். இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே…..

வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்…..

அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும். வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம். இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியுமா ? ஆனால் இதுதான் நடந்துள்ளது. என்னதான் நடந்துள்ளது என்று சென்னை கன்னிமரா நூலகத்தில் விசாரித்த போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனைத்து நகல்களும் வாங்கிச் செல்லப் பட்டு விட்டன என்ற தகவல் தெரிய வந்தது. யார் வாங்கிச் சென்றார்கள் என்று கேட்டால், ‘மினிஷ்டர் ஆபீஸ்லேர்ந்து வாங்கிகினு போனாங்க சார்… அத்தோட அவ்ளோதான்….’ என்று கூறினார்.

இது போல ஆவணங்களை மறைப்பதன் மூலம், வரலாற்றை திரித்து, உத்தம சீலர் வேஷம் போட நினைக்கிறார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியின் கணக்கை பொய்யாக்க வேண்டாமா ? சவுக்கும் அதன் வாசகர்களும், பெரிய தில்லாலங்கடி இல்லையா ? சாம்பிளுக்காக ஒரே ஒரு பகுதி மட்டும், என் அன்பு சவுக்கு வாசகர்களுக்காக இதோ…..

தர்மாம்பாள் என்ற அல்லது இராஜாத்தி என்னும் திருமதி தர்மா தென்னாற்காடு மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாளுக்குப் பிறற்த கடைசி மகள் ஆவார். திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு இராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மா என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இரண்டாவது கணவரும் இறந்து விட்டார். அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார். அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில் இல்லை. அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை. சென்னையில் சிவகாக்கியமும் அவர் குழந்தைகளும், இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர். அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார். திருமதி தர்மா நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார். அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார். 1962ல் மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு அவர் குடியேறினர்.

1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் திருமதி தர்மாவும் திரு.மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது. திரு.கருணாநிதி கூறியுள்ளபடி, அவர் திருமதி.தர்மாவை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி சமயச் சார்பற்ற முறையில் (இதுக்குப் பேர்தான் சுயமரியாதைத் திருமணமா ? … கருமம். கருமம்) திருமணம் செய்து கொண்டார். அது முதற்கொண்டு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர். 1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதி தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். திரு கருணாநிதிக்கு 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது (அப்போ ஜாதகம் பாத்திருந்தா, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இந்தப் பிள்ளை ஆட்டையைப் போடும் என்று சொல்லியிருப்பார்களோ… நமக்கு இந்த மேட்டர் தெரிஞ்சுருந்தா அப்போவே ஏதாவது பண்ணியிருக்கலாம் பாஸ்) என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. திரு கருணாநிதி தர்மாவை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

சாம்பிள் எப்பூடி…. ? தமிழில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் நாடகத் துறை ஒரு காதலை அரங்கேற்றியிருக்கிறது… அதற்கு போய் பய புள்ளைக என்னமா பேசுறாங்க பாஸ்… அதுவும் இந்த எதிர்க்கட்சிக் காரய்ங்க இருக்காங்களே….

காதல் வயப்பட்டிருக்கும் காதலர்கள், அப்போது வெளியாகியுள்ள திரைப்படங்களில் உள்ள பாடல்களை தங்கள் காதலியிடம் / காதலரிடம் பாடி, மகிழ்வது வழக்கம். இவர்களுக்கு திருமணமானது 1966ம் ஆண்டு. அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் உள்ள பாடல்களில், இந்த சிறப்பான ஜோடிக்கு பொருத்தமான பாடல் எது என்று சவுக்கு ஆராய்ந்ததில், முகராசி படத்தில் இடம் பெற்ற, இந்தப் பாடலே மிக மிக பொருத்தமாக இருக்கிறது.

“எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்..

இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்…

நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்….

இதில் யாருக்கு இங்கே கிடைக்கும்…”

60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார். இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே…..

வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்…..

kani_3.jpg

வட இந்திய பயங்கரவாதிகளால் இவை பறிமுதல் செய்யப்படும்.

வட இந்திய பயங்கரவாதிகளால் இவை பறிமுதல் செய்யப்படும்.

இவை எல்லாம் ஏழை தமிழ்நாட்டு காரனின் சொத்துக்கள். மக்களீன் வரிப்பணம்.

பிறகு இவர் யெயாவை சொல்கிறார்.

வெட்கம் இல்லாமல் மனுசியை கூட்டி கொண்டு கட்டிலோட உண்ணாவிரதம் இருக்க போன கேணப்பயல்.

எத்தனை பேர் இவன் உண்ணாவிரதம் இருந்த போது உயிர் விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மட்டும் கருத்துக்களை உணர்ச்சிவசமாக எழுதுங்கோ, தேர்தல் வந்திட்டால் நீங்களும் அங்கை தான் நிற்பீங்க...

  • கருத்துக்கள உறவுகள்

dog.jpg

நாய்ஸ் எங்க போன என்ன? வீடு குறிச்சி(இவங்கள பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே) தேர்தலில் வெற்றிபெற இன்னுமோர் அய்யர் பொண்ணை கல்யாணம் பண்ணது யாருக்கும் தெரியலயா?... தென்ன்ட்டு ஏனு திராவிடம்? ச்ச்சீ ச்சீ

  • கருத்துக்கள உறவுகள்

வப்பாட்டி (தூய தமிழில் பரத்தையர்) பெண்ணுடைய வப்பாட்டான்(டிஸ்கி பரத்தையன் இது நானே வச்சது)இதுகெல்லாம் தமிழ் ஈன தலைவர் விளக்கு பிடிக்கிறார்...இவரு அப்பாவா இல்ல மாமாவா நேக்கு கன்பூசன் ஒச்சிந்து!

டிஸ்கி

அன்னி சால்வ் ஆய் போத்துந்தி .. ஆப்பு இத்தாலிவாடு சொருகெசாடு.... :wub:

இந்த அல்லகைகள் அரசியலை தனியே தள்ளி வைத்து போட்டு... இந்த தேர்தலில் ஈழ ஆதரவாளர்களை வெற்றி பெறவைக்கோணும். இம்பார்டாண்டு விளாத்திகுளம் தொகுதி.. :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

kani_3.jpg

இந்த படத்தைப்பாத்து அங்குலம் அங்குலமாய் ரசிச்சவனெண்டால் நானாய்தானிருப்பன் :lol:

இந்த படத்தைப்பாத்து அங்குலம் அங்குலமாய் ரசிச்சவனெண்டால் நானாய்தானிருப்பன் :lol:

யாரை ரசிச்சனிங்கள் எண்டு சொல்லவேயில்ல. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தைப்பாத்து அங்குலம் அங்குலமாய் ரசிச்சவனெண்டால் நானாய்தானிருப்பன் :lol:

யாரை ரசிச்சனிங்கள் எண்டு சொல்லவேயில்ல. :lol::lol:

குமாரசாமி அண்ணர் புழுக்கொடியலும், குரக்கன் புட்டும் சாப்பிட்டு வளர்ந்த பழைய காலத்து ஆள்.

ஆரை ரசிச்சிருப்பார் என்று தெரியும் தானே..... :rolleyes::D:lol:

குமாரசாமி அண்ணர் புழுக்கொடியலும், குரக்கன் புட்டும் சாப்பிட்டு வளர்ந்த பழைய காலத்து ஆள்.

ஆரை ரசிச்சிருப்பார் என்று தெரியும் தானே..... :rolleyes::D:lol:

தாங்க முடியல்ல. இதற்குப் குமாரசாமியின்ர பதில் எப்படியிருக்குமோ? :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.