Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

,கேட்ட தொகுதிகளைக் கொடுக்காவிட்டால் கனிமொழியைக் கைது செய்வோம். காங்கிரஸ் மிரட்டல். திமுக அதிர்ச்சி

Featured Replies

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முறிந்து விட்டதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வியாழனன்று காலையில் முதல்வரை சந் திப்பதாக இருந்த குலாம் நபி ஆசாத், திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றதுதான் இதற்குக் காரணம்.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவிடம், தி.மு.க.வினர் நக்கலாகப் பேசியதை அடுத்து, அந்தக் குழு டெல்லியில் சோனியாவை சந்தித்து நடந்த விவரங்களைச் சொன்னது. மேலும், ‘இனி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் போகமாட்டோம்’ என்றும் அவர்கள் சோனியாவிடம் சொல்லி விட் டனர். அந்தக் கூட்டம் முடிந்ததும், சிதம்பரத்திடம் முப்பது நிமிடங்கள் தனியாகப் பேசியிருக்கிறார் சோனியா. அதன்பிறகு வெளியே வந்த சிதம்பரம் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்.

இதையடுத்து, தி.மு.க. தரப்பில் இருந்து கடைசி முயற்சியாக, கனிமொழி எம்.பி. மூலமாக டெல்லித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. துரைமுருகன் பேசிய விவரங்களை, காங்கிரஸ் தலைவர்கள் கனிமொழியிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளனர். உடனடியாக சென்னைக்குத் தொடர்பு கொண்டு பேசினார், கனிமொழி. அதைத் தொடர்ந்து, ‘நான் பேசாத வார்த்தைகளைப் பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது’ என்று துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தை அழைத்துப் பேசிய சோனியா, சென்னை சென்று கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு உத்தரவிட்டார். மும்பை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குலாம், அங்கிருந்து நேராக சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. அவரை வரவேற்று அறிவாலயம் அழைத்துச் சென்றார். இரவு 9.15 மணிக்கு அறிவாலயம் சென்ற குலாமுடன் தங்கபாலுவும் இருந்தார். இரவு 11 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. முதல்வர் கருணாநிதியுடன் பேசிய பின்னர், தனியறைக்குச் சென்று டெல்லித் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். குலாம், தங்கபாலு இருவர் முகமும் இறுகியே காணப்பட்டது. மீண்டும் பேசலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து குலாம் கிளம்பினார்.

அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களில் கொ.மு.க.வினர் அங்கு வந்தனர். அவர்களுக்கு 7 தொகுதிகள் கொடுப்பது என ஒப்பந்தம் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து வெளியே வந்த முதல்வர், ‘காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை தொடரும்’ என்று சொன்னார். எனவே, வியாழனன்று காலையில் பேச்சுவார்த்தை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குலாம், தங்கபாலு ஆகியோர் காலை 9 மணி விமானத்தில் டெல்லி சென்று விட்டனர். டெல்லியில் சோனியாவை சந்தித்து பேச்சுவார்த்தை விவரங்களைச் சொல்லி முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது.

இது குறித்து ஐவர் குழுவில் உள்ள ஒருவரிடம் பேசிய போது, ‘‘ஆரம்பத்திலிருந்தே தி.மு.க. தரப்பில் 48 இடங்கள் தருவதாகச் சொன்னார்கள். நாங்கள் 90 இடங்களும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கினார்கள். அதே வேகத்தில் விடுதலைச் சிறுத்தைகள், கொ.மு.க.வினருக்கு தொகுதிகள் ஒதுக்கியுள்ளார்கள். இது எங்களை கடைசி நேரத்தில் கழற்றிவிடு வதற்கான சூழ்ச்சி என்றே கருதுகிறோம்’’ என்றார்.

காங்கிரஸின் மூத்த எம்.பி. ஒருவரிடம் பேசிய போது, ‘‘தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதில் எங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்டுகள் பிரசாரம் செய்வார்கள். இது அந்த மாநிலத்தில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை பாதிக்கக் கூடும். நாங்கள் எப்படியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆனால் கேரளாவில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை நாங்கள் எப்படி இழப்பது, அதே போல மேற்கு வங்கத்திலும் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது. தி.மு.க.விடம் குறைவான இடங்கள் வாங்கினால், மம்தாவும் அதே எண்ணிக்கையில் தான் சீட் தருவார். அது எங்களுக்கு இழப்பாகி விடும். அதனால்தான் எங்களுக்கு கூடுதல் சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறோம்’’ என்றார்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10, கொ.மு.க.வுக்கு 7, முஸ்லிம் லீக்குக்கு 3, மூ.மு.க.வுக்கு 1 என மொத்தம் 52 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 182 தொகுதிகளில் தி.மு.க. 130 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதம் 52 தொகுதிகள்தான் இருக்கிறது. இதுதான் காங்கிரஸுக்குக் கொடுக்க வேண்டிய தொகுதிகள். ஆனால், இதனை ஏற்க காங்கிரஸ் மறுப்பதால், முஸ்லிம் லீக், மூ.மு.க. ஆகிய கட்சிகளை தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வைக்கிறோம். அந்த நான்கு இடங்களை வேண்டுமானால் கூடுதலாகத் தருகிறோம் என்று தி.மு.க. தரப்பில் சொல்லியுள்ளனர். ஆனால், காங்கிரஸாரோ 63 தொகுதிக்குக் குறையாமல் வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, ஸ்டாலினிடம் பேசியதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் ஓடுகிறது. அதாவது, கலைஞர் டி.வி. தொடர்பான விவகாரத்தில் கனிமொழி எம்.பி.க்கு சி.பி.ஐ. கேள்விகளை அனுப்பியுள்ளதாம். அதற்கு சரியான தகவலை கொடுக்கச் சொல்லுங்கள். வரும் 15-ம் தேதி கோர் ட்டில் சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்யும்போது, அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்த தகவல்களை சேர்க்க வேண்டும். பதில் தரவில்லை என்றால், கனிமொழி மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரலாம்’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் கடைசி அஸ்திரமாகவே தி.மு.க. தலைமை இதைப் பார்க்கிறது. இது தி.மு.க. தலைமையை கோபம் அடைய வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து தி.மு.க. முன்னணித் தலைவர் ஒருவரிடம் பேசிய போது, ‘‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைக் காட்டித்தான் தி.மு.க.வை காங்கிரஸ் மிரட்டி வருகிறது. ராசா கைது, கலைஞர் டி.வி. அலுவலகத்தில் ரெய்டு என அவர்கள் உச்சகட்டத்திற்கே போய்விட்டனர். இதற்குப் பின்பும் காங்கிரஸ் தயவு எங்களுக்குத் தேவையில்லை. எல் லாவற்றையும் நீதிமன்றத்தில் சந்திப்போம். இதன் பின்னரும் அவர்களோடு, எப்படி ஒற்றுமையாக தேர்தல் வேலைகளைச் செய்ய முடியும்? எனவே, காங்கிரஸைக் கழற்றிவிடுவதே நல்லது. இதுதான் கட்சித் தொண்டர்களின் விருப்பம்’’ என்றார்.

குலாம் சென்னை வருவதற்கு முன்பு, 2-ம் தேதி மாலை 4 மணிக்கு கோபாலபுரத்தில் முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர் அழகிரி, கலாநிதி மாறன் ஆகியோர் இரண்டு மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினால் நடக்கப்போகும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்ததாக தி.மு.க வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே, தி.மு.க., காங்கிரஸ் உறவு பிரிவை நோக்கியே செல்கிறது என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் முக்கிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டாத நிலையில், காங்கிரஸ் அ.தி.மு.க. அணிக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு இ ருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவலின்படி நடிகர் சிரஞ்சீவி மூலமாக விஜயகாந்த்திடம் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கியிருக்கிறதாம். பேச்சுவார்த்தை சரிவரவி ல்லை என்றால், காங்கிரஸ் தனித்துப் போட்டியிடக் கூடும் என்றும் டெல்லி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

பிரசாரத்துக்கு ராகுல் வரமாட்டார்!

தி.மு.க. கூட்டணி உறுதி என்று சொல்லப்பட்டதால், ராகுல் காந்தி மிகவும் சோர்ந்து விட்டாராம். சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ராகுலுக்கு காலில் காயம் ஏற்ப ட்டுள்ளது. அவர் ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இதெல்லாம் அவர் தேர்தல் பிரசாரத்துக்கு வராமல் இரு ப்பதற்கான யுத்திதான் என்று இளைஞர் காங்கிரஸார் சொல்கின்றனர். தி.மு.க. கூட்டணியை அவர் விரும்பாததே இதற்குக் காரணம் என்கிறார்கள். கூட்டணி மாறினால் ம ட்டுமே ராகுல் பிரசாரத்துக்கு வருவார்.

Thanks to kumudam.com

படங்கள் பார்க்க...

http://www.thedipaar.com/news/news.php?id=25106

காங்கிரஸ் தனித்து நிற்பதுதான் எல்லோருக்கும் நல்லது. ^_^

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸின் மூத்த எம்.பி. ஒருவரிடம் பேசிய போது, ‘‘தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதில் எங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்டுகள் பிரசாரம் செய்வார்கள். இது அந்த மாநிலத்தில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை பாதிக்கக் கூடும். நாங்கள் எப்படியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆனால் கேரளாவில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை நாங்கள் எப்படி இழப்பது, அதே போல மேற்கு வங்கத்திலும் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது. தி.மு.க.விடம் குறைவான இடங்கள் வாங்கினால், மம்தாவும் அதே எண்ணிக்கையில் தான் சீட் தருவார். அது எங்களுக்கு இழப்பாகி விடும். அதனால்தான் எங்களுக்கு கூடுதல் சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறோம்’’ என்றார்.

காங்கிரஸ் தன் தோல்வி மேல் நம்பிக்கை வைத்துள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் :(

  • கருத்துக்கள உறவுகள்

:wub::D:lol: காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனியாக நிற்பதை நான் வரவேற்கிறேன். தேர்தலில் வெல்வதை விடவும், தனித்து நின்று டெப்பாஸிட் இழப்பதே வீரனுக்கு அழகு. அந்தவகையில் காங்கிரஸ்கட்சி தமிழகத்தில் ஒற்றைச் சீட் கூட இல்லாமல் வெற்றிபெற வாழ்த்துக்கள். இனிமேல் தமிழகத்தில் காங்கிரசின் சுவடு கூடத் தெரியக்கூடாது.

அதன் சவப்பெட்டியில் இறுதியாணியும் அடிக்கப்பட வேண்டும்.

ஆனாலும் இறுதிக்கட்டத்தில் ஜெயலலிதா காங்கிரஸைத் தூக்கித் தனது இடுப்பில் செருகிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- இந்தியா முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பு சூடுபிடித்து தேர்தல்களில் தோல்வி மட்டுமல்லாமல், ஊழல்களுக்காக சிறைக்கும் இவர்கள் செல்ல வேண்டும்.

- சுவிஸ் வங்கி உட்பட உலகம் முழுக்க உள்ள கருப்புப்பணம் வைத்துள்ளோர்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் :(

இராமநாதபுரம் எம் எல் ஏ ஹசன் அலி வெற்றிபெறுவார்.. மகிந்தவின் நண்பராக இருப்பதால்..! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரஸ் வெல்லுதோ தோக்குதோ அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இப்போதைக்கு கயவன் கரிநாய்க்கு காங்கிரஸ் ஆப்பு வைக்க வேண்டும் என்பதே என் அவா. காங்கிரஸ் எம் எதிரி. அவன் மீது கைவைத்ததற்கு படு மோசமாக பழிவாங்கினான். சரி அதையாவது மன்னிக்கலாம். ஆனால் தமிழ் தமிழ் என்று சொல்லியே இனவழிப்புக்கு துணைபோனானே ... அவனை தெருத் தெருவாக இழுத்து நாயை அடிப்பது போல் அடிக்க வேண்டும். அதை யார் செய்தாலும் நான் வரவேற்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:wub::D:lol:

ஆனாலும் இறுதிக்கட்டத்தில் ஜெயலலிதா காங்கிரஸைத் தூக்கித் தனது இடுப்பில் செருகிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுதான் நடக்கும் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.