Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

(அஜீவன் அண்ணா கோபிப்பதில்லை.

இது நகைச்சுவையிற்கு மட்டுமே)

:oops: :lol::( :P :(

நான் உங்கள் எழுத்துகளைப் பாாத்து சிரிப்பதுண்டு.

நேரில யாழ் கள நண்பர்கள்

நாமெல்லாம் சந்திச்சா ஒரே கலகலப்பா இருக்கும்

என்று நினைப்பதுண்டு.

பட்டி மன்றத்தில எல்லாரும் நல்லா எழுதுறாங்க.

பட்டி மன்றத்தில எழுதுற கருத்துகள் பிடிச்சருக்கு.

எனக்கே தெரியாத எவ்வளவோ விசயங்கள்.........தெரியுது.

தோல்வி வெற்றி என்கிறது பெரிதில்ல.

எல்லோரும் மனம் விட்டு பேசுற மாதிரி இருக்கு.

நல்லா இருக்கு.........

முடிவு

அது பொறுப்பானவங்க விசயம்.

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:oops: :lol::( :P :(

நான் உங்கள் எழுத்துகளைப் பாாத்து சிரிப்பதுண்டு.

நேரில யாழ் கள நண்பர்கள்

நாமெல்லாம் சந்திச்சா ஒரே கலகலப்பா இருக்கும்

என்று நினைப்பதுண்டு.

பட்டி மன்றத்தில எல்லாரும் நல்லா எழுதுறாங்க.

பட்டி மன்றத்தில எழுதுற கருத்துகள் பிடிச்சருக்கு.

எனக்கே தெரியாத எவ்வளவோ விசயங்கள்.........தெரியுது.

தோல்வி வெற்றி என்கிறது பெரிதில்ல.

எல்லோரும் மனம் விட்டு பேசுற மாதிரி இருக்கு.

நல்லா இருக்கு.........

முடிவு

அது பொறுப்பானவங்க விசயம்.

கட்டாயம் சந்திப்போம். ஒவ்வொருவரையும் நினைவில் கொண்டிருங்கள். தமிழீழம் கிடைக்கும்போது யாழ்கள உறவுகள் ஒன்றாக இருந்து கொண்டாடும் நிலை வரும். பாருங்கள்

  • தொடங்கியவர்

அடடா அருவியா??? ஆஹா அற்புதம் வாழ்த்துக்கள். என்னால் நம்பவே முடியாமல் இருக்கிறது.மிக அழகாக உங்கள் வாதத்தை வைத்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள் பாராட்டுக்கள்.

அடுத்ததாக சின்னப்பு நீங்கள் இன்று வைக்க வேண்டும்

  • தொடங்கியவர்

நன்றி ரசிகை.

லோன் விசயமா கியூவில நிண்டீங்கள் போல. :?:

ஆறியமர்ந்து வாங்க. :lol:

நீங்க இல்லாம மாலுமி இல்லாத கப்பலா நிக்குது பட்டி மன்றம். :P

அடடா உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? ம்ம்ம் கியூவில நிண்டும் கிடைக்க இல்லை. :cry: :cry:

  • தொடங்கியவர்

இப்ப எல்லாரும் பெரிய புள்ளைகள் ஆகிட்டாங்க.

திடீர் அதிரடித் தாக்குதலா வாரவங்கள விட்ட

ரசிகை நினைச்சா எனக்கு கோபமா இருக்கு.

அடுத்த பட்டி மன்றத்தில

அவங்களையும் சேர்த்துக்கோங்கோ......... :oops: :lol:

ஆ ஏனுங்க கோபமா வருது?

சரி சரி டோண்ட் வொறி நிச்சயமாக அடுத்த பட்டிமன்றத்தில் நானும் பங்காளரா சேருகிறேன்

அருவி வாழ்த்துக்கள் ... அருமையாக எழுதியிருக்கறீர்கள்... பாருங்கள் சின்னப்பு வார்த்தை இல்லமால் தடுமாறப்போகின்றார். :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

இணையம் புலம்பெயர் இளையசமுதயத்தில் தீமை என்று யாதார்த்ததைச் சுட்டி நிற்கும் அணியைச் சேர்ந்த புளுகர் பொன்னையாவோ, அல்லது ஈஸ்வரோ தயாராக இருப்பீர்கள் என்று நம்புகி;ன்றேன்.

வாதத்தால் போட்டுத் தாக்குங்கள்! :P :lol:

அருவி....அன்னத்துக்கே இந்த நிலையென்று சொன்னீர்...நளன் தமயந்தியை விட்டுட்டு போனதாலதான் கோபத்தில அன்னமெல்லாம் தற்கொலை செய்திட்டினமாக்கும்.:lol:கனடாவில இருக்கினம் தானே.:(

அருவி....அன்னத்துக்கே இந்த நிலையென்று சொன்னீர்...நளன் தமயந்தியை விட்டுட்டு போனதாலதான் கோபத்தில அன்னமெல்லாம் தற்கொலை செய்திட்டினமாக்கும்.:lol:கனடாவில இருக்கினம் தானே.:(

ஏன் கனடாவில அன்னத்துக்கு நளன் தமயந்தியை விட்டுப்போன கதை தெரியாதாக்கும். :wink: :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கனடாவில அன்னத்துக்கு நளன் தமயந்தியை விட்டுப்போன கதை தெரியாதாக்கும். :wink: :P :P

அதற்கு தமிழ்படிக்கத் தெரியாதமில்ல :wink: :lol:

பாருங்கள் சின்னப்பு வார்த்தை இல்லமால் தடுமாறப்போகின்றார்.

ரமா சின்னப்பு தடுமாறுவது வார்த்தை கிடைக்காமலா????

எதையாவது அடிச்சுப் போட்டு எங்காவது கவுந்தடிச்சுப் படுத்திருப்பார். யாராவது எழுப்பி விடுங்கோ. வந்து பேசட்டும்

பாருங்கள் சின்னப்பு வார்த்தை இல்லமால் தடுமாறப்போகின்றார்.

ரமா சின்னப்பு தடுமாறுவது வார்த்தை கிடைக்காமலா????

எதையாவது அடிச்சுப் போட்டு எங்காவது கவுந்தடிச்சுப் படுத்திருப்பார். யாராவது எழுப்பி விடுங்கோ. வந்து பேசட்டும்

braces.jpg

:shock: யாரு இது? :shock: பல்லு க்ளிப்பை கழட்டச்சொல்லுங்கோ. :roll:

  • கருத்துக்கள உறவுகள்

பட்டி மன்றத்தை ஆவலாய் படித்து சே பாத்து கொண்டிருக்கிறன் ஆனால் பட்டி மன்றம் குட்டி மன்றமா அப்பிடியே நிக்கிது என்ன இது டை வேளையா?? யாராவது சோடா பக்கோடா வாங்கி குடுத்து மற்றவையை பேச வையுங்கோ ஆனால் சின்னப்புவுக்குமட்டும் சோடாவை குடுத்து குளப்பி போடாதையுங்கோ

  • தொடங்கியவர்

சின்னப்புக்கு மடல் போட்டேன் பதிலைக் காணவில்லை ஆகவே அடுத்த ஆள் கருத்தை வைக்கவும்.

ஆகா சின்னப்பு எஸ்கேப்பா? சரி எனது கருத்தை நாளை முன் வைக்கின்றேன். அதற்கிடையே சின்னப்பு வந்தால் அவர் தன்னுடைய கருத்தை முன்வைக்கலாம்.

ஓ அடுத்தது மதனா?? வாழ்த்துக்கள் மதன். உங்கள் சீரான வாதத்தை எடுத்து விடுங்கள். கலக்கத்திலிருப்போருக்கு மேலும் கலக்கம் உண்டாக.

பட்டிமன்றப் பக்கத்திற்கு நேரடியாக செல்ல இங்கே அழுத்தவும்.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=152050#152050

ஆகா பில்டப் குடுக்காதீங்க வாழ்த்துக்கு நன்றி.

இந்த பட்டிமன்ற தலைப்பு Sticky ஆக போடப்பட்டிருப்பதால் போட்டிகள் பிரிவை தெரிவு செய்தால் அந்த தலைப்பு எப்போதும் முதல் தலைப்பாக இருக்கும்.

மதனுக்கு அடுத்ததாக திருவாளர் புளுகர் பொன்னையாவை தயார் ஆகுமாறு வேண்டுகிறோம்..... அவர் வராவிட்டால் ஈஸ்வர் வருக.... யாரும் வராட்டா நான் எழுதுறனப்பா..... :idea: :idea: :idea:

ஐயா. நான் தயாராத்தான் இருக்கிறன். வேட் இல் எழுதி வச்சிட்டன். கொப்பி பண்ணி இறக்கி விடுறதுதான் வேலை. அதுக்கு முதல் மதன்ரை கருத்தைப் பார்த்து ஏதும் திருத்த வேண்டி வரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்.

மிகவும் உற்சாகமாக பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைத்தேன். அன்றே என் அம்மாவின் துயரச்செய்திகேட்டு கனடாவிற்கு ஓடினேன். ஐயா என்றும், அண்ணா என்றும், ஆசிரியரே என்றும் அன்போடு அழைத்து களத்திலே வந்து கண்ணீர் அஞ்சலிகள் எழுதித்தந்தீர். ஆகாயவிமானத்தில் பறந்தபோதும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் பறந்துவந்தன. அனைவருக்கும் என் நன்றிகள்.

இப்போது மீண்டும் இலண்டனில் காலடி வைத்துவிட்டேன். இன்றிலிருந்து மீண்டும் பட்டிமன்றத்தில் பங்குகொள்வேன் என்று உங்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.

நன்றி

அன்பான செல்வமுத்து

இணையத்தின் வழி இணைந்தாலும்

உங்கள் துயரில் நாமும் உங்களோடு இதயங்களால்

இணைந்து நின்றோம்.

நலமாக இருக்கிறீர்களா?

இறைவனடி சேர்ந்த அம்மா உங்களோடு

என்றென்றும் இருக்க எம் பிராத்தனைகள் சகோதரனே........

amma_amma.JPG

அம்மா

இந்த உலகம் சிறியது

உன் பாசம் மட்டுமே

பெரியது

என்

நாவசையும் முன்பே

நீயொரு

பாஷை கற்றுத்தந்தாய்

அதுதான்

அன்பு என்னும்

இந்த உலக பாஷை

உன்

கைகளுக்குள் புதைந்து

இந்த உலகத்தை நான்

எட்டிப் பார்த்தபோது

எல்லாமே எனக்கு

இனிப்பாய்த்தான் இருந்தது

.

பொழுதெல்லாம்

உன் முத்த மழையில்

என் உயிரை நனைத்தப்

பாச அருவியே

நீ

என்றென்றும்

எனக்காகவே கறுத்துக் கிடக்கும்

மழைமேகம் என்று சொன்னாலும்

என் எண்ணம் குறுகியது

என் கண்களில்

வெளிச்சத்தை ஏற்றவே

உன் மேனியைத் தீயில் உருக்கும்

மெழுகுவர்த்திப் பிறவியே

நான் வசித்த முதல் வீடு

உன்

கருவறையல்லவா

நான் உண்ட முதல் உணவு

உன் இரத்தத்தில் ஊறிய

புனிதப் பாலல்லவா

நான் கேட்ட முதல் பாடல்

உன் ஆத்மா பாடிய

ஆராரோ ஆரிரரோ வல்லவா

நான் கண்ட முதல் முகம்

பாசத்தில் பூரித்த

உன் அழகு முகமல்லவா

நான் பேசிய முதல் வார்த்தை

என் ஜீவனில் கலந்த

'அம்மா' வல்லவா

நான் சுவாசித்த முதல் மூச்சு

நீ இட்ட

தேவ பிச்சையல்லவா

.

வாய்க்குள் உணவு வைத்து

நான்

வரும்வரைக் காத்திருக்கும்

பாச உள்ளமே

என் பாதங்கள்

பாதை மாறியபோதெல்லாம்

உன் கண்ணீர் மணிகள்தாமே

எனக்கு வழி சொல்லித்தந்தன

உனக்காக நான்

என் உயிரையே தருகிறேன்

என்றாலும்

அது நீ

எனக்காகத் தந்த

கோடானு கோடி பொக்கிஷங்களில்

ஒரே ஒரு துளியை மட்டுமே

திருப்பித் தருகிறேன்

என்னும்

நன்றி மறந்த

வார்த்தைகளல்லவா

-புகாரி கவிதைகளிலிருந்து

http://anbudanbuhari.com/xammaa.html

ஐயா. நான் தயாராத்தான் இருக்கிறன். வேட் இல் எழுதி வச்சிட்டன். கொப்பி பண்ணி இறக்கி விடுறதுதான் வேலை. அதுக்கு முதல் மதன்ரை கருத்தைப் பார்த்து ஏதும் திருத்த வேண்டி வரலாம்.

ம்ம்ம்....... பிள்ளையள் எல்லாம் படு உசாராத்தான் இருக்குதுகள்.... 8) 8) 8) பாப்பம் மதனாவது புலம் பெயர்ந்த இளைஞருக்குஇணையம் என்ன நன்மை செய்தது எண்டு சொல்லுகிறாரா எண்டு.... இல்லாட்டா நாங்கள் இல்லை எண்டு வகுப்பு எடுப்பம்.... :P :P :P

அனைவருக்கும் வணக்கம்.

மிகவும் உற்சாகமாக பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைத்தேன். அன்றே என் அம்மாவின் துயரச்செய்திகேட்டு கனடாவிற்கு ஓடினேன். ஐயா என்றும், அண்ணா என்றும், ஆசிரியரே என்றும் அன்போடு அழைத்து களத்திலே வந்து கண்ணீர் அஞ்சலிகள் எழுதித்தந்தீர். ஆகாயவிமானத்தில் பறந்தபோதும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் பறந்துவந்தன. அனைவருக்கும் என் நன்றிகள்.

இப்போது மீண்டும் இலண்டனில் காலடி வைத்துவிட்டேன். இன்றிலிருந்து மீண்டும் பட்டிமன்றத்தில் பங்குகொள்வேன் என்று உங்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.

நன்றி

ஆசிரியர் அவர்களை இங்கு பார்த்ததில் மிக மகிழ்ச்சி.... மீண்டும் உங்களை வரவேற்றுக் கொள்கிறோம்... வருக... :lol::):)

செல்வமுத்து அண்ணா அவர்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.