Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்.......

பிணங்களின்

ஓலங்களையும்

இழப்புக்களின்

வலிகளையும்

சகித்தபடி

சிந்தனைகளைப்

புதைத்து விட்டு

தூங்கப் பழகியிருக்குறோம்

வீட்டின்

கோடியில்

இற்றுப்போன

உடல்களின்

எஞ்சிய

எலும்புகளின்

நடுவே

அமைதியாக இருந்து

உணவருந்திக்கொள்கிறோம்

கோப்பையில்

இருந்து எழும்

சொந்தங்களின்

இரத்த வாடையை

நினைவுபடுத்தாது

தேநீரை

சுவைத்துக்கொள்கிறோம்

விடுதலைக்காய்

வீழ்ந்தவர்களின்

நினைவுகளை

சுமந்த நாட்களில்

கொடிகளைப்

பிடித்தவாறு

ஆக்கிரமிப்பாளர்களின்

தேசிய கீதங்களைப்

பாடிக்கொள்கிறோம்

ஏசிய வாய்களால்

யூதாஸ்களைப்பாடி

எங்களின்

மீட்பராய்

துதித்துக்கொள்கிறோம்

இடித்துக்

கொட்டப்பட்ட

கல்லறைகளையும்

மறைக்கப்பட்ட

புதைகுழிகளையும்

தாண்டி

சிரித்துக்கொண்டே

காவலரண்களைக்

கடந்து

பயணித்துக்கொள்கிறோம்

எப்போதும்

காதுகளில்

கேட்டுக்கொண்டிருக்கும்

ஒப்பாரிகளின்

நடுவே

இசைக்குழுக்களில்

கரைந்து

குதூகலித்துக்கொள்கிறோம்

உள்ளே

இற்றுப்போன

வீடுகளையும்

அரித்துப்போன

கூரைகளையும்

வைத்துக்கொண்டு

தெருக்களை

மட்டும்

அலங்கரித்துக்கொள்கிறோம்

எல்லாவற்றையும்

மறந்துபோகும்படி

எப்பொழுதும்

எங்களை நாங்களே

நினைவுபடுத்திக்கொள்கிறோம்

எதிர்காலமே

புதைக்கப்பட்ட

தேசத்தில்

எதிர்காலத்திற்காய்

நாங்களே

மாறிக்கொண்டு

எங்களை

ஏமாற்றிக்கொள்கிறோம்...........

Edited by ந.சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

புலன் பெயர்க்கப்படாத இதயங்களின் பாடல் இது.

முள்ளிவாய்க்கால் முடிந்த சில நாட்களில், யாழிலிருந்து வந்த ஒருவருடன் ..

... அங்கு எல்லாம் அந்த மாதிரி!

... அந்த மாதிரி என்றால்?

... சனம் சந்தோசமாக இருக்குதுகள்!

... என்ன , அப்ப அங்கு கொலைகள்?

... அங்கொன்று இங்கொன்றாக நடக்குதுதான்!

... களவுகள்?

... அதுவும் நடக்குதுதான்!!

... பெண்களை ..?

... செய்கிறாங்கள் தான்!

... கடத்தல்கள்?

... அதுவும் நடக்கத்தானே செய்யும்!

... அப்புறம் என்ன அங்கு சந்தோசமாக இருக்கிறார்கள் என்கிறீர்கள்?

.... சனம் வாழ வேண்டும், வாழத் துடிக்கிறீர்கள்! நடப்பவைகளை பெரிது படுத்தி என்னத்தை சாதிக்கலாம்? உலகமே பார்த்துக் கொண்டிருக்க இவ்வளவும் நடைபெற்றது! யாராவது தடுத்தார்களா? இல்லை அங்கு நடப்பைவளை பெரிது படுத்தினால், அவர்களை கேட்டுக் கேள்வியற்று போட்டுத்தள்ளிப் போட்டு போவான் சிங்களவன்! ஆதலினால் ..

.... ஆதலினால்?

.... உவைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அவற்றை பெரிது படுத்தாது, வாழ்க்கையை ... சாம்பல் மேட்டினுள்ளும் இருந்து சருகுகளை தேடிய வண்ணம் கொண்டிழுக்க பார்க்கிறார்கல்!!!

..... அதுதான் உண்மையும்!

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பையில்

இருந்து எழும்

சொந்தங்களின்

இரத்த வாடையை

நினைவுபடுத்தாது

தேநீரை

சுவைத்துக்கொள்கிறோம்

அருமையான வரிகளில் 'புறக்கணி சிறிலங்காவை", அழகாகச் சொல்லியிருகின்றீர்கள், சுபேஷ்!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்.......

உள்ளே

இற்றுப்போன

வீடுகளையும்

அரித்துப்போன

கூரைகளையும்

வைத்துக்கொண்டு

தெருக்களை

மட்டும்

அலங்கரித்துக்கொள்கிறோம்

இது எங்கள் தேசத்துக்கு மட்டுமல்ல, மனித மனங்களுக்கும் பொருந்தும்.

பொது மறை திருக்குறள் சிற்றினம் சேராமை (அத்தியாயம் 46 , குறள் 456 ) என்ற பகுதியில் :

மனந் தூயார்க் கெச்ச நன் றாகும் இனந் தூயார்க்

கில்லை நன் றாக வினை.

இதன்படி

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும், என்கிறது

நல்ல கவிதை ந.சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை...தொடர்ந்தும் எழுதுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அக்கா,நெல்லையன்,புங்கையூரான்,அகஸ்தியன்,ரதி தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் உறவுகளே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்.......

பிணங்களின்

ஓலங்களையும்

இழப்புக்களின்

வலிகளையும்

சகித்தபடி

சிந்தனைகளைப்

புதைத்து விட்டு

தூங்கப் பழகியிருக்குறோம்

வீட்டின்

கோடியில்

இற்றுப்போன

உடல்களின்

எஞ்சிய

எலும்புகளின்

நடுவே

அமைதியாக இருந்து

உணவருந்திக்கொள்கிறோம்

கோப்பையில்

இருந்து எழும்

சொந்தங்களின்

இரத்த வாடையை

நினைவுபடுத்தாது

தேநீரை

சுவைத்துக்கொள்கிறோம்

விடுதலைக்காய்

வீழ்ந்தவர்களின்

நினைவுகளை

சுமந்த நாட்களில்

கொடிகளைப்

பிடித்தவாறு

ஆக்கிரமிப்பாளர்களின்

தேசிய கீதங்களைப்

பாடிக்கொள்கிறோம்

ஏசிய வாய்களால்

யூதாஸ்களைப்பாடி

எங்களின்

மீட்பராய்

துதித்துக்கொள்கிறோம்

இடித்துக்

கொட்டப்பட்ட

கல்லறைகளையும்

மறைக்கப்பட்ட

புதைகுழிகளையும்

தாண்டி

சிரித்துக்கொண்டே

காவலரண்களைக்

கடந்து

பயணித்துக்கொள்கிறோம்

எப்போதும்

காதுகளில்

கேட்டுக்கொண்டிருக்கும்

ஒப்பாரிகளின்

நடுவே

இசைக்குழுக்களில்

கரைந்து

குதூகலித்துக்கொள்கிறோம்

உள்ளே

இற்றுப்போன

வீடுகளையும்

அரித்துப்போன

கூரைகளையும்

வைத்துக்கொண்டு

தெருக்களை

மட்டும்

அலங்கரித்துக்கொள்கிறோம்

எல்லாவற்றையும்

மறந்துபோகும்படி

எப்பொழுதும்

எங்களை நாங்களே

நினைவுபடுத்திக்கொள்கிறோம்

எதிர்காலமே

புதைக்கப்பட்ட

தேசத்தில்

எதிர்காலத்திற்காய்

நாங்களே

மாறிக்கொண்டு

எங்களை

ஏமாற்றிக்கொள்கிறோம்...........

ந. சுபேஸ்

மனத்துயரங்களை, மனச்சுமைகளை இன்னும் என்னென்னவோ சொல்லமுடியா சோகங்களை சொல்லத்துடிக்கும் மக்களின் வரிகளாய் உங்கள் வரிகள் அமைந்திருந்தன.... எந்த வரிகள் மனதைப் பாதித்தன என்று சொல்லமுடியாதளவுக்கு மொத்தக கவிதையுமே மனதைப் பாதித்தது.....

நீண்டகாலத்தின் பின் என் மனதில் ஓர் கனமேற்படுத்திய கவிதை தந்த சுபேஸுக்கு பாராட்டுக்கள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.