Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளி வாய்கால் விட்டுச்சென்ற தடங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில்

முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில்

புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு

பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப்

பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த

எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத்

தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல,

எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு!

இரண்டு வருடங்களாக, இந்தப் புதை குழிகளுக்குள்

மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும்

துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின்

சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும்

புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள்

விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய்,

வளரும் என்ற கனவில், மனதில் விளக்கேற்றி

விழி கனக்க நினைத்திருக்கும் ஊரே முள்ளிவாய்க்கால்!

பிறக்கும் முன்னே எழுதப் பட்ட விதியாகக்

கருவிலேயே எங்கள் தலைவிதி எழுதப் பட்டு விட

தமிழ்த் தாயின் வயிற்றில் வளர்ந்த சாபத்திற்காகத்

தனது காலில் தலை நிமிர்த்து வாழ நினைத்த பாவத்திற்காக,

உலகின் விடுதலை கேட்கும் உன்னத இனங்களின்

உயிர் மூச்சை அடக்கி வைக்க, ஒரு உதாரணத்திற்காகப்

பாரில் பலம் மிக்க, பணம் மிக்க நாடுகள், படைப்பலம் அளிக்கச்

சீராக நடத்தப் பட்ட நாடகமே முள்ளி வாய்க்கால்!

நீதியின் காவலர்களே, நடுவு நிலை தவறவும்,

போதி மரத்துப் புத்தன் பூவேந்தி ஆசீர்வதிக்கவும்,

மருத்துவ மனைகளும் மறை முக இலக்குகளாக.

பணி செய்த மருத்துவரும் பயங்கர வாதிகளாக,

மணிக்கு மணி மாறிய மக்களின் எண்ணிக்கையும்,

பிணிக்கு மருந்தின்றியும், பசிக்கு உணவின்றியும்

தனித்துப் போன உறவுகளுக்கு அனுப்பி வைத்த

'வணங்கா மண்' கப்பலையும், வெட்கமின்றி

நடுக் கடலில் திருப்பி விட்ட நய வஞ்சகமும்

நடத்தப் பட்ட இடமே இந்த முள்ளிவாய்க்கால்!

போராளிகளின் சரணடைவும்,அவர்களது மரணங்களும்

தீராத வடுக்களாக, மனத் திரைகளில் கீறி விட்ட கல் வரிகளாய்,

நீர் நிறைந்த சகதிகளின் ஓரங்களில், மண்ணில் புதைந்து

சீருடை களைந்த நிலையில், இரத்தம் கண்டிய முகங்களின்

வெறுமையும், வெற்று வாக்குறுதிகளின் சாட்சியத்தில்

அறுந்து போன சொந்தங்களின் சாட்சி சொல்லும்

கோரக் காட்சிகளும், கொடுமையின் உச்சத்தில்

வேரறுந்து போன போராட்டத்தின் களமே முள்ளிவாய்க்கால்!

திரும்பத் திரும்பப் உயிர் துளிர்க்கும் ':பீனிக்ஸ்' பறவையாய்

அரும்பில் இருந்து வளர்ந்து வரும் ஆலமர விழுதுகளாய்,

தாங்கிப் பிடித்திருப்போம், இந்தக் கொடிய நினைவுகளை!

தூங்கட்டும் அமைதியாக ,எங்கள் அணைந்து போன தீபங்கள்!

என்றோ ஒரு நாள் எங்கள் பொழுதும் விடியட்டும்

அன்றேல் விடியாது பேரிருட்டாய், காரிருளாய் மாறட்டும்!

ஆனாலும் எங்கள் நினைவுகளில், எதோ ஒரு விதத்தில்

இணைந்திருக்கப் போகும் இடமே இந்த முள்ளி வாய்க்கால்!!!

Edited by Punkayooran

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்பப் உயிர் துளிர்க்கும் ':பீனிக்ஸ்' பறவையாய்

அரும்பில் இருந்து வளர்ந்து வரும் ஆலமர விழுதுகளாய்,

தாங்கிப் பிடித்திருப்போம், இந்தக் கொடிய நினைவுகளை!

தூங்கட்டும் அமைதியாக ,எங்கள் அணைந்து போன தீபங்கள்!

என்றோ ஒரு நாள் எங்கள் பொழுதும் விடியட்டும்

அன்றேல் விடியாது பேரிருட்டாய், காரிருளாய் மாறட்டும்!

ஆனாலும் எங்கள் நினைவுகளில், எதோ ஒரு விதத்தில்

இணைந்திருக்கப் போகும் இடமே இந்த முள்ளி வாய்க்கால்!!!

உண்மை புங்கையூரான். உள்ளத்துக் குமுறல்களைப் படைப்பாகியமைக்குப் பாராட்டுகள்.

காலம் விழிதிறக்கும் வேளையிலே

எம் தேசப் புதல்வருக்கும்

விறகாகிப் போன எங்கள

அன்பு உறவுகளுக்குமாய்

ஒளியேற்றும் நாள் வராதா

என்ற ஏக்கமுடன் கழியும் பொழுதுகளாய்.............

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான்

நேற்று மக்களுடன் சேவையிலிருக்கும் ஒருவர் எமது ஊரிலிருந்து வந்திருந்தார். அவருடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டேன்.

அரசியல் பேசவேண்டாம், திரும்பிச்செல்லும் உங்களுக்கு அது ஆபத்தானது என்ற எங்களது கோரிக்கையையும் மீறி அவர் சொன்னது

நாங்கள் மௌனித்துவிட்டோம். நீங்கள் தான் எமக்காக பேசவேண்டும்.

இன்னொன்றையும் அவர் சொன்னார்

ஆனையிறவைத்தாண்டி இயக்கச்சி, பளை .....என்று போகும்போது எமக்கு மிகுந்த கவலையாக இருக்கும்.

அங்கு நிற்கும் அரைவாசி முறிந்து நிற்கும் பனைமரங்களின் நிலையே தமிழர்களது இன்றையநிலைக்கு ஒப்பீடானது.

ஆனால் காலப்போக்கில்

அந்த பனைமரங்களின் கீழ்

ஒவ்வொரு மரத்தின்கீழும் ஜந்து, ஆறு பனைகள்

துளிர் விடுவதைப்பார்க்கும்போது எமக்கும் நம்பிக்கை வருகிறது. நிச்சயம் துளிர்ப்போம் என்றார். மனதுக்கு ஆறுதலாக இருந்தது புங்கையூரான்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

------

பிறக்கும் முன்னே எழுதப் பட்ட விதியாகக்

கருவிலேயே எங்கள் தலைவிதி எழுதப் பட்டு விட

தமிழ்த் தாயின் வயிற்றில் வளர்ந்த சாபத்திற்காகத்

தனது காலில் தலை நிமிர்த்து வாழ நினைத்த பாவத்திற்காக,

உலகின் விடுதலை கேட்கும் உன்னத இனங்களின்

உயிர் மூச்சை அடக்கி வைக்க, ஒரு உதாரணத்திற்காகப்

பாரில் பலம் மிக்க, பணம் மிக்க நாடுகள், படைப்பலம் அளிக்கச்

சீராக நடத்தப் பட்ட நாடகமே முள்ளி வாய்க்கால்!

-------

-------

என்றோ ஒரு நாள் எங்கள் பொழுதும் விடியட்டும்

அன்றேல் விடியாது பேரிருட்டாய், காரிருளாய் மாறட்டும்!

ஆனாலும் எங்கள் நினைவுகளில், எதோ ஒரு விதத்தில்

இணைந்திருக்கப் போகும் இடமே இந்த முள்ளி வாய்க்கால்!!!

ஆயிரம் வருடங்களாக அரசாண்ட தமிழனின் கடைசிக் காணியும், எமது கண்முன்னே... பறிபோனது மிகுந்த கவலையும், ஏமாற்றமும் ஏற்படுத்துகின்றது. அதனை எமது கண் முன்னே... மீட்டுக் கொடுப்பதும் எமது கடமை.

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைக்கு ஒரு பச்சை...தொடர்ந்தும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளக்குமுறலை கவிதை வடிவில் தந்த புங்கையூரானுக்கு நன்றி.எம்கடமையை சரிவர செய்வோம்.காலம் ஒரு நாள் நிச்சயமாக எமக்கு சாதகமாக மாறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை புங்கையூரான். உள்ளத்துக் குமுறல்களைப் படைப்பாகியமைக்குப் பாராட்டுகள்.

காலம் விழிதிறக்கும் வேளையிலே

எம் தேசப் புதல்வருக்கும்

விறகாகிப் போன எங்கள

அன்பு உறவுகளுக்குமாய்

ஒளியேற்றும் நாள் வராதா

என்ற ஏக்கமுடன் கழியும் பொழுதுகளாய்.............

பறந்து திரிந்த எங்கள்

சிறகுகள் தான் அறுக்கப் பட்டன!

உறைந்து கிடக்கும் உணர்வுகள்

மறைந்தே கிடக்கின்றன!

'போர்க்குற்றம்' எமக்கு நாகாஸ்திரம்

நேர் கோட்டில் செல்வோம், நாம்

நெஞ்சை நிமிர்த்தி!!!

ஒரேயொரு தடவை தான் எமக்குண்டு!

இரண்டாவது தடவை, அது வேலை செய்யாது!!!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் வருடங்களாக அரசாண்ட தமிழனின் கடைசிக் காணியும், எமது கண்முன்னே... பறிபோனது மிகுந்த கவலையும், ஏமாற்றமும் ஏற்படுத்துகின்றது. அதனை எமது கண் முன்னே... மீட்டுக் கொடுப்பதும் எமது கடமை.

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.

தூங்காத இரவுகளினதும்,

தாங்காத வலிகளினதும்,

ஏங்கிய எதிர்பார்புக்களினதும்,

பொங்கிய கோபத்தின் வெளிப்பாடே அது!!

சிதையில் எரிந்தவை,வெறும் இரத்தமும் சதையுமே!

விதையில் முளைப்பவை,வருங்காலத்து மரங்கள்!!!

எங்கள் எதிர்பார்ப்புக்களைத்

தங்கள் தலை மீது, அவை காவிச்செல்லும்!!!

உங்கள் கவிதைக்கு ஒரு பச்சை...தொடர்ந்தும் எழுதுங்கள்

நன்றிகள் ரதி அக்கா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளக்குமுறலை கவிதை வடிவில் தந்த புங்கையூரானுக்கு நன்றி.எம்கடமையை சரிவர செய்வோம்.காலம் ஒரு நாள் நிச்சயமாக எமக்கு சாதகமாக மாறும்.

விளக்கில் வீழ்ந்து எரியும் விட்டில் பூச்சியின் வாழ்வு,

பழக்கமில்லாத எங்கள் கண்களில் ஒரு அழிவு!

ஆயிரம் விட்டில் பூச்சிகளை, ஆக்கிவிட்ட பின்பே தன்னை

மாய்த்துக் கொள்கின்றது, அந்த விட்டில் பூச்சி!!!

நீங்களும், நானும் விடுபட்ட

விட்டில் பூச்சிகள் தான்!!!

கருத்துக்கு நன்றிகள், நுணாவிலான்!!!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான்

நேற்று மக்களுடன் சேவையிலிருக்கும் ஒருவர் எமது ஊரிலிருந்து வந்திருந்தார். அவருடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டேன்.

அரசியல் பேசவேண்டாம், திரும்பிச்செல்லும் உங்களுக்கு அது ஆபத்தானது என்ற எங்களது கோரிக்கையையும் மீறி அவர் சொன்னது

நாங்கள் மௌனித்துவிட்டோம். நீங்கள் தான் எமக்காக பேசவேண்டும்.

இன்னொன்றையும் அவர் சொன்னார்

ஆனையிறவைத்தாண்டி இயக்கச்சி, பளை .....என்று போகும்போது எமக்கு மிகுந்த கவலையாக இருக்கும்.

அங்கு நிற்கும் அரைவாசி முறிந்து நிற்கும் பனைமரங்களின் நிலையே தமிழர்களது இன்றையநிலைக்கு ஒப்பீடானது.

ஆனால் காலப்போக்கில்

அந்த பனைமரங்களின் கீழ்

ஒவ்வொரு மரத்தின்கீழும் ஜந்து, ஆறு பனைகள்

துளிர் விடுவதைப்பார்க்கும்போது எமக்கும் நம்பிக்கை வருகிறது. நிச்சயம் துளிர்ப்போம் என்றார். மனதுக்கு ஆறுதலாக இருந்தது புங்கையூரான்.

சங்குகள் கடலுடன் சங்கமாகி விடுகின்றன,

தங்கள் காலம் முடிந்த பின்பு!

அங்கவை விட்டுச் செல்லும் முத்துக்கள்

தங்க நகைகளில் வாழ்கின்றன,ஆயிரம் ஆண்டுகள்!!!

கருத்துக்கு நன்றிகள் விசுகு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.