Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வது சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்படும். - இலங்கை அரசு

Featured Replies

இன்று இரவு இந்திய குழு வந்து இறங்குகின்றது அதற்குள் ரம்புக்வெல அவசர அவசரமாக தமிழர்க்கு 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம், பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். யாருக்கு யாரிடம் இருந்து பெற்றுக்கொடுப்பது என்பது வேறு விடயம்.

.

இன்று பத்திரிகையாளர் மா நாட்டில் பேசிய ரம்புக்வெல;தமிழ் மக்களை பாதுகாக்கக் கூடிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லவெனவும்.

.

13வது சீர்திருத்தத்தின் கீழ் காவல்துறை அதிகாரம் வழங்கும் போது, பிரச்சனை தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் யோசனை ஒன்று தமிழக முதலமைச்சரினால், நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் இலங்கை சுயாதீனமான நாடு எனவும், எந்தவொரு தீர்மானத்திற்கும் அல்லது புரிந்துணர்வுக்கும் வர வேண்டுமானால், அது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடனே கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

.

அவசர கால சட்டத்தை குறுகிய காலப்பகுதியினுள் விலக்கிகிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்தார்.

இந்தியாவுடன் மட்டுமே எமக்கு தொடர்பு நாட்டுக்கு நாடுதான் உறவே தவிர மா நிலங்களுக்கு அல்ல. ஆகையால் மா நில சபை தீர்மானம் எம்மை ஒன்றும் செய்ய முடியாது. நாம் இறைமையுள்ள நாடு என்றார் ரம்புக்வெல.

http://www.eelanatham.net/story/13-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

13 வது சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்படும். - இலங்கை அரசு

2010 - 13 சட்டதிருத்தினை விட அதிக அதிகாரம் வழங்கபடும்

2011 - அமைச்சரவை சட்ட தரணிகள் குழு அமைக்கபடும்

ambode-masal-vadai-1024x858.jpg

The+teashop.JPG

2012 - சட்டதரணிகள் தலிவர் மசால் வடையும் டீயும் சாப்பிட போய் இருப்பதால் சிறிது அவகாசம் தேவை.

3010- ஆய்வு குழு அமைக்கபட்டு ஆராய்வு மேற்கொள்ளபடுகிறது

4010- ஆய்வு குழு தலைவர் ஒண்ணூக்கடிக்க போய் இருப்பதால் அறிக்கை வர தாமதம் ஏற்பட்டுள்ளது.

5010- இங்கு தமிழினம் என்ற ஒன்றே இல்லை. இல்லாத ஒன்றுக்கு எங்களை வற்புறுத்த கூடாது.

முடிந்தது சிக்கல் டண்டண டன்...

0002006E.gif

டிஸ்கி:

ஜெயம்மா.

1)சுயாட்சி கோசத்தினை முன்வைக்கலாம்.

2)வட கிந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கலாம்

3)தனியாக சிறப்பு கடலோர காவல் படை ஒன்றினை அதிநவீன வசதிகளுடன் உருவாக்கி கச்ச தீவில் நிறுத்தலாம்..

எதுவும் நடக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஐநா அறிக்கை சம்மந்தமாக உலக நாடுகளை சமாளிப்பதற்கு ஆடும் ஆட்டம்.

2010 - 13 சட்டதிருத்தினை விட அதிக அதிகாரம் வழங்கபடும்

2011 - அமைச்சரவை சட்ட தரணிகள் குழு அமைக்கபடும்

ambode-masal-vadai-1024x858.jpg

The+teashop.JPG

2012 - சட்டதரணிகள் தலிவர் மசால் வடையும் டீயும் சாப்பிட போய் இருப்பதால் சிறிது அவகாசம் தேவை.

3010- ஆய்வு குழு அமைக்கபட்டு ஆராய்வு மேற்கொள்ளபடுகிறது

4010- ஆய்வு குழு தலைவர் ஒண்ணூக்கடிக்க போய் இருப்பதால் அறிக்கை வர தாமதம் ஏற்பட்டுள்ளது.

5010- இங்கு தமிழினம் என்ற ஒன்றே இல்லை. இல்லாத ஒன்றுக்கு எங்களை வற்புறுத்த கூடாது.

முடிந்தது சிக்கல் டண்டண டன்...

0002006E.gif

புரட்சி,

இப்படித்தான்யா காலம் காலமாக சிங்களவன் எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். 'கழுவிற மீனில நழுவிற மீன்' சிங்களவன். :(

Edited by thappili

மே 2009க்கு பின்னராக நேற்றுவரை தெரிவு 3) மட்டுமே பெரிதாக இருந்தது.

ஐ.நா.வின் அறிக்கை, சனல் 4 , தமிழக ஆட்சி மாற்றம் போன்றன தெரிவு 1) கொண்டுவந்து இன்று விட்டுள்ளது. ஆனால், சிங்களம் தெரிவு 2) ஒன்றையே (போலிஸ் அதிகாரம் இல்லாமல்) தரும் என எதிர்பார்க்கலாம். காரணம் சிங்கள இனவாதிகள், பிக்குகள், எமக்குள் இல்லாத ஒற்றுமை என பல காரணிகள் உள்ளன.

1. 13 வது சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்படும்

2. 13 வது சீர்திருத்தத்திற்கு உட்பட்டதாக அதிகாரம் வழங்கப்படும்

3. ஒரு அதிகாரமுமே வழங்கப்படாது

மேலே உள்ள எல்லா தெரிவுகளையுமே எதிர்ப்பவர்கள் இருப்பார்கள். தெரிவு 1) இல்லை 2)எடுத்துக்கொண்டு அதற்கும் மேலே எம்மை பலமாக்கி, சிங்களத்தை பலவீனமாக்கி, தொடரலாம்.

Edited by akootha

வட பகுதியை விட தென்பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலேயே தீர்வு: அரசாங்கம் _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32118

உமை நீர் இணைத்த செய்தி தொடர்பான செய்திகள் வேறு எந்த இலங்கை இணையத்தளங்களிலும் இல்லை!!! ...13வது திருத்தத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரம் வழங்கப்படும் ... என்ற தலைப்பே இங்கு பலரை குழப்பும் விதமாக இருக்கிறது!!!??? ....

ஆகக் குறைந்தது தனியான இராணுவம், தனியான போலிஸ், முழுமையான காணி அதிகாரம், நேரடி வெளிநாட்டு உறவு அதிகாரம், கல்வி, நீர் வளம், சாலைகள், கடல்வளம் உட்பட அனைத்து வளங்களும் அதிகாரங்களும் அடங்கிய (பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய) முழுமையான சுயாட்சி

அல்லது

தனித் தமிழ் ஈழம்

தான் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வு என்பதை தெளிவாக சொல்லவேண்டிய நேரமிது.

தமிழரின் சாபக் கேடாக விளங்கும் சம்பந்தன் போன்றோர் இதை உறுதியாக தெரிவிப்பார்களா?

இல்லை உறுதியான இளையோர் கைகளில் தலைமைத்துவத்தை கொடுத்து வழிநடத்துவார்களா?

தமிழரின் நம்பிக்கையை பெற்றுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கு கூடிய பொறுப்புக்கள் உள்ளது.

  • தொடங்கியவர்

ஆகக் குறைந்தது தனியான இராணுவம், தனியான போலிஸ், முழுமையான காணி அதிகாரம், நேரடி வெளிநாட்டு உறவு அதிகாரம், கல்வி, நீர் வளம், சாலைகள், கடல்வளம் உட்பட அனைத்து வளங்களும் அதிகாரங்களும் அடங்கிய (பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய) முழுமையான சுயாட்சி

அல்லது

தனித் தமிழ் ஈழம்

தான் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வு என்பதை தெளிவாக சொல்லவேண்டிய நேரமிது.

தமிழரின் சாபக் கேடாக விளங்கும் சம்பந்தன் போன்றோர் இதை உறுதியாக தெரிவிப்பார்களா?

இல்லை உறுதியான இளையோர் கைகளில் தலைமைத்துவத்தை கொடுத்து வழிநடத்துவார்களா?

தமிழரின் நம்பிக்கையை பெற்றுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கு கூடிய பொறுப்புக்கள் உள்ளது.

[/quote

முதல்வர் அம்மா ஈழத்தமிழர்க்கு சமவுரிமை கொடுக்க வேண்டும் என சிவசங்கர் மேனனிடம் வலியுறுத்தியுள்ளாராம் ஆனால் அதில் தெளிவு இல்லை. எதனை சமவுரிமை என கூறுகின்றார் என ஊகிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

[முதல்வர் அம்மா ஈழத்தமிழர்க்கு சமவுரிமை கொடுக்க வேண்டும் என சிவசங்கர் மேனனிடம் வலியுறுத்தியுள்ளாராம் ஆனால் அதில் தெளிவு இல்லை. எதனை சமவுரிமை என கூறுகின்றார் என ஊகிக்க முடியவில்லை.

ஜெ அவர்கள்

ஈழத்தமிழர் என்று பாவிப்பதில்லை. இலங்கைத்தமிழர் என்றே சொல்கிறார். அதன்படியும் சம உரிமை என்பதும் தமிழருக்கான தீர்வு பற்றியல்ல இருபகுதியும் சமமாக இலங்கையில் வாழவேண்டும் என்ற கோரிக்கையையே முன் வைக்கின்றார். இதைத்தான் மத்திய அரசும் சொல்கிறது. எனவே அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடில்லை.

ஆனால் போர்க்குற்றம் இனஅழிப்பு என்பவற்றை மத்திய அரசு ஆதரிக்காவிட்டாலும் ஜெ தொடர்ந்து ஆதரிப்பாராக இருந்தால் நாம் அடுத்தகட்டத்துக்கு போகமுடியும்.

அதேநேரம் அவரது இந்தநிலையை முறியடிக்க மத்திய அரசு எல்லாவழிகளாலும் முயலும். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.