Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா கிறிக்கெட்டைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் – குழப்பம் விளைவிக்க முயன்ற சிங்களவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by இரும்பொறை on 29/06/2011 in செய்தி

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

காலை 11:00 மணிமுதல் கிறிக்கெட் பார்க்கச் சென்ற மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை இளையோர்கள் வழங்கல் செய்துகொண்டிருக்க, இளையோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாலை 5:00 மணி முதல் மக்களும் இணைந்து கொண்டனர்.

தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற சிங்களவர்கள் இளையோர்கள் மீது எச்சில் துப்பி, தகாத வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியதுடன், தமிழீழ தேசிக் கொடியை அகற்ற வேண்டும் என பிரித்தானிய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இளையோர் வைத்திருந்த கொடி தடை செய்யப்படவில்லை எனவும், அதனை அவர்கள் வைத்திருக்கும் உரிமை உண்டு எனவும் கூறிய பிரித்தானிய காவல்துறையினர், தாம் அந்தக் கொடியை அகற்றுமாறு கோரிக்கை விடுக்க மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியிருந்தனர்.

சிங்கள காடையர்களின் நடைமுறை மற்றும் தமிழ் இளையோர்கள் வன்முறையைத் தவிர்த்த காரணத்தினால், சிங்களவர்கள் மீது கோபம்கொண்ட பிரித்தானிய காவல்துறையினர், குழப்பம் விழைவித்த சிங்களவர்களின் பெயர், விபரங்களைப் பதிவுசெய்து, மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்து அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

முன்னர் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களின்போது மக்கள் தொகையைக் கண்டு அருகே செல்ல அஞ்சும் சிங்களவர்கள், இப்பொழுது அருகில் சென்று வன்முறையைப் பிரயோகிக்கும் அளவிற்கு துணிச்சல் பெற்றுள்ளமைக்கு, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழ் மக்களின் எண்ணிக்கையே காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவரும் பிரித்தானிய தமிழ் இளையோர்கள், இதற்கு முன்னதாக இந்த மாதம் மட்டும் அக்ஸ்பிறிஜ், கார்டிஃப், லோர்ட்ஸ், பிறிஸ்ரல் போன்ற பல இடங்களில் ஐந்து தடவைகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இன்று கடும் மழையின் மத்தியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ் இளையோர்கள், எதிர்வரும் ஜூலை 3ஆம் நாள் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மற்றொரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தவுள்ளனர்.

http://www.eelampress.com/2011/06/28371/

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் என்ன லண்டனிலும் அடக்கி ஆழப்பாக்கின்றானோ ..........?

இவங்கள் திருந்தவே மாட்டானுகள்

தமிழன் பயந்து அடங்கும்வரை அவன் எப்படித் திருந்துவான்?

தமிழ் இளையோர்களுக்கு நன்றிகள்.

பிரித்தானிய அரசும், மக்களும், உலகமும், தமிழரை எவ்வாறு சிங்களம் தாயகத்தில் நடத்தும் என்பதை இதன்மூலமும் உணரும்.

இளையோருக்கு பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை விளையாட்டா பார்க்கணும்..

--இப்படிக்கு மாற்று கருத்து மாணிக்கங்கள் சங்கம்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளையோர்களுக்கு நன்றிகள்.

இவர்களும் பஸ்ஸுக்கா நிற்கின்றார்கள். கொடியைப்பார்த்தால் வேறெங்கோ போக நிற்பதுபோல் கிடக்கு?

... இந்த சிறார்களிடமிருந்தாவது ... எம் புலம்பெயர் பிரதிநிதிகள் நிறைய படிக்கலாம்!! .... இவர்களை ஊக்கப்படுத்தி, அவர்கள் பின்னாவது தொடருங்கள் ....

இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்பவர்கள் இரு வகுப்பு.

1.முன் நின்று நடாத்தும் தலைவர்கள்.

2.அவர்களைப்பின் தொடரும் தொண்டர்கள்.

ஆர்ப்பாட்டங்கள் வெற்றியடையவிட்டால் தொண்டர்கள் மட்டுமல்ல குற்றவாளிகள்.

தலைவர்கள் தங்கள் பொதுசன தொடர்பு முறைகளைத் திருத்தி கூடிய எண்ணிக்கையான மக்களை அழைக்க முயல வேண்டும்.

அந்தந்த நாடுகளுக்கேற்ற முறைகளைக் கையாள வேண்டும்.

இதை நாம் சமூகசேவையாகச் செய்யும் போது மற்றவர்களின் குறைகளையும் உள்வாங்கியே செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இனிமேல் - It is the responsibility of the management - என்றும் வைத்துக்கொள்வோமாக.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்களுக்கு வரும் உறவுகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது!

காரணம் தெரியவில்லை!

பிரித்தானிய தமிழ் இளைஜர் அமைப்புக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள காடையர்களின் நடைமுறை மற்றும் தமிழ் இளையோர்கள் வன்முறையைத் தவிர்த்த காரணத்தினால், சிங்களவர்கள் மீது கோபம்கொண்ட பிரித்தானிய காவல்துறையினர், குழப்பம் விழைவித்த சிங்களவர்களின் பெயர், விபரங்களைப் பதிவுசெய்து, மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்து அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

img9616u.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34124

நா. க. த. ஈ. அரச பிரதிநிதிகள் வெயில் அதிகம் என்று போகாமல் இருந்திருப்பார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நா. க. த. ஈ. அரச பிரதிநிதிகள் வெயில் அதிகம் என்று போகாமல் இருந்திருப்பார்கள்!

அவர்கள் ஏன் போகிறார்கள்

சில வேளை ஒரு அறிக்கை விடுவார்கள்

இன்னும் சில சமயங்களில் ஒன்றுமே செய்யமாட்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டங்களுக்கு வரும் உறவுகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது!

காரணம் தெரியவில்லை!

எல்லாமே ஒரு விரக்தியினால் இருக்கலாம் புங்கை அண்ணா.

(தனி திரி ஆரம்பித்து இது குறித்து விவாதித்தால் நல்லது என்று நினைக்கிறேன்.)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே ஒரு விரக்தியினால் இருக்கலாம் புங்கை அண்ணா.

(தனி திரி ஆரம்பித்து இது குறித்து விவாதித்தால் நல்லது என்று நினைக்கிறேன்.)

உண்மை தான் ஜீவா! விரக்தியின் விழிம்புக்கு எம்மைக் கொண்டு போவதே சிங்களத்தின் நோக்கம்!\

அதற்கு அது எம்மையே உபயோகிப்பது தான் இன்னும் வேதனையை அதிகரிக்கின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நா. க. த. ஈ. அரச பிரதிநிதிகள் வெயில் அதிகம் என்று போகாமல் இருந்திருப்பார்கள்!

அடடா! மக்கள் ஆகிய நாம் இந்தப் பொறுப்புக்களைக் கூட அவர்கள் தலையில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டோமா?

அப்படி என்றால் இதுவரை இவர்கள் மீது சுமத்தப்பட்ட எதிர்பாப்புக்கள் எல்லாம் இந்த வகையிலேயே ஆனவைதானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களும் பஸ்ஸுக்கா நிற்கின்றார்கள். கொடியைப்பார்த்தால் வேறெங்கோ போக நிற்பதுபோல் கிடக்கு?

இப்படி வீண்பதிவுகளுக்கு மொத்தக் கடையாய் விளங்குபவர், சில்லறைகளாய் வரும் கேள்விகளுக்கு வீண் இது என்று கடையைக் கட்டுதல் முறையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி வீண்பதிவுகளுக்கு மொத்தக் கடையாய் விளங்குபவர், சில்லறைகளாய் வரும் கேள்விகளுக்கு வீண் இது என்று கடையைக் கட்டுதல் முறையோ?

எங்கேயோ ஒரு பதிவில் நன்கு சுட்டுவிட்டது போல் இருக்கிறது :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ ஒரு பதிவில் நன்கு சுட்டுவிட்டது போல் இருக்கிறது :lol:

சூடு கண்டால் அடுப்பங்கரையை நாடதாமே

நிஜமாவா ..........?

தமிழன் பயந்து அடங்கும்வரை அவன் எப்படித் திருந்துவான்?

தமிழ் இளையோர்களுக்கு நன்றிகள்.

எங்களின் வீரத்தை ஏற்க்கனவே பலதடவை நிரூபித்து காட்டியுள்ளோம் தற்போது அமைதிகாக்கின்றோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.