Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் படுகாயம் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் படுகாயம் :

13 ஜூலை 2011

மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயமடைந்தனர். மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.

இதில் 15 பேர் வரை காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன. தாதர் மேற்குப் பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் குண்டுவெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64024/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடிப்பு: 10 பேர் பலி,100 க்கும் மேற்பட்டோர் படுகாயம்: விரைவில் மேலதிக விபரங்கள்

[Wednesday, 2011-07-13 19:59:58]

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 10 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.

ஜாவேரி பஜார் பகுதியில் இருந்த மீட்டர் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதே போல், தாதர் பகுதியில் கபுதார் கானா என்ற இடத்தில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46439&category=TamilNews&language=tamil

சென்செக்ஸ் சரியும் !

பாகிஸ்தானுக்குள் சென்று அமெரிக்கா போன்று இந்தியா தாக்குதல் நடத்தாது என திட்டவட்டமாக நம்பலாம்.

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு

இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற மூன்று தொடர் குண்டு வெடிப்புகளில் 8 பேர் இறந்துள்ளதாகவும், 20 பேர் வரை காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் இரண்டு குண்டுகள் நகரின் மத்தியப் பகுதியிலும் ஒன்று நகரின் தென் பகுதியிலும் வெடித்துள்ளன. அதாவது, நகரில் சனநெருக்கடி மிகுந்த ஜவேரி பஜாரிலும், மற்றுமொன்று ஒபேரா ஹவுஸ் பகுதியிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

இவற்றுள் ஒரு குண்டு ஒரு வாடகைக் காரிலும், ஒன்று ஒரு நகைக்கடையிலும், அடுத்தது ஒரு பஸ்ஸிலும் வெடித்துள்ளன.

இதற்கு முன்னரும் மும்பையில் இவ்வாறான தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

2008 ஆம் ஆண்டு இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 150 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல் நடத்தியவர்களாக குற்றஞ் சாட்டப்பட்டிருப்பவர்களில் உயிரோடு இருக்கும் ஒரேயொருவரான முஹமட் கசாப்பின் பிறந்த தினத்தில் இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 15 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் பொலிஸாரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இந்திய உள்துறை அமைச்சு வர்ணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மும்பையில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு-10 பேர் பலி-70 பேர் காயம்Connect with

புதன்கிழமை, ஜூலை 13, 2011, 19:39 [iST] A A A

மும்பை: மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. 70 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

6.45க்கு முதல் குண்டுவெடித்தது

மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.

மாலை 6.45 மணியளவில் முதல் குண்டுவெடித்தது. தாதர் மேற்குப் பகுதியில், கபூதர்கானா என்ற இடத்தில் நின்றிருந்த ஒரு மாருதி எஸ்டீம் காரில் இந்த குண்டு வெடித்தது.

அடுத்து, ஜவேரி பஜார் பகுதியில், கவ் காலி என்ற இடத்தில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் இருந்த மீட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. இதில் 4 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

ஓபரா ஹவுஸில் உள்ள பிரஷாந்த் சேம்பரில் நின்றிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் 3வது குண்டுவெடித்தது.

இந்த மூன்று சம்பவங்களிலும் 10 பேர் பலியானதாக ஒரு தகவலும், 15 பேர் காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன.

இருப்பினும் 70 பேர் வரை காயமடைந்துள்ளதாக போலீஸ் தரப்புத் தகவல் தெரிவித்தது.

மும்பை முழுவதும் உஷார் நிலை

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப் புற சாலைகளில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.

தயார் நிலையில் என்எஸ்ஜி கமாண்டோக்கள்

என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி நடவடிக்கைக்குத் தேவையான அளவில் அவர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

என்ஐஏ குழு மும்பை விரைகிறது

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் புலனாய்வுக் குழு டெல்லியிலிருந்து மும்பை விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத தாக்குதல்-உள்துறை அமைச்சகம்

மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், மத்திய உள்துறை செயலாளர் யு.கே.பன்சால், மகாராஷ்டிர மாநில டிஜிபியைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து இந்த சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் மூலம் என்எஸ்ஜி கமாண்டோப் படையினரும், தடயவியல் நிபுணர்களும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

நாடு முழுவதும் உஷார் நிலை

மேலும், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

thatstamil.in

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து லஷ்கர் இ தொய்பா நடத்திய தாக்குதல்?

புதன்கிழமை, ஜூலை 13, 2011, 20:52

மும்பை: மும்பையில் இன்று 3 இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என மும்பை போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபரா ஹவுஸ் என மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து மும்பை நகரை அதிர வைத்தன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடங்களை போலீஸார் முற்றுகையிட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மூன்று இடங்களிலும் ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்வு செய்து குண்டுகளை வைத்துள்ளதால் பெருமளவில் உயிர்ச்சேதத்தை நிகழ்த்தும் திட்டமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர முதல்வருடன் பிரதமர் பேச்சு

குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானை தொடர்பு கொண்டு பேசினார். நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/13/im-let-behind-mumbai-blasts-sources-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை குண்டுவெடிப்பு : பாகிஸ்தான் கண்டனம்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

மும்பை குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகிய இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57699

நாடு கடந்த அரசும் இந்த தாக்குதலை கண்டித்து, மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசும் இந்த தாக்குதலை கண்டித்து, மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வேண்டும்.

உள்ளுக்குள் சிரித்துகொண்டு (அப்பாவி மக்களை நினைத்து அழுதாலும்) வெளியாலே அழுதுகொண்டு ஒரு அறிக்கையை விட வேண்டும்

அதுவும் காந்தியம் தோன்றிய அந்த புனிதமான இந்தியாவை இப்படி தாக்க எப்படி இவர்களால் முடிகிறது என்றும் ஒரு கேள்வியை போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எவன் எங்க செத்தா எனக்கென்ன? :)

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/xay4o0maA0s

  • கருத்துக்கள உறவுகள்

எவன் எங்க செத்தா எனக்கென்ன? :)

தேசி இப்படி விட்டேற்றியா செப்பக் கூடாது... :lol:

பாரத பூமி பழம் பெரும்பூமி..

நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!

பாரத் மாதா கீ.. *** :)

எவன் எங்க செத்தா எனக்கென்ன? :)

'சொல்வதும் செய்வதும்' ஒன்றே என்ற அரசியல் அறிவால்தான் பல சாம்ராஜ்யங்களை தமிழன் இழந்தான். இன்று உலகின் அகதியாய், நாடில்லாமல் அலைகிறான்.

'சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று' என்ற யதார்த்த அரசியலுக்குள் நுழைவோம், வாருங்கள் எமது எதிரிகள் போல :-)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 13, ஜூலை 2011 (23:56 IST)

மும்பை குண்டு வெடிப்பு:

பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

மும்பையில் ஜாவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர் ஆகிய 3 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

குண்டுவெடிப்பு நடைபெற்ற 3 இடங்களும் மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதிகள் ஆகும்.

இந்த குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 113 பேர் காயம் அடைந்துள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57711

தமிழ் அரசியல்வாதிகள் இதைக் கண்துடைப்புக்காகக் கண்டிப்பது எல்லாம் சரி தான்.

ஆனால் ஈழ மண்ணில் இலட்சக் கணக்கான மக்களைப் பறிகொடுத்து நிற்கும் ஈழத்தமிழர் அதற்குக் காரணமான காட்டுமிராண்டிகள் மண்ணில் இதுபோன்று இன்னும் இலட்சக் கணக்கான சம்பவங்கள் நடக்காதா என ஏங்குகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். திட்டமிட்டு இனப்படுகொலை செய்யும் கொலைகாரக் கும்பல்கள் மீது யாரும் மனிதாபிமானம் பார்ப்பதில்லை, இரக்கம் கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள் சிரித்துகொண்டு (அப்பாவி மக்களை நினைத்து அழுதாலும்) வெளியாலே அழுதுகொண்டு ஒரு அறிக்கையை விட வேண்டும்

அதுவும் காந்தியம் தோன்றிய அந்த புனிதமான இந்தியாவை இப்படி தாக்க எப்படி இவர்களால் முடிகிறது என்றும் ஒரு கேள்வியை போட வேண்டும்.

மூன்று இடத்திலை குண்டு வெடித்தும், ஆக எட்டுப் பேர் தானா... செத்தது, என்ற கவலையை வெளிக்காட்டாமல் அறிக்கை விட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை: குண்டுகளில் அமோனியம் நைட்ரேட்-அண்டர்வோர்ல்ட் கும்பல் கைவரிசை?

வியாழக்கிழமை, ஜூலை 14, 2011, 8:29 [iST]

மும்பை: மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் அண்டர்வோர்ல்ட் தாதாக்கள் கும்பல்களின் கைவரிசை இருக்கலாம் என்று மத்திய உளவுப் பிரிவு சந்தேகிக்கிறது.

இந்தியன் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ நிழல் உலக தாதாக்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த பல காலமாக அமைதியாக இருந்து வந்த அண்டர்வோர்ல்ட் கும்பல் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டது. தாவூத் இப்ராகிமின் தம்பியின் கார் டிரைவர் கொல்லப்பட்டது, மிட் டே பத்திரிக்கையாளர் ஜே.டே கொலை ஆகிய விஷயங்களில் நிழல் உலக தாதாக்களிடையே நடந்து வரும் மோதலும் அந்தக் கும்பல்கள் இப்போதும் தீவிரமாக செயல்பட்டு வருவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

நேற்றைய குண்டுகளில் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதில் இந்தியன் முஜாகிதீன் தான் பேர் போனது. நிழல் உலக தாதாக்கள் உதவியோடு இந்த அமைப்பு தான் குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்கின்றனர் உளவுப் பிரிவினர்.

1931ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி 22 காஷ்மீரிகள் டோக்ரா படையினரால் கொல்லப்பட்டனர். இந்த தினத்தை சில காஷ்மீர் அமைப்புகள் மாவீரர் தினமாகக் கொண்டாடி வருகின்றன. நேற்றை குண்டு வெடிப்புகள் அதே தேதியில் நடந்துள்ளதால், இந்தத் தாக்குதலில் காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளின் கைவரிசை இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/14/mumbai-blasts-is-underworld-behind-return-terror-aid0090.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.