Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன செய்யட்டும் வேலைல இருந்து போன் ல அவசர அவசரமா எழுதிறது :D

வலைஞன் வந்தா இந்த தமிழுக்கும் ஒரே வெட்டு தான் விழும் :D

  • Replies 2.1k
  • Views 220.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

புதிதாக அதுவும் வரும் போதே மட்டுவாக வந்திருக்கிறீர்கள். நான் நினைக்கிறன் யாழ்கள வராலாற்றிலையே இதுதான் முதல் தடைவை இப்படி ஒரு மட்டுறுத்தனர் வானத்தில் இருந்து குதிப்பது. எனவே கருத்தாளர்களின் கண்கள் உங்களை ஒரு மட்டுறுத்தினராக பாக்காமல் எப்பொழுதும் ஒரு சந்தேகத்தோடையே பார்க்கும் என்பது உறுதி. இப்படித்தான் யாழில் யாழினி என்றொரு மட்டு சில கருத்துக்கள் எழுதி விட்டு மட்டிறுத்துனர் ஆகியிருந்தார். அவர் கனகாலம் தனது பணியை செய்யமுடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனாலும் நல்வரவாகுக

வேறு பெயரில் எழுதிய இணையவனும் இவ்வாறுதானே ஆரம்பத்தில் வலைஞன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். நுணாவிலான் போல் அல்லாமல் மற்றையவருக்கு வழமையான பெயரில் நிர்வாகத்தில் நுழைய விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாதுதானே. அவரவர் விருப்பம். இங்கு அனைவருமே முகமூடிகள், இதற்குள் ஆதி அந்தங்களை அறிந்துதான் என்னத்தை செய்வது?

அது யார் நியானி? ...கருத்துக்களத்தில் பெரிதாக கருத்தே எழுதி இருக்கவில்லை அவரை எப்படி மட்டுவாக நியமிப்பீர்கள்?...அவர் வேறு பெயரில் யாழில் எழுதுபவர் என்டால் அந்த பெயரை யாழில் போடுங்கள்[இவர் யார் என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கு அவராக இருந்தால் இந்தப் பதவிக்கு அவர் பொருத்தமில்லை என்பது என் கருத்து]...எது எப்படியிருருந்தாலும் நியானியை மட்டுவாக ஏற்பதில் எனக்கு தயக்கமே...இது எனது கருத்து தான்.

உங்கள் எழுத்து மீது உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் இப்படியான தயக்கங்கள் வராது என்று நினைக்கின்றேன்.

வலைஞனுக்கும் நெடுக்காலபோவானுக்கும் எட்டாப்பொருத்தம். ஆனாலும், அவர் எழுத்துக்கள் சரியோ பிழையோ ஆனால் தனது எழுத்துக்களில் உறுதியாக நின்று தொடர்ச்சியாக எழுதி நெடுக்காலபோவான் கருத்துக்களத்தில் இன்றும் நின்று பிரகாசிக்கவில்லையா?

நியானி அண்ணா, இங்குள்ள சிலருடைய கருத்துகளை வாசிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. பாவம் பயந்து விட்டார்கள் போலிருக்கு. நீங்களும் மனசுக்குள் சிரித்திருப்பீர்களே... :D

நீங்கள் யாராக இருக்கும் என்று புதிதாக யாழுக்கு வந்த நான் கூட ஊகித்து விட்டேன். (அது சரியா பிழையா என்பதற்கு அப்பால்)

நான் நினைக்கும் நபர் தான் நீங்களாக இருந்தால் யாழின் ஒரு நீண்ட கால உறுப்பினர் மட்டுவாக வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயமாக நிழலி அண்ணாவை விட அதிகளவு பொறுமைசாலி நீங்கள். :) வாழ்த்துகள்.

Edited by துளசி

நுணா, நியானிக்கு வாழ்த்துகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கும் நியானிக்கும் யாழ் கள மட்டுறுத்தினர் பணி செய்யக் கிடைத்த வாய்ப்புக்கு வாழ்த்துக்கள்..! :icon_idea::)

(யாழ் களத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது நிர்வாகத்தினரின் முன்மொழிவோடு இணைந்து கொள்பவர்கள் யாழ் கள அறிமுக விதியில் இருந்தும் வலைஞனால் விலக்களிப்புக்கு உட்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. அந்த வகையில் நியானியின் வரவு புதிதல்ல..!)

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞனுக்கும் நெடுக்காலபோவானுக்கும் எட்டாப்பொருத்தம். ஆனாலும், அவர் எழுத்துக்கள் சரியோ பிழையோ ஆனால் தனது எழுத்துக்களில் உறுதியாக நின்று தொடர்ச்சியாக எழுதி நெடுக்காலபோவான் கருத்துக்களத்தில் இன்றும் நின்று பிரகாசிக்கவில்லையா?

சத்தியமா அந்தாளோட எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்ல. ஆளையும் தெரியாது. அந்தாள் தான் அடிக்கடி கருத்துக்களைக் கடாசிக் கொண்டிருந்தார். அவருக்கு அவர் செய்தது சரின்னா.. எனக்கு நான் செய்தது சரி. அவ்வளவும் தான். இதில அவர் என் மீது எதையும் சாத்தியப்படுத்த முடியல்ல.. நானும் அவர் மீது எதனையும் சாத்தியப்படுத்த முடியல்ல..! என்ன.. இருவரும் பிரச்சனை பட்டார்கள் என்பது மட்டும்.. நிலைச்சிருக்குது..! எனவே.. இப்படியான வெளிப்படையாகப் பிரச்சனைப் படும் அளவுக்கு அமையும்.. அல்லது பிரச்சனைகளைக் கொண்டு வரும்.. மட்டுறுத்தல் வழிமுறைகள் அவசியமான்னு.. மட்டுக்கள் சிந்திப்பது அவசியம்..! மற்றும்படி... இப்ப எல்லாம் நிறைய பக்குவப்பட்டாயிற்று. கடாசினா கடாசிட்டு போகட்டும்.. நமக்கு என்ன.. என்ற நிலைக்கு வளர்ந்திட்டம்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

yarl12.png

இது ஏன் இப்படி சொத்திக்கு (alignment) போய் நிற்குது...??! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.. நேற்றிலிருந்து இப்பிடித்தான் இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில பேரினது கருத்தைப் பார்த்தால் குழந்தைப் பிள்ளைகள் எழுதிறது ஞாபகத்திற்கு வருகிறது...நான் யாழுக்கு வரும் போது வலைஞன் இருந்தவர்,மோகன் அண்ணா,இளைஞன்,இணையவன்,நிழலி என கண பேர் மட்டூவாக இருந்திருக்கிறார்கள் அவர்கள் என்ட‌ கருத்தை வெட்டிப் போடுவார்கள் என்று ஒரு நாளும் பயந்ததில்லை சொல்லப் போனால் எழுதும் போது அதைப் பற்றி யோசித்ததுமில்லை சில நேர‌த்தில் நானே தேவையில்லாமல் எழுதிப் போட்டு நானே தனி மட‌ல் போட்டு அந்தத் திரியை பூட்டச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன்...நுணா அமைதியானவர் என்ட‌ படியால் என்னுடைய கருத்தை வெட்ட மாட்டார் என்பதற்காக அவருக்கு நான் என் ஆதர‌வைக் கொடுக்கவில்லை...இங்கு கருத்து எழுதும் சிலர் தான் தங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டூவாக வந்தால் தங்கட‌ கருத்தை வெட்ட மாட்டார் என்றும் அல்லது இன்னார் தான் அவர் என நினைத்துக் கொண்டு கற்பனையில் மிதக்கிறார்கள்.

நுணா தான் நியானியாக இருந்தாலும் நுணா தன்ட‌ பெயரில் வராமல் நியானி என்ட‌ பெயரில் வந்தது பிழையான விட‌யம் என்பது தான் கருத்து... யாழ்ப் பேரில் தைரியமாக வருவதற்கு என்ன பயம்?

உங்கள் எழுத்து மீது உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் இப்படியான தயக்கங்கள் வராது என்று நினைக்கின்றேன்.

வலைஞனுக்கும் நெடுக்காலபோவானுக்கும் எட்டாப்பொருத்தம். ஆனாலும், அவர் எழுத்துக்கள் சரியோ பிழையோ ஆனால் தனது எழுத்துக்களில் உறுதியாக நின்று தொடர்ச்சியாக எழுதி நெடுக்காலபோவான் கருத்துக்களத்தில் இன்றும் நின்று பிரகாசிக்கவில்லையா?

கலைஞன் என்ட கருத்தை வெட்டிப் போடுவார்கள் என்று எனக்கு பயமில்லை...எனக்கு சரியெனப்பட்டதை நான் தைரியமாய் எழுதி இருக்கிறேன், எழுதுவேன்...நிழலி,இணையவன் வெட்டாததையா இவர் வந்து வெட்டப் போகிறார்?

இங்குள்ள சிலருக்குத் தங்களை விட்டு விட்டு, புதுசு புதுசாக வருகின்ற ஆட்கள் மட்டறுத்தினர்களாக வருகின்றார்களே, அவர்களை நிர்வாகம் இணைக்கின்றதே என்ற வயிற்றெரிச்சல்... தான் இப்படிப் புலம்ப வைத்துக் கொண்டிருக்கின்றது...

யாழ்களம் என்றைக்குமே, இந்தத் தகுதி கொண்டவர்களைத் தான் மட்டறுத்தினராக நியமிக்கப்படுவார்கள் என விதி எழுதி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எவர்களைத் தகுதியாகத் தெரிகின்றதோ, அவர்களை நியமிக்கின்றார்கள். தவிரவும், அது அவர்களது விருப்பமும் ஆகும்.

இங்கே மட்டறுத்தினரை யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேறு யாருக்காவது அதிகாரம் உள்ளதா என்ன?? இந்த முந்திரிக் கொட்டைகளைச் சுவரில் வைத்து 4 சாத்து சாத்த வேண்டும்.

சகோதரனோ, சகோதரியோ தெரியாது, நியானி தன் பணியைச் சிறப்பாகச் செய்ய வாழ்த்துக்கள்.

சாத்திரி,

யாழினியைப் பற்றிச் சொல்கின்றீர்கள்? இராவணன் என்ன நிறையக் கருத்துக்கள் எழுதினவரா? ஆனால் அவர் கண்டதுண்டமாக கருத்துக்களை வெட்டி அழிக்கும்போது மௌனமாகத் தானே இருந்தார்கள்... அவ்வாறே சின்ன விடயத்துக்கே மோகன் அண்ணாவிடம் வாய்க்கு வாய் கேள்வி கேட்டவர்கள், அதை விட மோசமாக வலைஞன் நடந்து கொண்டபோது, பேசாமத் தானே இருந்தீர்கள். ஏன் என்றால் இராவணனும் சரி, வலைஞனும் சரி, இந்த முந்திரிக் கொட்டைகளைக் கண்டு கொண்டதில்லை.

நியானி, உங்களுக்குச் சரியானதாகத் தோன்றுவற்றைச் செய்யுங்கள். நீங்கள் உங்களை அறிமுகம் செய்த விதத்தில், ஒரு நெகிழ்வுத்தன்மை தெரிவதால் எல்லோரும் மடம் காட்ட முயற்சிக்கின்றார்கள்...

தூயவன் நீங்கள் என்னைத் தான் சொல்கிறீர்கள் நான் களத்தில் எழுதிறதே குறைந்து விட்டது முந்தி எப்ப பார்த்தாலும் சமூக சாளர‌த்தில் எழுதிக் கொண்டே இருப்பேன் ஆனால் இப்ப நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தாலும் நேர‌ம் கிடைப்பதில்லை,மனசும் இட‌ம் கொடுப்பதில்லை...நான் எனக்கு மட்டூ பதவி கிடைக்க வேண்டும் என்டு எல்லாம் ஆசைப்பட‌ மாட்டேன் 1)எனக்கு பொறுமை சுத்தமாய் இல்லை 2)ஒழுங்காய் தமிழில் சொல்ல வந்ததை சொல்லத் தெரியாது 3)நேர‌ம் இல்லை 4) இங்கு 100க்கு 95 பேருக்கு என்னைப் பிடிக்காது...ஆகவே சும்மா பிழை பிடிக்க வேண்டும் என்பதற்காக வந்து எழுதக் கூடாது.

மட்டூ பதவியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு கருத்தாளர்களும் எங்கு இருக்கிறார்கள்,அவர்களது விலாச‌த்தை அவர்களது ஜபியை வைத்து கண்டு பிடிக்கும் அதிகார‌ம் உள்ளது நாளைக்கே இவர் இந்தப் பதவியில் இருந்து விலகலாம் ஆனால் அவரிட‌ம் எங்கள் எல்லோரினதும் விலாச‌ம் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]புதிய மட்டுறுதினர்களாக வந்திருக்கும் நுணா,நியானி இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ விலாசத்த வைச்சு அவங்க என்ன vellaivaan வைச்சு கடத்தவா போறாங்க? இப்பிடி எல்லாம் பயந்திட்டு இருந்த இணையபக்கமே தலை வைச்சு படுக்க கூட மற்றது அவர்கள் நியமிக்கபட்டிருப்பது யாழ் நிர்வாக சேவைக்குள் மட்டுமே கருத்துகள பொறுப்பாளர் பகுதிக்குள் அல்ல :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ விலாசத்த வைச்சு அவங்க என்ன vellaivaan வைச்சு கடத்தவா போறாங்க? இப்பிடி எல்லாம் பயந்திட்டு இருந்த இணையபக்கமே தலை வைச்சு படுக்க கூட மற்றது அவர்கள் நியமிக்கபட்டிருப்பது யாழ் நிர்வாக சேவைக்குள் மட்டுமே கருத்துகள பொறுப்பாளர் பகுதிக்குள் அல்ல :D

சுண்ட‌ல் தன்ட‌ சொந்தப் பெயரில் வர‌லாமே! எதற்கு ஒளிந்து சுண்ட‌ல் என்ட‌ பெயரில் வர‌ வேண்டும் :lol: ...நிர்வாகத்தில் இருப்பவர்கள்,கருத்துக்கள பொறுப்பாளார்கள் எல்லோரும் ஒன்று தான் இதற்குள் போனால் எல்லோரும்,எல்லாத்தையும் பார்க்கலாம் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒண்டும் ip addressa பாக்க போறார் என்று அல்லியே உங்களுக்கு உங்க பாதுகாப்பில்ல அக்கறை இல்லை பயம் இருந்தா அப்புறம் இப்பிடியான கருத்துக்களங்களுக்கு வரவே கூடா. மற்றது யார மட்டுவா போடணும் என்று நிர்வாகம் தான் முடிவு எடுக்கும் அவர் இன்ன பேரில் தான் வரவேணும் என்டு இல்லை இது அவர் தனிப்பட்ட suthanthiram அவருக்கு அந்த பேர்ல மட்டுவா வர புடிச்சிருக்கு வாரார் உங்களுக்கு இவர் தான் அவர் என்று காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை யாழ் கள வரலாற்றில் அது நடந்ததும் இல்லை :D

நியாணி நீங்கள் உறவுகளின் வாழ்த்துகளை மட்டும் ஏற்று வசை பாடல்களை எல்லாம் புறம் தள்ளி உங்கள் பணியை தைரியமா முன் எடுங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங் சக் பலமாக ஒலிக்கின்றது :lol::icon_idea:

முதல்லே பிரச்சனையை விட்டுட்டு யார் இந்தப்பெயரில் மட்டுவாய் இருக்கிறார் என்பத சொல்லிட்டு சண்டயப்பிடியுங்கோ...............

அதை அறியாட்டி தலை வெடிச்சுடும்.............ப்ளீஸ் ........... :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் எனக்கு பழக்கமானவர் தான் மட்டு, அவர் என் கருத்தை வெட்ட மாட்டார் என்று நான் கற்பனையில் மிதப்பதாக நினைத்து கருத்து எழுதுகிறார்கள். ஐயோ பாவம்.....

உண்மையில் நான் நினைப்பவர் நியானி அண்ணாவாக இருந்தால் என் கருத்துகளுக்கு தான் பல வெட்டு விழும் என்பது எனக்கு தெரிந்தும் அவர் மட்டுவாக வந்திருப்பதற்கு நான் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறேன்.

நியானி அண்ணா யார் என்று குறித்து சிலர் சந்தேகப்படலாம், ஆனால் நியானி அண்ணா யாராக இருக்கும் என்று நான் நினைப்பதை மட்டும் பிழை பிடிக்க நிற்கிறார்கள்.

எப்பிடியோ நியானி அண்ணா, உங்களை எனக்கு பிடிக்கும். உங்களுக்கு என் கருத்துகள் அவ்வளவாக பிடிக்காது என்றும் தெரியும். ஆனாலும் மட்டுவாக உங்களது வரவு நல்வரவாகுக. நிர்வாகத்தில் நின்று தாக்கு பிடிக்கக்கூடிய நபர் நீங்கள். :)

ஆனாலும் உங்களை விட நுணா அண்ணாவை அதிகளவில் எனக்கு பிடிக்கும். அவருக்கும் என் வாழ்த்துகள். :) அதுக்காக அவருக்கும் என்னை பிடிக்கும் என்று தவறாக யாரும் கற்பனை பண்ணாதீர்கள். ஏனென்றால் எனக்கு பிடித்தவர்களுக்கெல்லாம் என்னை பிடிக்கும் என்றில்லை.

நீங்க எப்பவுமே இப்பிடித்தானா அல்லது இப்பிடித்தான் எப்பவுமேயா :lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

yarl7.jpg

என்ன நடக்குது.. யாழில alignments பிழைச்சுப் போய் இருக்குது..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்தான் இப்பிடிக்காட்டுது திண்ணைப் பகுதிய காணேல்ல ஐயோ என்ன நடக்குது :(:wub:

அண்ணா, வெளியில் நின்று பார்க்கும் போது இறுதியாக எழுதுவது கீழே காட்டுகிறது.. உள்ளே சென்று பார்க்கும் போது இறுதியாக எழுதியதை மேலே காட்டுகிறது.

Edited by துளசி

மட்டூ பதவியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு கருத்தாளர்களும் எங்கு இருக்கிறார்கள்,அவர்களது விலாச‌த்தை அவர்களது ஜபியை வைத்து கண்டு பிடிக்கும் அதிகார‌ம் உள்ளது நாளைக்கே இவர் இந்தப் பதவியில் இருந்து விலகலாம் ஆனால் அவரிட‌ம் எங்கள் எல்லோரினதும் விலாச‌ம் இருக்கும்

ஐபி சம்மந்தமாய் அச்சம் காணப்பட்டால் அதை மறைக்கின்ற, மாற்றுகின்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். நீங்கள் பேஸ்புக்கோ, ஹாட்மெயிலோ, ஜீமெயிலோ எங்கு போனாலும் உங்கள் சகல விடயங்களையும் அதை கண்காணிக்கும் நிருவாகத்தில் உள்ளவர்களினால் தேவை ஏற்பட்டால் பார்க்க முடியும். இணைய உலகில் இப்படியான விடயங்கள் தவிர்க்கப்படமுடியாதவை. உங்கள் தனிப்பட்ட விடயங்களை வெளி ஆட்கள் கண்டுகொள்வது விருப்பம் இல்லை என்றால் முற்றிலுமாக விலகி நிற்பதே நல்லது. யாழிலாவது பரவாயில்லை, கடந்த காலங்களில் நிருவாகத்தில் இருந்தவர்களின் தொகையை கூட்டினால் ஒரு பதினைந்திற்கு உள்ளேயே வரும். ஆனால், பேஸ்புக், ஹாட்மெயில், ஜீமெயில் என்று போனால் எந்தப்பற்றையுக்க இருந்து யார் வாறான் போறான் என்று ஒன்றுமே தெரியாது. உங்கள் தகவல்களை யார் பார்க்கின்றார்கள், சேகரிக்கின்றார்கள் என்பது பற்றி எதுவித விடயங்களையுமே அங்கு அறியமுடியாது.

ஒருவர் எத்தனை id க்களில் வருகிறார் அல்லது எத்தனை பேர் சேர்ந்து ஒரு id ஐ பயன்படுத்துகிறார்கள் என்றும் மட்டுக்களால் பார்க்க முடியும். அதனாலும் பலர் பயத்தில் உள்ளார்கள். :D

தெரியாத நபர்கள் மட்டுவாக வந்தால் அப்படியானவர்களில் சிலருக்கு சங்கடம் தானே.... :D (ரதி அக்காவை சொல்லேல்லை)

ஒருவர் எத்தனை id க்களில் வருகிறார் அல்லது எத்தனை பேர் சேர்ந்து ஒரு id ஐ பயன்படுத்துகிறார்கள் என்றும் மட்டுக்களால் பார்க்க முடியும். அதனாலும் பலர் பயத்தில் உள்ளார்கள். :D

தெரியாத நபர்கள் மட்டுவாக வந்தால் அப்படியானவர்களில் சிலருக்கு சங்கடம் தானே.... :D (ரதி அக்காவை சொல்லேல்லை)

என்னிடம் ஒரே ஒரு id தான் இருக்குது :D

Edited by தமிழ்சூரியன்

'ஒருவர் எத்தனை ID களில் வருகிறார் என்பது முக்கியமில்லை.

எத்தனை அய்டங்களை வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம்' :D

PC , Laptop, ஐபோன் ஐ பாவிக்கிற மாதிரி பாவித்தால் ஒரே IP address தான் தெரியும்.

'ஒருவர் எத்தனை ID களில் வருகிறார் என்பது முக்கியமில்லை.

எத்தனை அய்டங்களை வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம்' :D

[size=4]PC , Laptop, ஐபோன் ஐ பாவிக்கிற மாதிரி பாவித்தால் ஒரே IP address தான் தெரியும்.[/size]

:D :D

தனிநபர் தாக்குதலை நடத்துவதற்காக பொய் id வைத்திருப்பவர்களை மட்டும் சொன்னேன். அவர்கள் தமது கள்ளம் பிடிபட்டுவிடும் என்று யோசிப்பார்கள். :D

சிலர் பல id க்களில் வந்தாலும் நல்ல கருத்துகளை வைப்பவர்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. :)

Edited by துளசி

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.