Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்காலின் மூச்சுக்காற்று…

Featured Replies

முள்ளிவாய்க்காலின் மூச்சுக்காற்று…

மனிதனால் வீசமுடியாத காட்டுமிராண்டிக் குண்டு வீச்சுக்கள்..

மானிடத்துக்கு விரோதமான படுகொலைகள்…

நாகரிக உலகமே வெட்கித் தலைகுனிந்து வெந்து வெந்து சாகவேண்டியளவு பாலியல் வக்கிரங்கள்.. பிணங்களைப் புணர்ந்த பேய்கள்.. உலக சாஸ்திரங்கள் பிணம் தின்றன.. ஐ.நா சாத்திரங்கள் மலம் கொட்டி நாறின..

ஐயோ.. என்ற அலறலுடன்.. வாழ வேண்டிய குழந்தைகள் எல்லாம் செத்து சிதறி.. ஓ..ஓ.. சாவே தலைகுனிந்து நின்றது..

சமஸ்கிருதம்.. சிங்களம்… சீனம்… பாகிஸ்தான்… மொழிகளின் வெற்றிச் சத்தத்தைத் தவிர அங்கு வேறெதையும் கேட்க முடியவில்லை..

சொற்ப நேரத்தில் முள்ளிவாய்க்கால் உறைந்து போனது..

மறுநாள்…

எஞ்சிய எலும்புகளை கூட்டி அள்ளி.. எரித்து.. பஸ்ப்பமாக்கி.. கடலில் வீசும் வேலையும் முடிந்து போகிறது..

குண்டு விழுந்த மண்ணில் இப்போது குண்டுசி விழுந்தாலும் சத்தம் கேட்கும்.. நிசப்தம்..

அந்த மயானப் பெட்டிக்குள் இயற்கையான காற்று நுழைய முடியாமல் ஈயக் குண்டு போன்ற உயிர்க்காற்று அருவமாக ஓடிக் கொண்டிருந்தது.. அதன் வெப்பத்தைத் தாங்க முடியாது கொண்டல் காற்று வட்டமாக வட்டமாக சுற்றி வந்தது.. அழுதது..

life3.jpg

பெட்டிக்குள் இடமின்றி இடித்து மோதிய சூடான உயிர்க் கீற்றுகளுக்குள் ஒரு மெல்லிய கீற்று கொடிபோல சுற்றிச் சுற்றிப் போனது… அது வெம்பி வெம்பி அழுதபடி ஒவ்வொரு நொடியும் துடிதுடித்துப் படபடத்தது.. அந்த உயிர் எண்ணைக்குள்தான் கதையின் கரு கிடந்து பொரிந்தது..

நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் இரண்டையும் பார்த்த அதிர்ச்சியில் அணு குண்டின் உராய்வைவிட அங்கு அதிகமான வெப்பம் பிரசவமெடுத்தது..

உலகத் தலைவர்களை நம்பி…

ஐ.நாவை நம்பி…

தமிழகத் தலைவர்களின் தன்மானச் சவடாலை நம்பி..

இந்தியா வேதங்களின் போலிச் சத்தியத்தை நம்பி..

வெள்ளைக் கொடி ஏந்தினோமே… விக்கி விக்கி அழுதன..

அவமானப்படுத்தப்பட்டு..

பாலியல் வதைப்படுத்தப்பட்டு..

கத்திகளால் அறுக்கப்பட்டு..

பயங்கரவாத பட்டியலை தயாரித்த நாகரிகக் கரங்களே… ஐ.நா..ஐரோப்பிய ஒன்றியம்.. தூ… அந்தச் சளியில் இரத்தம் கலந்திருந்தது..

அவ்வளவுதான்…

அந்த ஒற்றை நொடிக்குள் அந்த உயிர்க்காற்று ஆயிரம் குண்டுகள் வெடித்தது போல வெடித்து பரவியது..

mu-1.jpg

உலக நாடுகள்… சிங்களப் படைகள்.. இரண்டும் கூவெனச் சிரித்து கெக்கலித்தன..

ஐ.நாவும், போலி மனித உரிமைகளும் இந்தியப் படைகளின் சீக்கிய தொப்பிகளும் நம்பியார் சிரிப்பு சிரித்தன…

சகிக்க முடியவில்லை..

ஐயோ..ஓ..ஓ…

பாரிய பேரொலியில் அந்த உயிர்க்காற்றெல்லாம் மோதி மோதி வெடித்தன.. குத்தி அழுதன..

இறைவன் என்று சொல்லப்படுவோனின் இருப்பிடம் அந்த அதிர்வில் கொல கொலக்கிறது..

இந்திய வேதங்களும், பைபிள்களும், குர்ரான்களும் 2009 மே 17ம் திகதி இரவே இறைவனின் கண் முன்னால் எரிந்து சாம்பலாகிவிட்டதால் அவற்றின் சாம்பல்கள் காற்றில் பறந்து மறைகின்றன..

ஆண்டவனா.. நீ..

அந்த உயிர்க்காற்று அவனுடைய கதவை உடைத்து வீசுகிறது..

இப்படியொரு நயவஞ்சகத்தில் கற்களைப் போட்டு, இந்த உலகத்தை எதற்காகக் கட்டிச் செல்கிறாய்…? உலகமா இது..?

நயவஞ்சக உலகத்திற்கு எதற்காக நாகரிக உலகம் என்று பெயர் சூட்டினாய்…?

பரம்பொருள் தலை நிமிர்ந்தது..

பரம்பொருள் என்று ஒன்று இருப்பதாக நம்புகிறாயா.. இது நாகரிக உலகென்று நான் எப்போது சொன்னேன்… சிரித்தது..

அதோ பார்… காலால் எதையோ உதைந்தது…

லொடக்…!

life41.jpg

கண் முன் ஒரு கண்ணாடித் திரைச்சீலை விழுந்தது.. ஐந்து கட்டளைகள்…

01. தீர்ப்புக் கூற வேண்டாம்…

02. யாரும் தீர்ப்பளிக்கவும் வேண்டாம்..

03. அத்தனை பேருக்கும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது..

04. யார் அழிவுக்கு உள்ளாகப் போகிறார்களோ.. அவர்கள் மூலமே அழிவுகளையும் செய்விக்கிறேன்..

05. நீ குற்றம் சுமத்தும் அத்தனைபேரும் இப்போது என்ன ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்…

அழிந்து கொண்டிருக்கும் அவள் – அவன் எல்லோரும் தெரிகிறார்கள்…

திரை மூடிக் கொண்டது..

முள்ளிவாய்க்காலின் மூச்சுக் காற்றுகள் ஒன்றாகக் கூடி பெருமூச்சு விடுகின்றன..

ஒரேயொரு கணம்..

கருவறைகள் பூட்டிய ரயில்வண்டி ஒன்று வந்து நிற்கிறது…

ஒவ்வொரு உயிர்க்காற்றும் ஒவ்வொரு பெட்டிக்குள் நுழைகிறது.. ஆளுக்கு ஒரு வடிவம் பெறுகிறது..

ஆனந்தமான காற்று…

முள்ளிவாய்க்கால் கொலைகளை நடாத்திய பேய்களின் முடிவுரையைப் பார்க்கும் ஆனந்தப் பயணம் ஆரம்பிக்கிறது…

ஆம் அவர்கள் அதைப் பார்ப்பதில் என்ன தப்பு..?

சாந்தமாக கதை முடிகிறது..

கி.செ.துரை 21.08.2011

http://www.alaikal.com/news/?p=79762

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கதைக்கு ஒருவரும் தங்கள் கருத்துகளைப் பகிரவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாக நான் இதைக் கவனிக்கவில்லை..நீங்கள் சுட்டிக்காட்டிய பொழுதுதான் அவதானித்தேன்... பெருங்கருத்தொன்றைக் கொண்டு வந்து கடைசியில் புகுத்தியுள்ளார் கதாசிரியர்...வாசகனின் எண்ணங்களை தட்டி மனச் சாட்ச்சியியைக் கேள்விகேட்கிறது..அருமையான படைப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா இணைப்பிற்கு, கடைசி வரிகள்தான் இப்பெழுது எழதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எத்தனயோ ஆண்டுகள் கடந்து பழங்குடியினரிடம் Australia PM மன்னிப்பு கேட்டது, காலம் மாறிவிட்டது, விரைவில் Mahi & Co கூண்டில் ஏறுவார்கள்

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் Mahi & Co கூண்டில் ஏறுவார்கள்

அவர்களை கிறீஸ் பூதங்கள் பாதுகாக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை கிறீஸ் பூதங்கள் பாதுகாக்கும்!

புத்தர்தான் பூதமாக வந்து காப்பற்றுகிறார் போல கிடக்குது

ஏன் இந்தக் கதைக்கு ஒருவரும் தங்கள் கருத்துகளைப் பகிரவில்லை?

கிளு கிளுப்பான கதை என்றால்தான் சனம் கருத்து எழுதினம்...நான் உட்பட‌

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை எழுத???

என்னத்தை எழுத???

உண்மை தான். மனதைவிட்டகலாத நினைவுகள்.

அழித்தவர்களின் அழிவுக்காலம் எப்போது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.