"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 102
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 102 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம்
பி. குணசேகரனால் [B. Gunasekara] சிங்களத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு இலங்கை அரசு அச்சகத்தால் வெளியிடப்பட்டது. முன்னுரையில், இது மகாவம்சத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இராசாவலிய தீபவம்சத்தை விட ஏன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, தீபவம்சம் மற்ற நாளாகமம்கள் போல் புத்தசமயத்தை முன்னிலை படுத்தினாலும், தமிழருக்கு எதிராக இனத்துவசம் பெரிதாக இல்லை. அதே நேரம் இராசாவலிய, அதில் முன்னிலையில் நிற்கிறது! மேலும் முன்னுரையின்படி, மூல ஆசிரியர் யார் என்றோ? மற்றும் தொகுக்கப்பட்ட தேதி எதுவென்றோ தெரியவில்லை. எழுத்து பாணியின் அடிப்படையில், ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கலாம் என்றும், மொழிபெயர்ப்பாளரின்படி ஆசிரியர்(கள்) சிங்கள இலக்கணத்தில் சரளமாக இல்லை என்றும் ஊகிக்க முடியும். விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் [Wimaladharma Surya 2] எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது, இதில் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் மிக சமீபத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதன் ஓலை கையெழுத்துப் பிரதிகள் அதிகம் இருக்கவில்லை. அதிலும் கிடைத்த அனைத்து ஓலை கையெழுத்துப் பிரதிகளிலும், இரண்டு மட்டுமே நல்ல தரமானதாக இருந்தது. மேலும் அவை இரண்டும் தனியார் மூலங்களிலிருந்து [private sources], அதாவது தனியாரிடம் இருந்து கிடைத்தவை ஆகும். இந்த வரலாறு விஜயன் முதல் இரண்டாம் விமலதர்ம சூரியன் வரையிலான மன்னர்களின் ஆட்சிக் காலங்களை உள்ளடக்கியது என்றாலும், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டிலும் உள்ள விஜயன் முதல் மகாசேனா வரையிலான ஆட்சிக் காலங்களுக்கு மட்டுமே நமது கவனத்தை இங்கு மட்டுப்படுத்தவுள்ளோம்.
நாம் மேலே கூறியவாறு கவனத்தில் எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் சோரநாகனும் [Chora Naga, also known as Coranaga or Mahanaga] ஆட்சி செய்தான் என்றாலும், அவனைப்பற்றிய விவரங்ககள் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஓரளவு நல்ல கையெழுத்துப் பிரதிகளிலும் வேறுபடுகின்றன என கூறப்பட்டிருப்பது [Choranaga reigned in the above period, and the two manuscripts used in the editing differ in his detail as per the translator.], அவ்வாற்றின் உண்மைத் தன்மையை எடுத்துக் காட்டுவதுடன், மேலும் மொழிபெயர்ப்பாளரின் கூற்றுப்படி, இராசவலிய என்பது சிங்கள மன்னர்களின் வரலாற்று விவரம் இதுவென மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது [It says on front page of the translation that: The Rajavaliya or A Historical Narrative of Sinhalese kings]. விஜயனும் அவரது துணைவியும் இந்தியாவிலிருந்து வந்தனர். அவர்கள் தங்கள் தங்கள் மொழிகளைப் பேசியிருப்பார்கள். அதேபோல அடுத்த மன்னன் பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) அல்லது பண்டுவாசுதேவ மற்றும் அவரது துணைவியும் கூட இந்தியாவிலிருந்து தான் வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கால கட்டத்தில் சிங்களம் என்ற மொழி சொற்பவளவாவது ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் தமிழ் பூரணமாக வளர்ந்த சங்க இலக்கியங்களுடன் இருக்கிறது, அப்படியே பாளி, சமஸ்கிருத மொழிகளும் ஆகும். சிங்கள மொழி திடீரென வளர்ந்திருக்க முடியுமா? [Could the Sinhalese language have developed on the fly?] இந்தக் கேள்வி சிங்கள மொழியை இழிவுபடுத்துவதற்காக அல்ல, ஆனால், ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பல ஆண்டுகள் எடுக்கும் தொடர்ச்சியான செயல் முறையாகும். இந்தக் கேள்வி மொழி அல்லது மக்களைப் பற்றியது அல்ல, ஆனால் தீர்க்கதரிசனங்கள், அற்புத நிகழ்வுகள், அசாதாரண தற்செயல்கள், அசல் மக்களை உயிரினங்களைப் போன்ற பேய்களாக இழிவுபடுத்துதல், முறைகேடான திருமணங்கள் மற்றும் பொருத்தமற்ற பிறப்புக் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதையை எழுதியவர்கள் பற்றியது மட்டுமே!.
என்றாலும் வளர்ச்சி அடையாத, ஆரம்பகால சிங்களம் என கருதப்படும், கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிராமி கல்வெட்டுக்குள் கண்டு பிடிக்கப்பட்டதாக இலங்கை அரசு கூறினாலும், அதில் காணப்படும் 'பருமக' "Parumaka" (පරුමක) என்ற எழுத்தை, எஸ். பரணவிதான போன்ற அறிஞர்கள் "பருமக" என்பது ஆரம்பகால இலங்கை சமூகத்தில் ஆளும் உயரடுக்கினருடன் [ruling elites] தொடர்புடைய ஒரு இந்தோ-ஆரியப் பட்டமாக அடையாளம் கண்டு, அதாவது தலைவரைக் ["chief" or "leader"] குறிக்கும் Sanskrit "Pramukha" (प्रमुख) and Pali "Pamukha" தொடர்புபடுத்தி, எனவே அதை, ஆரம்பகால பிராமியில் எழுதப்பட்ட, பழைய சிங்களம் என முடிவு எடுத்தனர். ஆனால் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், இதன் முடிவு வேறாக அமையலாம்?
உதாரணமாக, இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக ராசநாயகம், சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம், தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார்கள். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற படத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. இன்னும் ஒன்றையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும், பண்டைய காலத்தில், ஆரம்பகால இந்தோ-ஆரியர்கள் (கிமு 1500 வாக்கில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்) முதன்மையாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்தவர்களாக இருந்தனர், நிலம் சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பண்டைய சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300) கடல்சார் வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் அரசுகளை விவரிப்பதுடன், தமிழ் மாலுமிகள் ரோம், எகிப்து, கிரீஸ், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் [Tamil seafarers traded with Rome, Egypt, Greece, China, and Southeast Asia.] வர்த்தகம் செய்தது பண்டைய வரலாற்று சான்றுகள் ஆகும். மேலும் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் காணப்படும் தமிழ் கல்வெட்டுகள், அவர்களின் நீண்ட தூர கடல் பயணங்களை உறுதிப்படுத்துகின்றன. எனவே, 'பருமக' [பெருமகன்] என்ற படத்திற்குரிய கப்பல் தலைவன்", யார் என்று வரலாற்று சான்றுகளுடன் பார்த்தால், கட்டாயம் அவன் ஒரு தமிழனே! ஆனால், பரணவிதான இந்த மொழியை ஒரு பிராகிருத பேச்சுவழக்காக வகைப்படுத்தி, இது பின்னர் உள்ளூர் மாற்றங்கள் மற்றும் திராவிட தாக்கங்கள் மூலம் சிங்கள மொழியாக பரிணமித்தது என முடிவுக்கு வந்து, எனவே இது ஆரம்பகால , வளர்ச்சியடையாத சிங்கள மொழியின் ஒரு கூறாக முடிவெடுத்தார் என்பதே உண்மை. அவ்வளவு தான்! [Paranavitana classified the language of early Sri Lankan inscriptions as a Prakrit dialect, which later evolved into Sinhala through local changes and Dravidian influences. However, there are some key points that need clarification to avoid misinterpretation.] சிங்களத்தின் முன்னோடி என்று அவர் கூறியது, அவை சிங்களத்தின் வேர்களைக் காட்டுகின்றன என்ற கருத்தில் மட்டுமே, ஆனால் மொழியை அல்ல. [A predecessor of Sinhala, meaning they show the roots of Sinhala but not the language itself.] இவ்வாறு, அவர் அவற்றை சிங்கள மொழியியல் வரலாற்றின் ஒரு பகுதியாக அங்கீகரித்தார், ஆனால் இன்று நாம் புரிந்துகொள்கிறபடி சிங்களம் அல்ல என்பதே உண்மை என்று எண்ணுகிறேன்.
Part: 102 / APPENDIX – "Summary of Rajavaliya"
The Ceylon Government Printer first published the translation of the Rajavaliya from Sinhalese to English by B. Gunasekara in 1900. It is claimed in the preface that it ranked next to Mahavamsa in importance. Why the Rajavaliya has greater importance than the Dipavamsa is not stated. Author and the date of compilation are not known as per the preface. It could be inferred that, based on the style of writing, there may more than one author, and the author(s) are not fluent in the Sinhalese grammar as per the translator. List of sovereigns from Vijaya to Wimaladharma Surya 2 is given in this, until the end of 17th century. The author or authors must then be historically of very recent origin. There were not many Ola manuscripts of this existed and only two are considered of good quality of all the Ola manuscripts that were available, and both came from private sources. Though this chronicle is covering the reigns of kings from Vijaya to Wimaladharma Surya 2, we will limit our focus to the reigns form Vijaya to Mahasena: the same period as in both the Dipavamsa and the Mahavamsa. Choranaga reigned in the above period, and the two manuscripts used in the editing differ in his detail as per the translator. It says on front page of the translation that, The Rajavaliya or A Historical Narrative of Sinhalese kings. Vijaya and his consort came from India and they would have spoken their languages, and therefore Vijaya could not be called a Sinhalese king. The next king Panduvasudev and his consort came from India. Could the Sinhalese language have developed on the fly? This query is not to denigrate the Sinhala language, and I am not qualified to comment on that. Development of a language is a continuous process taking years. The query is not about the language or the people, but about those who wrote the story involving prophesies, miraculous happenings, extraordinary coincidences, denigrating the original inhabitants as demons like creatures, many incestuous marriages, and inappropriate birth stories.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 103 தொடரும் / Will follow
பகுதி Part: 102
https://www.facebook.com/groups/978753388866632/posts/33774745782173969/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.