Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15_09_05-150x150.jpg

சென்ற 16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கடற் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கடற்கலங்களை தேசமாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட…..

….கடற் கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் – 10 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற் புலிகளும், கடற் கரும்புலிகளும் சிறிலங்கா கடற் படையினருக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்தினர்.

15 ற்கும் அதிகமான டோறா பீரங்கிப்படகுகளுடன் சுமார் எட்டு மணிநேரம் கடுமையாக சமரிட்டு அவற்றில் இரண்டை மூழ்கடித்து மேலும் இரண்டை கடுமையாகச் சேதப்படுத்தினர்.

இக்கப்பற் தொடரணியில் 1,200 படையினருடன் சென்று கொண்டிருந்த பிரைட் ஒப் சவுத் கப்பலை தகர்த்து மூழ்கடிக்கும் வாய்ப்பிருந்தது. எனினும் படையினருடன் மக்களும் அதில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்தார்கள் என கிடைக்கப்பட்ட தவறான தகவலால் தாக்குதல் நடவடிக்கை தாமதமானதன் காரணத்தால் அக்கப்பல் தப்பிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது எமது சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்.

கவிதை

லெப். கேணல் – இரும்பொறை மாஸ்ரர் – கடற் புலிகளின் துணைத்தளபதி,

வீரக் கடற்புலிகளின் துணைத் தளபதியே!! வீரவணக்கம்

நீல வரி தரித்த இரும்பொறை வீரனே!! வீரவணக்கம்

திருக்கோண மாமலை துறைமுகம் அதிர செங்களம் ஆடியவன்

எமனேறும் – இரு கப்பல்கள் மூழ்கடித்து – அங்கே

பகையேறி வந்த வான்கலம் ஒன்றையும் வீழ்த்திய வீரனே!!

ஈனப் படைகொண்ட கயவர் கூட்டத்தை – எல்லையில்

உடல் கிழித்துப் – போர்க்களத்தில் புறமுதுகிடச் செய்தவன்

பருத்தித்துறை கடற்பரப்பில் – துரும்பரை நீ எதிர்த்துக்

கயவர்கள் படகினை கலங்கடித்த வெஞ்சமரில்

சிந்திய உன் செங் குருதி உப்பு நீருடன் சங்கமிக்க

வீரச் சாவடைந்த கடற்புலித் தளபதியே!! வீரவணக்கம்!!

இரும்பொறை என்றொரு பெயர் கொண்டு

பெரும்பகை தகர்த்தழித்தான் கரிகாலன் தளபதியே!!

உங்களிற்கு எம் சிரம் தாழ்த்திய கண்ணீர் அஞ்சலிகள்!!

உங்கள் பணி – விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்

என உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

15_09_06.jpg

15_09_07.jpg

15_09_03.jpg

15_09_04.jpg

15_09_05.jpg

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

வீர வணக்கம்கள்..

தமிழீழ கடலிலே காவியமான இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!

வீரவணக்கங்கள்.....!

வீர வணக்கம் எங்கள் காவல் தெய்வங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வீர காவியமாகி விட்டவர்களுக்கு . வீர வணக்கங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வங்களுக்கு என் வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.