Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திர தமிழீழத்தை முன்னிறுத்திய நியூ யோர்க் பொங்குதமிழ் பிரகடனம் !

Featured Replies

சுதந்திர தமிழீழத்தை முன்னிறுத்திய நியூ யோர்க் பொங்குதமிழ் பிரகடனம் !

tgte2-300x168.jpgசுதந்திர தமிழீழத்தை முன்னிறுத்தி நியூ யோர்க் ஐ.நா தலைமையகத்திற்கு முன்னால் வட அமெரிக்க தமிழர்களின் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை, ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உரையாற்றிய வேளை, பொங்குதமிழர்காக எழுச்சிபூண்ட தமிழர்கள், மகிந்த ராஜபக்சவின் தமிழின அழிப்பு முகத்தை கொட்டொலிகளாலும், பதாதைகளாலும் அம்பலப்படுத்தினர்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில், மக்கள் எழுச்சியின் குறியீடாக உள்ள பொங்குதமிழ் பெருநிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

கொட்டு மழைக்கு மத்தியில் இடம்பெற்ற பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வில் அமெரிக்க தமிழர்களுடன் பெருந்திரளான கனடிய தமிழ் உறவுகளும் இணைந்து கொண்டனர்.

தமிழீழ தேசிய அரசாங்கத்தின் இந்த ஏற்பாட்டுக்கு வட அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் பலவும் உறுதுணை வழங்கியிருந்தன.

பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் பொங்குதமிழ் சிறப்புரையினை வழங்கினார்.

பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் பொங்குதமிழ் சிறப்புரையில், ஈழத்தமிழ் மக்களது அரசியல் அபிலாசையாவும், உலகத் தமிழர்களின் விருப்பாகவும் உள்ள தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை எமது விடுதலைப் போராட்டம் ஒயாதென முழக்கமிட்டார்.

சிங்கள அரசினது தமிழின அழிப்பின் சட்டபூர்வ சாட்சியமாக விளங்குகின்ற், ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கையை மக்கள் மயப்படுத்தியதன் அவசியத்தையும், அதன் பிரகாரம் நா.த.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் பல லட்சம் உலகத் தமிழர்களின் ஈழவிடுதலைக்கான கையொப்ப போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என தனதுரையில் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

சர்வதேச சட்டவழிமுறைகளுடாக ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாப்பாடுகளை உலக அரங்கில் முன்னிறுத்தி, விடுதலைப் வென்றெடுப்பதற்குரிய செய்பாடுகளை நா.த.அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

பொங்குதமிழர் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பிரதி பிரதமர் கலாநிதி.ராம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில், தமிழர்கள் மீது சிறிலங்கா பேரினவாத அரசு நடாத்திய இனப்படுகொலைக்கு, சர்வதேச சக்திகளும் துணைபோயிருந்தன. இந்நிலையில், தமிழர்களின் இனபடுகொலைக்கு பரிகாரமாக், தமிழர் தரப்பு நியாயங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களது உரிமை போராட்டத்தை, இந்த சர்வதேச சக்திகள் அங்கீகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதி அவர்கள் தனதுரையில், ஆப்ரகாம் லின்கனின் துணிவுமிக்க செயலால், சட்டமூலமாக அடிமைத்தனத்தை அகற்றிய அமெரிக்க தேசம், இராணுவ அடக்குமுறைக்குள் அடிமைகளாக தமிழர்களை நலனை கவனத்தில் கொண்டு, இன அழிப்பு, போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்த ராஜபக்சாவையும், உடந்தையாகச் செயற்பட்ட மற்றைய குற்றவாளிகளையும், அமெரிக்க மண்ணுக்குள் ஒபமா அரசு அனுமதிகக் கூடாது என கேட்டுக் கொண்டார்.

ஊடகத்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வின் ‘பொங்குதமிழ பிரகடனத்தை’ பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் முழக்கமிட்டார்.

நாதம் ஊடகசேவை

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தமிழ்நெட்டுக்கு இது பொறுக்குதில்லை. ருத்திரகுமாரன் தவறாக வழிநடத்துகிறார், சம்பந்தா சம்பந்தமில்லாமல் பின்லாடனையும் கடாபியையும் மகிந்தவுடன் ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்கிறார் என்று குறை பிடிக்கிறது.

நீங்களும் செய்யவில்லை, ஆனால் செய்பவனையும் குறை கூற வேண்டுமென்றால் என்ன சொல்வது. நெடியவன் சொல்வதற்காக நல்ல விடயங்களைக் கூட எதிர்க்க வேண்டுமா?? தமிழ்நெட் கொஞ்சம் சிந்திக்கலாமே??

தமிழ்னெட்டின் படங்கள் கூடியிருந்த கூட்டத்தை பிரதிபலிக்கவில்லை. யாரோ ஓரிரு அநாதைகள் தெருவில் நிற்பது போல போட்டிருக்கிறார்கள். இது அதிகாலையில் எடுக்கப்பட்டத்தாக இருக்க வேண்டும். இதேமாதிரித்தான், மே மாதத்தில் நடந்த கூட்டத்திற்கும் தமிழநெட் அதிகாலையில் வந்தவர்களிடம் மட்டும் பேட்டியெடுத்திருந்தது.

Edited by மல்லையூரான்

படங்களைப்பார்த்தேன் நல்ல மழைபோல உறவுகளுக்கு வாழ்த்துக்கள். இதே வேளை மஹிந்தரும் ஒரு பேரணிக்கு இதே தினம் ஒழுங்குபடுத்த சொல்லி அமெரிக்காவில் இருக்கும் சிங்களவர்களிடம் திட்டம் கொடுக்கப்பட்டது. திட்டம் ஓகே ஆனால் சிங்களவர் ஒருவரும் வரவிலையாம். அதற்கு கால நிலை கோளாறு என ஜாலிய விக்கிரமசிங்க காரணமும் கூறியுள்ளார்.

படங்களைப்பார்த்தேன் நல்ல மழைபோல உறவுகளுக்கு வாழ்த்துக்கள். இதே வேளை மஹிந்தரும் ஒரு பேரணிக்கு இதே தினம் ஒழுங்குபடுத்த சொல்லி அமெரிக்காவில் இருக்கும் சிங்களவர்களிடம் திட்டம் கொடுக்கப்பட்டது. திட்டம் ஓகே ஆனால் சிங்களவர் ஒருவரும் வரவிலையாம். அதற்கு கால நிலை கோளாறு என ஜாலிய விக்கிரமசிங்க காரணமும் கூறியுள்ளார்.

அடை மழை பெய்தாலும், விடுதலை வேட்கை தணியாது திரண்ட தமிழ் மக்கள் தமக்கு நியுயோர்க் பொலிசால் ஒதுக்க பட்ட இடம் நிரம்பி வழிந்தார்கள்.பொங்கி பெருகி வழிந்த மக்கள் வெள்ளம் திரும்ப இடமின்றி பக்கத்து நிலைகளில் நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த மற்ற இனத்தவர்களின் இடங்களிலும் சென்று ஒதுங்கினார்கள். அழையா விருந்தாளியாக வந்திறங்கியிருந்த வருணன் ஆர்ப்பாட்ட மக்களை ஆரத்தழுவி, கூட்டம் முடிகிறவரையிலும் விட்டு பிரிய மறுத்துவிட்டான். அழையா விருந்தாளியாகவிருந்தாலும் ஒழுங்கமைப்பாளர்கள் வருணனை எதிர்பார்த்து நிறைய பொஞ்சோவுகள் வினியோகித்திருந்தார்கள். மஞ்சள் நிறத்தில் இதை தலையிலிருந்து கால்வரையில் அணிந்து, அதன்மீது மழை பெய்து தெப்பமாக நனைத்திருந்ததால், ஒரு பார்வைக்கு ஆர்ப்பாட்டம் வேற்று கிரகவாசிகளின் கெட்டொகெதர் மாதிரி காணப்படடது.

இதில் கனேடியமக்களின் பங்கை நிச்சயம் மெச்சவேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பங்கெடுத்த அனைத்து மக்களுக்கும் தலை வணங்குகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
ny23sept03.jpg

ஆனால் தமிழ்நெட்டுக்கு இது பொறுக்குதில்லை. ருத்திரகுமாரன் தவறாக வழிநடத்துகிறார், சம்பந்தா சம்பந்தமில்லாமல் பின்லாடனையும் கடாபியையும் மகிந்தவுடன் ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்கிறார் என்று குறை பிடிக்கிறது.

நீங்களும் செய்யவில்லை, ஆனால் செய்பவனையும் குறை கூற வேண்டுமென்றால் என்ன சொல்வது. நெடியவன் சொல்வதற்காக நல்ல விடயங்களைக் கூட எதிர்க்க வேண்டுமா?? தமிழ்நெட் கொஞ்சம் சிந்திக்கலாமே??

நியாயமான ஆதங்கம். நாம் எல்லோரும் ஏற்கக்ககூடிய ஒரு தலைமை இன்னும் உருவாகவில்லை.

அவ்வாறு ஒன்று மீண்டும் எம்மத்தியில் உருவாகும் வரை இந்த நிலை தொடரும். அதையும் மீறி நிகழ்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய தேவை எமக்குள்ளது.

தமிழ்னெட்டின் படங்கள் கூடியிருந்த கூட்டத்தை பிரதிபலிக்கவில்லை. யாரோ ஓரிரு அநாதைகள் தெருவில் நிற்பது போல போட்டிருக்கிறார்கள். இது அதிகாலையில் எடுக்கப்பட்டத்தாக இருக்க வேண்டும். இதேமாதிரித்தான், மே மாதத்தில் நடந்த கூட்டத்திற்கும் தமிழநெட் அதிகாலையில் வந்தவர்களிடம் மட்டும் பேட்டியெடுத்திருந்தது.

கொட்டும் மழையிலும் தாயக மக்களுக்காக பங்கேற்றவர்களுக்கு நன்றிகள்!!! ... சங்கதி, தாய்நிலத்திலும் தேடினேன் ... படங்கள் அங்கொன்று இங்கொன்றாக உள்ளதாக தான் தெரிகிறது!! ... உண்மையில் எத்தனை பேர் சென்றார்கள் என்பது சரியாக தெரியவில்லை???? மற்றும் புகைப்படம் எல்லோரையும் சேர்த்து எடுப்பது என்பது, இலகுவல்ல, அத்துறையில் உள்ளோருக்கு தெரியும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டும் மழையிலும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்திய மக்களுக்கு நன்றி!

கொட்டும் மழையிலும் தாயக மக்களுக்காக பங்கேற்றவர்களுக்கு நன்றிகள்!!! ... சங்கதி, தாய்நிலத்திலும் தேடினேன் ... படங்கள் அங்கொன்று இங்கொன்றாக உள்ளதாக தான் தெரிகிறது!! ... உண்மையில் எத்தனை பேர் சென்றார்கள் என்பது சரியாக தெரியவில்லை???? மற்றும் புகைப்படம் எல்லோரையும் சேர்த்து எடுப்பது என்பது, இலகுவல்ல, அத்துறையில் உள்ளோருக்கு தெரியும்!!!

நீங்கள் பார்ப்பதெல்லாம் உண்மையாகமழை தொடங்கு முன் எடுத்தவைகளே. மழை தொடங்கிய பின் ஒருவரும் கமெறா இயக்கவில்லை. 12:00 தொடக்கம் 2:00 மணிவரையும் தான் எமக்கு ஒதுக்க பட்டிருந்த ஆர்ப்பாட்ட நேரம். இந்த நேரத்தில்தான் அதிகமானோர் வந்து சேர்ந்திருந்தார்கள். நாலில் மூன்று பங்கிற்குக்கு மேடையடியில் என்ன நடந்தது என்பது தெரிந்திருக்க வாய்ப்பிலை. நமக்காக வந்த மக்கள் வெளியிலும் மற்றய கூட்டங்களிலும் நின்று கொண்டிருந்தார்கள். உணவு, பொஞ்சோ போன்ற விடையங்களில் மக்கள் நங்கு கவனிக்க பட்டிருந்தார்கள் இதை அமெரிக்க ஒழுங்கமைப்பு இன்னும் சற்று திறமையாக செய்திருந்திருக்கலாம். நமக்காக வந்தவர்கள் வெளியில் நின்றால் அவர்கள் வந்து கால் கடுக்க நிற்பதால் என்ன பலன்.

1. படமெடுப்பது, வீடியோ எடுத்து போடுவது. உத்தியோக பூர்வ அறிக்கை கூட்டம் முடிய வெளிவிடுவது.

2. வந்து சேரும் மக்களுக்கு இடம் ஒழுங்கு செய்வது.

இந்த இரண்டும் திருப்தியளிக்க வில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பங்கேற்ற அனைத்து உறவுகளுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றிகள்..!

மல்லையூரான், நியூயோர்க்கில் இருப்பவர்களுக்கு நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்துவதில் இதுதான் இரண்டாவது முறை. அதோடு, அங்கிருக்கும் தமிழ் மக்களின் தொகையும் குறைவு என நினைக்கிறேன். இருந்தாலும் இந்த முறை மக்கள் கொஞ்சம் கஸ்டப்பட்டுத்தான் போய்விட்டார்கள். மழையில் நனைவது என்பது வேறு. ஆனால் எமக்கு அடுத்த நாள் வரை ஈரத்தோடே திரும்பவும் பயணிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. அங்கு பக்கத்தில் இருப்பவர்களையே அடையாளம் காண முடியவில்லை. பிறகெங்கே மேடையில் நடந்ததைக் கவனிப்பது? இந்தமுறை வந்தவர்களின் தொகை ஆயிரமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.