Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

1985 (சிறுகதை)

Featured Replies

வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருடத்தில் அந்த நாளில் ஒடுங்கியது

1985 ஆண்டும் ஜனவரி மாதம் ,,குளிர்காலம் ,,எப்பொழுதும் இல்லாத குளிராம் இம்முறை. எப்பொழுது ஒரு முறை தான் இப்படி வருமாம் ,வந்திட்டு போகட்டுமே அவர்கள் இந்த நாட்டுக்கு வரும் பொழுதா வரவேண்டும் அதுவும் .அகதி என்ற கெளவரவ பட்டத்துடன் விஜயம் செய்யும் பொழுது.இலைகளை உதிர்ந்த மரங்கள் அரை நிர்வாணமாக காட்சி அளித்தன,அந்த தொப்பி ,இந்த சால் அந்த ஜம்மர் ,இந்த ஜக்கெட் என ஆயிரத்தெட்டு மயிர் மண்ணாங்கட்டி எல்லாத்தினால் மூடி கட்டி நிற்கும் பொழுது கூட இந்த குளிர் நரம்புகளையெல்லாம் சுண்டி இழுக்குது, இந்த மரங்களுக்கு ஏன் இந்த தேவையற்ற கோலம் என்று தேவையற்ற ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது ,அந்த மரங்களுக்கு கீழ் அவனைப்போல பக்கத்தில் இருந்த ஒருவன் இது கெதியிலை தீருகிற விசயமாய் தெரியல ,,என்ன நினைக்கிறியள் என்று இலவச அபிப்பிராயம் கேட்டான்.

.இடம் - மேற்கு பெர்லின் ,நம்ம ஊர் வீடுகள் வேலிகளால் அடைத்தது போல் உயர்ந்து எழுப்பபட்ட சுற்றி வர மதில்காளால் அமைக்கபட்ட ஊர். மேற்கு ஜெர்மனிக்கு சொந்தமான இடம்.ஆனால் நிலபரப்பால் தொடர்பற்ற கிழக்கு ஜெர்மனிக்கு நிலபரப்புடன் தொடர்புடைய பிரிட்டன் , பிரான்ஸ் அமெரிக்க நாடுகளினது இராணுவ கட்டுப்பாட்டுடைய பிரதேசமாகும் ,,,இப்படி சொல்லும் பொழுது உங்களுக்கு விளங்காமால் சிதம்பர சக்கரம் மாதிரி இருக்குது அல்லே,,,\ஹி ஹி ..ஓ,,ஓ.உங்களை ப்போலத்தான் அப்படித்தான் அவனுக்கு அப்பொழுது விளங்காமால் இருந்தது.

அது ஒரு இடைதங்கல் அகதி முகாம் ,அது ஒரு பழைய இராணுவ ஆஸ்பத்திரி ,ஜந்து அடுக்கு கட்டிடம்....இதிலிருந்து மேற்கு ஜெர்ம்னி முழுவுதும் ஸ்டட் அடித்து அனுப்புவார்களாம் ,,அது என்ன வேற கோதாரியோ என்று தெரியலை...அந்த கட்டிடம் முழுதும் இலங்கையர் உட்பட பல் வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சகவாசம் தான் இருந்தது கொஞ்ச நேரம் முன்பு,,

ஒரு நிமிடத்துக்கு முன்னர் எல்லாரும் கட்டிடத்தை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்புடன் சேர்ந்து வந்த செய்தி ,,கட்டிடத்துக்குள் டைம் பாம் என்று .அதோடை வந்த இன்னுமொரு செய்தி வதந்தியோ தெரியலை வைத்தது சீக்கியராம் ,அவங்கடை முக்கியான கோயிலுக்குள்ளை இந்திய ஆமியாம் ,,இந்திய ஆமி அதுக்குள்ளை போன காரணம் இந்திரா காந்தியை சுட்ட தொடர்புடைய ஆக்களை பிடிக்கவாம் ,,அதுக்காக பெர்லினில் இந்த கட்டிடத்துக்கு அகதியாக வந்த சீக்கியர் ஏன் டைம் பாம் வைக்கோனுமென்ற காரணம் விளங்கவில்லை.

அந்த கட்டிடத்தின் மைதானத்தில் அகதிகள் எல்லோரும் அங்கங்கே நடுபகுதியில் சிலரும் இலைகளற்ற மரங்கள் கீழே சிலர் அங்கங்கே அமர்ந்திருக்கின்றனர் ,,,பொலிசாரும் குண்டு மீட்பு படையினரும் கட்டிடத்துக்குள்..மதிய சாப்பாட்டு நேரம் அப்போ...இதுவரை வாயிலை ஒரு பொழுதும் வைத்து பழக்கமில்லாத சாப்பிடு தந்தாலும் மணியடிச்ச மாதிரி சாப்பாட்டை நேரத்து தந்து விடுவாங்கள் .இந்த பிரச்சனையால் அந்த நேரம் எப்போவோ போய்விட்டது.பக்கத்தில் இருந்த நண்பருக்கு வயிற்றைக் கிண்டுது போலை அதற்காக இலவச அபிப்பிராயத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அந்த மைதானத்தை பார்த்தால் அங்கங்கே பல சிறுகதைகளும் சில உப கதைகளும் நடந்து கொண்டிருந்தன,,பக்கத்தில் இருப்பனுக்கு பதில் சொல்ல வேணும் அதோடை பார்க்கிற எல்லாத்தே கதையாக கிரகிக்க வேணும் என்றால் அவனால் முடியிற காரியமா?

தூரத்தில் ஒருத்தி யாரோயோ தேடி கொண்டிருக்கிறாள்.. அது நமது கதாநாயகி அல்லோ .அவள் தேடுவது சுரேசாக நிச்சயமாக இருக்காது .எப்படி தெரியும் என்று கேட்கலாம்.நேற்றுத்தான் அவர்களிடையே உள்ள பிரச்சனைக்காக அவன் மத்தியஸ்த்துக்கு போய்ந்திருந்தானே ...நாடு விட்டு நாடு வந்து அடுத்து என்ன நடக்க போகுது என்று தெரியாத இந்த மூன்று கிழமைக்குள் அவர்களிடையே என்னவெல்லாம் நடந்து விட்டது .நடந்திருக்காது நடக்கேலாது என்கிறீர்களா ? சுரேஸ் கூட அந்த சில நிமிடங்களிலை நடந்த அந்த விசயத்தையா தூக்கி பிடிக்கிறியள் என்கிறான் .அவளோ வருடக்கணக்காக பாதுக்காப்பாக வைத்திருந்ததை அந்த மூன்று கிழமைக்குள் ஏற்பட்ட வினையால் அந்த நேரங்களில்அதை இழந்து விட்டேன்.என்கிறாள். அது என்று ஒன்றும் இல்லை என்கிறான் சுரேஸ் .ஒருவேளை,இருந்திருந்தால் முக்கியமான ஒன்று என்றால் சில நிமிடங்களில் இழக்கக்கூடிய விசயமாக என்கிறான்.அதற்க்கு அருவமில்லை உருவமில்லை ,,,டைம் பாஸ்க்கா த்தான் அவளுடன் பழகினேன்,மூன்று கிழமையில் எனக்கு காதல் வருமா என்ன..வராதா காதலை வா வா என்கிறியாள் என்னங்க நீங்க என்கிறான்? இந்த மூன்று கிழமையில் இவ்வளவு காலமும் இல்லாத சுதந்திரத்தை அல்லது ஏங்கிய சந்தோசத்தை பாதுக்காப்பான முறையில் பயன் படுத்தி கொண்டாள் அவ்வளவு தான் என்பது சுரேஸின் வாதம்....சுரேஸை அவளைப்போல இந்த மூன்று கிழமைகளில் தான் அவனுக்கும் பழக்கம் ...அந்த மூன்று கிழமைகளில் அவனைபற்றி அறிந்து கொண்டது உதைப்போல பல சிறுகதைகளை

அவளோ அவனை உண்மையாக காதலித்தேன் இப்பவும் கூட அவரை காதலிக்கிறேன் ,,அவரின் சந்தோசத்திற்க்காத்தான் அந்த நேரத்தை பகிர்ந்து கொண்டாள் என்று கூறுவதோடு காலம் காலமாக நம்மவர் சொல்லும் காதலின் அர்த்தத்தை வியாக்கியனம் செய்து கொண்டாள் ....

என்ன வந்தததோ தெரியவில்லை ...சுரேஸ் தீடிரென்று மத்தியஸ்த்தம் செய்ய போன அவனுக்கே தெரியாத விடயத்தை ஒன்றை கூறினான் ...நான் இங்கை இருக்கிறது பிடிக்கவில்லை என்று சிலோனுக்கு போறுதுக்கு எழுதி கொடுத்திட்டன் .வாற கிழமை கொழும்புக்கு பயணம் தெரியுமோ என்றான்...

இவள் காதல் கத்திரிக்காய் பெரிசா பீத்துறாள் ,,,என்னோடை கொழும்பு வர தயாரோ என்று கேட்டு சொல்லு என்றான்

அவளின் பதிலுக்கு காத்திருக்காமால்..... இவள் இந்த வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு வரமாட்டாள் என்று எனக்கு நல்லாய் தெரியும் அதனால் தான் இன்னும் சொல்லுறன் ..இந்த காதல் என்றதுக்கு உருவமில்லை அருவமில்லை எந்த மண்ணாங்கட்டிமில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்.

அவள் எந்த விதமான சலமற்று சொன்னாள் ... கொழும்புக்கு உன்னுடன் வரமாட்டன் ,,உன்னைப்போல காதலை டைம் பாசுக்கு எடுத்ததைப்போல இதை எடுக்க முடியாது ஏனென்றால் உண்மையான அகதி நான் ...எப்படி இருந்தாலும் உன்னை இன்னும் காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகுரலுடன் அவ்விடத்தை அகன்றாள்...

இன்னும் நேரமாகுமாகுமோ...என்று தெளிவான ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்த ஒன்று அவனைக் கேட்டது....

அவன் ரயில் இருப்பதை அறியாமல் குழப்பமான பதில் கூறும் பொழுது தான் அவள் கண்டு கொண்டாள்

ஞாபகமிருக்கோ என்றாள்

நல்லாய் ஞாபகமிருக்கு ..எப்படி இருக்கிறியள் என்றான்

பல வருடக்கதையை ஒரு சொல்லில் சொல்லுவது மாதிரி இருந்தது

நான் லண்டன் வந்தாப்பிறகு அவரை இலங்கையில் தேடி கண்டு பிடித்து ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டு திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் என்றாள்

சந்தோசம் என்றேன் ..அவனை விசாரித்ததாய் சொல்லுங்கோ...என்று முடிக்க முன்

இடைமறித்து சொன்னாள்,,அவர் என்னோடை கோபம் ஒரு வெள்ளையோடை இருக்கிறார்.. என்றாலும் எப்ப வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளுவன் அவருக்காக காத்திருக்கிறன் என்றாள்

தீடிரென்று ஏதோ காரணத்துக்காக இவ்வளவு நேரமும் நின்ற ரயில் பெரிய ஹாரன் சத்தத்தை அடித்து விட்டு தீடிரென்று வெளியேறியது

அந்த சத்தத்ததின் மொழிபெயர்ப்பு இவனுக்கு இப்படி இருந்திருக்குமோ

அவனும் மாறப் போறதில்லை அவளும் மாறப் போறதில்லை ..இந்த சமூகம் மாறப்போறதில்லை...என

http://mithuvin.blogspot.com/2011/10/1985.html

Edited by நாகேஷ்

அருமை.........அருமை.......... நாகேக்ஷ் . எங்கேயெல்லாம் போய் ஒரு இறுக்கு இறுக்கியிருக்கிறியள் . மனம் வலிக்கின்றது . இவளைப் போல் பேப் பெட்டையள் இருக்கும் வரையும் , இதுகள் கண்டதிலும் மேய்ந்துகொண்டிருக்கும் . ஒருவர்மீது வைக்கும் அன்பு அல்லது காதல் , தனது சுயத்தை இழந்து குருட்டுத்தனமாக அவனது பிழைகளை அங்கீகரித்து, நான் இன்னும் அவருக்காகப் பாத்துக்கொண்டிருக்கின்றன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை . மாறாக அவளும் வேறு ஒரு வாழ்வை தேடியிருந்தால் நன்றாக இருக்கும் :) :) .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாக இருக்கு. இந்தக் கதையை யாரோ தனது வாயால சொல்ல நான் காதால கேட்ட மாதிரி ஒரு நினைவு!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதைகளில் புது மெருகு தெரிகின்றது <_< ....பழசு பிடிபடாமல் எழுதுங்கோ :lol: :lol:

  • தொடங்கியவர்

அருமை.........அருமை.......... நாகேக்ஷ் . எங்கேயெல்லாம் போய் ஒரு இறுக்கு இறுக்கியிருக்கிறியள் . மனம் வலிக்கின்றது . இவளைப் போல் பேப் பெட்டையள் இருக்கும் வரையும் , இதுகள் கண்டதிலும் மேய்ந்துகொண்டிருக்கும் . ஒருவர்மீது வைக்கும் அன்பு அல்லது காதல் , தனது சுயத்தை இழந்து குருட்டுத்தனமாக அவனது பிழைகளை அங்கீகரித்து, நான் இன்னும் அவருக்காகப் பாத்துக்கொண்டிருக்கின்றன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை . மாறாக அவளும் வேறு ஒரு வாழ்வை தேடியிருந்தால் நன்றாக இருக்கும் :) :) .

நன்றி பதிவை பார்த்து கருத்து சொன்னதுக்கு கோமகன் ,,அவளுக்கு உங்கள் விருப்பப்படி மறு வாழ்வு கொடுத்து இருக்கலாம் தான் ..ஆனால் பாத்திரத்தின் நிலமை அப்படி ..என்ன செய்ய :lol: :lol:

கதை நல்லாக இருக்கு. இந்தக் கதையை யாரோ தனது வாயால சொல்ல நான் காதால கேட்ட மாதிரி ஒரு நினைவு!

நன்றி கிருபன் பதிவை பார்த்து கருத்து சொன்னதுக்கு...அட ...இந்த கதையையும் முதலே ..யாரோ சொல்லிட்டங்களா உங்களுக்கு . :lol: :lol: ..சும்மா பகிடிக்கு ..சொல்ல வந்ததை புரிந்து கொண்டேன் நன்றி... :)

உங்கள் கதைகளில் புது மெருகு தெரிகின்றது <_< ....பழசு பிடிபடாமல் எழுதுங்கோ :lol: :lol:

சாத்திரியார் ...நன்றி..ஹி ஹி....பழைய ஆட்கள் என்னை பிடிக்க மாட்டினம் என்று ஒரு போதும் நினக்கவில்லை அவர்கள் பிடித்து விடுவார்கள் என்று நல்லாய் தெரியும் ...தெரிந்தாலும்...இயலுமளவும் உங்கள் ஆலோசனைப்படி பிடிபடாமால் எழுத பார்க்கிறன் .....நன்றிகள்
  • கருத்துக்கள உறவுகள்

இது கதை. பின்னை எழுதுறாங்கள் மரத்தில் இருந்து விழுந்தது என்று சில பேர். என்ன கற்பனைக்கு அவ்வளவு பஞ்சமோ யோ...... க்கு என்று விளங்கவில்லை.

ஒரு பச்சை நகேசுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சில பெட்டைகள் அப்படி சில பெட்டைகள் ....வேறு ஆள் உடன் குடும்பம் நடத்தி சந்தோசமாய்யிருக்குதுகள்....சில சமுகத்தில சில மனிதர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்கு, நன்றி நாகேஸ் பகிர்வுக்கு

  • தொடங்கியவர்

இது கதை. பின்னை எழுதுறாங்கள் மரத்தில் இருந்து விழுந்தது என்று சில பேர். என்ன கற்பனைக்கு அவ்வளவு பஞ்சமோ யோ...... க்கு என்று விளங்கவில்லை.

ஒரு பச்சை நகேசுக்கு.

;நன்றி பச்சைக்கு நன்றி நுனாவிலான்

சில பெட்டைகள் அப்படி சில பெட்டைகள் ....வேறு ஆள் உடன் குடும்பம் நடத்தி சந்தோசமாய்யிருக்குதுகள்....சில சமுகத்தில சில மனிதர்கள்

சில நேரத்தில் சில பெட்டைகள் ,,ஓம் புத்தன் ,,நன்றிகள்

கதை நல்லா இருக்கு, நன்றி நாகேஸ் பகிர்வுக்கு

]நன்றி உடையார் கருத்து கூறியதுக்கு ,,,கதையோடை கதை ,,உடையார் வீட்டு நாய் மட்டை படலையில் ஏறித்தான் நிற்குமாம் என்ற கதை தெரியுமே...வேறு ஒன்று ..உடையாரை நாய் செத்தமூட்டம் இருக்கிற மரியாதை ..உடையார் செத்த மூட்டம் இருக்காதாம்.. :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

;நன்றி பச்சைக்கு நன்றி நுனாவிலான்

சில நேரத்தில் சில பெட்டைகள் ,,ஓம் புத்தன் ,,நன்றிகள்

]நன்றி உடையார் கருத்து கூறியதுக்கு ,,,கதையோடை கதை ,,உடையார் வீட்டு நாய் மட்டை படலையில் ஏறித்தான் நிற்குமாம் என்ற கதை தெரியுமே...வேறு ஒன்று ..உடையாரை நாய் செத்தமூட்டம் இருக்கிற மரியாதை ..உடையார் செத்த மூட்டம் இருக்காதாம்.. :lol: :lol:

நாயின் கதை தெரியா, மற்றது தெரியும், அத்துடன் அவர் செய்ததிற்கு பொல்லுகள்தான் வரும் செத்தவிட்டுக்கு, நான் சொன்னது கைத் தடிகளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.