Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - கவிமுகம்

Featured Replies

வணக்கம் என் அன்புறவுகளே!

"ஊருக்குப் போக விருப்பமில்லை" என்ற இந்தக் கவிதை ஒரு .....தொடர் கவிதை! இதை தொடராக வாசிக்கும் பொறுமையும் பக்குவமும், யாழ் உறவுகளிடம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. கதையாக எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் கவிவரிகளில் பல விடயங்களை கதைபோலன்றி ஒரு சில வரிகளுக்குள் அடக்கிச் சொல்வது பொருத்தமானதாக அமையும் என்ற நம்பிக்கையில் இந்த கவித்தொடரை ஆரம்பிக்கின்றேன்!

(இந்தக் கவிதைத் தொடரை முடிக்கும் முன்னரே "ஊருக்குப் போகப் போறன்" என்ற நிலை வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்!)

என் சின்ன வயதின் நினைவுகள்,நிகழ்வுகளிலிருந்து ஆரம்பிக்கப்போகும் இந்தக் கவித்தொடர் என் நினைவறிந்த 1987 காலப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. என்னையும், என் மண்ணையும்... சந்தோசங்கள்,வலிகள்,போராட்டங்கள் என... அனைத்தையும் வருடிச்செல்லும் கவிவரிகள் சொல்லப்போகும் கதைகளையும், நிகழ்வுகளையும் தாங்களும் அனுபவத்தில் பார்த்திருக்கலாம்! அதை மீட்டுவதில் எனக்கிருக்கும் உளவுணர்வுகள் ....தங்களையும் வருடிச் செல்லும் என எண்ணுகின்றேன்!

நன்றிகள் பல!

கவிமுகம்:

இரவும் பகலும் வீணாகவே வந்துபோகின்றன தினமும்,

எதற்காகவோ வேகமாய் ஓடுகின்றன காலங்காட்டி முட்கள்!?

அவை ஓடிவந்த பாதைகளில்... நினைவுகளோடு பயணிக்கும் -என்

எண்ணங்களில்... ஊர் நினைவுகள் இன்னும் பசுமையாய்!

நிம்மதியாய் வாழவெனவந்த மண்ணிலும்,

மனதில் நிம்மதியில்லை என்றாகி... அலாரங்களாய் ஒலிக்கும்,

வேலைநேரங்கள் மட்டுமே தன்னிச்சையான ஞாபகங்களாய்,

தூக்கத்தில் வந்து போகும் சின்னக் கனவுகளையும் கலைத்துவிடுகின்றன!

செல்லமாய் "மாமா" என்று கொஞ்சுவதற்கு ஓடிவந்த என்

சின்ன மருமகள் பாதி வழியில் தவிக்க... கனவுகள் கலைந்ததும்,

ஏங்கோ தொலைவில் இருப்பதாய் உண்மையை உணரும்போது...

என் தாய் மண்ணின் ஞாபகங்களுடன் நான் அப்பொழுதே எழுந்துவிடுகின்றேன்!

பசுமைகள் என் நினைவுகளாய்..... மட்டுந்தான் அன்றி,

என் சொந்த மண்ணில் இல்லை என்று...

அன்று வந்த சேதியும்... இன்றுவரை உறுதிப்படுத்தி,

மென்று விழுங்கிய சோற்றையும்... புரைக்கேற வைக்கின்றது!

அது ஒரு அழகிய காலமாய்த்தான் எனக்கும்...

எல்லோரும் சொல்வதைப்போல...! - ஆனாலும்

எனக்கென்று சில... அந்த மண்ணின் மைந்தனாய்,

என் அடையாளங்களாய்... இன்னும் எனக்கான அடையாளமாய்!

கவி (1) தொடரும்.... (1987 இல் இருந்து)

அருமை கவிதை. கவிஞர்களும் கதை சொல்லியிருக்கின்றார்கள் . பலர் நேரடி சாட்சியங்களாய் எங்கள் முன் வாழ்ந்திருக்கின்றார்கள் . அவர்கள் வரிசையில் நீங்களும் உயரப்பறக்க வேண்டும் . இதுவே எனது ஆசை :) :) :) . முதல் பச்சைக் காணிக்கை என்ரை சரியோ :D :D .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியாய் வாழவெனவந்த மண்ணிலும்,

மனதில் நிம்மதியில்லை என்றாகி... அலாரங்களாய் ஒலிக்கும்,

வேலைநேரங்கள் மட்டுமே தன்னிச்சையான ஞாபகங்களாய்,

தூக்கத்தில் வந்து போகும் சின்னக் கனவுகளையும் கலைத்துவிடுகின்றன!

அருமையான வரிகள், கவிதை! தொடர்ந்து எழுதுங்கள்!

அந்த நாள் வாழ்க்கை, அடிக்கடி நம் நினைவில் வரக் காரணம் ஒன்றே ஒன்று தான்!

அன்று வாழ்வு எம்மை நகர்த்தியது!

இன்று வாழ்வை நாம் நகர்த்துகின்றோம்!

அதனால் தான் வாழ்வு, சுமையாகத் தெரிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கவி

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் ஒவ்வொரு மனசுக்குள்ளும் மலரும் காவியம்....

...கவிதையாக் வெளிவர ..படிக்கும் ஆவலுடன் நாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பச்சையை கொட்டிவிடுகிறேன். மிகவும் அழகாக கவிதை வடித்துள்ளீர்கள்.

எனக்கும் ஊருக்கு போக விருப்பம் தான் ஆனா பயம். இன்றும் அந்த பசுமை நினைவுகள் தாம் இந்த வாழ்க்கை சுமையை நகர்த்த உதவுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருமை, தொடக்கமே நல்ல இருக்கு, தொடருங்கள்

  • தொடங்கியவர்

அருமை கவிதை. கவிஞர்களும் கதை சொல்லியிருக்கின்றார்கள் . பலர் நேரடி சாட்சியங்களாய் எங்கள் முன் வாழ்ந்திருக்கின்றார்கள் . அவர்கள் வரிசையில் நீங்களும் உயரப்பறக்க வேண்டும் . இதுவே எனது ஆசை :) :) :) . முதல் பச்சைக் காணிக்கை என்ரை சரியோ :D :D .

மிக்க நன்றி கோ! நான் கவிஞன் அல்லன்! "கவிதை" எனப் பெயர் வைத்தவரெல்லாம் கவிஞனாக முடியாது! எனக்கு அந்தப் பெயருக்கான தகுதியும் இல்லை! ஏதோ மனதில் படுவதை கிறுக்கும் கிறுக்கன்! அவ்வளவுதான்! :)

அந்த நாள் வாழ்க்கை, அடிக்கடி நம் நினைவில் வரக் காரணம் ஒன்றே ஒன்று தான்!

அன்று வாழ்வு எம்மை நகர்த்தியது!

இன்று வாழ்வை நாம் நகர்த்துகின்றோம்!

அதனால் தான் வாழ்வு, சுமையாகத் தெரிகின்றது!

உண்மைதான் புங்கையூரான்!

யதார்த்தமான வரிகளுக்கு நன்றி! :)

:rolleyes::rolleyes:

ஏன் இந்த விழிக்குறிகள்????? புரியவில்லை யாயினி!!!??? :rolleyes:

தொடருங்கள் கவி

ஊக்கப்படுத்தலுக்கு மிக்க நன்றி விசுகண்ணை!

புலம்பெயர் ஒவ்வொரு மனசுக்குள்ளும் மலரும் காவியம்....

...கவிதையாக் வெளிவர ..படிக்கும் ஆவலுடன் நாங்கள்.

ஊரை விட்டுவந்த ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஊரைப்பற்றிய எண்ணங்கள் நினைவுகள் இருந்துகொண்டுதான் இருக்கும்! அவர்களின் ஒருவனாய் நானும் வரிகளில் வரிக்க... தயாராகின்றேன்! மிக்க நன்றி அக்கா!

ஒரு பச்சையை கொட்டிவிடுகிறேன். மிகவும் அழகாக கவிதை வடித்துள்ளீர்கள்.

எனக்கும் ஊருக்கு போக விருப்பம் தான் ஆனா பயம். இன்றும் அந்த பசுமை நினைவுகள் தாம் இந்த வாழ்க்கை சுமையை நகர்த்த உதவுகின்றன.

நன்றி குளவி!

ஊருக்குப் போக விருப்பமில்லை என்ற என் தலைப்பு.... ஊருக்குப் போக நான் எவ்வளவு ஆசைப்படுக் கொண்டிருக்கின்றேன் என்பதையே சுட்டுகின்றது! ஊருக்கு போக ஆசை யாருக்குத்தான் இல்லை! ஆனால்.............,

கவி அருமை, தொடக்கமே நல்ல இருக்கு, தொடருங்கள்

நன்றி உடையார்! தொடருவேன்! தாங்களும் பொறுமையாய் தொடர்ந்து வாசிக்க வேண்டும்! தவறுகள் இருப்பின், தயங்காமல் சுட்டிக் காட்டவும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.