Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதுமையின் யதார்த்தத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிரீர்கள் புங்கையூரன்.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப் பருவமும்.. முதுமைப் பருவமும் ஒன்று. இரண்டிலும் ஓய்வு அதிகம். இடையில் மனிசன் படுறபாடு... அதுதான் பெரும்பாடு. :)

 

நல்ல கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

வேகமாக எம்மைத் தாண்டிச் செல்லும் கால நதியில் கால்நனைத்தபடி திரும்பிப் பார்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகள் கண்களுக்குள் கனவுகளாய் கண்களில் நீர்த்துளியாய் தடயங்களை மட்டும் விட்டுச் செல்லும் வெற்றுக் காகிதங்களாய் நாம்........ நல்லதொரு கவிதை படைத்த புங்கையூரனுக்கு வாழ்த்துக்கள்

நல்ல கவிதை புங்கை...முதுமை பற்றி எழுதிச்செல்லும் போதே சமூகத்தில் இருக்கும் அழுங்குத் தனங்களைச் சொன்னது அழகு

 

இக்கவிதையை மீண்டும் தோண்டி எடுத்து பார்த்த சுமேரியர் அக்காவுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன! 

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய், 

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது!

 

எங்களுக்குள் எழும் கேள்விகள் ஆறாத ரணங்கள்.
 
நல்லதொரு கவிதை புங்கையூரான். 
  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நாலு வருடத்திலயே பல மாற்றங்கள் .....மீள் பிரசுரித்தமைக்கு நன்றிகள் நியானி

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தான் எவ்வளவு குறுகியது!
கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,

யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!

 

 

விளக்கோடு விளையாடும், விட்டில் பூச்சிகள்,

வாழும் காலத்தைக் கணக்கெடுப்பதில்லை !

 

மிக கவித்துவமாக கால மாற்றத்தை வார்த்தையாக்கியுள்ளீர்கள்.

நான் இந்த கவிதையை எழுதியிருந்தால் மிகக் கற்றாராக எடிற் பண்ணியிருப்பேன். அழகான வரிகள் என்ற்அலும் இந்த கவிதை யை தாங்காத வரிகளை இன்னொரு கவிதைக்காக சேமிக்கிறதுதான் எடிற்றிங் பணி. இந்த வரி இல்லாவிட்டாலும் கவிதைக்கு பாதிப்பில்லை என்று சொல்லக்கூடிய வரிகள் அடுத்த கவிதைக்கானது. நான்குதூண் போதுமானால் ஐந்தாவது தூண் அடுத்த வீட்டுக்கானதல்லவா?

 

நீங்கள் விரும்பினால் நேரமுள்ளபோது உங்கள் கவிதை ஒன்றை நான் எடிற் பண்ணலாம். உரிமை எடுத்து எழுதிவிட்டேன், தப்பானால் மன்னிக்கவும், 

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் தான் எவ்வளவு குறுகியது!

கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,

யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!

 

 

விளக்கோடு விளையாடும், விட்டில் பூச்சிகள்,

வாழும் காலத்தைக் கணக்கெடுப்பதில்லை !

 

மிக கவித்துவமாக கால மாற்றத்தை வார்த்தையாக்கியுள்ளீர்கள்.

நான் இந்த கவிதையை எழுதியிருந்தால் மிகக் கற்றாராக எடிற் பண்ணியிருப்பேன். அழகான வரிகள் என்ற்அலும் இந்த கவிதை யை தாங்காத வரிகளை இன்னொரு கவிதைக்காக சேமிக்கிறதுதான் எடிற்றிங் பணி. இந்த வரி இல்லாவிட்டாலும் கவிதைக்கு பாதிப்பில்லை என்று சொல்லக்கூடிய வரிகள் அடுத்த கவிதைக்கானது. நான்குதூண் போதுமானால் ஐந்தாவது தூண் அடுத்த வீட்டுக்கானதல்லவா?

 

நீங்கள் விரும்பினால் நேரமுள்ளபோது உங்கள் கவிதை ஒன்றை நான் எடிற் பண்ணலாம். உரிமை எடுத்து எழுதிவிட்டேன், தப்பானால் மன்னிக்கவும், 

கவிஞனே...!

 

நீ ஓடும் நீரோடு.. ஓடுகின்ற மீனல்லவே!

 

மனிதம் சாகின்றது என, மனச்சாட்சி உறுத்தினால்,,,நீரோட்டத்துக்கு எதிராக நீந்துபவன்!  பண்ணைப்பாலத்துப் 'போக்குகளில்' மிதக்கின்ற முரல்களைப் போல!

 

நீ மறந்தாலும் .. நான் மறக்காத உனது வரிகள்..!

 

'வாழ்வின் வசந்தத்தில்... வலது கால் சறுக்கியதோ?

 

'மார சிங்க' கத்திக் குத்து வாங்கிய போது.. நீ அவனுக்காக எழுதிய வரிகள்!

 

அந்த வரிகள் தான் உன்னுள் புதைந்திருக்கும் மனிதத்தை எனக்கு முதலில் 'அடையாளம்' காட்டியவை  என நினைக்கிறேன்!

 

அப்போது தான் மகாத்மா  காந்தியின் சத்திய சோதனையின் பின்வரும் வரிகளின் 'அர்த்தத்தை' முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது!

 

I am a Hindu... I am a muslim.. I am a Christian and I am a Jew!

 

எப்போதோ ஒரு காலத்தில்..நானும் ஏதாவது எழுதினால் என்ன என்று நினைத்துக் கிறுக்கிய வரிகள் தான் அவை! கவிதைக்குரிய 'சந்தம்' நன்றாக அமையவில்லை!

 

நீ என்னிடம் அனுமதி கேட்பதா?

 

உனது நெறிப்படுத்தலுக்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

 

'நீ' என்று  விழிப்பது கள விதிகளுக்கு முரண் எனினும்.. நீயும் நானும் ஒரு நாளும் நீங்கள் போட்டு 'ஒருவரையொருவர்' விழித்தது கிடையாது! அதனால் தான் இப்போதும் ஒருமையில் விழிக்கிறேன்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நாலு வருடத்திலயே பல மாற்றங்கள் .....மீள் பிரசுரித்தமைக்கு நன்றிகள் நியானி

நன்றி... புத்தன்!

 

நான்கு வருடங்களில்  எத்தனை மாற்றங்கள்?

 

தலைவா,,, இனி எம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும்,,, ஒவ்வொரு 'பொற்காலமாகத்' தான் இருக்கப் போகின்றது! :D 

 

 மீள் இணைப்புக்கு நன்றி நியானி !;

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான். மாறசிங்க விடயம் உனக்கு எப்படித் தெரியும். நாம் சந்திதிருக்கிறோமா? தவு செய்து எனக்கு தனிமடல் எழுது.  visjayapalan@gmail.com நான் இந்த விவாதத்தை எனது சுயசரிதையில் சேர்ப்பேன்.

 

அது நான் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த ஒரு சில நாட்களில் ராக்கிங் காலத்தில் நடந்தது. தமிழ் மாணவர்களை ராக்கிங் பணியது தொடர்பாக மாரசிங்க கத்தியால் குத்தப்பட்டார். மாறசிங்க இடுப்புக்குக் கீழே இயங்காமல் வைத்திய சாலையில் இருந்தபோது நான் அவருக்கு காலைக் கடன் முடிக்க உதவியிருக்கிறேன், பின்னர் அவரைக் கொழும்புக்கு அனுப்பி வைத்தோம். இதெல்லாம் ராக்கிங் காலத்தில் நிகழ்ந்த்தது.

 

எனக்கு ராக்கிங் நடந்து கொண்டிருந்தபோதே மாணவர் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். அதுதான் முதலும் கடைசியுமாக நான் பங்குபற்றிய தேர்தல். இரண்டு வருடத்துக்கு மேல் மறு தேர்தல் நடக்கவில்லை.  மாரசிங்க சிங்களவனாக இருந்தபோதும் கொழும்பில் அடிபடைச் சிகிட்ச்சை முடிந்ததும் அவரை ராகம  மாற்றுத் திறனாளிகளின் முகாமில்  கைவிட்டு விட்டனர். அவன் தற்கொலை மனநிலையில் யாழ்பல்கலைக்கழக  மாணவர் சங்கத்துக்கு எழுதினான்.  நான் போய் பார்த்தேன்.

 

அவருக்கு தென்னிலங்கை பல்கலைக் களகங்களில் அனுமதி பெற முயன்றேன். கொழும்பு பல்கலைக் கழகம் ஏனைய பல்கலைக் கழகங்களும் சிலபஸ் வேறு...விரிவுரைகள் மாடியில் நடக்கிறது என்று அனுமதி மறுத்துவிட்டது.. பின் நீண்ட போராடத்தின் பின் கொழும்பில் அவருக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தேன். அப்பொழுதான் நாம் செய்த ஒரு கூட்டுத் தவறை திருத்திய நிம்மதி எனக்குக் கிடைத்தது. "வாழ்வே போய்விட்டபோதும் தான் ஒருபோதும் இனவாதியாக முடியாது" என்று அவன் என்னிடம் சொன்னான், , நன்றாக படித்தான் அதுமட்உம்தான் அவனுக்கு வாழ்வில் மிஞ்சியிருந்தது. இப்போ தன்போன்றோருக்கு உதவும் தொண்டு நிறுவனமொன்றின் தலைவராக இருக்கிறான், (Raja Marasinghe - Chairperson, Central Council of Disabled Persons (CCoDP))

 

நான் சிங்கள இராணுவத்தை எதிர்கொண்ட தருணங்களில் அஞ்சி அடி பணிந்ததில்லை. போராளிகளுக்கு முன் சரியை பாராட்டவும் பிழையை கண்டிக்கவும் தயங்கியதில்லை.  

 

மரணம் என்னை நிறைய தடவை மயிரிழையில் தவற விட்டிருக்கிறது. சிலதடவை என்னை கொல்ல அனுப்பப் பட்டவர்களே என்னைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.  யாதும் ஊரே யாவரும் கேழீர் என்கிற சங்க கவிதைதான் என்னுடைய வேதம். வீரமும் காதலும் எப்பவும் இப்பவும் என் வாழ்வாக தொடர்கிறது,

இன்னும் வாழ்கிறேன். 

 

  

 

 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.