Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் செய்துள்ள சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்- ராஜபக்சே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் செய்துள்ள சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்- ராஜபக்சே

11-rajapakse32-300.jpg

1+%252810%2529.jpg

அட்டு (மாலத்தீவு): தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஜெயலலிதாவும் இதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.

மாலத்தீவில் நடைபெறும் 17வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜபக்சே அங்கு டைம்ஸ் நவ் டிவிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.

அந்த பேட்டி விவரம்:

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மீண்டும் தலை தூக்க முயற்சிக்கிறார்கள் என்றும், போராளிகளின் உணர்வுகளை அப்படியே தக்க வைக்க முயற்சிப்பதாகவும் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. அது உங்களுக்கும் தெரியுமா?

பதில்: இங்கிலாந்திலும் சரி, கனடாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, அல்லது உலகின் பிற நாடுகளிலும் சரி, விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் பணம் வசூலிக்கிறார்கள், ஒருங்கிணைய முயற்சிக்கிறார்கள், ரகசியமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இதை நாங்கள் அறிவோம்.

எங்களிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் மூலம் இதுகுறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அனுதாபிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். மீண்டும் போரில் குதிக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். புலிகளின் பிரசாரம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

கேள்வி: தமிழர் பகுதிகளில் மறு குடியமர்த்தல், மறு சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து பேசி வருகிறீர்கள். இதுதொடர்பாக உங்களுக்கு உதவி வரும் நட்பு நாடான இந்தியா, இதுகுறித்த நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைந்துள்ளதா?

பதில்: நாங்கள் என்ன செய்து வருகிறோம் என்பதை அங்கு வந்து பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவும் சரி, பிற நாடுகளும் சரி எங்களது பணிகளைப் பார்த்து சென்றுள்ளனர். அனைவருக்கும் இதில் திருப்தியே.

கேள்வி: தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா இலங்கை விவகாரத்தில் தீவிர அக்கறை காட்டுகிறார். அவர் உண்மை நிலையை அறிய இலங்கைக்கு வர விரும்பினால் நீங்கள் வரவேற்பீர்களா?

பதில்: கண்டிப்பாக, நிச்சயம் வரவேற்போம். அவர் தாராளமாக வந்து அங்கு என்ன நடக்கிறது, உண்மை நிலவரம் என்ன என்பதை நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தமிழர் பகுதிகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். இதை ஜெயலலிதாவும் நேரிலேயே அறிந்து கொள்ளலாம்.

கேள்வி: சீனா, இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து அங்கு ஆழமாக நிலை பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்தியாவுடனான இலங்கையின் உறவில் மாற்றம் வருமா?

பதில்: நான் ஆரம்பத்திலிருந்தே ஒன்றை உறுதியாக சொல்லி வருகிறேன். இந்தியா எங்களது தொப்புள் கொடி உறவு. இந்தியாவுக்குப் பிறகுதான் சீனா. இந்தியா எங்களது உறவினர் என்றால் சீனா எங்களது நண்பர். நாங்கள் மட்டுமல்ல ஐரோப்பிய யூனியனும் கூட சீனாவின் உதவியை நாடுகிறது.

எங்களது நாட்டில் துறைமுகம், விமான நிலையம், மின் நிலையம் ஆகியவை அமைக்கும் பணியில் ஈடுபட நாங்கள் முதலில் இந்தியாவைத்தான் நாடினோம். இந்தியாவுக்குத்தான வாய்ப்பளித்தோம். பிறகுதான் சீனாவிடம் சென்றோம்.

எங்களைப் பொறுத்தவரை இந்தியாதான் முதலில். பின்னர்தான் சீனா. சீனா மட்டுமல்ல, அமெரிக்காவும் கூட இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ளது.

சீனாவுடனான எங்களது நட்பால், இந்தியாவுடனான உறவு கெடாது. அதற்கான வாய்ப்பில்லை. அதற்கான உறுதிமொழியை நாங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே கொடுத்துள்ளோம் என்றார் ராஜபக்சே.

தமிழக மீனவர்களை தொடர்ந்து வெறித்தனமாக இலங்கைக் கடற்படை தாக்குவது குறித்தோ, கச்சத்தீவு பிரச்சனை குறித்தோ கேள்வி ஏதும் கேட்கப்படவில்லை.

http://tamil.oneindi...ka-aid0091.html

டிஸ்கி:

laughing-smiley.giflaughing-smiley.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

....எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தமிழர் பகுதிகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன்....

அந்த வேதனையைத்தான் நாங்கள் தினமும் பார்க்கிறோமே...கையறு நிலையுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "தமிழக மீனவர்களை தொடர்ந்து வெறித்தனமாக இலங்கைக் கடற்படை தாக்குவது குறித்தோ, கச்சத்தீவு பிரச்சனை குறித்தோ கேள்வி ஏதும் கேட்கப்படவில்லை"

மத்தியோ கொள்ளை அடிப்பவர்களோ கேட்காதபோது இவன்களா கேட்கபோறானுக

அதுதான் சனல் 4 இல் பாத்திட்டார் எனிபார்ப்பதர்க்கு என்ன இருக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்... பெரிய்ய்ய்ய சாதனை. வருமானத்திலும் பார்க்க செலவை இரண்டு மடங்காக வைத்து வாறவன் போறவன் எல்லோரிடமும் கந்து வட்டிக்கு காசு வாங்கி பிச்சைகார நாட்டை வைத்துக்கொண்டு பெரிய்ய சாதனை.

வேட்டிக்குள்ள கட்ட கோவணத்துக்கு கூட வழியில்லாமல் திரியும் ஸ்ரீ லங்கா பிச்சைக்கார கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் நேரத்தை வீணாக்காதீர்கள்!

கூகிள் தளத்தில் போய், மகிந்த என்று அவ தட்டினாலே போதும்!

உங்கள் சாதனைகள், போர்குற்றம் உட்பட, அடித்துப் பிடித்துக் கொண்டு கணனித் திரைக்கு ஓடி வருமே!!!

ஒன்றா, இரண்டா, நாற்பதினாயிரம் ( அண்ணளவாக)!!!

மகிந்தா இன்று நண்பர்களை சேர்ப்பதில் மிகவும் ஆசைகொண்டுள்ளார். விலைக்கு வேண்ட முடியவில்லை, பகிரங்கமாக அழைத்துள்ளார்.

ஆனால், முதலமைச்சர் இந்த அழைப்பை அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

Edited by akootha

இது உண்மையில் எங்காவது எடுக்க பட்ட பேட்டியின் சாரமா? அல்லது மனமோகன் சிங்குடன் புதிதாக ஏற்பட்டுள்ள கசப்பை காட்டும் போட்டி அழைப்பிதழா?

அவர் அனல் மின்சார நிலையம் கட்ட இடம் கேட்டார். இவர் மறுத்தார்.

இவர் அவரை வரச்சொன்னார். அவர் அதற்கு மறுத்தார்.

அவர் தான் வருவதற்கு முன் இவர் தன் பண முதலீடுகளுக்கு இடமொதுக்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்..

இவர் நினைக்கிறார் அவர் தன்னிடமிருந்து அனுமதியை அடாவண்டி தனமாக பறித்தெடுக்க பார்கிறார் என்று..

Edited by மல்லையூரான்

தமக்குள்ள் ,,எத்தனை சண்டை புடிச்சாலும்...சிங்களவனுக்கு .

பொது எதிரின்னு வந்துட்டா ,,

எத்தனை ஆட்சி மாறினாலும் , எந்த நாட்டுக்கு அவன் போனாலும் ,,

அவனுக்கு எதிரி ..தமிழன்தான்!

எமக்குள்ள நாங்க,,,

என்னதான் வீர பரம்பரைன்னு கதை அளந்தாலும்,,,

தலைவர் தவிர்த்து....

சந்தர்ப்பம் ,,

சரியா வாய்ச்சா ,

எல்லா தமிழனும் சிங்களவன் பக்கம்தான்!

இவ்ளோ துணிவா வந்துபாருன்னு , ஜெயலலிதாவ மஹிந்த கூப்பிடுறதுக்கு ,, காரணம்,,

அவனுக்கும் தெரியும்,,,

பிரபாகரன் தலைமை இல்லாத ..சந்தர்ப்பவாத தமிழன்,,

ஒருபோதும் சிங்களவனை கைவிடமாட்டான் எங்கிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.