Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா

மதுரை, நவ. 22-

கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு 'IVF' எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் பெருமாள்சாமியின் உயிரணுக்களை எடுத்து, ரத்தினத்துக்கு கருவூட்டப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி ரத்தப் பரிசோதனையும், 21ம் தேதி ஸ்கேன் பரிசோதனையும் செய்ததில் கருவுற்றது உறுதிப்படுத்தப்பட்டது. வயது மற்றும் ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்தினத்துக்கு சிறப்பு மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி ரத்தினம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் செந்தாமரைச் செல்வி, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களது உடலில் உயிரணு உற்பத்தி இருக்கும். எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறலாம் என்றும் மருத்துவர் கூறினார்.

நன்றி தமிழ் கூடல்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் கெட்டிக்காரர்கள்தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்!

எண்பத்தோரு வயதில் ஒரு குழந்தை!

இந்தக் குழந்தை, தகப்பனை அப்பா என்று கூப்பிடுமா அல்லது அப்பு என்று கூப்பிடுமா? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்கள் கெட்டிக்காரர்கள்தான் :lol:

கலோ கறுப்பு! அங்கை ஏற்கனவே பரிசோதனைக்குழாயாலைதான் கருக்கட்டினது எண்டு போட்டுருக்கல்லே???

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆக்கள்.. உடம்புக்குள்ள உள்ள குழாயில கருக்கட்டினா அதை திறமை என்று ஏற்றுக் கொள்ளுவினம்.. அதை றோட்டில போற வாற எல்லா ஜந்துகளும் செய்யும்.. பரிசோதனைக் குழாயில சுத்தமா வைச்சு கருக்கட்ட வைச்சா அதைக் குறை என்று சொல்லுவினம். இவைக்கு முன்னால அறிவியல் தான் வெட்கித் தலை குனிய வேண்டும்.. அவை மாட்டினம்..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

இல்லாமல் பிறந்தவருக்கு இப்போ வயது பதினேழு.

எல்லா நாட்டிலும் தடை போட்டு வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லாமல் பிறந்தவருக்கு இப்போ வயது பதினேழு.

எல்லா நாட்டிலும் தடை போட்டு வைத்துள்ளார்கள்.

அந்ததடை ஏன்? என்னத்துக்கு? எண்டு உங்களுக்கு விளங்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

பொண்டுகள் தேவையில்ல கருமுட்டை மட்டும் தான் தேவை. இப்போ.. கோழி முட்டை வாங்கனுன்னா.. கோழியையே வாங்கனுன்னு சொல்ல முடியுமோ..???! அது போலத்தான்.!

இப்ப எல்லாம் பெண்கள் கருப்பையைக் கூட வாடகைக்கு விடுறாங்க. அவங்க எங்கையோ போய்க்கிட்டு இருக்காங்க.. நீங்க சில பேர்.. இன்னும்.. திருந்திறதா இல்ல..!

அதெல்லாம் ஒரு காலம்.. தாய்மையைக் காட்டி பெண்கள் செய்யுற அநியாயங்களை எல்லாம்.. மறைக்கிறது. இப்ப அதெல்லாம் சரிவராது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது நமது வெளிநாட்டு தமிழ் சுந்தரிகளும் பாவிக்கிறார்கள். முப்பது வயது மட்டும் குழந்தை பெறாமல் ஸ்டைலா இருந்துவிட்டு பின் ஐயோ ஆத்தேரோ கருத்தரிக்கவில்லை என்று ஒவ்வொரு முயற்சிக்கும் பத்தாயிரம் பவுண்ட்ஸ் விடுகிறார்கள்.

கண்டபாட்டுக்கு கருத்தடை மாத்திரைகள் பாவிப்பதுவும் ஒரு காரணி.

Edited by KuLavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்சிங்கங்களும் இப்ப வாடகைக்கு போக வெளிக்கிட்டினமாமெல்லே....காசுக்கு காசுமாச்சுது....இயற்கையின் சீற்றத்தை அமைதிக்கு கொண்டுவந்ததுமாச்சு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்சிங்கங்களும் இப்ப வாடகைக்கு போக வெளிக்கிட்டினமாமெல்லே....காசுக்கு காசுமாச்சுது....இயற்கையின் சீற்றத்தை அமைதிக்கு கொண்டுவந்ததுமாச்சு :lol:

பொண்டுகளுக்கு இரட்டை பிசினஸ்.. கருப்பை வாடகை ஒரு பக்கம்.. முட்டை விக்கிற விலைக்கு.. அதால இன்னொரு வருமானம். அதோட ஒப்பிடேக்க ஆண் சிங்கங்கள்.. பாவங்கள்..! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.