Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோண்டப்பட்ட கிணறுகளில் போதிய எரிவாயு வளம் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oil_drilling.jpg

மன்னார் கடற்படுக்கையில் துளையிடப்பட்ட இரண்டு கிணறுகளில் இயற்கைவாயு கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும், அவற்றில் ஒன்றில் போதுமானளவு எரிவாயு வளம் இல்லை என்றும், அது பொருளாதார பெறுமானம் கொண்டதல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் கடற்படுக்கையில் கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மூன்று துண்டங்களில், இரண்டு இடங்களில் கிணறுகள் துளையிடப்பட்டன.

இவற்றில் எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

இவற்றில் ஒரு கிணற்றில், 4000 மீற்றர் ஆழத்தில் ஹைட்ரோகாபன் படிவுகள் காணப்படுவதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, இதில் 15 வீதம் மட்டும் பயன்பாட்டுக்குரியது என்றும், தொடர்ந்தும் சோதனைகளை நடத்தும் அளவுக்கு அதில் பொருளாதார பெறுமானம் கிடையாது என்றும் தெரியவந்துள்ளது.

முதலாவது கிணற்றின் நிலைமையும் கூட மோசமாகவே உள்ளது என்றும், இதனால் கெய்ன் இந்தியா நிறுவனம் மூன்றாவது கிணற்றின் மீது கவனம் செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கம் எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

அதேவேளை சிறிலங்கா அரசாங்கம் ரஸ்யாவின் கஸ்பரோம் நிறுவனத்தையும் எண்ணெய் வளஆய்வுக்கு அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் எரிவாயு வளம் கண்டறியப்பட்டிருந்தால், பெற்றோலியத்துறை அபிவிருத்தி தொடர்பாக வரவுசெலவுத்திட்டத்தில் அதைப் பற்றி அரசாங்கம் குறிப்பிடாதது ஏன் என்று நேற்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.puthinapp...?20111123105083

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, இதில் 15 வீதம் மட்டும் பயன்பாட்டுக்குரியது என்றும், தொடர்ந்தும் சோதனைகளை நடத்தும் அளவுக்கு அதில் பொருளாதார பெறுமானம் கிடையாது என்றும் தெரியவந்துள்ளது.

முதலாவது கிணற்றின் நிலைமையும் கூட மோசமாகவே உள்ளது என்றும், இதனால் கெய்ன் இந்தியா நிறுவனம் மூன்றாவது கிணற்றின் மீது கவனம் செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

சரி... போகுது...

தோண்டின கிணத்திலை, ஊர்ச்சனம் தண்ணியாவது அள்ளலாம் தானே.... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி... போகுது...

தோண்டின கிணத்திலை, ஊர்ச்சனம் தண்ணியாவது அள்ளலாம் தானே.... :lol:

:lol: :lol: :lol: :lol:

இந்த கிணற்றை நம்பித்தானே பல திட்டம் போட்டது சிறிலங்காஅரசு இப்ப என்ன செய்யப்போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம சிங்களவங்க தங்க மனிதக் கழிவுகளைக் கொண்டு.. எரிவாயு ஆக்கினால்.. இதை விடக் கூட எடுக்கலாம்..! இந்த மன்னார் எரிவாயு விவகாரம்.. முன்னரும் சில ஆண்டுகள் பேசப்பட்டு அப்புறம் கைவிடப்பட்ட விடயம். இது மகிந்தர் தன்னை.. போர்க்குற்ற விசாரணையின் பிடியில் இருந்து விடுவிக்க கையாளும் இந்திய வல்லாதிக்கம் வகுத்த திட்டத்திற்கு அமைவான நகர்வுகளோடு சம்ப்ந்தப்பட்டது. :o:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கிணற்றை நம்பித்தானே பல திட்டம் போட்டது சிறிலங்காஅரசு இப்ப என்ன செய்யப்போகின்றது?

ஆமாம். திட்டமே.. பொய் பிரச்சாரம் செய்து தமிழரின் கடலை விற்பதுவே.

வியட்நாம் கம்பனி வந்து ரிசொர்ட் போடுவான். எங்கடை தமிழ் ஸ்ரீ லண்கன்ஸ் அங்கெ போய் கோப்பை அடிப்பார்கள்.

ஒரு சமயம் ஒரு அமெரிக்க சிறுவன் தனது ரூசிய நண்பனிடம் தனது பாட்டனார் பின்வளவில் தோண்டும்போது செப்பு கம்பிகள் வந்ததாயும், அப்போது தனது பாட்டனார் அமெரிக்கர் அந்தகாலத்திலிலேயே கம்பிகள் மூலம் செய்திகள் அனுப்பியவர்கள் என்பதை தனக்கு விளங்கபடுத்தினார் என்றும் கூறினானாம்.அதையும் விட எதையாவது பெரிதாக கூற நினைத்த ரூசியன் தனது பாட்டனார் கிண்டும் போது செப்புகம்பிகள் வரவில்லையென்றும் அதை தனது பாட்டனார் ரூசியர்கள் கனகாலமாக கம்பியில்லாத்தந்தியை பயன் படுத்தி வருகிறார்களளென்றும் விளங்கபடுத்தியதாகவும் கூறினானாம்.

சிறிமாவோ மன்னாரில் எண்ணையிருப்பதாக கூறி அரசியல் லாபம் தேட நினைத்தா. அதற்கு அவ கையாண்ட உத்தி, பழைய மசகெண்ணையை எடுத்து சென்று மன்னாரில் ஊற்றிவிட்டு பத்திரிகையாளர்களை அழைத்து படமெடுத்து பிரசுரிக்க வைத்தா. ராசபக்சா இந்த ஊத்தியை விட நல்லதொன்றை பாவிக்க விரும்பினார். அதனால்த்தான் பதப்படுத்தப்படாத கச்சா எண்ணைக்கு அவர் நேரத்தை செலவிடவில்லை. எனவே இருப்பதெல்லாம் வாயு தான், அதுவும் நிலத்திற்கு அடியில் என்று கூறிவிட்டார். இந்தமுறை படப்பிடிபாளர்கள் மன்னார் போய் படமெடுத்துப்போடவேண்டிய தேவை எழவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடலில் எண்ணை இருந்தால் சிறிலங்காவை கேட்டு இந்திய எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய எல்லையில் வைத்து கிணறு அடித்தாலே எண்ணை வந்துவிடும்.

அரசியல் ஞானம் முற்றி வரும் ஒரு பித்து நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றை வைத்து படம் காட்டலாம் என்றால் பிழைத்து போய்விட்டது மகிந்தவுக்கு.

வளம் குறைந்த பிரதேசங்களே அயல்நாட்டு பிச்சைக்காரக் கும்பலுக்கு வழங்கப்பட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.