Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்தில் தலையீடு செய்யத் தயார் – அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்தில் தலையீடு செய்யத் தயார் – அமெரிக்கா :

13 டிசம்பர் 2011

lg-share-en.gif

US%20Flig_CI.jpg

போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் தலையீடு செய்யத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் இணையத்தின் ஊடாக, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. சரத் பொன்சேகாவின் குடும்ப அங்கத்தினர்கள் இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

25000 கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்திலை தலையீடு செய்ய முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 25000த்திற்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டால் அந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை தலையீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவின் சிரேஸ்ட புதல்வி அப்சரா பொன்சேகா இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

gtn

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தமிழர்கள் தலையிடக்கூடாது என்பது என் கருத்து..! :( யாராவது தமிழர்கள் கையொப்பம் வைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டிருக்கிறான் சிங்களவன்..! :blink:

தமிழர்கள் கையொப்பமிட்டால் போர்க்காலத்தில் பொன்சேகா செயற்பட்டவிதம் சரியே என்று தமிழர்கள் நினைக்கிறார்கள் என நிறுவப்படும்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 25000த்திற்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டால்

அந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை தலையீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது !!!! ????

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே நம்மவர்களில் இருக்கும் வெகு சில புலி எதிர்ப்பாளர்கள் தமது கிழட்டு தளபதி பொன்சேகாவை காப்பாற்றுவார்களா?

இவர் தானே ஈழ தமிழரின் சுடுகாட்டில் விளக்கேற்றி வசந்தம் நாறடிக்க செய்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொன்சேகாவை மானமுள்ள தமிழன் மறக்கமாட்டான்.

அத்தோடு இவன் செய்த கோரக்கொலைகளையும் யாருக்கும் ஞாபகப்படுத்த வேண்டியதில்லை என நம்புகின்றேன்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவகாரம் தொடர்பாக இசைக்கலைஞனும் பிறரும் சொல்லும் நிலைபாடு மூல உபாய அடிப்படையில் strategy சரியான அரசியல். ஆனால் அது சரியான தந்திரோபாயமா? இது ஆய்வுக்குரியது.

நாம் காலம் காலமாக மூல உபாய அடிப்படையிலான அரசியலையே செய்துவந்திருக்கிறோம். ஆனால் நீண்டகால நோக்கில் மூலஉபாயத்துக்கு வலுச் சேர்க்கக்கூடிய தற்காலிக தந்திரோபாய நகர்வுகளுக்கூடாகத்தான் வெற்றியை நோக்கி நாம் முன்னேற முடியும். இந்த வகையில் உங்கள் கருத்துக்கள் மீழாயப் படுதல் வேண்டும். எப்பவும் அரசியல் இராசதந்திரம் இப்ப முதல் எதிரி யார் என்கிற கேழ்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறது.

. இன்று தமிழருக்கு உள்ள பெரிய இராசதந்திர நெருக்கடி கொழும்பின் ராஜப்க்ச தலைமையிலான ஒரணிபடுதல் பலமடைவதுதான். அதற்க்கு பரவலான சிங்கள மக்களின் ஆதரவு இருப்பதை சர்வதேச நாடுகள் நீண்ட காலத்துக்கு புறக்கணிக்க முடியாது. இந்த ஆபத்தான சூழலுக்கு சவாலாக சரத் பொன்சேகா விடுதலை தொடர்பான சிங்கள மக்களின் அழுத்தம் மட்டுமே எதிராக உருவாகி வருகிறது. ஈழத் தமிழர்கழளுக்கு இணைய நடவடிக்கைகலில் கணிசமான பலமுள்ளது. நாம் எதிரியை பிரிதாழும் தந்திரோபாயத்தை பயன்படுதுவதா இல்லையா? எதுசரி?

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல்த்தான் நானும் சிந்தித்தேன்.

போர்க்குற்றத்துக்கு சான்றாக எமக்கான பொதி ஒன்று சிறிலங்காவில் சரத் என்கின்ற வடிவில் சிறையிலும் மகிந்தவின் கண்காணிப்பிலும் கிடக்கிறது. அதை வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தமிழரின் சாணக்கியத்திலேயே தங்கியுள்ளது. சர்வதேசத்தின்முன்னால் வந்தபின் அவர் விரும்பியபடி ஆடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல்த்தான் நானும் சிந்தித்தேன்.

போர்க்குற்றத்துக்கு சான்றாக எமக்கான பொதி ஒன்று சிறிலங்காவில் சரத் என்கின்ற வடிவில் சிறையிலும் மகிந்தவின் கண்காணிப்பிலும் கிடக்கிறது. அதை வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தமிழரின் சாணக்கியத்திலேயே தங்கியுள்ளது. சர்வதேசத்தின்முன்னால் வந்தபின் அவர் விரும்பியபடி ஆடமுடியாது.

இந்த திரியையும் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=95546

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

பார்த்தேன்

அவர் எமக்கு உதவி செய்வார் என்றா சொன்னேன்.

வெளியில் எடுக்க அவர் முயற்சிக்கின்றார்.

எமக்கும் அவர் வெளியில் வரவேண்டும்

மிகுதியைச்சர்வதேசம் பார்த்துக்கொள்ளும்.

நாம் எதிரியை பிரிதாழும் தந்திரோபாயத்தை பயன்படுதுவதா இல்லையா? எதுசரி?

எமது பலம் பலவீனங்களை வைத்தும் எதிரியின் பலம் பலவீனங்களை வைத்துமே பார்க்கவேண்டும்.

சரத் விடையத்தில் நாம் சாதிக்க விரும்புவது என்ன?

- சரத் ஊடாக போர்குற்றங்கள் (வெள்ளை கொடி விவகாரம் உட்பட) வெளிவரல் வேண்டும்

- 'அது நான் இல்லை இவர் தான்' என்ற ஆதாரங்கள் அவர்களுக்குள் இருந்தே வர வேண்டும்

- அந்த பிளவுகளுக்குள், சர்வதேச அழுத்தத்துடன் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவகாரம் தொடர்பாக இசைக்கலைஞனும் பிறரும் சொல்லும் நிலைபாடு மூல உபாய அடிப்படையில் strategy சரியான அரசியல். ஆனால் அது சரியான தந்திரோபாயமா? இது ஆய்வுக்குரியது.

தனிப்பட்ட வாழ்க்கை, பொதுவாழ்க்கை என்பவற்றில் நம்பகத்தன்மை மிகமுக்கியம்..! :rolleyes: ஒட்டுக்குழுக்கள் இந்த நாற்றம் நாறுவதற்குக் காரணம் தமிழீழம் என்று தொடங்கிவிட்டு, பின்பு புலி எதிர்ப்பு அரசியல் செய்வதுதான்..! :lol:

தமிழர்கள் பொன்சேகாவுக்கு ஆதரவு தரும் பட்சத்தில் புலிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை மீட்ட பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் நன்றி என்கிற கோணத்தில் பிரச்சாரம் போகும். தேவையா? :wub:

பொன்சேகா வெளியில் வந்தாற்போல வெள்ளைக்கொடி விவகாரத்தில் எல்லோரையும் மாட்டிவிடுவார் என்பது நம்பத்தகுந்ததல்ல.. சமாதானப் புறா சந்திரிகா ஆட்சிக்கு வந்து செய்தவை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இவரும் அப்படியே செய்வார்..! :lol:

பொன்சேகா இன்னும் உள்ளேயிருந்து அனுபவிக்க வேண்டும்.. சிங்களவன் அதைப் பார்த்து காலப்போக்கில் மகிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவகாரம் தொடர்பாக இசைக்கலைஞனும் பிறரும் சொல்லும் நிலைபாடு மூல உபாய அடிப்படையில் strategy சரியான அரசியல். ஆனால் அது சரியான தந்திரோபாயமா? இது ஆய்வுக்குரியது.

நாம் காலம் காலமாக மூல உபாய அடிப்படையிலான அரசியலையே செய்துவந்திருக்கிறோம். ஆனால் நீண்டகால நோக்கில் மூலஉபாயத்துக்கு வலுச் சேர்க்கக்கூடிய தற்காலிக தந்திரோபாய நகர்வுகளுக்கூடாகத்தான் வெற்றியை நோக்கி நாம் முன்னேற முடியும். இந்த வகையில் உங்கள் கருத்துக்கள் மீழாயப் படுதல் வேண்டும். எப்பவும் அரசியல் இராசதந்திரம் இப்ப முதல் எதிரி யார் என்கிற கேழ்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறது.

. இன்று தமிழருக்கு உள்ள பெரிய இராசதந்திர நெருக்கடி கொழும்பின் ராஜப்க்ச தலைமையிலான ஒரணிபடுதல் பலமடைவதுதான். அதற்க்கு பரவலான சிங்கள மக்களின் ஆதரவு இருப்பதை சர்வதேச நாடுகள் நீண்ட காலத்துக்கு புறக்கணிக்க முடியாது. இந்த ஆபத்தான சூழலுக்கு சவாலாக சரத் பொன்சேகா விடுதலை தொடர்பான சிங்கள மக்களின் அழுத்தம் மட்டுமே எதிராக உருவாகி வருகிறது. ஈழத் தமிழர்கழளுக்கு இணைய நடவடிக்கைகலில் கணிசமான பலமுள்ளது. நாம் எதிரியை பிரிதாழும் தந்திரோபாயத்தை பயன்படுதுவதா இல்லையா? எதுசரி?

சிங்களவர்கள் தங்களுக்குள் எதிரியாக இருந்தாலும் தமிழர்கள் என வரும் போது நண்பர்கள் ஆகி விடுவார்கள். கடைசி தம்மை காட்டிக்கொடுக்கவே மாட்டார்கள்.கடந்த 50 வருட வரலாறு இது.உ+மாக சோமவன்ச அமரவன்ச.இவரின் சகாக்கள் வீதி வீதியாக கொல்லப்பட்டார்கள். இன்று இவர் மகிந்தவுக்கு எதிராக இல்லை. ஆனால் தமிழருக்கு எதிரான இனவாதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்சேகாவின் விடுதலைக்கு யாழ். தமிழர்களிடமும் கையொப்பம்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35563

சர்வதேசத்தை நாடிச் சென்றாலும் தாய்நாட்டுக்காகச் செல்வாரே தவிர - நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ துரோகமிழைக்கமாட்டார் : அனோமா பொன்சேகா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.